Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகேதீஸ்வரத்தில் பதட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2019 at 7:29 PM, ragunathan said:

மதமாற்றம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், இனமாற்றம் பற்றிக் கேட்டதில்லை இதுவரை!

தமிழர் ஏனைய பல இனங்களை போல ஒரு கலப்பு இனம். உலகில் மனித இனங்கள் தோன்றியது பற்றி இரு வகையான விஞ்ஞான விளக்கங்கள் உள்ளன. ஒரு விளக்கம் உலகின் சில பகுதிகளில் மனிதர் மிருகங்களில் இருந்து  பரிணாம வளர்ச்சி அடைந்து பின்னர் கலந்தார்கள் என்று சொல்கிறது. பெரும்பாலான அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கம் மனிதர்கள் எதியோப்பியாவில் தோன்றி பின்னர் உலகெங்கும் பரவினர் என்று சொல்கிறது. தமிழரின் மூதாதையர் ஆபிரிக்கர்.

இரேண்டாவது விளக்கப்படி பார்த்தால், ஆபிரிக்கரான தமிழர் பின்னர் மொங்கோலிய கலப்பும் காகேசியன் கலப்பும் கொண்டு உருவான இனமாக உள்ளது.

எனது மாமியார் ஒருவர் சிங்களவராக பிறந்து தமிழராக வாழ்ந்து தமிழரான எனது மாமாவை திருமணம் செய்தவர். சிங்கப்பூரில் இருக்கும் எனது நண்பர் ஒருவரின் மனைவி சீன பெண்ணாக பிறந்து தமிழராக தமிழ் பெற்றோரால் வளர்க்கப்பட்டு தமிழரை திருமணம் செய்து தமிழ் குழந்தைகளின் தாயாக இருக்கிறார். எனது நண்பி ஒருவர் தமிழ் பெண்ணாக பிறந்து தமிழரால் கைவிடப்பட்டு சிங்களவரால் வளர்க்கப்பட்டு சிங்களவராக வாழ்கிறார். இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள் தமிழர்களாக இல்லாமல் அமெரிக்கர்களாக வாழ்கிறார்கள். இந்திய தமிழ் பெண்ணுக்கும் கரிபியன் ஆபிரிக்க தந்தைக்கும் பிறந்த கமலா ஹரிஸ் அடுத்த அமெரிக்க தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதியாக வர போட்டி இடுகிறார். இவர் அமெரிக்கர் - தமிழர் அல்ல. தெலுங்கரான வை கோ கோபாலசாமி தமிழர் - வீட்டிலே இப்பவும் தெலுங்கு பேசுகிறார் என்று எங்கோ படித்த நினைவு. மலையாளி எம். ஜி. ஆர். இலங்கையில் பிறந்த "தமிழர்". பார்சி இனத்தவர் ஈரானில் இருந்து  இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து பிராமணராகி பின்னர் தமிழ்நாடு வந்து அவர்கள் வழி வந்த ஜெயலலிதா தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த தமிழ் அம்மா.

இனங்கள் மாறவில்லையா?

21 hours ago, thulasie said:

இனமும் எப்போதுமே மாறாது என்றில்லை.

காலச் சுழற்சியில், பரிணாமம் அடைந்து, ஓரினம் வேறினமாக அல்லது இனமற்றவர்களாக மக்கள் மாறுவதும் நடக்கத்தான் செய்கிறது.

"நடக்கத்தான் செய்கிறது" என்பதிலும் பார்க்க இது தான் மனிதர்களின் வரலாறு என்பதே சரியாகும். 

18 hours ago, Paanch said:

குரங்கு இனம் பரினாமம் அடைந்து மனித இனம் உருவான டார்வின் கூற்றைப் பள்ளியில் பாடமாகவும் படிப்பிக்கிறார்கள். ஆனாலும் குரங்கு இனம், இன்னமும் அப்படியே குரங்காகவே இருக்கிறது ஆச்சரியமாக உள்ளது. இனி மனித இனம் பரினாமம் அடைந்து என்னவாகுமோ...🤔🤔   

மனித இனம் பரிணாமம் அடைந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் "மனிதர்கள்" என்ற பெரிய குழுமத்துள் வேறுபாடுகளை, குறிப்பாக பரிணாமத்தை புகுத்த பல தத்துவ அடிப்படியிலான தடைகள் உள்ளன. 

பொருளாதார மற்றும் அறிவியல் ரீதியாக வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள மனிதர்கள், அமேசான் காடுகளிலும் நிகோபார் காட்டிலும் உள்ள மனிதர்ளில் இருந்து பரிணாமம் அடைந்தவர்கள். எப்படி பரிணாமம் அடையாமல் இன்னமும் காடுகளில் குரங்குகள் உள்ளனவோ அப்படி இடத்துக்கு இடம் மாறுபட்ட பரிணாம அளவில் மனிதர்களும் இருக்கிறார்கள்.

23 hours ago, Paanch said:

குரங்கு இனம் பரினாமம் அடைந்து மனித இனம் உருவான டார்வின் கூற்றைப் பள்ளியில் பாடமாகவும் படிப்பிக்கிறார்கள். ஆனாலும் குரங்கு இனம், இன்னமும் அப்படியே குரங்காகவே இருக்கிறது ஆச்சரியமாக உள்ளது. இனி மனித இனம் பரினாமம் அடைந்து என்னவாகுமோ...🤔🤔   


 


டார்வினின் பரிணாம வளர்ச்சி என்பது பிழையானது என்று எப்போதோ நிரூபிக்கப்பட்டதொன்று!

குரங்கு வேறு.

மனிதன் வேறு.

Edited by thulasie

பரிணாமம் என்பது,  ஒரு நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு மாறும்  படிப்படியான மாற்றம் அல்லது வளர்ச்சி.

அபிவிருத்தி, அறிவியல் போன்றவற்றினால் ஏற்படும் பரிணாமம்.

தான் கொண்ட கொள்கை மாறும்போது ஏற்படும் பரிணாமம்.

தான் கொண்ட மதத்தில் அல்லது நம்பிக்கையில் ஏற்படும் பரிணாமம் போன்றவைதான் அந்தப் பரிமாணங்கள்.

மனிதன் ஒருபோதும், தான் பவுதீக  உடலியல்  ரீதியாக பரிணாமம் அடைவதில்லை.

மனிதன் என்பவன், இறைவனின் படைப்புக்களில் ஒன்று.

4 hours ago, Jude said:

 

பொருளாதார மற்றும் அறிவியல் ரீதியாக வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள மனிதர்கள், அமேசான் காடுகளிலும் நிகோபார் காட்டிலும் உள்ள மனிதர்ளில் இருந்து பரிணாமம் அடைந்தவர்கள். எப்படி பரிணாமம் அடையாமல் இன்னமும் காடுகளில் குரங்குகள் உள்ளனவோ அப்படி இடத்துக்கு இடம் மாறுபட்ட பரிணாம அளவில் மனிதர்களும் இருக்கிறார்கள்.


 

குரங்குகள் எப்போதும் குரங்குகள்தான் - அவை காட்டில் இருந்தாலும், மிருகக் காட்சிச்சாலைகளில் மனிதர்களால் பாதுகாக்கப்பட்டு வளர்த்தெடுத்தாலும், அதன் குணங்களோ, உடலியல் கூறுகளோ ஒருபோதும் மாறுவதில்லை.

மனிதனும் அதேமாதிரிதான்.

மனிதனின்  பரிணாமம், மனிதனின் பகுத்தறிவினால் ஏற்படும்  வளர்ச்சி, அபிவிருத்தி, புதிய கண்டுபிடிப்புகளால் ஏற்படும் தாக்கங்களால் மாறக்கூடியது.

மனிதன் ஒருபோதும், இன்னோர் உயிரினத்தில்  இருந்து, மாறியவனல்ல.

இப்போது இருக்கும் மனிதன்,  இன்னோர் உயிரினமாக மாறுபவனும் அல்ல.

மனிதன் எப்போதும் மனிதன்தான்.

குரங்கு எப்போதும் குரங்குதான்.

 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, thulasie said:


 


டார்வினின் பரிணாம வளர்ச்சி என்பது பிழையானது என்று எப்போதோ நிரூபிக்கப்பட்டதொன்று!

குரங்கு வேறு.

மனிதன் வேறு.

டார்வினின் பரிமாண வளர்ச்சி பற்றிய விளக்கம்  பிழையானது என்றால் அதை ஏன் மேலைநாடுகளில் விஞ்ஞானத்தில் கற்பிக்கின்றார்கள்? பிழையானது என்று peer review செய்யப்பட்ட papers எங்காவது பிரசுரிக்கப்பட்டால் ஆதாரத்தைத் தாருங்கள். நாங்களும் எங்கள் அறிவை புதுப்பித்துக்கொள்ள உதவியாக இருக்கும்😎

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, thulasie said:

னிதன் என்பவன், இறைவனின் படைப்புக்களில் ஒன்று

அடடா! நீங்கள் எங்கேயோ போய்விட்டீர்கள்!!

5 minutes ago, கிருபன் said:

டார்வினின் பரிமாண வளர்ச்சி பற்றிய விளக்கம்  பிழையானது என்றால் அதை ஏன் மேலைநாடுகளில் விஞ்ஞானத்தில் கற்பிக்கின்றார்கள்? பிழையானது என்று peer review செய்யப்பட்ட papers எங்காவது பிரசுரிக்கப்பட்டால் ஆதாரத்தைத் தாருங்கள். நாங்களும் எங்கள் அறிவை புதுப்பித்துக்கொள்ள உதவியாக இருக்கும்😎

ஓர் அறிவியல் சார்ந்த கொள்கை பிழையானது என்று பின்னால் கண்டுபிடிக்கப்பட்டால்,  அந்தக் கொள்கையை எந்தவொரு நாடும் முற்றாக புறக்கணிப்பதில்லை.

அதை உசாத்துணையாக வைத்துக் கொள்கிறார்கள் - அது பிழை என்று தெரிந்தும். 

அது பிழை என்று சொல்வதால், டார்வின் பொய் சொன்னார் என்று சொல்வதில்லை யாரும். 

அந்தக் காலகட்டத்தில், அவர் கண்ட உண்மை பின்னாளில் பொய்யானது.  

அவ்வளவுதான்.

4 minutes ago, கிருபன் said:

அடடா! நீங்கள் எங்கேயோ போய்விட்டீர்கள்!!

எங்கே போவதற்கு!

யாழில்தான் இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, thulasie said:

ஓர் அறிவியல் சார்ந்த கொள்கை பிழையானது என்று பின்னால் கண்டுபிடிக்கப்பட்டால்,  அந்தக் கொள்கையை எந்தவொரு நாடும் முற்றாக புறக்கணிப்பதில்லை.

அதை உசாத்துணையாக வைத்துக் கொள்கிறார்கள் - அது பிழை என்று தெரிந்தும். 

அது பிழை என்று சொல்வதால், டார்வின் பொய் சொன்னார் என்று சொல்வதில்லை யாரும். 

அந்தக் காலகட்டத்தில், அவர் கண்ட உண்மை பின்னாளில் பொய்யானது.  

அவ்வளவுதான்.

எங்கே போவதற்கு!

யாழில்தான் இருக்கிறேன்.

உங்கள் ஆதாரம் எங்கே?

ஒரு விடயத்தை நம்புவது நம்பாதது உங்கள் உரிமை, ஆனால் பொதுவெளியில் இப்படி உறுதியாகச் சொல்லும் போது ஆதாரம் காட்டுங்கள்! முகநூல், யுரியூப் குப்பைகளை விட்டு விட்டு, ஒரு சஞ்சிகையில் வந்த ஆதாரத்தைக் காட்டுங்கள்!

4 minutes ago, Justin said:

உங்கள் ஆதாரம் எங்கே?

ஒரு விடயத்தை நம்புவது நம்பாதது உங்கள் உரிமை, ஆனால் பொதுவெளியில் இப்படி உறுதியாகச் சொல்லும் போது ஆதாரம் காட்டுங்கள்! முகநூல், யுரியூப் குப்பைகளை விட்டு விட்டு, ஒரு சஞ்சிகையில் வந்த ஆதாரத்தைக் காட்டுங்கள்!

தற்போது என்வசம் இல்லை.

முகநூல், Ytube இல் வருவது, சஞ்சிகைகள், புத்தகங்கள் போன்றவற்றில் இருந்துதான்.

இரு வருடங்களின் முன், இங்கிலாந்தில் உள்ள யூதப் பள்ளிக்கூடங்களில் இனிமேல், மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என்பது பொய்ப்பிக்கப்பட்டதொன்று என்றும், இனிமேல் பிள்ளைகளுக்கு படிப்பிக்கக் கூடாது என்றும் வாதிட்டார்கள்.

இதை, கிறிஸ்தவ, முஸ்லீம் தலைமை பீடங்களும் ஆதரிக்க, இங்கிலாந்து அரசு அந்தக் கோரிக்கையை அமிழ்த்தி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

😎

6 minutes ago, thulasie said:

தற்போது என்வசம் இல்லை.

முகநூல், Ytube இல் வருவது, சஞ்சிகைகள், புத்தகங்கள் போன்றவற்றில் இருந்துதான்.

இரு வருடங்களின் முன், இங்கிலாந்தில் உள்ள யூதப் பள்ளிக்கூடங்களில் இனிமேல், மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என்பது பொய்ப்பிக்கப்பட்டதொன்று என்றும், இனிமேல் பிள்ளைகளுக்கு படிப்பிக்கக் கூடாது என்றும் வாதிட்டார்கள்.

இதை, கிறிஸ்தவ, முஸ்லீம் தலைமை பீடங்களும் ஆதரிக்க, இங்கிலாந்து அரசு அந்தக் கோரிக்கையை அமிழ்த்தி விட்டது.

உங்களுடன் பேசுவது மூளை அழற்சி தரும் பணி! வயதாவதால் இப்போது கஷ்டமாகி வருகிற்து எனக்கு! யூரியூப், முகநூல் பார்த்து உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்! தயை கூர்ந்து நூலகப் பக்கம் போய் விடாதீர்கள்!

8 minutes ago, Justin said:

😎

உங்களுடன் பேசுவது மூளை அழற்சி தரும் பணி! வயதாவதால் இப்போது கஷ்டமாகி வருகிற்து எனக்கு! யூரியூப், முகநூல் பார்த்து உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்! தயை கூர்ந்து நூலகப் பக்கம் போய் விடாதீர்கள்!

நூலகத்தில் பொதுவாக பழைய புத்தகங்கள்தான் இருக்கும்.

நூலகத்திற்கு லேட்டஸ்ட் ஆக வரும் புத்தகங்கள், மிகவும் லேட்டாகத்தான் வரும்.

லேட்டஸ்ட் ஆக வரும் புத்தகங்களை காசு கொடுத்துதான் வாங்கி படிக்க வேண்டும். 

காசு இல்லாதவர்களுக்கு, லேட்டஸ்ட் ஆக வரும் புத்தகங்களில் உள்ள நிகழ்வான சம்பவங்களை, சோசியல் மீடியா மூலம் அறிவது சாலவும் சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.