Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்.பல்கலைக் கழக துணைவேந்தரை பதவி விலக்கிய ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து  விலக்கியிருப்பதாக ஜனாதிபதி அறிவிப்பொன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

Image result for பà¯à®°à®¾à®à®¿à®°à®¿à®¯à®°à¯ à®. விà®à¯à®©à¯à®¸à¯à®µà®°à®©à¯

கடந்த மாதம் 30 ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பாவித்து, பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். 

எனினும் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்கியமைக்கான காரணங்கள் எதுவும் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனுக்கு முகவரியிடப்பட்டு, கடந்த மாதம் 30 ஆம் திகதி கடிதம் தயாரிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், நேற்று மே மாதம் 5 ஆம் திகதி பின்னராகவே தொலைநகல் மூலம் யாழ். பல்கலைக்கழகத்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் அதிக வாக்குகளைப் பெற்று முதலாவதாகப் பரிந்துரைக்கப்பட்ட பேராசிரியர் எஸ். சறீசற்குணராஜா அல்லது யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் ஆகிய இருவரில் ஒருவரை யாழ்ப்பாண புதிய துணைவேந்தர் தெரிவு செய்யப்படும் வரை பல்கலைக்கழகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தராக நியமிப்பதற்கான பரசீலனைகள் இடம்பெற்றுவருவதாக அறியவருகின்றது.

இதேவேளை, காரணமேதுமின்றி பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பான அறிவித்தலை மீளப் பெறச் செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/55404

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக மாணவர்கள் கைதிற்கு காரணம் இவர் தான் என்று கேள்விப்பட்டேன்...யாருக்கும் இதன் உண்மைத் தன்மை தெரியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பாவம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு தலையாட்டி பொம்மையாக இருக்கவில்லையோ.. அல்லது ஈபிடிபி ஒட்டுக்குழுவுக்கு ஆமாப் போடேல்லையோ தெரியாது. 

On 5/6/2019 at 11:08 PM, ரதி said:

பல்கலைக்கழக மாணவர்கள் கைதிற்கு காரணம் இவர் தான் என்று கேள்விப்பட்டேன்...யாருக்கும் இதன் உண்மைத் தன்மை தெரியுமா ?

இது தவறு!

சகல (தமிழ்,  சிங்கள, முஸ்லீம்) மாணவர்களும் சுதந்திரமாக நடமாட, தமது உணர்வுகளை வெளிப்படுத்த, தமது கலாச்சாரங்களை வெளிப்படுத்த அனுமதித்ததே இவர் செய்த தவறாக சிங்கள-பௌத்த அடக்குமுறை அரசு பார்க்கிறது!

அத்துடன் சிங்கள-பௌத்த இனமதவெறியர்களினால் ஆளப்படும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தமிழ் மாணவர்கள் மீது அடாத்தாக பிரயோகித்த அடக்குமுறைகளுக்கு இவர் துணைபோகவில்லை என்றும் கூறப்படுகிறது!

மேலும் தமிழர்களின் இருப்பை வலுப்படுத்த இவரது நடவடிக்கைகள் உதவுவதாக சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகள் அறிவித்துள்ளதாகவும் தெரிய வருகிறது!

மேலாண் ஆற்றலுடை அதிகாரியாக ஒரு மதவெறியரை நியமிக்க முயற்சிகள் மேற்கொண்டபோதும் அது மகிந்த கும்பலுக்கு சாதகமாகிவிடும் என்பதால் இறுதியில் பேராசிரியர் கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளாராம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.