Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் எல்லைக்குள்... இந்திய போர் விமானப்படை இன்று தாக்குதல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

à®à®ªà¯à®ªà¯à®¤à¯ தாà®à¯à®à¯à®¤à®²à¯

இந்தியா அதிரடி.. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து வெளுத்த "மிராஜ்".. தீவிரவாத முகாம்கள் காலி.

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது கடுமையான போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானதில் இருந்தே பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில்தான் இந்திய விமானப்படை பாகிஸ்தானில் அதிரடி தாக்குதல் நடத்தி இருக்கிறது. பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, பாகிஸ்தானின் பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் தாக்குதல் நடத்தி உள்ளது.

இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குல் நடத்தி இருக்கிறது.

à®à®à¯à®à¯ தாà®à¯à®à¯à®¤à®²à¯

பாகிஸ்தானின் முசாபராபாத் பகுதிக்குள் புகுந்த இந்தியா ராணுவத்தின் போர்ப்படை விமானம் இந்த அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த தாக்குதலில் அங்கு இருந்த இரண்டுக்கும் மேற்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது.

இந்திய ராணுவத்தின் போர் விமானம் ஒன்று எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் வந்ததாக பாகிஸ்தான் ராணுவம் இன்று காலையே புகார் அளித்து இருந்தது. பாகிஸ்தான் ராணுவம் அளித்துள்ள புகாரில், இந்தியா ராணுவத்தின் போர் விமானம் ஒன்று பாகிஸ்தானின் முசாபராபாத் பகுதிக்குள் வந்தது. ஆனால் பாகிஸ்தான் விமானப்படை வேகமாக செயல்பட்டு, பதிலடி கொடுத்தது என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

à®à®¾à®²à¯à®¯à®¿à®²à¯ பà¯à®à®¾à®°à¯

இந்திய ராணுவத்தின் போர் விமானம் ஒன்று எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் வந்ததாக பாகிஸ்தான் ராணுவம் இன்று காலையே புகார் அளித்து இருந்தது. பாகிஸ்தான் ராணுவம் அளித்துள்ள புகாரில், இந்தியா ராணுவத்தின் போர் விமானம் ஒன்று பாகிஸ்தானின் முசாபராபாத் பகுதிக்குள் வந்தது. ஆனால் பாகிஸ்தான் விமானப்படை வேகமாக செயல்பட்டு, பதிலடி கொடுத்தது. என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/indian-fighter-jets-struck-major-terrorist-camp-across-the-pak-loc-342424.html

##################     #####################    #########################  ########################

à®à®à¯à®¤à®¿ வாயà¯à®¨à¯à®¤ à®à¯à®£à¯à®à¯à®à®³à¯

1000 கிலோ வெடி பொருட்கள்.. 4 இடங்கள்.. மொத்த முகாம்களும் காலி.. வெளுத்தெடுத்த இந்தியா

பாகிஸ்தான் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் செயல்பட்டு வரும், அட்டகாசம் செய்து வரும் தீவிரவாதிகளுக்கு முடிவு கட்ட இந்தியா பலத்துடன் களம் இறங்கியுள்ளது. இன்று நடந்த தாக்குதலில் 1000 கிலோ வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. அதை விட முக்கியமாக பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியான பாலகோட் என்ற பகுதியில் தாக்குதல் நடந்திருப்பது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியா ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருந்தார்.

à®à®¯à®¿à®°à¯à®à¯à®¤à®®à¯

எனவே தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை தர இந்தியா ஆயத்தமாகி வந்தது. அதன் அடிப்படையில் களம் இறங்கி விட்டது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு இதற்கான நேரம் குறிக்கப்பட்டும்விட்டது.

இந்திய -பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா விமானப் படை தாக்குதலை அதிரடியாக நடத்தியது. ஒவ்வொன்றும் சக்தி வாய்ந்த குண்டுகள்... இவைகளைதான் தீவிரவாத முகாம்கள் மீது வீசியெறிந்தது இந்தியா.

இப்படி தாக்குதலை நடத்துவதற்காக 12 மிராஜ் ரக போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 1000 கிலோ அளவுள்ள வெடிகுண்டுகள் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 4 இடங்கள் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளன.

இந்த அதிரடி குண்டு வீச்சில் சிக்கி அத்தனை தீவிரவாத முகாம்களும் முற்றிலும் தூள்தூளாக அழிந்து நாசமானது. பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு நெடுகிலும் உள்ள முகாம்களை தாக்கி தகர்த்து விட்டதாக இந்தியா கூறியுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/iaf-attack-on-terror-camp-342428.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

à®à®¨à¯à®¤ விமானமà¯

தீவிரவாத முகாமில் கடும் தாக்குதல்.. 200-300 பேர் பலியாகி இருக்கலாம்.. இந்திய ராணுவம் பகீர் தகவல்!

இந்திய ராணுவம் பாகிஸ்தானில் நடத்திய தாக்குதலில் மொத்தம் 200 முதல் 300 பேர் வரை கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது உறுதியாகி உள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமான இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய ராணுவம் அதிரடியாக இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால் பாகிஸ்தான் தரப்பில் பெரிய சேதம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

மிராஜ் 2000 விமானம் மூலம் இந்த தாக்குதல் நடந்துள்ளது. மொத்தம் 12 விமானங்கள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சர்ஜிக்கல் தாக்குதல் முறையில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

தாக்குதலில் மொத்தம் 200 முதல் 300 பேர் வரை கொல்லப்பட்டதாக இந்தியா ராணுவம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இறந்தவர்கள் எல்லோரும் பாகிஸ்தான் தரப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லோரும் தீவிரவாதிகள் என்றும் கூறப்படுகிறது.

எல்லோரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்பட்ட முசாபராபாத் ஜெய்ஷ் இ முகமது மிகவும் வலுவாக இருக்கும் இடம் ஆகும். மொத்தம் 4 ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியா தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் ஒப்புகொண்டு இருக்கிறது. ஆனால் இதனால் யாரும் பலியாகவில்லை என்று பாகிஸ்தான் ராணுவம் கூறி இருக்கிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/india-attack-pakistan-iaf-claims-200-300-causalities-pakistan-side-342427.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ராணுவமா? விமானப்படையா?
குழப்பமா இருக்கே ஆபிசர்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:

இந்திய ராணுவமா? விமானப்படையா?
குழப்பமா இருக்கே ஆபிசர்!

விமானப் படையின் விமானத்தில் போன.... இந்திய ராணுவத்தினராக இருக்குமோ..... 🤪 😝

  • கருத்துக்கள உறவுகள்

நான் நம்பீட்டன்!!!🤣

  • கருத்துக்கள உறவுகள்

vijayakanth_1200x630xt.jpg

கேப்டனின் உடல் நிலை சரியில்லாத காரணத்தாலும் , அவர் தேர்தல் கூட்டணி குறித்து பிசியாக இருப்பதாலும் .. துணை கேப்டனின் தலைமையில் நடந்த துல்லியம் இல்லாத தாக்குதலால் பாகிஸ்தானில் பல பேரின்ர மண்டை தப்பியது .. 😎

டிஸ்கி :

காசா பணமா எண்டு ஆளாளுக்கு ருவீட்டரை தட்டுகினம் .. ஒரே டமாஸ்தான் .. 😍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள பாக்க சந்தேகம் அதிகமாகிறது!
சேதமடைந்த முகாம் ஒன்றையும் காணேல!
குண்டு போட்டிட்டு விமானத்தால இறங்கி போய் பக்கத்தில எடுத்தாங்களோ?! இல்ல பாகிஸ்தான் வெளியிட்ட படங்களோ?!

ஆக்களில்லாத இடத்தில குண்டு போட்டு படம் காட்டினமோ...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தையும், மலையாளிகளையும், முக்கியமாக நம்பூதிரி மலையாளிகளையும்  மையப்படுத்தி , கொங்கிரசால் ஏன் சீனாவோடு டொக்கலாமில் இப்படி கையாள முடியாமல் போனது என்பது ஹிந்திய மற்றும் மாநில  தொலைக்காட்சி சேவைகளில் விவாதமாக உருவெடுக்க வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.