Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சிரிய அகதிகள் யாழிலும் தங்க வைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சிரிய அகதிகள் யாழிலும் தங்க வைப்பு

 

நீர்கொழும்பில் வசித்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளை வடக்கிற்கு அழைத்துவரும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, அவர்களில் சிலர் யாழ்ப்பாணத்திற்கும்  அழைத்துவரப்பட்டுள்ளனர். 

IMG_1202.jpg

இவ்வாறு அழைத்துவரப்பட்ட அகதிகளில் தற்போதுவரை 13 அகதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள சில வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பில் தற்காலிக முகாம்களில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி நாட்டிலேற்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களையடுத்து அவர்களுக்கு தங்கிருந்த இடத்தில் எதிர்ப்பு நிலவிய நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, அவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.

இதையடுத்து, அவர்களை வடக்கிற்கு அழைத்துவரும் முயற்சியை அரசு மற்றும் ஐ.நா. மேற்கொண்டன. இதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு ஆளுநருடன் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. எனினும், அவர்கள் சம்மதித்த போதும், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டனர். அந்த எதிர்ப்பை மீறி வவுனியாவில் ஒரு தொகுதி அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையிலேயே யாழ்ப்பாணத்திற்கும் அகதிகள் அழைத்துவரப்படுகின்றனர். முதற்கட்டமாக நான்கு குடும்பன்களைச் சேர்ந்த 13 பேர் அழைத்துவரப்பட்டு வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் குறித்த அகதிகளில் சிலர் யாழ்ப்பாணத்திலுள்ள வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சிலர் தாம் அவர்களைப் பொறுப்பெடுப்பதாகவும் சுயமாகவே தமது வீடுகளில் தங்கவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

http://www.virakesari.lk/article/56320

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு ஆளுநருடன் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. எனினும், அவர்கள் சம்மதித்த போதும்

வாயை பொத்திக்கொண்டு இருப்பதுக்கு கொழும்பில் எத்தனை ஆடம்பர வீடு டீல் நடந்தது என்று தெரிய ஆவல் ?

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்களே இராணுவ ஆக்கிரமிப்புக்குள் காணிகளை கொடுத்துவிட்டு அகதிகளாக உள்ள நிலையில்.. யாழ்ப்பாண மேதாவிகள் சிலர்.. இவர்களுக்கு வீடு எல்லாம் கொடுத்திருக்கினம்.

அகதிகளை வரவேற்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.. ஆனால் அதற்கு நாம் சுதந்திரமாக இவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய சூழலில் இருக்கனும்.

அந்த வகையில்.. இவர்களை இன்னும் இன்னும் துன்பத்துக்குள் தள்ளும் சூழலுக்குள் இருத்தாமல்.. காத்தான்குடியில் குடி அமர்த்துவதுதான் அவர்களுக்கும் செளகரியம் நமக்கும் இப்போதைக்கு முடியுமானது.

யாழில் முக்கிய நபர் வீட்டில் பாகிஸ்தான் அகதிகள்! வெளியானது காணொளி ஆதாரம்!

 

ஸ்ரீலங்காவில் ஏப்ரல் 21ம் திகதி நாடு முழுவதும் பரவலாக இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குலின் பின் பாக்கிஸ்தான் பிரஜைகள் வவுனியா பூந்தோட்டம் முகாமிற்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். அதில் ஒரு குடும்பம் யாழ்ப்பாணத்திற்கு நேற்று இரவு அழைத்து வரப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டது.

குறித்த குடும்பத்தினர் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூலின் பொறுப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய திருச்சபையின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த குடும்பத்தினை பொறுபு்பேற்றுள்ளதாக அவர் தொிவித்தார்.

குறித்த குடும்பத்தினை ஜ.நா பொறுப்பெடுக்கும் வரையில் ரட்ணஜீவன் கூல் தனது பொறுப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ரட்ணஜீவன் கூல் தொிவித்தார். குறித்த குடும்பத்தில் கணவன் மனைவி உட்பட்ட நான்கு குழந்தைகளும் இவ்வாறு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

இவா்கள் யாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள விடயம் தொடா்பில் சபாநாயகா், பிரதி பொலிஸ்மா அதிபா், மற்றும் தோ்தல் ஆணைக்குழுவிற்கு தொியப்படுத்தியுள்ளதாகவும் ரட்ணஜீவன் கூல் தொிவித்தார்.

இலங்கையில் தஞ்சம் கோரி நீர்கொழும்பில் தங்கியிருந்த பாகிஸ்தான் அகதிகளில் சிலர் வடக்கை நோக்கி அழைத்துவரப்படும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, யாழ்ப்பாணத்துக்கு நான்கு குடும்பங்களை சேர்ந்த 13 பேர் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்டதன் பின்னரே யாழில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி இரண்டாம் கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாணத்திலும் வெளிநாட்டு அகதி கள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாழில் உள்ள சில வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளே இவ்வாறு வடக்குக்கு தற்போது அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெளிநாட்டு அகதிகள் இரகசியமான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பிரதேசம் தொடர்பாக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லையெனவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறான தகவல் வெளியாகியுள்ள நிலையில் இன்று எமது ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவினர் நீர் கொழும்பு பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது வவுனியாவுக்கு மட்டுமே 35 அகதிகள் கொண்டு செல்லப்பட்டதாகவும் வேறு எவரும் அழைத்துச் செல்லப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

அதேநேரம் யாழ்ப்பாண பொலிஸ நிலையத்துடன் தொடர்பு கொண்டபோது குறித்த அகதிகள் வந்தமை தொடர்பாக தாம் எவ்வித பதிவுகளையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தனர்.

அது தொடர்பில் தமக்கு எதுவும் உறுதிப்படுத்திய தகவல் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/120343?ref=home-imp-flag

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.