Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இராவணா செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

சிங்களவர்களாக பார்க்காது இரண்டு தனி மனிதர்களின் முயற்சி என பார்க்கும்போது,

உலகமே பல பில்லியன் கோடி டாலர்களை கொட்டி இயங்கும் ஒரு துறையில், உலகம் முழுவதுமே பிச்சை எடுக்கும் நாட்டிலிருந்து இரு மனிதர்களின் சிறு அளவிலான எத்தனமும் அதை வெற்றிகரமாக விண்வெளியில் நிறுத்தும் அளவிற்கு தரமானதாக வடிவமைத்ததும்   சிறிலங்காவின் கொண்டிசனோடு ஒப்பிடும்போது அந்த நாடுக்காரர் இருவர் செய்தது நிச்சயம் பெரிய பாய்ச்சல்தான்.சாதனைதான்.

இதையே வடகிழக்கில் இருக்கும் இரு  தமிழ் பல்கலைகழக மாணவர்களோ புத்தி ஜீவிகளோ செய்திருந்தால் வாழ்த்து மழைகள் விண்ணை முட்டியிருக்கும்.

அடக்குமுறை என்று வரும்போது சிங்களவன் தமிழன் பேதம் கண்டிப்பாக பார்க்கப்படவேண்டும்.

அறிவியலில் அது எதற்கு?

செயற்கைகோள் தொழில் நுட்பத்தில்; அரிவரி நிலையில்உள்ள நாட்டில் கொண்டு ஓரிருவரின் கூட்டு முயற்சியில் உருவான சாதனைக்காக அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஆனால் இதனை சிங்கள இனத்தின் சாதனையாக அவர்கள் உள் நாட்டிலும் வெளி உலகத்துக்கும் காட்டிக்கொண்டார்கள் என்றால் காரி துப்பிவிட்டு வாழ்த்தை வாபஸ் வாங்கவேண்டியதுதான்.

அருமையான கருத்து வளவன்! இந்தக் காழ்ப்புணர்வுக்காக அறிவியல் தகவல்களையே தலைகீழாக மாற்றும் வேலையைச் செய்யும் "வளராத" கூட்டமொன்று இங்கே இருக்கிறது! அதாவது அறிவியல் தமக்கு உவப்பான அரசியல் கருத்துடையோர் சொன்னால் மட்டும் ஏற்றுக் கொள்வார்களாம், உவப்பில்லாதோர் சொன்னால் நக்கலடிப்பார்களாம்! என்ன பகிடியென்றால், இரண்டு தரப்பினரில் எவர் சொல்லும் அறிவியலையும் விளங்காமலே இந்தத் தெரிவு இவர்களுக்கு வந்து விடும்! 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Justin said:

சரி, அந்த பேப்பர் சற்றலைற் செய்யும் இணைப்பு எங்கே? அல்லது அதுவும் முன்னர் ஒரு திரியில் GMO உணவை இங்கிலாந்தில் துகிலுரித்த ஒரு விஞ்ஞானியின் பேப்பரைத் தேடிக் கொண்டு வாறன் எண்டு "கம்"மெண்டு கழண்ட மாதிரிக் கழரும் திட்டம் தானா? 

உங்கள் கேள்விகளின் பதில்கள் உங்களுக்கு தெரியும் உண்மையிலே தெரியாதவர்களுக்கு விளக்கம் குடுக்கலாம் உங்களை போன்ற விதண்டா வாதம்களுக்கு பதில் அளிக்காமால் கழண்டு கொள்வதால் நேரம் மிச்சமாகும் எனக்கு .

6 hours ago, தமிழ் சிறி said:

லாரா... இராமாயணம், நானும் வாசித்ததில்லை.
எனக்கும்,   உங்களைப்  போல்...  சில செவிவழி  தகவல்கள் மட்டுமே தெரியும்.
எனக்குத் தெரிந்த அளவில், யாழ். களத்தில்.. புங்கையூரான் மட்டுமே, இராமாயணத்தை.. கரைத்து குடித்தவர்.  :)

வால்மீகி எழுதிய இராமாயணத்தை விட கம்பன் எழுதிய கம்பராமாயணத்தில் அதிக திரிபுகள் இருந்ததாக கேள்விப்பட்டேன். மற்றும்படி இருவருமே ஆரிய சார்பு நிலையில் எழுதியதால் இராமனை கதாநாயகனாக காட்டி எழுதினார்கள். இரண்டுக்கும் பெரியளவில் வேறுபாடு இருக்காதென்றே நான் நினைக்கிறேன். இரண்டையும் வாசித்த யாரும் இது பற்றி கூறினால் நல்லது. புங்கையூரன் அவர்களானாலும்.

6 hours ago, தமிழ் சிறி said:

அட்றா சக்கை...  "அப்பலோ  10"  வரை.... மட்டும் தான்,  விண் வெளியை நோட்ட மிட்டது.
அப்பலோ  11,  வெளியில் கால் வைத்து  சாதனை புரிந்தது.

இராவணாவும், அப்பலோவும்...  நாசாவில் இருந்து, போனதால்...
இராவணா  11 வராமல்...  அதற்கு,  பராக்கிரமபாகு என்றோ,   பிரபாகரன் என்றோ... 

சிங்களவர் பெயர் வைக்க, சாத்தியம் நிறைய உள்ளது. :grin:

வருங்காலத்தில் பிரபாகரன் என்று பெயர் வைப்பது மட்டுமல்ல, பிரபாகரன் சிங்கள பௌத்தர் என்று சொன்னாலும் சொல்லுவினம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Lara said:

வால்மீகி எழுதிய இராமாயணத்தை விட கம்பன் எழுதிய கம்பராமாயணத்தில் அதிக திரிபுகள் இருந்ததாக கேள்விப்பட்டேன். மற்றும்படி இருவருமே ஆரிய சார்பு நிலையில் எழுதியதால் இராமனை கதாநாயகனாக காட்டி எழுதினார்கள். இரண்டுக்கும் பெரியளவில் வேறுபாடு இருக்காதென்றே நான் நினைக்கிறேன். இரண்டையும் வாசித்த யாரும் இது பற்றி கூறினால் நல்லது. புங்கையூரன் அவர்களானாலும்.

வருங்காலத்தில் பிரபாகரன் என்று பெயர் வைப்பது மட்டுமல்ல, பிரபாகரன் சிங்கள பௌத்தர் என்று சொன்னாலும் சொல்லுவினம். :grin:

பிரபாகரன் என்ற பெயரை....  கேள்விப்  பட்டவுடன் 
அப்ப தான்... சம்பந்தன், சுமந்திரன், மாவை, பூவை.... கோஸ்டிகள்,  
சிங்களத்தை எதிர்த்து, போருக்கு,  கிழம்பு வார்கள் என்று நினைக்க ....
உடம்பெல்லாம்.... புல்லரிக்குது.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Lara said:

 

வருங்காலத்தில் பிரபாகரன் என்று பெயர் வைப்பது மட்டுமல்ல, பிரபாகரன் சிங்கள பௌத்தர் என்று சொன்னாலும் சொல்லுவினம். :grin:

விளக்கம் என்பது இந்த முகநூல் போன்றவைகளால் குறைந்து வருகிறதோ என ஐயபட வேண்டி உள்ளது நாலாவது தலைமுறை முடிந்து ஐந்தாவது தலைமுறை தொடர்பாடல் உலகில் வாழ்கிரம். மூன்று கிழமைக்கு முன் ee மொபைல் 5g சேவையை ukயில் தொடங்கி விட்டது நானோ சாட்டிலைட் செய்வது என்பது அந்தகாலத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடக்கும்  பொருள்காட்சி போட்டி போல் மாறி விட்டது எப்பவோ .யுத்தம் முடிந்த கையோடு மகிந்தவின் வால் ஒன்று சைனாவோடு சேர்ந்து சிங்க கொடி போட்ட குப்பை ஒன்று அனுப்பி மகிழ்ந்தவை .பிறகு ஒருத்தர் ஏவுகணை செய்து விளயாட அதையும் மீடியாவில் போட்டு மகிழ்ந்தவை அப்படி என்றால் தமிழ்நாட்டில் http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=108326 இப்படி நிறைய சைனிஸ் மாணவர்கள் நானோ சாட்டிலைட் மூலம் புதுமையான சிமார்ட் திட்டத்தை செயல் படுத்தினர் இங்கு ஆதாரம் முக்கியம் பாஸ் விளங்கிக்கொள்வது கடைசி கட்டம் பெரும்பாலான நேரம்களில் எனக்கு பிடிக்காதவர் எழுதினால் நான் பார்ப்பது கிடையாது எனும் போக்கு நிறைந்து விட்டது .

நானோ சாட்டிலைட்டை அடுத்து சந்திரனுக்கு ரோவர்... ஆச்சர்யப்படுத்தும் மாணவர்கள்!

உலகிலேயே மிகச் சிறிய நானோ சாட்டிலைட்டை வெற்றிகரமாக அனுப்பி சாதனை படைத்த தமிழக மாணவர்கள், அடுத்து சந்திரனுக்கு ரோவர் விண்கலத்தை அனுப்பும் திட்டத்தைத் தொடங்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். 

நானோ சாட்டிலைட்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதி,தமிழகப் பள்ளி மாணவர்கள் நாசா விண்கலத்தின்மூலம் 64 கிராம் எடை கொண்ட கலாம்சாட் என்ற நானோ செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்தனர். இன்று முதல் ஆண்டுக் கொண்டாட்டத்தில் ஒன்று கூடியவர்கள், அடுத்த ஆண்டு சந்திரனுக்கு ரோவர் வாகனத்தை அனுப்பும் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். 

நானோ சாட்டிலைட்

இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்ளும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஶ்ரீமதி கேசன், ``கலாம்சாட் நானோ செயற்கைக்கோள் திட்டத்தைத் தொடர்ந்து 5 புதிய திட்டங்களைத் தொடங்கியிருக்கிறோம். இதில் முதன்மையானதாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைக்கொண்டு 'Moon Mission' என்ற திட்டத்தின் கீழ் 3டி வடிவமைப்பில் சந்திரனில் ரோவர் விண்கலத்தைத் தரையிறக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறோம். இதில், இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் உள்ள இளைஞர்களும் எங்களுடன் கைகோக்கலாம்" என்றார். 

நானோ சாட்டிலைட்

மேலும், ``விண்வெளி ஆராய்ச்சிகுறித்து ஆர்வம் உள்ள குழந்தைகளுக்காக, இணையத்திலேயே அனைத்து விவரங்களையும் கற்றுக்கொள்ள உதவியாக,அனைத்து விவரங்களையும் தொகுத்து வெளியிட உள்ளோம். தற்போது, ராஜஸ்தான் அரசுடன் இணைந்து பள்ளி மாணவர்கள் வடிவமைப்பில் உருவாக்கும் சிறிய செயற்கைக்கோள்களை பலூன்மூலம் விண்வெளியில் ஏவும் திட்டத்தையும் தொடங்கியிருக்கிறோம். இதன்மூலம் பள்ளி மாணவர்கள் விண்வெளி சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வாய்ப்புகளை உருவாக்கிவருகிறோம்" என்றார். 

நீங்கள் Justin என்பவர் கருத்தை quote செய்வதாக நினைத்து எனது கருத்தை quote செய்து விட்டீர்களா? 😀

18 hours ago, பெருமாள் said:

சிங்களவர்கள் கிமு கிபி இடைப்பட்ட ஆண்டுகளில்தான் இலங்கையில் குடி ஏறி கள்ள காணி பிடித்தவை என்று புளுகுவம்சம் மன்னிக்கவும் மாகாவம்சம் கூறுது அதே காலபகுதியில் தான் வால்மிகியால் ராமாயணம் தொடர் எடுக்கபட்டது சே ........ எழுதபட்டது என்கிறார்கள் இதுக்குள்ள  கள்ள காணி பிடிக்கும் போது பூர்வீக குடிகளான இயக்கர்களை கல்லெறிந்து கலைத்தவையாம் இந்த சிங்களர் எப்படி இராவணன் மன்னன் ஆகினான் இவங்களுக்கு ?

இராவணன் இலங்கையை ஆண்ட புகழ் பெற்ற மன்னன் என்பதால் பல சிங்கள மக்களும் போற்றுகிறார்கள். இராவணன் இலங்கையில் வாழ்ந்ததை கூறும் ஆதாரங்களும் இலங்கையின் பல பகுதிகளில் இருப்பதாலும் இராவணனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சில சிங்களவர்கள் இராவணனை தமது மூதாதையராகவும் கருதுகிறார்கள்.

இப்படியிருக்க இன்னொரு பகுதியினர் விஜயனும் 700 தோழர்களும் இலங்கைக்கு வர முன்னமே சிங்களவர்கள் இலங்கையில் வாழ்ந்தார்கள் என்று கூறி இராவணனை சிங்கள மன்னனாக சித்தரிக்கிறார்கள். இன்னும் சிலர் இராவணனை புத்த மதத்துடன் தொடர்பு படுத்துகிறார்கள். சிங்களவர்கள் இலங்கையின் பூர்வ குடிகள் போல் காட்ட அவர்கள் எடுக்கும் முயற்சி என நினைக்கிறேன்.

கீழேயுள்ள இணைப்பிலுள்ளதை வாசித்துப் பாருங்கள். உருண்டு பிரண்டு சிரிப்பீர்கள்.

http://greatravan.blogspot.com/p/dasis-ravana.html?m=1

இது சிங்களவர்கள் இராவணனை சிங்கள மன்னன் என கூறுவது பற்றி முன்னர் hindustantimes இல் வந்த செய்தி.

https://m.hindustantimes.com/world/ravana-is-a-hero-for-sinhala-nationalists/story-QfF4A3Qi0i371LDP7CFtMP.html

இதைவிட பல சிங்கள கட்டுரையாளர்களும் இராவணனை சிங்கள மன்னனாக கூறி எழுதி வருபவர்கள்.

மேர்வின் சில்வா உட்பட சிலர் வெளிப்படையாக இராவணன் சிங்கள மன்னன் என்று கூறி உரையாற்றியும் உள்ளார்கள்.

விரைவில் மகாவம்சத்தையும் மாற்றி எழுதினாலும் எழுதுவார்கள். :grin:

On 6/19/2019 at 5:31 AM, தமிழ் சிறி said:

இந்த செயற்கோளை...  ஸ்ரீலங்காவின் நட்பு  நாடான இந்தியாவிலிருந்து விண்ணுக்கு  ஏவாமல், அமெரிக்காவிலிருந்து  ஏவியதிலிருந்தே...  இருவரின் நட்பு  எப்படி இருக்குது என்று  அறிந்து கொள்ளலாம். :grin:

மோடி இராவண வதத்தில் கலந்து கொள்பவர் என்பதால் இராவணா-1 ஐ ஏவ இந்தியாவை எவ்வாறு நாடுவது என சிந்தித்திருக்கலாம். :grin:

0294FBC8-4290-4098-9184-61E321C1301F.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் சிவபக்தன் சைவத் தமிழன் என்பதில் எந்த மாற்றுக்கருத்துகளுமில்லை.  வால்மீகியில்லாது இராமனுமில்லை இராவணனுமில்லை,  வால்மீகியைத் தழுவிய கம்பன் இராவணனைச் சைவத்தமிழனாகவே சித்தரிக்கிறான்.    அத்வானி போன்றவர்கள ் வருடாவருடம் தங்களது பண்டிகையொன்றின்போது பத்துத்தலை இராவணனின் சிலையைத்  தென்திசையில் வைத்து  அம்பு செலுத்துகிறார்கள்.  துப்பாக்கியால் சுடுவதில்லை. - ஏனெனறு தெரியவில்லை..

தற்போது இந்தியாவின் நேச நாடான சிறீலங்கா  தனது முதலாவது  செயற்கைக் கோளுக்கு இராவணன் என்ற பெயரிட்டு நாம் வழுத்தும் நமது மூதாதையர் தலைவனை முன்மைப்படுத்தி நிற்கிறது.    இது வாழ்த்தப்பட வேண்டிய விடயம்.  ஊக்குவிக்கப்படவேண்டிய விடயம்.  எப்படிப் பார்த்தாலும் சிங்களவர்கள்  நமது உறவினர்களே.  நமது பாண்டிய இரத்தம் அவர்களில் ஓடுகிறது.   அதனைச் சிந்திக்காமல் அவர்கள் இராவணனை உறவு கொண்டாடுவதை எதிர்ப்பது சரியான அணுகுமுறையாகாது.   இருக்கும் பகைமையில் எங்கு சிறிய நெகிழ்ச்சியும் நட்புணர்வும் இருக்கின்றதோ அதனைப் பயன்படுத்திச் சிங்களவர்களுடன் ஒன்றுபடுவதே இன்று கையறு நிலையிலிருக்கும் தமிழர்களுக்கு அவசியமானது.  அல்லாவிடில் நாம் பலாத்காரமாக அரேபியர்களாக்கப்பட்டு விடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Lara said:

இராவணன் இலங்கையை ஆண்ட புகழ் பெற்ற மன்னன் என்பதால் பல சிங்கள மக்களும் போற்றுகிறார்கள். இராவணன் இலங்கையில் வாழ்ந்ததை கூறும் ஆதாரங்களும் இலங்கையின் பல பகுதிகளில் இருப்பதாலும் இராவணனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சில சிங்களவர்கள் இராவணனை தமது மூதாதையராகவும் கருதுகிறார்கள்.

இப்படியிருக்க இன்னொரு பகுதியினர் விஜயனும் 700 தோழர்களும் இலங்கைக்கு வர முன்னமே சிங்களவர்கள் இலங்கையில் வாழ்ந்தார்கள் என்று கூறி இராவணனை சிங்கள மன்னனாக சித்தரிக்கிறார்கள். இன்னும் சிலர் இராவணனை புத்த மதத்துடன் தொடர்பு படுத்துகிறார்கள். சிங்களவர்கள் இலங்கையின் பூர்வ குடிகள் போல் காட்ட அவர்கள் எடுக்கும் முயற்சி என நினைக்கிறேன்.

கீழேயுள்ள இணைப்பிலுள்ளதை வாசித்துப் பாருங்கள். உருண்டு பிரண்டு சிரிப்பீர்கள்.

http://greatravan.blogspot.com/p/dasis-ravana.html?m=1

ஆனால் அவர்களின் புளுகு வம்சத்தில் இலங்கை  தீவு எதிர்காலத்தில் பவுத்தம் சிறப்பாக  வளரும் என்றும் அதனால் கடல் கடந்து சென்று அந்த மண்ணின் புதல்வர்களாகிய இயக்கர்களை அழித்து கலைத்து விட்டு பவுத்த சமயத்தை மேன்மை கொள்ள வைக்கணும் என்று கவனிக்க புத்தரின் அறிவுரை இருந்ததாக சொல்லபட்டுள்ளது .

நெடுக்கர் கூறியது போல் இவங்களுக்கு என்று ஒரு அறுதியான அடையாளமும் இல்லாத தட் தோன்றி கூட்டம் தங்கள் அடையாளம்களை தேடி பார்த்த போது புளுகம் புனைவுமாய் இருப்பதை கண்டு பொறுக்க முடியாமல் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பெருமையுடன் வாழ்ந்த இனத்தின் அறிவுகருவூலத்தை யாழ் நூலகத்தை எரித்து விட்டார்கள் . 

2 minutes ago, பெருமாள் said:

கீழேயுள்ள இணைப்பிலுள்ளதை வாசித்துப் பாருங்கள். உருண்டு பிரண்டு சிரிப்பீர்கள்.

இந்த முகநூல் வருவதுக்கு முதல் பிளக்குகளின் ராச்சியம்  அவரின் பதிவிட்ட திகதியை பாருங்க .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, Justin said:

அண்ணை, அவ்வளவு சீக்கிரமாகப் போய் விடப் போவதில்லை! அதிருக்கட்டும், இது அறிவியல் சம்பந்தமான திரியல்லவா? நீங்கள் உங்க நிண்டு என்ன செய்யிறீங்கள்? 

சரி, அந்த பேப்பர் சற்றலைற் செய்யும் இணைப்பு எங்கே? அல்லது அதுவும் முன்னர் ஒரு திரியில் GMO உணவை இங்கிலாந்தில் துகிலுரித்த ஒரு விஞ்ஞானியின் பேப்பரைத் தேடிக் கொண்டு வாறன் எண்டு "கம்"மெண்டு கழண்ட மாதிரிக் கழரும் திட்டம் தானா? 

உங்கள் அறிவுக்கும் திறமைக்கும்  யாரியான ஆக்கள் இந்த உலகத்திலையே இல்லை அண்ணே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.