Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியுள்ளனர் – விமல் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியுள்ளனர் – விமல் குற்றச்சாட்டு

DsyZKwwXcAIHGUP.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி பத்து இலட்சம் கையொப்பங்களை திரட்டும் நோக்கில் நேற்று (சனிக்கிழமை) கடவத்தையில் ஆரம்பமான நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர், கடந்த மூன்றரை ஆண்டு காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியமை பற்றிய விபரங்கள் புலனாய்வுத் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இயங்கச் செய்வதற்கு ஆர்வம் அல்லது நாட்டம் கொண்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவ்வாறானவர்கள் புலம்பெயர் சமூகத்துடன் பேணி வரும் தொடர்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது என கூறினார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஓர் கட்டத்திற்கு அப்பால் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது, ஏனெனில் கைது செய்யும் அதிகாரம் அவர்களுக்கு கிடையாது.

எனவே இந்த விடயங்கள் அனைத்தையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்தனர். பாதுகாப்புச் சபை இந்த விபரங்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைத்தது என தெரிவித்துள்ளார்.

அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இனவாதத்தை தூண்டு செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருவதாகவும் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு கட்டளையிடுகின்றார் என்றும் உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி இனவாதத்தை தூண்டு செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/சுமந்திரன்-இனவாதத்தை-தூண/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் நிலவும் அசாதாரண அரசியல் சுழலில் ஆயுதம் மூலம் ஆட்ியை பிடிக்கும் நோக்கில் ஜேவிபியினரும் மீள எழத் துவங்கியுள்ளனர் என புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

***

கொய்யால, எங்களுக்கும் அலம்பறை பண்ண தெரியுமே.?

 

  • கருத்துக்கள உறவுகள்

 

7 hours ago, கிருபன் said:

எனவே இந்த விடயங்கள் அனைத்தையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்தனர். பாதுகாப்புச் சபை இந்த விபரங்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைத்தது என தெரிவித்துள்ளார். 

ராணுவ புலனாய்வு பிரிவு பாதுகாப்பு சபையில் சமர்பித்தனர் அவர்கள் இந்த விவரங்களை பயங்கரவாத விசாரணை பிரிவிடம் ஒப்படைத்தனர் அவர்கள் நுண்ணறிவு விசாரணை குழுவிடம் சமர்பித்தனர் அவர்கள் உள்ளக விசாரணை அமைப்பினரிடம் சமர்த்தனர் அவர்கள் .. 

1 .1/2 கிலோ நாட்டுக்கு 1.3/4 அமைப்பு . போக ..

46508629_2220956301492935_15870251020278

புலிவாந்தி எடுக்க ஆரம்பிச்சு போட்டுது .. ?

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இனவாதத்தை தூண்டு செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருவதாகவும் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு கட்டளையிடுகின்றார் என்றும் உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி இனவாதத்தை தூண்டு செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

விக்கியர் இனவாதம் பேசுவதாக கூறியவர் இப்போ சுமந்திரனாம் பிரச்சார பீ(ரங்கி). Haha

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இயங்கச் செய்வதற்கு ஆர்வம் அல்லது நாட்டம் கொண்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

புலி இருக்கும்மட்டும் சிங்களவருக்குள் இப்படி பிரிவினை வாதம் வந்தது இல்லை அதனால் விமலுக்கு அவசர தேவையாக புலி தேவையாக இருக்குது .

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி பத்து இலட்சம் கையொப்பங்களை திரட்டும் நோக்கில் நேற்று (சனிக்கிழமை) கடவத்தையில் ஆரம்பமான நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்க நிக்கிறான் சிங்களவன், இதுக்குள்ள இவனாேட சேர்ந்து மக்களுக்கு அபிவிருத்தி செய்யப்பாேகினமாம். சிலபேர் சாெல்லுறாங்கப்பா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.