Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அயோத்தியில் ராமருடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும்' - காங்கிரஸ் தலைவர் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தினத்தந்தி: "அயோத்தியில் ராமருடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும்"

அயோத்தியில் 'ராமருடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும்' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கரன் சிங் கோரிக்கை விடுத்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"அயோத்தியில் சரயு நதிக்கரையில் ராமருக்கு 151 மீட்டர் உயரத்தில் சிலை வைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அங்கு ராமர் சிலையுடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உத்தரபிரதேச மாநில அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கரன்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர், உத்தரபிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

"மிதிலையில் சீதை கல்யாணம் நடைபெற்றது. அதன்பின்னர் அவர் அயோத்திக்கு சென்றார். அங்கு சில காலம் இருந்தார். அதன்பின்னர் அவர் ராமருடனும், லட்சுமணனுடனும் 14 ஆண்டுகள் வனவாசம் போனார். மீண்டும் அயோத்திக்கு வந்தார். எனவே அயோத்தியில் ராமர் சிலைக்கு பக்கத்தில் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும். இந்த சிலை, ராமர் சிலை உயரத்தில் பாதியளவு இருக்க வேண்டும். இது சீதைக்கு கௌரவத்தை அளிக்கும்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-46562673

  • கருத்துக்கள உறவுகள்

ராமர், வல்லபபாய் படேல், வரிசையில் என்.டி.ராமாராவ்! ஆந்திராவையும் விட்டுவைக்காத சிலை கலாசாரம்?

524_04325.jpg

மறைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவுக்கு அமராவதியில் 108 அடி உயரச் சிலை அமைக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக ஆந்திர மாநில ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டுள்ளன...

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் சர்தாய் வல்லபபாய் படேலுக்கு குஜராத் மத்திய அரசு 182 மிட்டர் உயர பிரமாண்ட சிலையை நிறுவியது. உலக அளவில் மிகவும் உயரமான சிலை இது என்ற பெயரையும் இந்தச் சிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து ராமருக்கு உலகிலேயே உயரமான 221 மீட்டர் உயர பிரமாண்ட சிலை லக்னோவில் நிறுவப்படும் என்று உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவைக் குழு கூடி யோகி ஆதித்யநாத் தலைமையில் அறிவித்தது. மகாராஷ்டிராவில் சிவாஜிக்கும் பிரமாண்ட சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலை அமைக்கும் கலாசாரத்தில் தற்போது ஆந்திரப் பிரதேசமும் இணைந்திருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதியில் உள்ள நீருகொண்டா மலையில் 108 அடி உயரம் கொண்ட என்.டி.ராமா ராவ் சிலையை நிறுவ ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக ஆந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக ஆந்திர ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியாவது...

சிலை தொடர்பாக ஆறு மாதிரி வரைபடங்களைப் பரிசீலித்த அமராவதி அபிவிருத்திக் கழக அதிகாரிகள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் காட்டி அவற்றில் 108 அடி உயரம் கொண்ட சிலையின் மாதிரிக்கு ஒப்புதலைப் பெற்றிருக்கிறார்கள்.

இந்தச் சிலை 406 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. இவற்றில் 155 கோடி ரூபாயில் 200 ஏக்கர் பரப்பளவில் உணவு விடுதிகள், 500 இருக்கைகள் கொண்ட ஆடிட்டோரியம், ஷாப்பிங் பகுதி, அருங்காட்சியகம், தங்குமிடம் ஆகியவற்றை ஏற்படுத்தி சுற்றுலாத் தலமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்படும் இந்த என்.டி.ராமாராவ் சிலைக்கு 'தெலுங்கு மக்களின் சுய கவுரவ முன்மாதிரி' என்று பெயர் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணியானது அடுத்த 46 மாதங்களில் முடிவடையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலை தொடர்பாக ஆந்திர அரசு இதுவரை எந்த அறிவிப்பும் செய்யாத நிலையில் ஊடகங்களில் மட்டும் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதேநேரம் முன்னாள் தெலுங்கு தலைமைச் செயலாளர் ஐயர் கிருஷ்ண ராவ் இதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

https://www.vikatan.com/news/india/144587-andra-government-planning-to-build-new-statue-for-ntr.html

டிஸ்கி :

2002102300030201.jpg

இவை எல்லாம் வல்லரசு எண்டு கனவிலும் நினைக்கப்படாது .ஆசை இருந்தால் கேப்டன் விஜயகாந்து நடித்த "வல்லரசு" திரைப்படம் வேண்டுமானால் பார்க்கலாம் .😇

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு கோடி பிரச்சனைகள் உள்ளன. இவர்கள் சிலை வைப்பதிலேயே காலத்தையும் பணத்தையும் விரயமாக்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இலக்குவனையும், அனுமானையும் விட்டு விட்டார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, nunavilan said:

மக்களுக்கு கோடி பிரச்சனைகள் உள்ளன. இவர்கள் சிலை வைப்பதிலேயே காலத்தையும் பணத்தையும் விரயமாக்குகிறார்கள்.

சிலை வைச்சு பெருமைப்படுற நாடு அது.....
ஆனால்  கிந்திய ஏழைப் பிள்ளையளுக்கெண்டு  கிறிஸ்மஸ் நேரம் மில்லியன் கணக்கிலை காசு  சேர்த்து அனுப்புற நாடுகளும் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.