Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரவணபவன் சைவ உணவக அதிபர் சிறை செல்கிறார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமூகத்தின் அடித்தட்டில் இருந்து, கடின உழைப்பின் மூலம் சரவணபவன் என்னும் நிறுவனத்தின் ஆரம்பித்து, இன்று உலகம் முழுவதும் கிளை பரப்பி பெரும் அந்நிய செலாவணி வருமானத்தினை பெற்றுத் தரும் வகையில் கட்டி அமைத்தவர் ராஜகோபால் அவர்கள்.  

ஆனாலும், சில வெற்றியாளர்களுக்கு இருக்கும், பெண்ணாசை இவரையும் விடவில்லை.

கிருத்திகா என்னும் வேலைக்கு வந்த திருமணமான பிராமணப்பெண்ணை முதலில் மடக்கி, அவரது, அப்பிராணி கணவர், கணேஷ் என்பவரை துரத்தி விட்டு,  இரண்டாவது மனைவியாக வைத்துக் கொண்டிருந்தார்.

பின்னர் தனது நிறுவனத்தில், வேலை செய்துகொண்டிருந்த ஒருவரின் மகளான, மகள் வயது இளம் பெண,  ஜீவஜோதி என்னும் பெண்ணின் மேல் ஆசை கொண்டார்.

இவர் மோகம் கொண்டிருந்ததை அறியாத அந்த பெண், தனது காதலரை மணந்து கொண்டார்.

இவரோ, அந்த காதலரை துரத்தி அடிக்கும் வேலை கை கூடாததால் , கடத்தி கொலை செய்து, அந்த பெண்ணை அடைய முயன்றார் என்ற வழக்கில், இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டிருந்தது.

இவர் சென்னை உயர் நீதிமன்றில் மேல்முறையீடு செய்து, பிணையில் வெளியில் இருந்து வியாபாரத்தினை கவனித்தார்.

உயர் நீதிமன்றம் தீர்ப்பினை உறுதி செய்ய, இவரும் இந்திய உச்ச நீதிமன்றில் மேல்முறையீடு செய்து, பிணையில் வெளியில் இருந்து வியாபாரத்தினை தொடர்ந்து வளர்த்து வந்தார்.

இவரது நிறுவனம் உலகளாவிய ரீதியில் இந்தக் காலப்பகுதியில் வளர்ந்து, வேலைவாய்ப்பு, அந்நிய செலாவணி போன்ற விடயங்களில் முன்னணியில் இருந்ததால், மேல்முறையீடு, விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப் பட்டிருந்தது போல தெரிகிறது.

இப்போது, இது விசாரித்து முடிக்கப் பட்டு, இன்று தீர்ப்பு, உறுதிப்படுத்தப் பட்டதாக வந்துள்ளது. 

எதிர்வரும் யூலை மாதம்  7ம் திகதிக்கு முன்னர் அவர் சரணடைய வேண்டும் என உத்தரவு இடப்பட்டுள்ளது.

ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதத்தில் சரிவு.

https://tamil.oneindia.com/news/delhi/hotel-saravana-bhavan-owners-case-in-sc-345284.html

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சரவண பவன் நிறுவனருக்கு ஆயுள்: ஜீவஜோதி வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

Published :  29 Mar 2019  11:52 IST
Updated :  29 Mar 2019  11:52 IST
புதுடெல்லி
 
saravanbhavanjpg

சரவணபவன் ஓட்டல் நிறுவனர் பி.ராஜகோபால்

சரவண பவனில் வேலை பார்த்த ஊழியரைக் கொலை செய்த வழக்கில், ஓட்டல் நிறுவனர் பி.ராஜகோபாலுக்கு (அண்ணாச்சி) ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

1990களின் இறுதியில் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவர் ஓட்டல் சரவண பவனில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். அவரின் மனைவி ஜீவஜோதி, கணவரைக் காண சரவண பவனுக்கு வருவார் எனவும் அப்போது அண்ணாச்சிக்கு ஜீவஜோதி மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

jeevajothijpg

ஜீவஜோதி - பிரின்ஸ் சாந்தகுமார்

 

ஜீவஜோதியை அடைவதற்காக பிரின்ஸ் சாந்தகுமார் கொடைக்கானல் மலையில் கொன்று புதைக்கப்பட்டதாக 2001-ல் புகார் வெடித்தது. ஜீவஜோதி இதுதொடர்பாகப் புகார் அளித்தார். இந்த வழக்கில் சரவண பவன் அதிபர் அண்ணாச்சி ராஜகோபால் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். பூந்தமல்லி நீதிமன்றம் ராஜகோபாலுக்குப் பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அப்பீலில் உயர் நீதிமன்றமும் இதை உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்த ராஜகோபால் பெயிலில் வெளியில் இருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், சரவண பவன் நிறுவனர் பி.ராஜகோபால் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

https://tamil.thehindu.com/india/article26672379.ece

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

சமூகத்தின் அடித்தட்டில் இருந்து, கடின உழைப்பின் மூலம் சரவணபவன் என்னும் நிறுவனத்தின் ஆரம்பித்து, இன்று உலகம் முழுவதும் கிளை பரப்பி பெரும் அந்நிய செலாவணி வருமானத்தினை பெற்றுத் தரும் வகையில் கட்டி அமைத்தவர் ராஜகோபால் அவர்கள்.  

அண்ணாச்சிக்கு இப்போ எத்தனை வயது?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

அண்ணாச்சிக்கு இப்போ எத்தனை வயது?

படத்தை பார்த்து வயதை கணியுங்கோ பாப்பம்?!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

படத்தை பார்த்து வயதை கணியுங்கோ பாப்பம்?!

படம் இப்போ எடுத்ததா பழைய படமா தெரியலயே?
இப்ப எடுத்த படமானால் 57-58 இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் பெரிய தொழில் அதிபர்கள், பெரும் வரி செலுத்துவோர், பெரும் எண்ணிக்கையில் வேலை ஆட்களை கொண்டோருக்கு, சட்டப்படி ஒரு சலுகை உண்டு.

அவரது நிறுவனம் ஒரு தனிப்பட்ட நிறுவனமாக இருந்தால் இந்த சலுகை அரசு தரும்.

சிறைக்கு போனாலும் முதல் வகுப்பு. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தனது அலுவலகத்துக்கு போகமுடியும். இரவு சிறைக்கு.

இதன் நோக்கம், வேலை இழப்பு தவிர்ப்பு, வரி இழப்பு தவிர்ப்பு போன்றவை கவனத்தில் எடுக்கப் பட்டு அவர்களது நிறுவனம் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்வது.

இந்தியாவில் இவ்வளவு காலம் இது கிடப்பில் போடப்பட்டமைக்கு இதுவே மறைமுக காரணம். மேலும் சசிகலா போல இங்கே அரசியல் காரணங்கள் இருக்கவில்லை.

அண்ணாச்சிக்கு 75 வயதுக்கு மேலே ஆகிறது. வியாபாரத்தினை கை மாத்திவிட தயாராக, சிறையும் அழைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் உள்ள சரவணபவன் நிறுவனத்துக்கும் இந்தியாவில் உள்ளத்திற்கும் தொடர்பு இல்லை என்று கேள்விப்பட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

லண்டனில் உள்ள சரவணபவன் நிறுவனத்துக்கும் இந்தியாவில் உள்ளத்திற்கும் தொடர்பு இல்லை என்று கேள்விப்பட்டேன்.

Franchise (தனியுரிமை கிளை)

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களுக்கு முன் நடந்த கொலைக்கு இப்போ தான் தீர்வு கிடைத்துள்ளது.

இளவயதில் செய்த கொலைக்கு சாகப்போற வயதில் தண்டனை நல்ல சட்டமும் நல்ல நாடும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

அண்ணாச்சிக்கு 75 வயதுக்கு மேலே ஆகிறது. வியாபாரத்தினை கை மாத்திவிட தயாராக, சிறையும் அழைக்கின்றது.

என்னது! 75 வயசா?மனிசன் இப்பவும் ஒரு திருமணம் செய்யலாம் போல இருக்கே..
உள்ளுக்கு போனாலும் ராஜா மாதிரி இருப்பார்.பணம் விளையாடும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாட்டில் பச்சரிசி/புழுங்கல் அரிசி வேறுபாடு , இட்டலியில் சாம்பார் இட்டலி எண்டு தனி காசு , தயிர் கப்புக்கு தனி விலை எண்டு கொட்டல் துறையில் இவர் வயிற்றில் அடித்தவை ஏராளம்கள் ..  🤔 ஆனால் கடைசியில் இவருக்கு கிடைத்தது என்னவோ உடம்புக்கு ஊட்டம் தரும் " களி " ☺️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

என்னது! 75 வயசா?மனிசன் இப்பவும் ஒரு திருமணம் செய்யலாம் போல இருக்கே..

சின்ன வீடு வைக்கிற பிளான் உதயமாகுது போலை கிடக்கு....🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சரவணபவன்"
உலகமெல்லாம் ஹோட்டல் இருந்தும்...
சாப்பிடறது ஜெயில் சாப்பாடு...
இதான் விதிங்கிறது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.