Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரபு எழுத்துக்களை அகற்றக் கோரினால், சட்ட நடவடிக்கை எடுப்போம்: காத்தான்குடி நகரசபை அதிரடித் தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரபு மொழியை அகற்றுமாறு கோரி காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வருமானால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கைக்கு செல்வதென காத்தான்குடி நகர சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
இதுவரை எவரிடமிருந்தும் அரபு மொழியை அகற்றுமாறு கோரி காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வரவில்லை. அவ்வாறு வருமானால் அதற்கெதிராக காத்தான்குடி நகர சபை நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைக்கு செல்லும் என காத்தான்குடி நகர சபையின் மாதார்ந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
காத்தான்குடி நகர சபையின் 15வது மாதார்ந்த அமர்வு வியாழக்கிழமை இன்று காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
 
நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் உட்பட காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
இதன் போது கடந்த மாதம் இடம் பெற்ற சபை அமர்வின் கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு சபை ஏற்றுக் கொண்டதுடன் கடந்த மாதக் கணக்கறிக்கையும் வாசிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 
இந்த அமர்வின் போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் கடந்த விஷேட அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானமான காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் சில இடங்களில் எழுதப்பட்டுள்ள அரபு மொழியை அகற்றக் கோரும் உத்தியோக பூர்வமான அறிவித்தலுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது என தீர்மானம் கலந்துரையாடப்பட்டு மீண்டும் அத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
 
இது வரை எவரிடமிருந்தும் அரபு மொழியை அகற்றுமாறு கோரி உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வரவில்லை அவ்வாறு வருமானால் காத்தான்குடி நகர சபை நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைக்கு செல்லும் என காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
 
அதே போன்று கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதிக்குப்பின்னர் நாட்டில் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் பல் வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் சபையில் உரையாற்றிய தவிசாளர் அஸ்பர் குறிப்பிட்டார்.
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் சட்ட நடவடிக்கை எடுங்கோ  பொப் கோர்ன் இடம் மாறிட்டுது 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காக்காகுடி.....மன்னிக்கவும்.....காத்தான் பூத்தான்குடி...சாரி
காத்தான்குடி மேன்மக்கள் அரேபியரா இல்லை தமிழரா?
மொழிகளுக்கு நான்  எதிர்ப்பு இல்லை...ஆனால் தேவையில்லாத இடத்தில்  தேவையில்லாத மொழி  புகுத்தப்படும் போதுதான் சினம் வருகின்றது.

6 hours ago, colomban said:

இது வரை எவரிடமிருந்தும் அரபு மொழியை அகற்றுமாறு கோரி உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வரவில்லை அவ்வாறு வருமானால் காத்தான்குடி நகர சபை நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைக்கு செல்லும் என காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

பௌத்தர்கள் பாளி மொழி படிப்பதும் இந்துக்கள் சமஸ்கிருதம் படிப்பதும்  உண்டு. 

ஆனால், இந்த மொழிகள் தாங்கிய பதாதைகளை இலங்கையில் உள்ளனவா? என தெரியவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

33yulp.jpg

 

image_2c91f0e7b9.jpg

On 6/21/2019 at 12:53 AM, colomban said:

அதற்கெதிராக காத்தான்குடி நகர சபை நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைக்கு செல்லும்

எதிரா சட்டநடவடிக்கை எடுத்தால் சொறிலங்காவின் நீதிமன்றம் இவர்களை அரேபிய மொழி நாட்டுக்கு நாடுகடத்த உத்தரவிடலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.