Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் விரைவில் ஆட்சி மாற்றம். - மகிந்த ராஜபக்சே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் விரைவில் ஆட்சி மாற்றம்.!

Rajabakshea.png

இலங்கையில் விரைவில் ஆட்சியைப் பிடித்து காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே சவால் விடுத்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தேசிய சுதந்திர முன்னணி கட்சியினர் சார்பில் விகாரமகாதேவி பூங்கா அருகே நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய மகிந்த ராஜபக்சே, குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இலங்கை அரசு பொறுப்பேற்காமல் தப்பிக்க நினைப்பதாக குற்றம்சாட்டினார். இலங்கையில் போர் காலம் முடிந்து 10 ஆண்டுகள் மக்கள் நிம்மதியாக வசித்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது அந்த நிலை மாறியுள்ளதாக தெரிவித்தார்.

இன்றைய சூழலில் இலங்கை மக்களுக்கு நாட்டை நேசிக்கும் தலைவர் அவசியம் என குறிப்பிட்ட அவர், இன்னும் 4 மாதங்களில் இந்த அரசின் ஆயுட்காலம் முடிவடைந்துவிடும் என தெரிவித்தார். எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவது உறுதி எனவும், தன் ஆட்சியின் கீழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் மகிந்த ராஜபக்சே தெரிவித்தார்.

http://www.ns7.tv/ta/tamil-news/india/22/6/2019/sri-lankas-regime-change-soon?fbclid=IwAR05tcpMYVepsAdgp4O1h3L6qUmAt_idRRcwaTg-F_BxDEBuwP5DZfC3H2s

பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து நாட்டையும் மக்களையும் நேசிக்கும் தலைமையுடனான அரசாங்கத்தை உருவாக்குவோம்  : மஹிந்த ராஜபக்ஷ 

அசாங்கத் தரப்பினர் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரியவில்லை. எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறாது  என்று  அரசாங்கத்தரப்பில் இருந்து இன்னும் நம்பகத்தன்மையான கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.  

இன்னும்  நான்கு  மாதங்களில்  இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருகிறது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மக்களின் பாதுகாப்புக்கு சிறப்புரிமை கொடுக்கும் நாட்டையும் மக்களையும் நேசிக்க கூடியதலைமைத்துவத்துடனான அரசாங்கமொன்றை உருவாக்குவோம் என்று எதிர்க்கட்சி தலைவர்  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  

தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று இரண்டு மாத பூர்த்தியை முன்னிட்டு  நேற்று கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் எதிரணியினரால் ஏற்பாடுசெய்ப்பட்டிருந்த விசேட நினைவேந்தல் நிகழ்வு எதிர்கட்சி தலைவரின் தலைமையில் இடம்பெற்றது.  இந்த நிகழ்வில்  தேசிய சுகந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,  பாராளுமன்ற  உறுப்பினர் உதய கம்பன்பில, மறிங்நதானந்த அலுகமகே உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.   

எதிர்க்கட்சி தலைவர் அங்கு மேலும் கூறியதாவது;  

எதிர்வரும் நான்கு  மாதங்களில் இந்த அரசாங்கத்தின் ஆட்சி காலம் நிறைவடைகிறது. இந்த நான்கு மாதங்களுக்கு பின்னர்  கட்டாயம்  தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.  தேர்தல்களுக்கு  களமிறங்குவது  அவசியமாகும் . மாகாணபைகளுக்கான தேர்தலே முதலில் இடம்பெற வேண்டும்.  

ஆனால்  அரசாங்கம்  இந்த தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை எமக்கு கிடையாது.  முதலில் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறவுள்ளது.  ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நாங்கள் உருவாக்கும் அரசாங்த்தில்  நிச்சயமாக மக்களின்  பாதுகாப்புக்கு முக்கிய இடம் வழங்கப்படும். தேசிய பாதுகாப்புக்கு முக்கிய இடத்தை வழங்கும் வகையிலேயே எங்களின் அரசாங்கம் அமையும். 

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று  2 மாதங்கள் நிறைவடைகின்றது. இந்த தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை நடவடிக்கைகள் இன்னும் இயல்பு நிலைமைக்கு திரும்ப வில்லை. 

அரசாங்கம் இது தொடர்பில் பொறுப்புடன் செயற்படுவதாக தெரியவில்லை.பொறுப்புக்களை அடிமட்ட அதிகாரிகளிடம் விட்டு விட்டு அரசாங்கம் தன்னை பாதுகாத்து கொள்ளவே முயற்சித்து வருகிறது.  

எதிர்காலத்தில்  இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது  என்பதற்கு சாதகமானதும் நம்பிகையானதுமான எந்த  கருத்தும் இன்னும் அரசாங்கத்தரப்பில் இருந்து வெளியாக வில்லை. சிலர் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து விட்டதாகவும் குறுகிய காலத்தில்  தாங்களே பயங்கரவாத செயற்பாடுகளை முழுமையாக  கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் மார்த்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தரப்பில்  பீல்ட்  மார்ஷல் சரத் பொன்சேகா பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைளில் அனுபவம் பெற்றவராக இருக்கிறார். 

இந்த நிலையை அவ்வளவு விரைவாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாது என்றும், கட்டுபடுத்தாவிட்டால் மீண்டும் தாக்குதல்களை சந்திக்க நேரிடும்  என்றும் அவர்  எச்சரிக்கிறார். 

இவ்வாறானவொரு நிலையில்  சகலரும் அச்சத்துடன் தமது அன்றாட வாழ்ககை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது.சிலரின் செயற்பாடுகளின் காரணமாக முழு முஸ்லிம் சமுகத்தின் மீதும் நம்பகமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. 

இவர்களின் செயற்பாடுகளினால் முஸ்லிம் சமுதாயமே பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. இவ்வாறானவொரு நிலையில்  முஸ்லிம் சமய தலைவர்களுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் முக்கிய பொறுப்பு காணப்படுகிறது. சமுதாயத்தில்  இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை மீண்டும் உருவாகாத வகையிலும்  இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் இருப்பார்களாக இருந்தால் அவர்களுக்கு புனர்வாழ்வை பெற்றுக்கொடுப்பதும் அவர்களின் முக்கிய பொறுப்பாக காணப்படுகிறது.  

சமூகத்தில்  ஏற்பட்டுள்ள அச்சநிலைமை போக்கி  இயல்பு நிலையை உருவாக்குவதில் அரசாங்கத்துக்குப் பாரிய பொறுப்பு உள்ளது.  ஆனால் அரசாங்கம் அந்த பொறுப்பை சரியாக நிறைவேற்றுகின்றதா என்ற சந்தேகமும் எமக்கு ஏற்பட்டுள்ளது. மாறாக எங்களையே அரசாங்க தரப்பு குற்றவாளியாக பார்க்கிறது. இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும்.  

முப்பது வருடகால யுத்தத்தை நிறைவுக்கு  கொண்டுவந்து பத்து வருடங்கள் முழுமையடைவதற்கு முன்னர் மீண்டும்  பயங்கரவாத தாக்குதல்களை சந்திக்க நேர்ந்துள்ளது.  

குறைந்தது  பத்த வருட காலமாவது நாட்டின் அமைதியை பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.இந்த தாக்குதல்கள் தொடர்பான விபரங்கள் ஏப்ரல் நான்காம் திகதி அரசாங்கத்துக்கு கிடைகக்ப்பெற்றுள்ள போதிலும் அந்த முன் அறிவித்தல்கள் தொடர்பில்  அரசாங்கம் எந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கமால்  இருந்திருக்கிறது. 

சம்பந்தப்பட்ட தகவல்கள் பொறுப்பான அதிகாரிகளுக்க கையளிக்கப்பட்டுள்ள போதிலும்  அது குறித்தும் கவனம் செலுத்தாமலேயே அரசாங்கத்தினர் செயற்பட்டுள்ளனர். 

நாட்டின் எதிர்காலம் தொடர்பில்  எதிர்க்கட்சிக்கும் பாரிய பொறுப்பு இருக்கிறது. அதனை செய்யவே நாங்கள் முயற்சிக்கிறோம் என அவர் இதன் போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/58846

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலின் போது கூட்­ட­மைப்பு கைகாட்­டிய திசையை நோக்கி அணி­வ­குத்துச் செல்ல தமிழ் மக்கள் ஒன்­று­சேர தயா­ராக இருந்­தார்கள். காரணம் ஜார் மன்­னனைப் போன்ற ஒரு கொடுங்­கோண்மை ஆட்­சி­யா­ளனை வீழ்த்­தி­விட வேண்­டு­மென்ற வெறி  இருந்­தது. ஆனால் அந்த சூழ்­நி­லையோ நெருக்­க­டியோ வரப்­போகும் ஜனா­தி­பதி தேர்­தலின் போது ஏற்­ப­டு­மென்று கட்­டியம் கூறி­விட முடி­யாது.

உண்­மையை உரைப்­ப­தாயின் தமிழ் மக்­க­ளுக்­கான நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணுவேன் என்று வாக்­கு­று­தி­ய­ளிக்­கக்­கூ­டிய  ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒருவர் எதிர்­கால தேர்­தலில் களம் இறங்­கு­வா­ரென்று கூற முடி­யாது.

கூட்டமைப்பின் வார்த்தைகளை மீறி, மாற்றுத் தலைமைகளை நம்பவோ அல்லது, எதிரணிக்கட்சிகளை நாடவோ தமிழ் மக்கள் தயாராகப் போவதில்லையென்ற பலமான யதார்த்தத்தையும் நாம் நம்பாமல் இருக்கமுடியாது. எனினும், கூட்டமைப்பு தன்னை சுயமதிப்பீடு செய்து சுதாகரித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

திரு­மலை நவம்

https://www.virakesari.lk/article/58848

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் ஓர் ஆசை, மைத்திரிக்கும் ஓர் ஆசை, ரணிலுக்கும் ஓர் ஆசை, கோத்தாவுக்கும் ஓர் ஆசை.

சீனாவுக்கும், அமேரிக்காவுக்கும் பேராசை.

இந்தியாவுக்கு நிராசை.

31 minutes ago, Nathamuni said:

வருக்கும் ஓர் ஆசை, மைத்திரிக்கும் ஓர் ஆசை, ரணிலுக்கும் ஓர் ஆசை, கோத்தாவுக்கும் ஓர் ஆசை.

சமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்கிற மாதிரியும் ஒரு கதை போகுது. 😀 ராஜபக்ச குடும்பத்தில் யார் வேட்பாளர் என்றே குழப்பமா இருக்கு. 😂

ஆனால் வரும் தேர்தலில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைத்து சிங்கள பௌத்த பெரும்பான்மையுடன் ஆட்சியை ஏற்படுத்த முயல்கிறார்கள். இது ராஜபக்ச குடும்பத்துக்கு வாய்ப்பாக அமையவும் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேள்வி பட்ட வரையில், ஜனாதிபதித் தேர்தலோ, பாராளுமன்றத் தேர்தலோ, மகிந்த கட்சிதான் வெல்லுமாம்.

மகிந்தட பிளான் என்னெண்டா - முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்தி, வென்று, 19 சட்ட திருத்தத்தில் 2 முறைக்கு மேல் ஜனாதிபதியாக முடியாது என்னும் சரத்தை நீக்கி, பின் ஜனாதிபதி தேர்தலை நடத்தி ஜனாதிபதி ஆவது.

கோத்தஅபய வின் பிளான் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி தானே ஜனாதிபதி ஆவது.

எப்படியாவது ஐதேகவின் வேட்பாளராக ஆக சஜித் பெரும் பிரயத்தனம் செய்கிறார்.    ரணிலும், மைத்திரியும் என்ன பண்ணுவார்களோ? என்பதுதான் கேள்வி.   

  • கருத்துக்கள உறவுகள்

சீனா சார்பு மகிந்த எதை விரும்பினாலும், அமெரிக்க, இந்திய கணக்கு வேறாயின் ஒன்றுமே பண்ண முடியாது.

17 minutes ago, goshan_che said:

எப்படியாவது ஐதேகவின் வேட்பாளராக ஆக சஜித் பெரும் பிரயத்தனம் செய்கிறார்.

ஐதேக வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படலாம் என்ற ரீதியில் முன்பே கதை வந்தது. இப்ப கரு ஜயசூரியவும் தான் ஐதேக வேட்பாளராக முயல்கிறார். 😀

ரணில், சஜித், கரு..... 😂

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி லிங்கம் 🤦‍♂️😂😜

6 minutes ago, Lara said:

 

ரணில், சஜித், கரு..... 😂

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

சீனா சார்பு மகிந்த எதை விரும்பினாலும், அமெரிக்க, இந்திய கணக்கு வேறாயின் ஒன்றுமே பண்ண முடியாது.

நாங்கள் நினைப்பது போல இந்த பிராந்திய போட்டி அப்படி ஒன்றும் கறுப்பு/வெள்ளை விடயமல்ல. மோடி ஒரு நாட்டின் தலைவர், ஒவ்வொரு முறை வரும் போதும், ஒரு ஆறு மாதம் முதல் வரை எதிர்கட்சி தலைவராக கூட இருக்காத மகிந்தவை சந்தித்தே செல்வார்.

முற்றாக சைனாவின் பக்கமோ அல்லது இந்தியா/யூஎஸ் இன் பக்கமோ சாய்வதினால் தமக்கும் நாட்டுக்கும் ஏற்படும் பாதகங்களை மகிந்தவும், ரணிலும் அறிந்தே நடக்கிறனர்.

பிரதம மந்திரி குழப்பத்தின் போது, ரணிலை ஒரு இந்திய ஊடகம் பேட்டி காணும், அவரின் வாயால் சைனா மகிந்தவை ஆதரிக்கிறது என சொல்ல வைக்க அந்த ஊடகவியளாலர் படாதபாடு படுவார், ஆனால் ரணில் ஒரு இடத்திலும் சீனாவை குற்றம் சொல்லாமல் விடை அளிப்பார்.

ஆகவே, கள யதார்தம் யாதெனில்,

மகிந்த 60% சைனா 40% இந்தியா/யூஎஸ் 

ரணில் 60% இந்தியா/யூஎஸ் 40% சைனா

மக்கள் ஆதரவு நாட்டில் இருக்கும் அணி வெல்லும். யார் வெண்டாலும், அவர்களை தம் பேச்சு கேட்டு நடக்கும் படி சைனாவும், இந்தியா/யூஎஸ் தரப்புகள் அழுத்தம் பிரயோகிக்கும்.

மகிந்த வெல்ல போகிறார் எண்டால் அதை தடுத்து நிறுத்த இந்தியா/யூஎஸ் முயலாது, மாறாக வென்றபின் முடியுமானவரை தம் வட்டத்துள் அவரை எப்படி கொண்டு வரலாம் என இப்பவே ஸ்கெட்ச் போட்டிருப்பர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.