Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனத்தை இலக்குவைத்து யுத்தம் நடத்தவில்லை – கோட்டா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனத்தை இலக்குவைத்து யுத்தம் நடத்தவில்லை – கோட்டா

நாட்டின் எந்தவொரு இனத்தையும் இலக்குவைத்து யுத்தம் நடத்தவில்லை என்றும் தீவிரவாதத்தை வேரறுப்பதே தமது பிரதான நோக்கமாக இருந்ததாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் எதிர்கால அரசாங்கங்களை பலவீனப்படுத்தும் வகையிலேயே புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொடிகாவத்தை பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வெளிச்சம் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “2004ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ நாட்டை பொறுப்பேற்று, யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து, பொருளாதார ரீதியாகவும் நாட்டை முன்னேற்றினார்.

நாம், ஒரு இனத்தை இலக்கு வைத்து அன்று யுத்தத்தை நடத்தவில்லை. மாறாக, எமக்கு நாட்டிலிருந்து தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கமாக இருந்தது.

இதன்போது பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாம் குறுகிய காலத்தில் பல்வேறு செயற்றிட்டங்களை செய்தோம்.

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த புலிகளின் 13 ஆயிரம் உறுப்பினர்களுக்கு வெறும் மூன்றே வருடங்களில் புனர்வாழ்வளித்து, சமூகமயப்படுத்தினோம்.

அத்தோடு, மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் நாம் வெற்றிகரமாக முன்னெடுத்தோம். யுத்தம் இடம்பெற்ற அனைத்து பகுதிகளையும் நாம் அபிவிருத்தி செய்தோம்.

நாம் 2015ஆம் ஆண்டு நாட்டை இந்த அரசாங்கத்திடம் ஒப்படைக்கும்போது, நாடு சிறப்பான நிலையிலேயே இருந்தது. ஆனால், தற்போது அபிவிருத்திகளை எம்மால் காணமுடியாமல் உள்ளது.

இப்படியான அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள அரசமைப்பினால், நிச்சயமாக எதிர்காலத்தில் ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க முடியாது.

இலங்கை போன்ற வளர்ச்சியடைந்துவரும் நாட்டுக்கு அது பாதிப்பாகவே அமையும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/இனத்தை-இலக்குவைத்து-யுத்/

 

  • கருத்துக்கள உறவுகள்

180px-Bengaalse_oehoe.JPG

கோத்தபாயா என்ற கோட்டானை தேடியபோது :

இரவு நேரம்... எதிரிகளின் பாசறைக்குச் சமீபமான வனத்தின் ஓர் ஆலமரத்தடியில் வந்து அமர்ந்தான் அசுவத்தாமன். பாண்டவர்களை எப்படி அழிப்பது என்று தீவிரமாகச் சிந்தித்தான். அந்த மரத்தின்மேல் இருந்த கூட்டில் காக்கைகள் உறங்கிக் கொண்டிருந்தன. அப்போது, ஒரு கோட்டான் அங்கே வந்து, உறங்கிக்கொண்டிருந்த காக்கைகளைக் கொத்தித் தின்றது. இரவில் கண் தெரியாமல், எதிரி யாரென்றும் அறியாமல், எதிர்க்கவும் முடியாமல், காக்கைகள் உயிர் விட்டன. அந்தக் கோட்டான், காக்கைகளைக் கொன்றதுபோல உறங்கிக்கொண்டிருக்கும் பாண்டவர்களையும், பாண்டவ புத்திரர்களையும் கொன்று, பாண்டவ வம்சத்தையே இரவோடு இரவாகப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டான் அசுவத்தாமன்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இளைஞர்களின் இரத்தம் இந்து மகா சமுத்திரத்துக்கும்   தமிழ் பெண்களை  ராணுவத்துக்கும் இரையாக்குவோம் என யுத்தத்தின் இறுதி நேரம்களில் ராணுவத்துக்கு மத்தியில் இதே நாறல் வாய்தான் கூவியது .  மறப்பமா?

2 hours ago, கிருபன் said:

இனத்தை இலக்குவைத்து யுத்தம் நடத்தவில்லை – கோட்டா

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு மன்னிப்புக்கு இடமில்லாத இனப்படுகொலையாளி.. போர்க்குற்றவாளி.

இவர் தண்டனை இன்றி இந்தப் பூமிப் பந்தில் இருப்பதே மனித குலத்துக்கு அபாயம். 

இதனை சர்வதேசம் உணர்ந்து கொள்ள வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இதே கோத்தா தான் தமிழர்களது வாக்கு இல்லாமல் தேர்தலில் வெல்வேன் என்று சொன்ன நினைவு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் குற்றம், போர்குற்றவாளி எண்டு எங்களுக்கை கதைச்சு சண்டை பிடிக்கவேண்டியதுதான்.......சிங்களத்தின்ரை போக்கே தனிவழி....ஒருத்தராலையும் அசைக்கேலாது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

போர் குற்றம், போர்குற்றவாளி எண்டு எங்களுக்கை கதைச்சு சண்டை பிடிக்கவேண்டியதுதான்.......சிங்களத்தின்ரை போக்கே தனிவழி....ஒருத்தராலையும் அசைக்கேலாது.

அது சிங்களம் இல்லை தெலுங்கு அதுதான் கொஞ்சம் கரைச்சலாக இருக்கு எண்டெல்லே ஒரு கதையும் இருக்கு  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.