Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது ஆசிய நாடக தாய்வான் !!

Featured Replies

6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

LBGTi பற்றிய எனது கருத்து. LBGTi என்பது இன்றைக்கு தோன்றிய ஒன்று இல்லையே. புராண இதிகாசங்களில் இவர்களை பற்றி உள்ளது. உதாரணமாக அரவான், கூவாகம் திருநங்கைகள் திருவிழா பற்றிய கதைகள். அதே போல பல பேரரசுகளில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உதாரணத்திற்கு ஒன்று:  மொகலாய பேரரசின் அரண்மனை, அந்தபுர காவலர்களாக இந்த அரவானிகள் இருந்துள்ளது பற்றிய குறிப்புகள். மற்றும் வாத்சாயணர் நூலின் படி பண்டைய இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர் உறவுகள் இருந்ததை வைத்தே மீரா நாயர் காம சூத்திரவை படமாக  எடுத்தார். அதே மாதிரி 20 வருடங்களுக்கு முன்பு தீபா மேத்தா சாதரண இரு பெண்களுக்கிடையான உறவை தனது Fire எனும் திரைப்படத்தின் கருப்பொருளாக்கி எடுத்தார். அதனால் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய நிலையை நாங்கள் கடந்துவந்துவிட்டோம்.

என்னைப்பொறுத்தவரையில், LBGTi என்பது எமது சமூகத்தில் ஒரு அங்கம். தவிர்க்க முடியாத அங்கம். அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு, காமம் மட்டுமல்ல அவர்களது நோக்கம், பரஸ்பர புரிந்துணர்வு, அன்பு, தோழமை, காதல் என்று எல்லாமே உண்டு. அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி எமக்கு தெரியாது. அதனால் அவர்களையும், அவர்களது உணர்வுகளையும் மதித்து நடப்பதே நாகரிகமான, பண்பட்ட மனிதர்களின் செயல்.

 

LGBTQ நீண்ட காலமாக உள்ளது. ஆனால் தம் விருப்பப்படி அதை தெரிவு செய்வோரை விட திட்டமிட்ட வகையில் அவர்களை உருவாக்குவது அதிகரித்துள்ளது. அதற்கு நான் எதிர்.

உலகத்தில் பல கொடுமைகள் நடக்குது. சொன்னால் என்னை முட்டாள் என நிரூபிக்க நிற்கிறார்கள் (உங்களை சொல்லவில்லை). அதனால் சொல்வதை குறைத்து விட்டேன், விரைவில் நிறுத்தி விடுவேன். 😎

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

திருநங்கை - ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது

அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் Image captionஅருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர்

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை தொடர்ந்து தூத்துக்குடியில் ஆண் - திருநங்கை திருமணத்தை அங்கீகரித்து திருமண பதிவு சான்று வழங்கப்பட்டது. தூத்துக்குடி சங்கரபேரி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ஸ்ரீஜா. திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு 31.10.2018 அன்று தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து திருமணத்தை பதிவு செய்வதற்காக தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகம் சென்றனர்.

அப்பொழுது தமிழக சட்ட விதிமுறைகளின்படி அருண்குமார்- ஸ்ரீஜாவின் திருமணத்தை பதிவு செய்ய இயலாது எனவும், ஆண் மற்றும் திருநங்கை இடையிலான திருமணத்தை பதிவு செய்ய வழிவகை இல்லாததால் அவர்களது திருமணத்தை பதிவு செய்ய முடியவில்லை என்று சார்பதிவாளர் கூறியதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

ஆனால் அவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் தங்களின் திருமணத்தை பதிவு செய்து திருமண பதிவு சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர்

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு கூறியது. அதில் அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினரின் திருமணத்தை பதிவு செய்து அவர்களுக்கு திருமண பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கலப்புத் திருமணத்திற்கு தமிழக அரசு அளிக்கும் சலுகைகள் அனைத்தும் அருண்குமார் -ஸ்ரீஜா தம்பதி பெறத் தகுதியானது என்று கூறியும் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இன்று திங்கள்கிழமை அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து தங்களின் திருமணத்தை இந்து சட்ட விதிமுறைகளின்படி பதிவு செய்ய விண்ணப்பம் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர்களது திருமணம் பதிவு செய்யப்பட்டு ரசீது வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் இருவரும் அனைவரின் முன்னிலையில் மோதிரம், மாலை மாற்றி கொண்டனர்.அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தங்கள் திருமணம் பதிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-48341076

ஒரினச்சேர்க்கை என்பது ஆணுக்கும் ஆணுக்குமான உறவு, பெண்ணுக்கும் பெண்ணுக்குமான உறவு.

திருநங்கை என்பவர் ஆணாக பிறந்து பின் உடலில் பெண் தன்மையை பெற்றுக்கொண்டவர். இலங்கை, இந்தியாவில் இவர்கள் சத்திரசிகிச்சை செய்து பெண்ணாக வாழ்வோர். இவர்கள் ஆண்களை திருமணம் செய்வதை ஓரினச்சேர்க்கை என கூற முடியாது. திருநங்கைகளுக்கு தனிச்சட்டம் உள்ளது.

வெளிநாடுகளில் திருநங்கைகளிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்ளார்கள். அது வேறு.

Edited by Lara

பிறிதொருவருக்கு தீங்கு ஏற்படாத வகையில் இருவர் தமக்கிடையே உறவினை ஏற்படுத்துவது அவர்களது உரிமை. அதனைப் புரிந்து கொண்டு மதித்து நடப்பது நாகரீக சமூகத்தின் பண்பு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Lara said:

ஒரினச்சேர்க்கை என்பது ஆணுக்கும் ஆணுக்குமான உறவு, பெண்ணுக்கும் பெண்ணுக்குமான உறவு.

திருநங்கை என்பவர் ஆணாக பிறந்து பின் உடலில் பெண் தன்மையை பெற்றுக்கொண்டவர். இலங்கை, இந்தியாவில் இவர்கள் சத்திரசிகிச்சை செய்து பெண்ணாக வாழ்வோர். இவர்கள் ஆண்களை திருமணம் செய்வதை ஓரினச்சேர்க்கை என கூற முடியாது. திருநங்கைகளுக்கு தனிச்சட்டம் உள்ளது.

வெளிநாடுகளில் திருநங்கைகளிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்ளார்கள். அது வேறு.

அந்த ஓரின சேர்கையாளர்களில்  கூட அது ஆண் ஓரின சேர்க்கையாக இருந்தாலும் சரி பெண் ஓரின சேர்க்கையாக இருந்தாலும் சரி....
அந்த சோடிகளில் ஒருவர் ஆண்மைத்தன்மையானவராகவும் மற்றவர் பெண்மைத்தன்மையானவராகவும் இருப்பர்.அவர்களின் நடத்தைகளும் புருசன் பெண்சாதி மாதிரியே இருக்கும். ஆகவே அங்கு தொக்கி நிற்பது ஆண்மையும் பெண்மையும்....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Lara said:

உலகத்தில் பல கொடுமைகள் நடக்குது. சொன்னால் என்னை முட்டாள் என நிரூபிக்க நிற்கிறார்கள் (உங்களை சொல்லவில்லை). அதனால் சொல்வதை குறைத்து விட்டேன், விரைவில் நிறுத்தி விடுவேன். 😎

உலகத்தைப் (சமூகத்தை) பற்றி சிந்திக்கும் உங்களைப் போன்றோர் சமூகத்தின் மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். ஊதுகிற சங்கை ஊதத்தான் வேண்டும். சமூக அக்கறையுள்ளோருக்கு நேரம் காலம் கிடையாது; சோம்பல் (மடி), மானம் இவையெல்லாம் பார்த்தால் எடுத்த காரியம் கெடும் என்பான் நம் முன்னவன் வள்ளுவன் :

குடி செய்வார்க்கு இல்லை பருவம்

மடி செய்து மானம் கருதக் கெடும்.

           அதிகாரம்: குடிசெயல் வகை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, manimaran said:

பிறிதொருவருக்கு தீங்கு ஏற்படாத வகையில் இருவர் தமக்கிடையே உறவினை ஏற்படுத்துவது அவர்களது உரிமை. அதனைப் புரிந்து கொண்டு மதித்து நடப்பது நாகரீக சமூகத்தின் பண்பு. 

சில உயிரிகள்.... டி என் ஏயில் ஏற்படும் பிறழ்வுகளோடு பிறந்து விடுவது என்னவோ இயற்கையாக இருந்தாலும்.. இயற்கையின் அந்தத் தவறு கடத்துப்படக் கூடாது என்பதற்காகவே இயற்கை பல தடவைகள்.. ஒன்றில் அவர்களுக்கு இனப்பெருக்கும் தகுதியை இல்லாமல் செய்யும்.. அல்லது இனப்பெருக்க வயதை அடைய முன் மரணிக்கச் செய்யும்.. இப்படி இயற்கையும் தன் தவறை திருத்த முயல்வதுண்டு.

நாகரிகம் என்ற மனித இயற்றுகை என்பது கூட இயற்கையில் மனிதனின் கூர்ப்பியலுக்கு இதுகாள் வரையும்.. உதவுவதால் தான்.. மனிதன் அதனை மதிக்க விளைகிறான். 

ஆனால்.. மனிதனுக்கும் அதன் சந்ததிக்கும் எந்த வகையிலும்.. இயற்கையின் விதிக்கமைய பிரயோசனம் அற்றதுகளை செய்யும் தனியன்களை.. எப்படி நாகரிக வரம்புக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்.. புரியல்லையே..??!

காமம் என்பது இனப்பெருக்கம் கருத்திய ஒரு தூண்டல். அதனை இயற்கைக்கு மாறாக பாவிக்க விளைவது அல்லது வழிகாட்டுவது எப்படி நாகரிகமாகும்..?????! அது வியாபாரம்.. இயற்கையின் உயிரியல் விதிகளை மலினப்படுத்தும் மிக மோசமான செயல். 

மனித உருவில் உள்ள எல்லோரினதும் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.. ஆனால்.. அதுக்காக மனிதனை மனிதன் கொலை செய்யும் போது.. கொலை செய்பவனின் மனித உரிமையை பாதுகாக்கக் கோர முடியாது. 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 5/21/2019 at 2:46 AM, Lara said:

LGBTQ நீண்ட காலமாக உள்ளது. ஆனால் தம் விருப்பப்படி அதை தெரிவு செய்வோரை விட திட்டமிட்ட வகையில் அவர்களை உருவாக்குவது அதிகரித்துள்ளது. அதற்கு நான் எதிர்.

இயற்கையாக உருவாக்கினாலும், திட்டமிட்டு உருவாக்கினாலும் என்னைப்பொறுத்தவரையில் அது அவர்களது விருப்பம், உரிமை..

அத்தோடு அவர்கள் தத்தெடுத்து, IVF மூலமோ அல்லது surrogacy மூலமோ பெற்று வளர்க்கும் பிள்ளைகளும் மதிக்கப்பட வேண்டும்

எல்லா உயிர்க்கும் இந்த பூமியில் தாம் விரும்பிய வடிவில் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு. 

 

29 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இயற்கையாக உருவாக்கினாலும், திட்டமிட்டு உருவாக்கினாலும் என்னைப்பொறுத்தவரையில் அது அவர்களது விருப்பம், உரிமை..

அத்தோடு அவர்கள் தத்தெடுத்து, IVF மூலமோ அல்லது surrogacy மூலமோ பெற்று வளர்க்கும் பிள்ளைகளும் மதிக்கப்பட வேண்டும்

எல்லா உயிர்க்கும் இந்த பூமியில் தாம் விரும்பிய வடிவில் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு. 

சனத்தொகை அதிகரிப்பை குறைக்க சிறு குழந்தைகளுக்கு chemical ஏற்றி அவர்களை gay, lesbien, asexual என மாற்றுவது, சிறுவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தி அவர்களது பாலியல் தெரிவை மாற்றுவது, baphomet ஐ கடவுளாக வழிபடுவோர் சிறு குழந்தைகளை transgender ஆக மாற்றுவது போன்றன வெளிநாடுகளில் நடப்பவை. இவற்றை செய்வோரை என்னால் ஆதரிக்க முடியாது. இதில் பாதிக்கப்படுவோர் இவற்றை இன்னும் பிரச்சாரம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறார்கள். அதையும் என்னால் ஆதரிக்க முடியாது.

மற்றும் படி அவர்கள் விருப்பத்தை அவர்களுடன் வைத்துக்கொள்வதில் எனக்கொரு பிரச்சினையும் இல்லை.

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.