Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"எனது கணவரை விடுதலை செய்யுங்கள்" கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி உருக்கம்!

Featured Replies

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

எனது கணவரை விடுதலை செய்யுங்கள் அவர்மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை அப்பாவை கேட்டு எனது பிள்ளைகள் அழுகின்றனர் என வவுணதீவு சம்பவத்தின் பின்னனியில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுணதீவு சம்பவத்தின் பின்னனியில் தனது கணவரான அஜந்தன் கைதுசெய்யப்பட்டு இன்றுவரை தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்தபோதே அவர் மேற்கண்டவறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்

மட்டக்களப்பு வவுணதீவு பொலீஸ் சோதனைச் சாவடியில் வைத்து இரு பொலீசார் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்ட எனது கணவர் அஜந்தன் அவர்களை தொடர்ந்தும் எந்தவித ஆதாரமும் இன்றி அடைத்துவைத்து விசாரணை செய்து வருகின்றனர். எனது கணவர் கைது செய்யப்படும் போது நான் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை ஒன்றிற்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தேன் எனது கணவர் கைது செய்யப்பட்டது எனக்கு தெரியாது. மறுநாளே எனது கணவர் கைது செய்யப்பட்ட விபரம் எனக்கு தெரியவந்தது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

எனது கணவர் நிரபராதி அவர் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி அவர் இதுபோன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபடமாட்டார். சம்பவ தினம் இரவு அவர் மட்டக்களப்பில் உள்ள தேசத்தின் வேர்கள் அமைப்பின் காரியாலயத்தில் பொதுமக்களுக்கான நிவாரணப் பொதிககளை தயார்செய்துவிட்டு அன்று இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வந்து இரவு முழுவதும் திரைப்படம் பார்த்துக் கொண்டு பிள்ளைகளுடன் வீட்டிலே இருந்துள்ளார். அவருக்கும் பொலீசாரின் படுகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஆனால் பொலீசாரும் புலனாய்வு பிரிவினரும் எனது வீட்டை பல தடவை சோதனையிட்டுள்ளனர் பலதடவை எனது அம்மா பிள்ளைகள் என அனைவரையும் துருவி துருவி விசாரணை செய்துள்ளனர். எங்களிடம் இருந்த நான்கு கைத்தொலைபேசிகளையும் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் இன்னும் விசாரணைகள் நிறைவு பெறவில்லை.

நாங்கள் மிகுந்த வேதனையிலும் வறுமையிலும் வாழ்ந்துவருகின்றோம் அப்பாவை கேட்டு பிள்ளைகள் அழுகின்றது எங்களுக்கு 05 பிள்ளைகள் உண்டு மூன்றுமாத கைக்குழந்தையும் உண்டு நான் அந்தக் கைக்குழந்தையுடன் பல தடவை எனது கணவரை தேடி பொலீஸ் நிலையம் சென்றுள்ளேன் ஆனால் அவர்கள் நீங்கள் வரவேண்டாம் நாங்கள் விசாரணை முடிந்தவுடன் அவரை அனுப்புவோம் என்று கூறுகின்றனர் ஆனால் இன்றுவரை விடுதலை செய்யவில்லை

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

நான் போய் கேட்கும்போதெல்லாம் விசாரணை செய்துவிட்டு அவரை விடுதலை செய்கின்றோம் என்று மீண்டும் மீண்டும் கூறுகின்றனர். இனியும் பொறுக்கமுடியாது எனது கணவரை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

 

நாளை உண்ணாவிரதம்!

கைது செய்யப்பட்டுள்ள தனது கணவர் தொடர்பாக எந்த அரசியல் தலைர்களும் தனக்கு உதவி செய்யவில்லை என்பதால் தனது கணவரை விடுதலை செய்யக் கோரி நாளை காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அஜந்தனின் மனை தெரிவித்துள்ளார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/110918?ref=rightsidebar

8 hours ago, போல் said:

அன்று இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வந்து இரவு முழுவதும் திரைப்படம் பார்த்துக் கொண்டு பிள்ளைகளுடன் வீட்டிலே இருந்துள்ளார். அவருக்கும் பொலீசாரின் படுகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கொலைகாரர்கள் கருணா கும்பலாக இருக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதம் வெற்றிபெற இறைவனை வேண்டுகிறேன். 

  • தொடங்கியவர்

இரவிலும் தொடரும் முன்னாள் போராளியின் மனைவி, பிள்ளைகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

Image

வவுணதீவில் இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவனை விடுதலை செய்யுமாறு கோரி, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன், கைது செய்யப்பட்டவரின் மனைவி உண்ணாவிரத போராட்டத்தை இன்று (17) காலை ஆரம்பித்திருந்தார்.

இந்த உண்ணாவிரத போராட்டமானது கடந்த 30-ஆம் திகதி வவுணதீவில் இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள அஜந்தன் எனப்படும் சி.இராஜகுமாரனின் மனைவி மற்றும் பிள்ளைகளே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

தனது கணவன் கைதுசெய்யப்பட்டு 18 தினங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், தனது கணவரை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியே குறித்த தாய் மற்றும் பிள்ளைகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தனது கணவர் எந்தவித குற்றமும் செய்யவில்லை அதனை பொலிஸாரும் கூறுகின்றனர். ஆனால் அவரை ஏன் தொடர்ந்து தடுத்துவைத்துள்ளார்கள் என்பது தெரியாத நிலையில் உள்ளதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அஜந்தனின் மனைவி செல்வராணி இராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.

தனது கணவனே தங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்துவந்த நிலையில், கடந்த 18-தினங்களாக எந்தவித உதவிகளும் இன்றி கைக்குழந்தைகளுடன் கடுமையான துன்பத்தை தாங்கள் எதிர்நோக்கிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் “தனது கணவன் குற்றவாளியென்றால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி குற்றத்தினை நிரூபித்து தண்டனை வாங்கிக்கொடுங்கள், அவ்வாறு இல்லாவிட்டால் அவரை விடுதலை செய்யுங்கள், அவரை விடுதலை செய்யும் வரையில் நானும் எனது பிள்ளைகளும் சாகும் வரையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தினை தொடர்வோம்“ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில் இவ்வுண்ணாவிரத போராட்டமானது இரவு பகல் பாராது நடைபெற்று வருவதுடன் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக தேசத்தின் வேர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் அதன் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/110973

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.