Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர் நீதிமன்ற தீர்ப்பு நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி – ரணில்

Featured Replies

Dr4pbPlX4AIml1u.jpg

நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டமை நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மக்கள் முதல் வெற்றியை பெற்றுள்ளனர். நாங்கள் முன்னோக்கிச் சென்று எங்கள் மக்களின் இறையாண்மையை மீண்டும் ஸ்தாபிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இதேவேளை “நாளை நாடாளுமன்றம் கூடும். எங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்” என அலரிமளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

http://athavannews.com/நாட்டு-மக்களுக்கு-கிடைத்/

  • தொடங்கியவர்

இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்

903249998m-a-sumanthiran-ட-720x450.jpg

இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் 07ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்தோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சகல மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்துள்ளது.

இந்தநிலையில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு தொடர்பில் ஆதவனின் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடும் போதே எம்.ஏ சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/இலங்கையின்-200-வருட-நீதித்த/

சட்டத்தினையும் ஜனநாயகத்தினையும் நிலைநாட்டுவதற்கான முதல் சமிக்ஞை – ஹக்கீம்

5990750-3x2-940x627-720x450.jpg

சட்டத்தினையும் ஜனநாயகத்தினையும் நிலைநாட்டுவதற்கான முதல் சமிக்ஞை இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் 07ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்தோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சகல மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்துள்ளது.

இந்தநிலையிலேயே ஹக்கீம் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/சட்டத்தினையும்-ஜனநாயகத்/

உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி! – ரிஷாட்

Dr4CaJxVAAAhFxw.jpg

சற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாக தாம் கருதுவதாக ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.

இந்த உத்தரவின் மூலம் நீதித்துறை மீதான நம்பிக்கை கூறினார்.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் 18 ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அவர் இந்த கருத்தை குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/உச்ச-நீதிமன்ற-தீர்ப்பு-ஜ/

  • தொடங்கியவர்

ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்

ranil.jpg

ஆட்சி அதிகார மோகத்தில் உள்ள மைத்திரி - மஹிந்த கூட்டணியை தோல்வியடைய செய்து  வலுவான ஜனநாயக ஆட்சி முறைமையை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும் கொடூரமான நிறைவேற்று அதிகாரத்திற்கு மக்களை பலியாக்குவதா அல்லது ஜனநாயகத்தை மேலும் வலுவாக உறுதிப்படுத்துவதா என்ற நெருக்கடியான தீர்மானத்தை கருத்தில் கொள்ள வேண்டிய நிலையில் நாடு தற்போது உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/44422

  • தொடங்கியவர்

தேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்

z_p01-Namal-1.jpg

தேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றத்தல் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும், “நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது நீதிமன்றத்தின் இறுதி முடிவு அல்ல. எதற்காக தேர்தலை பிற்போடுவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றார்கள் என தெரியவில்லை.

தேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இருப்பினும் இறுதியில் மக்களே முடிவு செய்வார்கள்” என கூறியுள்ளார்.

http://athavannews.com/தேர்தல்களை-பிற்போடுவதில/

  • தொடங்கியவர்

மீண்டும் ரணில் வசம் செல்லும் இலங்கையின் ஆட்சிப்பொறுப்பு?; மகிழ்ச்சியில் மக்கள் கொண்டாட்டம்!?

 

சிறிலங்கா உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாளைய தினம் நாடாளுமன்றத்தில் கூடி சட்டவிரோதமாக பறிக்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக சூளுரைத்துள்ளார்.

அதேவேளை எந்தவொரு அழுத்தங்கள் வந்தாலும், நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பு சுயாதீனமாகவே செயற்படுகின்றது என்பதை உச்ச நீதமன்றம் இன்றைய தினம் நிரூபித்துக் காண்பித்திருப்பதாகவும், அதற்காக தலைமை நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் ரணில் விக்கிரமசிங்க அலரிம மாளிகையில் அவசரமாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக தெரிவித்தார்.

அதேவேளை நாடாளுமன்றத்தின் உரிமைகளை பாதுகாக்க சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கொண்ட முயற்சிகளுக்கும் நன்றித் தெரிவித்துள்கொண்டார்.

அத்துடன் ஜனநாயகத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக கிடைத்த இந்த வெற்றிக்காக அனைத்து மதத் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, மக்களின் அடிப்படை உரிமைகளை காப்பாற்றுவதற்கான தமது போராட்டத்தின் முதல் வெற்றியினை இன்றைய தினம் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

இதற்கமைய நாட்டில் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும், நீதியையும் நிலைநாட்டுவதற்கான தமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்த ரணில், நாட்டின் அதியுயர் சட்டமான அரசியல சாசனத்தை பயன்படுத்தி விளையாட அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல அரசியல் சாசனத்தை தாம் வழிரும்புவது போல் மாற்றியமைத்துக்கொள்ளவும் முடியாது என்றும் கூறிய ரணில், இதனையே உச்ச நீதிமன்றம் இன்றைய தினம் வழங்கிய அதிரடி தீர்ப்பின் மூலம் நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றின் இன்றைய தீர்ப்பை அடுத்து நவம்பர் 14 ஆம் திகதியான நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதாக அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவே அறிவித்திருந்தார் என்றும் தெரிவித்துள்ள ரணில் அதற்கமையவே தாங்கள் நாடாளுமன்றில் கூடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அவரால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச மற்றும் அவர்களது விசுவாசிகள் கூறுவது போல் சபாநாயகர் கரூ ஜயசூரிய தான்தோன்றித் தனமாக நாடாளுமன்றத்தை கூடடவில்லை என்றும் தெரிவித்த ரணில், நாடாளுமன்றம் கூடியதும் பெரும்பாண்மையினை நிரூபிக்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மைத்ரி – மஹிந்த தரப்பினரின் நடவடிக்கைகளால் பெரும்பாண்மையானது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்த ரணில், அதை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் துணையாக இருப்பதாகவும் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

அனைத்து அரச பணியாளர்களையும், அரசியல் சாசனத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் மதிப்பளித்து செயற்படுமாறும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை மைத்ரி – மஹிந்த கூட்டணியின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக நவம்பர் 15 ஆம் திகதியான நாளை மறுதினம் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை லிபட்டன் சுற்றுவட்டத்தில் நடத்தவுள்ளதாகவும் ரணில் அறிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/109105?ref=home-imp-flag

  • தொடங்கியவர்

அரசியலமைப்பை பயன்படுத்தி யாரும் உதைப்பந்தாட்டம் விளையாடமுடியாது: ரணில்

ranil-2-720x450.jpg

 

 

நாட்டின் அரசியல் யாப்பை மீறி யாராலும் செயற்பட முடியாதென்பதை உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிக்காட்டியுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே அரசியல் யாப்பை விளையாட்டாக கருதி உதைப்பந்தாட்டம் விளையாடக்கூடாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றை கலைக்கும் வகையிலான ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த பின்னர், அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”மக்களின் இறையாண்மைக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. அத்தோடு, அரசியல் யாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரச ஒழுக்க விழுமியங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன.

அரசியல் யாப்பை கிழித்தெறிய முற்பட்டபோது, அரசியல் யாப்பை உதைத்தெறிந்து செல்ல முடியாதென இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது ஆட்சேபங்களை தெரிவிக்க நீதமன்றம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது. நாம் அதற்குரிய காரணங்களை தெரியப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

நாடாளுமன்றின் அதிகாரத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றியமைக்காக சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவரின் செயற்பாடுகள் காரணமாகவே நாட்டில் இன்று ஜனநாயகம் காணப்படுகிறது.

அடுத்ததாக இதற்காக உழைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். மும்மத தலைவர்களுக்கும் எமது நன்றிகள்.

இவை அனைத்தையும் மக்களின் அடிப்படை உரிமையையும் அரசியல் யாப்பை பாதுகாக்கவும் முனைந்தோம்.

அரசியலமைப்பை பயன்படுத்தி யாரும் உதைப்பந்தாட்டம் விளையாடமுடியாது. அதேபோல் அரசியல் யாப்பை ஒருவர் நினைத்தவாறு மாற்ற முடியாது. அதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. இது தற்காலிக வெற்றி மாத்திரமே. எமது தொடர் போராட்டத்தை வெற்றிகொள்ள வேண்டும். நாடாளுமன்றில் பெரும்பான்மையை காண்பிப்போம். அதற்கமைய நாளை நாடாளுமன்றில் ஒன்றுகூடுவோம். நாடாளுமன்றத்தை சபாநாயகர் கூட்டவில்லை. மாறாக ஜனாதிபதியே கூட்டியுள்ளார். எனவே நாளை நாடாளுமன்றில் எமது அதிகாரத்தை காட்டுவோம். ஆகவே அரச ஊழியர்களை அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கமைய செயற்படுங்கள். நாடாளுமன்றத்தை மதித்து செயற்படுகள். சபாநாயகரை பொலிஸார் சந்தித்து விடயங்களை தெளிவுபடுத்திக்கொள்ள முடியும். இந்த வெற்றியை கொண்டாட 15ஆம் திகதி லிப்டன் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

http://athavannews.com/அரசியலமைப்பை-பயன்படுத்த/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியால் திண்டாடிய கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

இதையே இவர் தமிழர்களின் பிரச்சனைக்காக இப்படி வழக்குகள் நடாத்த முன்வரவில்லை.

  • தொடங்கியவர்
5 hours ago, ஈழப்பிரியன் said:

தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியால் திண்டாடிய கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

இதையே இவர் தமிழர்களின் பிரச்சனைக்காக இப்படி வழக்குகள் நடாத்த முன்வரவில்லை.

தமிழர்களுக்கு பல்வேறு சவால்கள் வந்தபோது அமைதிகாத்து தமிழர்களை ஏமாற்றிய சுமந்திரன் கும்பல் ரணிலுக்கு இக்கட்டு வந்த போது விரைவாகவும் ஆவேசமாகவும் செயற்பட்டது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இது சுமந்திரனின் எடுபிடி அரசியலுக்கு இன்னொரு ஆதாரமாக அமைகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, போல் said:

தமிழர்களுக்கு பல்வேறு சவால்கள் வந்தபோது அமைதிகாத்து தமிழர்களை ஏமாற்றிய சுமந்திரன் கும்பல் ரணிலுக்கு இக்கட்டு வந்த போது விரைவாகவும் ஆவேசமாகவும் செயற்பட்டது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இது சுமந்திரனின் எடுபிடி அரசியலுக்கு இன்னொரு ஆதாரமாக அமைகிறது.

அட போங்க ஐயா..

எதிர்க் கட்சி தலைவர் ஐயாவின்ட, பென்ஸ் கார், அரச வீடு.... வயசு போன காலத்தில அலவன்சுகள்.... போயிடும் எண்டால் சும்மாவே....

  • தொடங்கியவர்
41 minutes ago, Nathamuni said:

அட போங்க ஐயா..

எதிர்க் கட்சி தலைவர் ஐயாவின்ட, பென்ஸ் கார், அரச வீடு.... வயசு போன காலத்தில அலவன்சுகள்.... போயிடும் எண்டால் சும்மாவே....

இல்லை நாதமுனி!

சுமந்திரனின் அண்மைக்கால முயற்சி சம்மந்தனை தலைவர் பதவியிலிருந்து ஓரங்கட்டுவது!

அதற்கான சதித்திட்டங்களை அவர் முன்னெடுக்க ஆரம்பித்த வேளையில் தான் மைத்திரி-மகிந்த கூத்து ஆரம்பமாகியது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அட போங்க ஐயா..

எதிர்க் கட்சி தலைவர் ஐயாவின்ட, பென்ஸ் கார், அரச வீடு.... வயசு போன காலத்தில அலவன்சுகள்.... போயிடும் எண்டால் சும்மாவே....

சரி ஒரு கதைக்கு மீண்டும் ஒரு தேர்தல் இப்போது வந்திருந்தால் தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் எப்படி இருந்திருக்கும்?

மக்கள் மத்தியில் எப்படி போய் நிற்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, போல் said:

இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 இடைக்கால தடையை எப்படி வெற்றியாக கருதமுடியும். அல்லது செய்தி எனக்கு விளங்கவில்லையா? :oO:

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு மீண்டுமொரு முறை....எழுதப்படுகின்றது!

இலங்கையின் சுதந்திர முன்னெடுப்புகளை...முன்னின்று நடத்தி...இலங்கைக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தவர்..சேர். பொன். இராமநாதன்!

அவர் விட்ட ஒரு மாபெரும் தவறு...சிங்களவர்களும்...தமிழர்களும் சேர்ந்து வாழலாம் என நம்பியது!

அதன் பின்னர்....பண்டா செல்வா ஒப்பந்தம்....!

திரு செல்வநாயகம் விட்ட தவறு......பண்டாரநாயக்காவை நம்பியது!

இப்போது .....திரு. சுமந்திரன் அவர்கள்.....ரணில் விக்கிரமசிங்காவுக்கு....ஒரு வழி சமைத்துக் கொடுத்திருக்கிறார்!

அவர் விடும்....தவறு....கூட....ரணிலை...நம்புவது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.