Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உன் தோள் சாய ஆசைதான்....

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

சிறிய கதையாக இருந்தால் நல்லதொரு கதை. பத்தாம் பசலித்தனமான முடிவு இல்லாமல், சரியான முடிவில் கதை முடிந்திருக்கு.

மனுசர் ஒரு சமூக பிராணி. மனுச வாழ்க்கை என்பது தனித்து வாழ்வதற்கு அல்ல. முக்கியமாக வயது போகும் போது கண்டிப்பாக துணை தேவை.

என் அப்பா செத்து 14 வருடங்களாகின்றது. அம்மா தனியாகத்தான் இருக்கின்றார். இங்கு வந்து இருக்கும் போது, 'அம்மா ஏன் நீங்கள் இன்னொரு கலியாணம் கட்டி வயதான காலத்தில் கதைத்துக் கொண்டு இருப்பதற்காகவாவது ஒரு துணையை தேட நினைக்கவில்லை' எனக் கேட்டனான். அதற்கு அம்மா சொன்ன பதில் 'சனம் என்ன நினைக்கும்' என்பது தான். இங்கு மற்றவர்கள் என்ன நினைப்பினம் என்பதற்காகவே தனிமையை தேர்ந்தெடுப்பவர்களாக எம்மவர்களில் அனேகம் பேர் இருக்கின்றனர்.

மன உணர்வுகளை மதிக்கும்படியாக எமது சமூகம் எம்மை வளர விடவில்லை. அவர் என்ன சொல்வார் இவர் என்ன சொல்வார் என்று பயப்படுத்தித்தான் எமது பெற்றவர்கள் எம்மை வளர்த்தார்கள். ஆனால் இப்ப எங்கட சமூகம் நிறைய மாற்றமடைந்து விட்டது. தான் தனக்காக வாழ பழகி விட்டார்கள். அதனால் வரும் பிரச்சனைகளையும் இலாவகமாகத் தூக்கி எறிந்து விட்டுச் செல்லவும் துணிந்து விட்டார்கள். கருத்துக்கு நன்றி நிழலி.

நல்ல ஒரு ஆக்கம்.

நன்றி.

3 hours ago, Kavallur Kanmani said:

மன உணர்வுகளை மதிக்கும்படியாக எமது சமூகம் எம்மை வளர விடவில்லை. அவர் என்ன சொல்வார் இவர் என்ன சொல்வார் என்று பயப்படுத்தித்தான் எமது பெற்றவர்கள் எம்மை வளர்த்தார்கள். ஆனால் இப்ப எங்கட சமூகம் நிறைய மாற்றமடைந்து விட்டது.

 

இன்றும் யாழில் கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாமல் கேவலமா மற்றவர்களின் சொந்த வாழ்க்கையை காரணம் காட்டும் கேவலமான உறவுகள் இருக்கும் வரை ....... 

சமூகம் மாறாது

சமூகம் என்பது நாங்கள் + நீங்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

உன் தோள்சாய ஆசைதான்

இச்சிறுகதை இன்றைய நாட்களில் புலம்பெயர்ந்து வாழும் நாம் எதிர்நோக்கும் முக்கிய விடயத்தில் ஒன்று. முதுமை, தனிமை நம்மவர்களுக்கு சாபம்போல் அமைந்துவிட்டது.காலங்காலமாக பிள்ளைகளின் முகம்பார்த்தே வளர்ந்தும் வாழ்ந்தும் பழகிப்போய்விட்ட சமூக அமைப்பில், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி எல்லாவற்றையும் பிள்ளைகளுக்காக பிள்ளைகளுக்காக என்று தமது இளமை வாழ்விலிருந்து அனைத்தையும் சுய ஒடுக்கத்திற்கு உள்ளாக்கி வாழும் பெற்றோரைக் கொண்ட சமூக அமைப்பைக் கொண்டவர்கள் நாம். நேற்றுவரைக்கும் அந்த வாழ்க்கைக்கு ஒரு தனித்துவம் இருந்தது. இப்போது அப்படியல்ல இயந்திரத்தனமான வாழ்க்கை ஓட்டம், நின்று நிதானித்து ஏன் என்று கேட்க முடியாது வாழ்க்கையைத் தேடிக்கொண்டு நகரும் அவலம். யாரையும் குற்றஞ் சொல்ல முடியாது. இயங்கும் நிலை குறைந்தால் அதற்கு மதிப்பே கிடையாது. முதுமையும் அப்படித்தான் மனதில் தோன்றும் தனிமையின் தளர்ச்சி இயலாமையை உருவாக்கி மற்றவர்களுக்கு வேண்டாவர்களாக எம்மை மாற்றிவிட்டால் இந்த மனிதவாழ்வின் ஓட்டத்தில் ஓதுக்கப்பட்டுவிடுவோம். அத்தகைய ஓதுக்கம் என்பது மிகப்பயங்கரமானது. பேசத் தெரியும் ஆனால் பேச முடியாது அல்லது பேசுவதற்கு யாருமில்லை, பொழுதுபோக்கு சாதனங்களுக்குள் எவ்வளவு நேரம் நம்மை உட்படுத்தமுடியும்..... தொடர்ந்து அதற்குள் முடங்க முடியாது. என்ன.....  எல்லாம் தெரியும் ஆனால் அனைத்தும் ஏதோ வகையில் கட்டாய சுய ஒடுக்கத்திற்குள் கட்டுப்படுத்தப்படுகிறது காரணம். முதுமை உண்மையிலேயே அதிலிருந்து வெளியே வரவேண்டும் எமது சமூகவாழ்வில் சில மாற்றங்கள் உருவாக்கப்படவேண்டும். அந்த மாற்றம் மானுட நேசிப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தால் தள்ளாமையையும் கொஞ்சம் தள்ளிப்போடலாம். வாழ்த்துக்கள் தோழி காலத்தை பிரதிபலிக்கும் கதை எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படும் நம்புவோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/26/2019 at 10:30 AM, ஜீவன் சிவா said:

நல்ல ஒரு ஆக்கம்.

நன்றி.

 

இன்றும் யாழில் கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாமல் கேவலமா மற்றவர்களின் சொந்த வாழ்க்கையை காரணம் காட்டும் கேவலமான உறவுகள் இருக்கும் வரை ....... 

சமூகம் மாறாது

சமூகம் என்பது நாங்கள் + நீங்கள்தான்.

கருத்துக்கு நன்றிகள் ஜீவன்சிவா . என்ன செய்வது எம்மை நாமே ஒரு இரவுக்குள் மாற்ற முடியாது. ஆனால் நாளடைவில் நிச்சயம் மாற்றம் நிகழும். நம்புவோம். நம்பிக்கையே வாழ்க்கை. தொடர்ந்தும் இணைந்திருங்கள். நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வல்வை சகாறா said:

உன் தோள்சாய ஆசைதான்

இச்சிறுகதை இன்றைய நாட்களில் புலம்பெயர்ந்து வாழும் நாம் எதிர்நோக்கும் முக்கிய விடயத்தில் ஒன்று. முதுமை, தனிமை நம்மவர்களுக்கு சாபம்போல் அமைந்துவிட்டது.காலங்காலமாக பிள்ளைகளின் முகம்பார்த்தே வளர்ந்தும் வாழ்ந்தும் பழகிப்போய்விட்ட சமூக அமைப்பில், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி எல்லாவற்றையும் பிள்ளைகளுக்காக பிள்ளைகளுக்காக என்று தமது இளமை வாழ்விலிருந்து அனைத்தையும் சுய ஒடுக்கத்திற்கு உள்ளாக்கி வாழும் பெற்றோரைக் கொண்ட சமூக அமைப்பைக் கொண்டவர்கள் நாம். நேற்றுவரைக்கும் அந்த வாழ்க்கைக்கு ஒரு தனித்துவம் இருந்தது. இப்போது அப்படியல்ல இயந்திரத்தனமான வாழ்க்கை ஓட்டம், நின்று நிதானித்து ஏன் என்று கேட்க முடியாது வாழ்க்கையைத் தேடிக்கொண்டு நகரும் அவலம். யாரையும் குற்றஞ் சொல்ல முடியாது. இயங்கும் நிலை குறைந்தால் அதற்கு மதிப்பே கிடையாது. முதுமையும் அப்படித்தான் மனதில் தோன்றும் தனிமையின் தளர்ச்சி இயலாமையை உருவாக்கி மற்றவர்களுக்கு வேண்டாவர்களாக எம்மை மாற்றிவிட்டால் இந்த மனிதவாழ்வின் ஓட்டத்தில் ஓதுக்கப்பட்டுவிடுவோம். அத்தகைய ஓதுக்கம் என்பது மிகப்பயங்கரமானது. பேசத் தெரியும் ஆனால் பேச முடியாது அல்லது பேசுவதற்கு யாருமில்லை, பொழுதுபோக்கு சாதனங்களுக்குள் எவ்வளவு நேரம் நம்மை உட்படுத்தமுடியும்..... தொடர்ந்து அதற்குள் முடங்க முடியாது. என்ன.....  எல்லாம் தெரியும் ஆனால் அனைத்தும் ஏதோ வகையில் கட்டாய சுய ஒடுக்கத்திற்குள் கட்டுப்படுத்தப்படுகிறது காரணம். முதுமை உண்மையிலேயே அதிலிருந்து வெளியே வரவேண்டும் எமது சமூகவாழ்வில் சில மாற்றங்கள் உருவாக்கப்படவேண்டும். அந்த மாற்றம் மானுட நேசிப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தால் தள்ளாமையையும் கொஞ்சம் தள்ளிப்போடலாம். வாழ்த்துக்கள் தோழி காலத்தை பிரதிபலிக்கும் கதை எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படும் நம்புவோம்

முதுமையின் இயலாமையையும் தனிமையின் வெறுமையையும் நன்றாக உள்வாங்கி பதில் எழுதியுள்ளீர்கள். இந்த இயந்திரவாழ்வோட்டத்தில் பிள்ளைகள் நின்று நிதானித்து பெற்றவர்களுக்கு பதில் சொல்லக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம். என்னதான் எமமை நாமே முன்னிலைப்படுத்திக் கொண்டாலும் முதுமையில் துணையின்றி வாழ்வதென்பது பெரிய சவாலாக எதிர் கொள்ள வேண்டிய விடயம்தான். இளமையிலேயே துணை வேண்டாம் என்ற ஒதுக்குபவர்கள் ஒருபுறம் முதுமையில் துணை வேண்டும் என்று எண்ணுபவர்கள் ஒருபுறம் என்று மனித மனங்கள் பலவிதம். காலத்தை பிரதிபலிக்கும் கதைக்கு  படித்து கருத்தெழுதிய சகாராவுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களும்

சமூகமும்

ஏன் மாற்றங்களும்  கூட ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை  தானே  அக்கா?

எல்லா  கணக்கும் போட்டுப்பார்த்து

விடை  காண்பதில் தான்  சிக்கல்களும்

கால  தாமதங்களும்

அதனூடு விடையே இல்லாத வாழ்வும் தொடர்கிறது???

என்னைக்கேட்டால் இன்று இதற்கு  விடை  சொல்வேன்

ஆனால் நாளை  எனக்கான வாழ்வாக 

அன்று கேட்டால்........????

தொடருங்கள்

விதைப்பது  நம் கடமை

அறுவடை அவரவர் கையில்...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முற்போக்குச் சிந்தனையுள்ள கதை அக்கா. ஆனாலும் ஆண்களுக்கு மட்டும் எதையும் அனுசரிக்க முடிவெடுக்க முடியும் என்பதைத்தான் கதை காட்டுகிறது. சமூக பயம் என்பதையும் தாண்டி இந்னொரு கிழவனின் ஆடைகளைத் தோய்ந்து சமைத்துக்கொடுத்து அவருக்குப் பணிவிடை செய்ய .....வேறை வேலையில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.