Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவிற்கு எதிராக 5ஆம் திகதி மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை – ஜனாதிபதியிடம் கூறிய கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவிற்கு எதிராக 5ஆம் திகதி மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை – ஜனாதிபதியிடம் கூறிய கூட்டமைப்பு (2ஆம் இணைப்பு)

my3_sampanthan-720x450.jpg

நாடாளுமன்றத்தில் மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்ற எங்களின் வாதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இந்தநிலையில் குறித்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சிவமோகன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,“ஐக்கிய தேசிய முன்னணி பெயரிடும் பிரதமர் ஒருவரை நாங்கள் ஆதரிப்போம் என்பதை நாங்கள் ஜனாதிபதியிடம் சொன்னோம். ஐந்தாம் திகதி மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை சபையில் முன்வைக்கப்படும்.

அரசியல் கைதிகள் விடுதலை குறித்து மூன்றாம் திகதி நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஆரம்பம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் இந்த சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது. இதன்போது நாட்டின் தற்போதைய குழப்பநிலை தொடர்பில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று மாலை முக்கிய சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது, “ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய கட்சிகளை இன்று வெள்ளிக்கிழமை நான் சந்திப்பேன். அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது பற்றிப் பேசுவேன்” என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அதற்கமைய இன்று சந்திப்புகள் இடம்பெறுகின்றன. எனினும், ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது ஜே.வி.பி. பங்கேற்காது என்று கூறப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று இரவு நடைபெறவுள்ளது என கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 

 

http://athavannews.com/கூட்டமைப்பிற்கும்-ஜனாதி/

 

  • கருத்துக்கள உறவுகள்

my3_sampanthan-720x450.jpg

சொறிலங்கா பாராளுமன்றத்தின்.. பகிடி  கூடிக்  கொண்டே.. வருவது, வரவேற்கத் தக்கது.
புலம் பெயர் தேசத்தில் வசிக்கும்,  எமக்கும்... இப்படியான செய்திகள்.. புத்துணர்ச்சி ஊட்டுகின்றன.

சம்பந்தும், மைத்திரியும்...  "பின்  விழைவுகள்"  தெரியாமல்....  ரகசியம் பேசும்  படம்... சூப்பர். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

Classic cartoon. 

11 ரன் எடுக்கவேணும். அடிக்கிற ஐடியாவும் இல்லை. பால் பண்ண விடுற ஐடியாவும் இல்லை. உள்ளுக்கு மைத்திரி வேற v  சைன் காட்டுறார்.

அம்பயர் கருவும், பாளர் ரணிலும் முழுசிக் கொண்டு நிக்கினம்.

image_1543551189-f1b86266eb.jpg

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருக்கிறன் .. காசா பணமா தவுசன் சத்தியம் வேணும் எண்டாலும் அடி மாப்ள ..?

goundamani-senthil-sarathkumar-super-hit

டிஸ்கி :

நான் நினைக்கிறேன் ஒரு 10 , 20 நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் .?

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அரசியல் கூத்தில் தமிழருக்கு தீர்வு என்ற ஒரு காண்டம் வரும் அப்போது பாருங்கள்  பாண்டவரும் கெளரவர்களும் கைகோர்த்து நண்பர்களாக சேர்ந்து  மேடையில் தோன்றுவார்கள். பிரச்சினைக்கு அடிப்படைக்காரணம் ஜனாதிபதியின் அதிகார இறக்கைகள் அளவுக்குமீறி நீண்டுவிட்டன. அவை அடியோடு வெட்டப்படவேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவிற்கு பெரும்பான்மையில்லை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார் ஜனாதிபதி!!!

மஹிந்தவிற்கு பெரும்பான்மையில்லை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார் ஜனாதிபதி!!!

“பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றில் பெரும்பான்மையில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். டிசம்பர் மாதம் 5ஆம் திகதி பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிடம் ஆட்சியை ஒப்படைக்க தயாராக இருக்கிறேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான 13 கூட்டமைப்பினர் நேற்றிரவு 7 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது அலுவலகத்தில் சந்தித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பில் தொடர்ந்து ஜனாதிபதி கூட்டமைப்பினரிடம்,

my3_and_sampanthan.jpg

“மஹிந்தவை பிரதமராக நியமிக்கும் போது அது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் கலந்தாலோசிக்காமை தவறு என்பதை நான் உணர்கிறேன்.

ஆட்சி மாற்றத்தின் பின் கடந்த 14ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் புதிய அரசிற்கு எதிராக பாராளுமன்றில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சில தீர்மானங்கள் குரல் பதிவு வாக்கெடுப்பு மூலமும் சில தீர்மானங்கள் இலத்திரனியல் வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு குரல் பதிவு வாக்கெடுப்பு மூலம் தான் நடந்துள்ளது.

ஒரு நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் இந்த விடயத்தில் குரல் பதிவு வாக்கெடுப்பு முறையை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

எனவே எதிர் வரும் 5ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது பெயர் கூறி அல்லது இலத்திரனியல் வாக்கெடுப்பை நடாத்தி அதில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கும் தரப்பிடம் ஆட்சியை ஒப்படைக்க நான் தயாராகவுள்ளேன்.

பெரும்பான்மையை பெறும் தரப்பு பிரதமருக்கான பெயரை முன்மொழிகின்ற போது அதனை நான் ஏற்றுக்கொள்வேன்.

இவ் வாக்கெடுப்பின் போது ஒரு வேளை பெரும்பான்மை பலத்தை ஐக்கிய தேசிய முன்னணி பெற்றால் அத் தரப்பினர் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை பரிந்துரை செய்தால் அதனை நான் ஏற்க தயாராக இல்லை. ஐக்கிய தேசிய முன்னணியில் வேறு  பெயர்களை பரிந்துரை செய்தால் அதனை நான் ஏற்பேன்.

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் கடந்த 3 வருடங்களாக இருந்த போதும் அவருடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன்.

ஆனால் அவர் என்னை மதிக்கவில்லை, அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஊழல் மோசடி விடயங்களிலும் அவர் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுத்தார். அதனால் தான் அவரை பிரதமர் பதவியிலிருந்து நான் அகற்றினேன். இந் நிலையில் மீண்டும் அவரை பிரதமர் பதவியில் நான் எவ்வாறு அமர்த்துவது? என கேள்வியெழுப்பியுள்ளார்.

அதற்கு கூட்டமைப்பினர்,

“ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்தப் போவதில்லை என்று நீங்கள் எடுத்திருக்கும் தீர்மானத்தை நாம் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம். ஏனெனில்  உங்களை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தியது மட்டுமன்றி உங்கள் வெற்றிக்கு அயராது பாடுபட்டவர்களில் பெரும் பங்கு வகிப்பவர்கள் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி உங்களுக்காக அரும்பாடு பட்டவர்களுக்கு நீங்கள் எந்த வித அறிவித்தலும் விடுக்காமல் நேரில் கலந்துரையாடாமல் அரசியலமைப்பிற்கு முரணாக மக்கள் நிராகரித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபனக்ஷவை பிரதமராக நியமித்தீர்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் உங்களை எதிர்த்து நின்று போட்டியிட்டு படு தோல்வியடைந்தவரை புதிய பிரதமராக எவ்வாறு நாம் ஏற்பது?

மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்கள் உட்பட நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் உங்களுக்கு வாக்களித்து உங்களை ஜனாதிபதியாக்கினார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

புதிய பிரதமர் மஹிந்த தலைமையிலான அரசுக்கு எதிராக பாராளுமன்றில் இது வரை 5 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மஹிந்த மீதான நம்பிக்கையில்லா பிரேரணை மீது மீண்டும் வாக்கெடுப்பு நடாத்த நாம் தயாராகவுள்ளோம்.

உங்கள் வேண்டுகோளின் படி மீண்டும் வெக்கெடுப்பை பெயர் கூறி அல்லது இலத்திரனியல் முறையில் நடாத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய முன்னணியும் மக்கள் விடுதலை முன்னணியம் தயாராகவுள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெறவே நாம் வாக்களிப்போம். இதனைக் கூட்டமைப்பினராகிய நாம் எழுத்து மூலம் உங்களுக்கு அறிவித்துள்ளோம்.

ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் அவர்கள் பிரதமர் பதவிக்கு முக்மொழிகின்றவரையும் ஆதரிக்க நாம் தயாராகவுள்ளோம்.

எனவே ஐக்கிய தேசிய முன்னணி பிரதமராக முன் மொழிகின்றவரை நீங்கள் பிரதமராக நியமிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

இறுதியாக 5ஆம் திகதி குறிப்பிட்டதைப் போல வாக்கெடுப்பை நடாத்துங்கள் அதன் பின்னர் தீர்மானிக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/45534

 

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஜனாதிபதியாய் இருந்து என்னத்தை கிழிக்கப்பாேகுது? இன்னும் எத்தினை பிரச்சனையளை காெண்டு வரப்பாேகுதாே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.