Jump to content

சிங்கங்கள் கோல்ப் விளையாடியிருக்கக் கூடுமோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனை என்று ஒன்றில்லை….

 அண்மையில் வயதில் குறைந்த உறவினரொருவர் அவரது 3 பிள்ளைகளுடன் வீட்டிற்கு வந்திருந்தார். (முதல் தடவையாக 15 ஆண்டுகளின் பின்னர்) மூவரும் 3  விதமான கெட்டித்தனம் நிறைந்தவர்களாக இருந்தனர். இரண்டாவது பையன் ஒரு 8  அல்லது 9  வயது இருக்கும். சற்று நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு அப்பால் போனவன் ஒரு 15  நிமிடங்களில் திரும்பி வந்து இதைப் பாருங்கோ அங்கிள் என்று ஒரு தாளை நீட்டினான். அச்சு இயந்திரத்தில் பதிப்பித்தது மாதிரி மிகுந்த வேலைப்பாடுகளுடன் கூடிய Lion King படம்,  பென்சிலாலேயே வெவ்வேறு வகையான shades filling  உடன் அவன் அந்த 15 நிமிடத்தில் வரைந்தது- என்னால் நம்ப முடியவில்லை .

அவனைப் பற்றி பெற்றோர் சொன்னது இது தான் .அவனுக்கு வாய் பேச்சு வர மிகுந்த தாமதம் ஆகியதாம்.  உண்மையில் அவனின் இளைய சகோதரி பிறந்து பேசத் தொடங்கி தங்கையின் பேச்சைக் கேட்டு விட்டுத் தான் இவனே பேசத் தொடங்கினானாம்.

பெற்றோர் வைத்திய நிபுணர்களிடம் காட்டிய போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொன்னார்களாம். ஒரு நிபுணர் சொன்னாராம்,  பையன் வயதுக்கு மீறிய தோற்றமாக இருக்கிறான் , ஆட்டிசம் ( autism)  ஆக இருக்கக்கூடும் என்று. தயார் கேட்டாராம்காது நன்கு கேட்கின்றது,  கதை வரவில்லை என்று இங்கே வந்தால் உடம்பு வளர்ச்சி, ஆட்டிசம் என்று என்னவோ சொல்கிறீர்களே , உடம்பு வளர்ச்சிக்கும் , கதை வராததிற்கும் ஆட்டிசம் இற்கும்  ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா”  என்று. நிபுணர் தடுமாறிப் போய் விட்டாராம்.

இன்று அந்தப் பையன் மிக நன்றாக கதைத்து , மிக்கத் திறமையாகப் பாடி நன்றாகத் தான் இருக்கிறான். நிபுணர் சொன்ன மாதிரி ஆட்டிசம் என்று போயிருந்தால் என்ன மாதிரிப் போயிருக்குமோ சொல்லத் தெரியவில்லை.  அந்த பெற்றோரின் Parenting  இற்கு தலை வணக்க்குகிறேன் , வயதில் மிக இளையவர்களாக இருந்த போதிலும.

அது போக , இதனைப் பற்றி நான் இங்கே பதிவிட வந்ததின் நோக்கமே வேறு .  

அந்தப் பையன் சில வேளைகளில் தன்னுள்ளே அமிழ்ந்து போய் ஒரு வகையான உரையாடல்களுடன் கூடிய செயல்முறைகளில் ஈடுபடுவதனை அவதானிக்கக் கூடியதாக இருக்குமாம்.  அதன் பின்னர் அவனிடம் என்ன விடயம் என்று கேட்டால், நவரசங்களுடன்  கூடிய கோர்வையான கதை ஒன்றுடன் வருவானாம். உதாரணமாக Lion King   சந்தித்து அதனுடன் மலை உச்சிச்சிக்கு போய் இருவருமாக அவ்வழியே வந்த பெரும் பறவை ஒன்றில் ஏறிப்போய் சிறைப்பட்டிருக்கும் பாட்டியை சண்டை செய்து விடுவித்து வரும் வழியில் ஒரு 18 ஹோல் Golf  லைன் கிங் உடன் கூட விளையாடிய கதையை சுவாரஸ்யமாகச் சொல்வானாம்.

ஒருவர் உணர்வது எதுவுமே கற்பனை அல்ல,  இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே சாத்தியமான விடயங்களே.

 எதுவொன்றைப்  பற்றியும் ஒருவர் சிந்தித்த கணத்திலேயே  அது உண்மையாக , நடைமுறைச் சாத்தியமாக மாறி விடுகிறது , ஒன்றில் அது முன்னர் எப்போதாவது நடந்திருக்கலாம் , அல்லது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கலாம் எஞ்சியதாக  எதிர்காலத்து நேரத்துளி ஒன்றில் அது நடை பெறப் போவதாக இருக்கக் கூடும்.

நடந்து கொண்டிருக்கும் இந்த இதே நேரத்துளியில்,  முழுப் பிரபஞ்சத்திலும் நடந்து கொண்டிருக்கும் சகல விடயங்களும் அப்படியே அதே நேரத்துளியில் உறைந்து போய் எப்போதுமே சாஸ்வதமாக இருக்கும்  என்று ஒரு கருதுகோள் உண்டு. அந்த நேரத்துளிக்கு திரும்பவும் சென்று அதனை மீண்டும் அனுபவிப்பது சாத்தியமே என்கிறது அறிவியல்.

 இந்தப் பையனும் அந்த லைன் கிங் உடன் முன்னர் எப்பவாவது Friend ஆக இருந்திருப்பானோ?

ஏதோ ஒரு நேரத் துளியில் சிங்கங்களும் கோல்ப் விளையாடியிருக்கக் கூடுமோ ??

 கற்பனை என்று ஒன்றில்லை ………..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்...... எம்மால் உணரமுடியாத பலவிதமான அமானுஷ்யங்களுடன்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.சிலவற்றை  அறிவால் அவிழ்த்து விடுகின்றோம்,பல இன்னும் புதிர்களாக தொடர்கின்றன......நல்ல பதிவு சாமானியன் ....!   😁

Link to comment
Share on other sites

5 hours ago, சாமானியன் said:

கற்பனை என்று ஒன்றில்லை….

 கற்பனை என்று ஒன்றில்லை ………..

எதுவுமே இல்லை என்பதுவும் எல்லாமே இருக்கின்றது என்பதுவும் ஒன்றே. சூனியமும் பூரணமும் ஒன்று. கேட்பதற்கு அந்நியமாய்த் தோன்றினும் சற்றுச் சிந்திக்கையில் இது மிகச்சுலபமானதாய்த் தோன்றும். அனைத்துமான ஒன்று, ஒன்றுமில்லாததைப் போன்று தான் தன்னை உணர முடியும். 

ஒரு சிறு உதாரணம். ஒரு ஒலியினை நாம் கேட்கவேண்டுமாயின், கேட்பவர், அதிர்வது, அதிர்வைக் கடத்தும் காற்றுவெளி என்ற மூன்று இருந்தால் மட்டுமே சாத்தியம். பூரணமான ஒன்று என்று ஒன்று இருந்தால், அங்கு கேட்பவர் மற்றும் கேட்கப்படுவது என்ற பிரிவு சாத்தியமில்லை. ஏனெனில் கேட்கப்படுவது என்பது கேட்பவரிற்குப் புறம்பான ஒன்றாக இருப்பின், கேட்பவர் பூரணமானதாய் இருக்க முடியாது. பூரணம் என்பது தனக்கு அப்பால் ஏதும் இல்லை என்பது. அப்படிப் பார்க்கையில், பூரணத்துவத்தில் அமைதி (silence) மட்டுமே சாத்தியம். அமைதி, சூனியம் என்று தப்பாகப் புரிந்துகொள்ளப்படக்கூடியது. 

சூனியம் என்று ஒன்று இருக்கவேண்டுமாயின் அங்கு சூனியம் கூட இருக்க முடியாது. ஏனெனில் சூனியம் என்பது இருப்பின் அங்கு இருத்தல் வந்து விடுகிறது. சூனியம் சாத்தியப்படவேண்டுமாயின் ஏதுமே இருக்கக் கூடாது. ஆனால் இருத்தல் இல்லாத இருப்புச் சாத்தியமில்லை. ஆதலால் சூனியம் சாத்தியமில்லை. பூரணம் மட்டுமே சாத்தியம். ஆனால், பூரணத்தில் பூரணம் சூனியமாகவே உணரப்படும்.

அந்தவகையில் கற்பனை என்று எதுவும் இல்லை என்ற உங்கள் கருத்தினை கற்பனை மட்டுமே இருக்கிறது என்று தான் கொள்ள வேண்டும்.

----------------------
Quantum Physics என்பது இன்று பலராலும் பலசரக்குச் சாமான் போன்று உபயோகிக்கப்படுகிறது. செவ்விலக்கியங்களை வெறும் 140 எழுத்துக்குள் சுருக்கி ருவிற்றரில் வாசித்து வளரும் சந்ததிக்குள் இது இப்படி இருப்பதில் எந்த விந்தையும் இல்லை. ஆனால் Quantum Physics போன்ற கடினமான துறைகளிற்குள் கட்டமைப்புக்கள் வாயிலாகச் செல்லாது, தனித்திருந்து அடிப்படைகளைத் தரிசிக்கையில் அனைத்து உண்மைகளும் கைப்படும். எது ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ என்று ஒன்று உண்டு. இன்னமும் சொன்னால் அது மட்டுமே உண்டு.

ஒரு சித்திரத்தை வரையவேண்டுமாயின், சித்திரம் கான்வசில் வருவதற்கு முன்னர் அதன் essense(அறிவு) மனத்தில் வந்துவிடும். எசென்ஸ் எப்போதும் existenceற்கு முந்தியது. இதனை இதற்கு முந்திய பந்தியோடு சேர்த்துப் பார்க்கையில் உலகில் அறிவு மட்டுமே இருக்கிறது.

ஒரு உதாரணம். இப்போ நீங்கள் இதனைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த கணனித்திரை இருக்கிறது. அதனை நீங்கள் அறிகிறீர்கள். அறிவது நீங்கள் என்று நீங்கள் ஒரு நிலையில் கருதினும், கணினித் திரை இது என்ற அறிவே இதனை அறிகிறது. ஓன்றும் ஒன்றும் இரண்டு என்ற ஒரு கடதாசியில் எழுதியிருப்பின் பார்த்த மாத்திரத்தில் அது நமக்குப் புரிகிறது. ஆனால் இரண்டு என்றால் என்ன என்ற அறிவே அந்தப் புரிதலிற்கு அடிப்படை.

ஆனால், அறிபவன், அறியப்படுவது மற்றும் அறிவு என்ற மூன்று பிரிவுகள் இருக்கையில் மட்டும் தான் உலகு சாத்தியப்படுகிறது. அறிபவனையும் அறியப்படுவதையும் அகற்றி அறிவை மட்டும் எடுத்து அந்தரத்தில் தொங்கவிட்டால் அங்கு அமைதி மட்டுமே சாத்தியப்படும். அறிபவர், ஒரு விடயத்தை அறிகையில் அவர் அறிவாகவே இருக்கிறார். அனுபவம் அனுபவிப்பவரிலிருந்து பிறிதல்ல. ஆனால் இவற்றைத் தனித்தனியாக உணர்கையில் மட்டுமேத இந்தக் கற்பனை உலகு பிறக்கிறது.

"ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க" என்ற வரியில் வருகின்ற ஏகனும் அனேகனும் மேற்படியே விரிகின்றன. உபநிடதங்கள் இதையே பேசுகின்றன. இந்த ஒருமையே முத்தியென்று தேடப்படுகிறது.

ஏதுமற்ற நிலையில் இருந்து உலகம் தோன்றியது என்பது வரை இன்று அறிவியல் ஏற்றுக்கொள்ளத் தலைப்படுகிறது. அறிவியலைத் தாண்டி அறிவாகவே தன்னை உணர்கையில் அமைதியில் பூரணம் உணரப்படும்.

உலகம் கற்பனை மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Innumoruvan said:

எதுவுமே இல்லை என்பதுவும் எல்லாமே இருக்கின்றது என்பதுவும் ஒன்றே. சூனியமும் பூரணமும் ஒன்று. கேட்பதற்கு அந்நியமாய்த் தோன்றினும் சற்றுச் சிந்திக்கையில் இது மிகச்சுலபமானதாய்த் தோன்றும். அனைத்துமான ஒன்று, ஒன்றுமில்லாததைப் போன்று தான் தன்னை உணர முடியும். 

உலகம் கற்பனை மட்டுமே.

இன்னொருவன்,

 உண்டு இல்லை என்பதை ஒரு மிக மிக மெல்லிய தடையொன்றே பிரிக்கின்றது. இந்தப் பக்கம் பார்த்தால் உண்டு;  எதிர்ப்பக்கத்தில் இருந்து  பார்த்தால் இல்லை.

 எப்போது ஒன்று இல்லை /உண்டு என்றாகின்றதோ அப்போதே  அது உண்டு/இல்லை என்றாகி விடுகின்றது என்ற கருதுகோள் புரிந்துகொள்ளக்கூடியதே .

 அண்மைக்காலமாக கருந்துளை பற்றி பல பதிவுகள் இடம்பெற்று வருகின்றன அவரவர் தமக்குப் புரிந்த வகையில் இந்த புரியாத விடயத்தை கையாள்வது நன்றாகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றது.

பல பரிமாணங்களில் இருக்கும் சகலமுமுமே ஒரு கருங்குழியினுள் உள்வாங்கப்பட்டு பரிமாணம் கெட்டு  ஒற்றை பாரிமாணமாகி  (  இந்த ஒற்றைப் பரிமாணம் பல பில்லியன் மைல்களாக  இருக்கக் கூடும் என்கின்றனர் ) , ஈற்றில் ஒரே புள்ளி ஆகின்றது என்கின்றனர்.

இங்கு ஒன்றுமே இல்லாமல் போகின்றது.  

இந்த ஒற்றைப் புள்ளி அப்படியே  இருக்க வாய்ப்பில்லை.

 அது வெடித்து சிதறி மீண்டும் பரிமாணங்களை எடுக்கத் தொடங்கும் . மீண்டும் ஒற்றைப்  பரிமாணம் பன் பரிமாணம் அண்ட விரிவு என்று

இங்கு  எல்லாமுமே இருக்கின்றது

நாங்கள் இப்போது வசித்துக் கொண்டிருக்கும் பகுதி அப்படிப்பட்ட விரிவொன்றின் மிக மிக மிக சிறிய பகுதியே.

அடிப்படை ஒன்றே;  வடிவங்கள் மாறுபடுகின்றதேயன்றி வேறொன்றுமில்லை. (எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை ! ஊழிக்  கூத்தில் சிவனுடன் சேர்ந்து தாண்டவமாடி யாராவது உணர்ந்திருக்கிறீர்களா)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் சொன்னது சத வீதத்தை அல்ல. நோட்டாவுக்கு கூட தனியாக சதவீதம் போட்ட தற்ஸ்தமிழ் அண்ணன் கட்சியை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பதை. வியஜ பிரபாகரன், செளமியா முன்னே வருவது போல் ஆசை காட்டி என்னை மோசம் செய்துவிட்டார்கள்🤣.
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
    • அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .
    • தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!
    • அப்ப‌ பெரிய‌ ஜ‌யா சின்ன‌ ஜ‌யாவுக்கு ஆப்பு    அன்பு ம‌ணியின் ம‌னைவி தானே வெற்றி அதிக‌ வாக்கு வித்தியாச‌த்தில் முன் நிலையில் நின்றா😮
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.