Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நடிகை ஶ்ரீதேவி, படுகொலை செய்யப்பட்டார்.. கேரளா டிஜிபி ரிஷிராஜ் சிங் பகீர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Actress Sridevi death not accidential,says Kerala DGP

ஸ்ரீதேவியின் மரணம், வெளியுறவுத் துறை சந்தேகம்!

நடிகை ஶ்ரீதேவி, படுகொலை செய்யப்பட்டார்.. கேரளா டிஜிபி ரிஷிராஜ் சிங் பகீர்

துபாயில் நடிகை ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என்று கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

கேரளா போலீசின் மருத்துவ ஆலோசகர் மற்றும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்தவர் டாக்டர் உமாடாதன். இவர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் காலமானார்.

உமாடாதன் கூறியதாக கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் ஶ்ரீதேவி மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஶ்ரீதேவியின் மரணம் பற்றி அறிய உமாடாதனை சந்தித்தேன். அப்போதுதான் ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என தெரிவித்தார்.

ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான விசாரணையில் கிடைத்த பல ஆதாரங்களும் அவரது மரணம் நிச்சயம் விபத்து அல்ல என்பதையே வெளிப்படுத்தியதாக உமாடாதன் கூறினார்.

ஶ்ரீதேவி அதிகமாக குடித்துவிட்டு குளியல் அறையில் மூழ்கிவிட்டார் என்பது அபத்தம். அப்படியே அதிகமாக குடித்திருந்தாலும் 1 அடி தண்ணீரில் ஒருவர் மூழ்க முடியாது.

அவரது தலையை பிடித்து யாரேனும் அழுத்தினால்தான் மரணிக்க முடியும் என்பதும் உமாடாதனின் கருத்து. இவ்வாறு டிஜிபி ரிஷிராஜ்சிங் கூறியுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/thiruvananthapuram/actress-sridevi-death-not-accidential-says-kerala-dgp-356453.html



 

ஶ்ரீதேவி கொல்லப்பட்டார் என்றே நானும் நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Lara said:

ஶ்ரீதேவி கொல்லப்பட்டார் என்றே நானும் நினைக்கிறேன்.

ஸ்ரீதேவி... வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாய்.
மற்றைய நடிகைகள் மாதிரி.. பல திருமணம் செய்யாமல், 
ஒரு கணவருடன், வாழ்க்கையை நடத்தி வந்தவர்.
அப்படி இருக்கவும்... வெளி நாட்டில், கொலை செய்யப் படுவதற்கு... 
என்ன காரணமாக இருக்கும் என்பதுதான்... புரியாத  புதிராக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

 

12 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ரீதேவி... வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாய்.
மற்றைய நடிகைகள் மாதிரி.. பல திருமணம் செய்யாமல், 
ஒரு கணவருடன், வாழ்க்கையை நடத்தி வந்தவர்.
அப்படி இருக்கவும்... வெளி நாட்டில், கொலை செய்யப் படுவதற்கு... 
என்ன காரணமாக இருக்கும் என்பதுதான்... புரியாத  புதிராக உள்ளது.

கொலை செய்பவர்கள் வீடியோவோ படமோ எடுத்துக் கொண்டு கொலை செய்வதில்லையே தமிழ்சிறி? அதனால் கொலை தான் செய்திருப்பர்! அவர் செத்ததை அவரே வீடியோ எடுத்து அதைப் பார்த்தால் மட்டுமே நாம் அவராகவே செத்தார் என்று நம்புவோம்! (லாராவிடம் இருந்து கற்றுக் கொண்ட லொஜிக்!😎)

ஜஸ்டினை பொறுத்தவரை ஊடகங்கள் சொல்வதை அப்படியே நம்பிவிட வேண்டும். (ஊடகங்கள் கொலையாளிகளுக்கு சார்பாக செய்தி பிரசுரித்தாலும்). 😊

Edited by Lara

On 7/10/2019 at 5:02 AM, தமிழ் சிறி said:

ஸ்ரீதேவி... வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாய்.
மற்றைய நடிகைகள் மாதிரி.. பல திருமணம் செய்யாமல், 
ஒரு கணவருடன், வாழ்க்கையை நடத்தி வந்தவர்.
அப்படி இருக்கவும்... வெளி நாட்டில், கொலை செய்யப் படுவதற்கு... 
என்ன காரணமாக இருக்கும் என்பதுதான்... புரியாத  புதிராக உள்ளது.

திரைப்படத்துறையில் கொலை என்பது சகஜம்.

ஓமானில் ஶ்ரீதேவியின் பெயரில் 240 கோடி (இந்திய) ரூபாய் மதிப்புள்ள life insurance செய்திருந்தார்களாம், அதிலுள்ள நிபந்தனை ஶ்ரீதேவி ஜக்கிய அரபு இராச்சியத்தினுள் இறந்தால் தான் அத்தொகையை பெற முடியும். அதனால் தான் துபாயில் வைத்து கொன்றார்கள் என நினைக்கிறேன்.

ஶ்ரீதேவி கொலை செய்யப்பட்ட பின் போனி கபூரும் அவரது முதல் மனைவியின் மகனான அர்ஜுன் கபூரும் ஒட்டாக திரிந்தார்கள். (கபூர் குடும்ப மீளிணைவு).

ஶ்ரீதேவியின் மூத்த மகளின் முதல் படம் வெளியாகவுள்ள நேரம் பார்த்து நடந்த கொலை. அர்ஜுன் கபூரின் முதல் படம் வெளியாக முன் அவரது தாயாரும் போனி கபூரின் முதல் மனைவியுமான மோனா கபூர் இறந்தார். (அதுவும் கொலையா என தெரியாது).

இன்னும் பல காரணங்கள் இருக்கலாம்.

கபூர் குடும்பம் தான் கொலையை செய்ததாக வட இந்தியாக்காரர் கதைக்கினம். 

பாதாள உலக குழுவின் தலைவரான தாவூத் இப்ராஹிம் துபாயில் செல்வாக்குடையவர் என்பதால் அவரை பயன்படுத்தி துபாயில் விடயங்களை கையாண்டிருக்கலாம் என்று ஓய்வு பெற்ற டெல்லி துணை பொலிஸ் கமிஷனர் Ved Bhushan முன்னர் கூறியிருந்தார். அவரும் ஶ்ரீதேவி கொலை தொடர்பாக விசாரணை செய்து வந்தவர்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

போனி கபூர் படங்கள் எடுத்து நட்டம் என்றும்,அதனால் அவர்களுக்குள் பிரச்சனை இருந்தது என்றும் வாசித்த நினைவு ...போனி  கபூரின் முதல் மனைவி இறந்தது புற்று நோயால்...அவர்கள் பிரிந்து கண காலம் உயிரோடு இருந்து தான் இறந்தவர்...அர்ஜுன் கபூருக்கு தன்னுடைய அப்பாவையும்,அம்மாவையும் பிரித்தது சிறிதேவி என்பதால் அவர்கள் இருவரோடும் கதைக்காமல் இருந்தார்...அது அவர் மட்டுமல்ல எந்த மானம் உள்ள பிள்ளையும் அதைத் தான் செய்வார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

அர்ஜுன் கபூருக்கு தன்னுடைய அப்பாவையும்,அம்மாவையும் பிரித்தது சிறிதேவி என்பதால் அவர்கள் இருவரோடும் கதைக்காமல் இருந்தார்...அது அவர் மட்டுமல்ல எந்த மானம் உள்ள பிள்ளையும் அதைத் தான் செய்வார்கள் 

பிள்ளைகள் உள்ள எந்தவொரு தம்பதியும் பிரிவதற்கான காரணமாக, மூன்றாம் நபரை (இந்த இடத்தில  சிறிதேவி) ஒருபோதும் குற்றம் குறை கூற முடியாது.

மூன்றாம் நபர் பிரிப்பதற்கு, தம்பதியினரின் சித்த சுவாதீனம் அற்றவர்கள் அல்ல.

பிரிந்தவரில் ஒருவரோ அல்லது இருவருமே ஆழமாக சிந்தித்தே, பிரியும் முடிவை எடுத்திருக்க முடியும்.

பிரிவின் காரணம் ஏதுவாகிலும், மூன்றாமவருடன் உள்ள பாலியல் கவர்ச்சியானாலும்.   

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Lara said:

ஓமானில் ஶ்ரீதேவியின் பெயரில் 240 கோடி (இந்திய) ரூபாய் மதிப்புள்ள life insurance செய்திருந்தார்களாம், அதிலுள்ள நிபந்தனை ஶ்ரீதேவி ஜக்கிய அரபு இராச்சியத்தினுள் இறந்தால் தான் அத்தொகையை பெற முடியும். அதனால் தான் துபாயில் வைத்து கொன்றார்கள் என நினைக்கிறேன்.

இதில் உள்ள நேர்மறையான முரண்பாடு, காப்புறுதி, அதுவும் இவ்வளவு பெரிய தொகையை, இத்தகைய சர்ச்சைகள் இருக்குமிடத்தில் காப்புறுதி நிறுவனம் தன்னுடைய தனிப்பட்ட தடயவியல் விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கும்.  

சூழ்நிலை ஆதாரங்கள், கொலை செய்யப்படுவதற்கான ஏதுக்களையும், சாத்தியக்கூறையும் காட்டி நிற்க்கின்றது என்பதுவும் வெளிப்படடை.   

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bildergebnis für Arjun Kapoor

எனக்கு இவரிலை ஒரு டவுட்டு....:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
On ‎7‎/‎11‎/‎2019 at 12:56 PM, Kadancha said:

பிள்ளைகள் உள்ள எந்தவொரு தம்பதியும் பிரிவதற்கான காரணமாக, மூன்றாம் நபரை (இந்த இடத்தில  சிறிதேவி) ஒருபோதும் குற்றம் குறை கூற முடியாது.

மூன்றாம் நபர் பிரிப்பதற்கு, தம்பதியினரின் சித்த சுவாதீனம் அற்றவர்கள் அல்ல.

பிரிந்தவரில் ஒருவரோ அல்லது இருவருமே ஆழமாக சிந்தித்தே, பிரியும் முடிவை எடுத்திருக்க முடியும்.

பிரிவின் காரணம் ஏதுவாகிலும், மூன்றாமவருடன் உள்ள பாலியல் கவர்ச்சியானாலும்.   

ஏன் சிறிதேவி மேல் பிழை சொல்ல முடியாது...அவர் மேல் தான் முழுப் பிழையும்...போனி கல்யாணம் கட்டி வளர்ந்த இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவரை திருமணம் செய்தது இவவின் பிழை தான்..போனி கபூரும் முதல் மனைவியை காதலித்தது திருமணம் செய்திருந்தும், வளர்ந்த இரு பிள்ளைகள் இருந்தும் வெறும் வடிவில மயங்கி கல்யாணம் கட்டினது பிழை.

ஆனால் நான் நினைக்கவில்லை இவவுடைய மரணம் கொலை என்று ...மகன்  கொல்ல நினைத்திருந்தால் எப்பவோ கொன்றிருப்பான்...தகப்பனை பொறுத்த வரை இவ ஒரு பணம் காய்ச்சி மரம் ...கண காலம் நடிக்காமல் இருந்தவ ,நடிக்க வந்ததே காசுக்காய் தான் 
 

On 7/11/2019 at 2:15 PM, Kadancha said:

இதில் உள்ள நேர்மறையான முரண்பாடு, காப்புறுதி, அதுவும் இவ்வளவு பெரிய தொகையை, இத்தகைய சர்ச்சைகள் இருக்குமிடத்தில் காப்புறுதி நிறுவனம் தன்னுடைய தனிப்பட்ட தடயவியல் விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கும்.  

சூழ்நிலை ஆதாரங்கள், கொலை செய்யப்படுவதற்கான ஏதுக்களையும், சாத்தியக்கூறையும் காட்டி நிற்க்கின்றது என்பதுவும் வெளிப்படடை.   

காப்புறுதி நிறுவனம் ஶ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா என சந்தேகமாக இருப்பதாக கூறியதாக தான் முன்னர் வாசித்தேன். பின் அது பற்றிய செய்திகள் எனது கண்ணில் படவில்லை என்பதால் என்ன நடந்தது என தெரியாது. ஆனால் துபாய் அரசு, பொலிஸ் என அனைவரும் கொலையாளிகள் பக்கம் இருக்க இவர்களால் ஏதும் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகம்.

On 7/11/2019 at 10:59 AM, ரதி said:

போனி கபூர் படங்கள் எடுத்து நட்டம் என்றும்,அதனால் அவர்களுக்குள் பிரச்சனை இருந்தது என்றும் வாசித்த நினைவு ...போனி  கபூரின் முதல் மனைவி இறந்தது புற்று நோயால்...அவர்கள் பிரிந்து கண காலம் உயிரோடு இருந்து தான் இறந்தவர்...அர்ஜுன் கபூருக்கு தன்னுடைய அப்பாவையும்,அம்மாவையும் பிரித்தது சிறிதேவி என்பதால் அவர்கள் இருவரோடும் கதைக்காமல் இருந்தார்...அது அவர் மட்டுமல்ல எந்த மானம் உள்ள பிள்ளையும் அதைத் தான் செய்வார்கள் 

 

On 7/12/2019 at 9:07 PM, ரதி said:

ஏன் சிறிதேவி மேல் பிழை சொல்ல முடியாது...அவர் மேல் தான் முழுப் பிழையும்...போனி கல்யாணம் கட்டி வளர்ந்த இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவரை திருமணம் செய்தது இவவின் பிழை தான்..போனி கபூரும் முதல் மனைவியை காதலித்தது திருமணம் செய்திருந்தும், வளர்ந்த இரு பிள்ளைகள் இருந்தும் வெறும் வடிவில மயங்கி கல்யாணம் கட்டினது பிழை.

ஆனால் நான் நினைக்கவில்லை இவவுடைய மரணம் கொலை என்று ...மகன்  கொல்ல நினைத்திருந்தால் எப்பவோ கொன்றிருப்பான்...தகப்பனை பொறுத்த வரை இவ ஒரு பணம் காய்ச்சி மரம் ...கண காலம் நடிக்காமல் இருந்தவ ,நடிக்க வந்ததே காசுக்காய் தான் 
 

போனி கபூருக்கு ஶ்ரீதேவி மேல் 70 களின் இறுதியிலேயே விருப்பம் இருந்ததாம் (ஶ்ரீதேவியின் தமிழ் படம் பார்த்து, முதலாவது ஹிந்தி படம் பார்த்து). தயாரிப்பாளர் என்ற ரீதியில் தனது படத்தில் ஶ்ரீதேவியை நடிக்க வைக்க முயற்சி செய்து ஶ்ரீதேவியின் தாயாருடன் கதைத்து Mr India படத்தில் நடிக்க வைத்தார். அப்படம் 1987 இல் வெளியிடப்பட்டது. அப்பட வெளியீட்டின் பின் ஶ்ரீதேவிக்கு பின்னால் சுற்றி திரிந்தவர்.

போனி கபூரும் மோனா கபூரும் 1983 இல் திருமணம் செய்திருந்தார்கள். இங்கு திருமணம் செய்த பின்னும் இன்னொருவர் பின் சுற்றியது போனி கபூர். போனி கபூருக்கும் மோனா கபூருக்கும் 1989 இலிருந்து பிரச்சினை இருந்து வந்தது என்றும் வாசித்தேன். அவர்கள் முன்னமே விவாகரத்து பெற்றிருக்க வேண்டியவர்கள், ஶ்ரீதேவி பிரச்சினையுடன் பிரிந்தார்கள் என நினைக்கிறேன். பிரிந்ததும் மோனா கபூர் போனி கபூரின் குடும்பத்தினரையும் தனது பிள்ளைகளையும் ஶ்ரீதேவிக்கு எதிராக திருப்பி விட்டிருந்தார். அதனால் தான் அர்ஜுன் கபூருக்கு ஶ்ரீதேவியை பிடிக்கவில்லை. ஶ்ரீதேவியின் பிள்ளைகளுக்கு எதிராகவும் கதைத்து வந்தவர். மற்றும்படி அர்ஜுன் கபூரும் அதே விடயத்தை தான் செய்தவர். Malaika Arora என்ற ஏற்கனவே திருமணம் செய்த, வளர்ந்த பிள்ளையை கொண்ட ஒருவருடன் சுற்றித்திரிந்து அவர் விவாகரத்து பெற்று முன்னர் ஒளிச்சொளிச்சு இடைக்கிட மட்டும் மீடியா கண்ணில் பட சுற்றினவை இப்ப வெளிப்படையா சொல்லிட்டு சுத்தினம்.

அக்காலகட்டங்களில் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் கறுப்பு பணத்தை தான் சம்பளமாக கொடுப்பார்கள் என்றும் அப்பணத்தை ஶ்ரீதேவியின் தந்தை தனது உறவினர்கள், நண்பர்கள் பலரிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் அவர் இறந்ததும் அவர்கள் அப்பணத்தை ஶ்ரீதேவிக்கு மீள கொடுக்காமல் துரோகம் செய்து விட்டார்கள் என்றும் வாசித்தேன். 90 களில் ஶ்ரீதேவியின் தாய்க்கு brain tumor இருந்தது. அவருக்கு மூளையில் அறுவைச்சிகிச்சை செய்யும்படி போனி கபூர் கூறி அமெரிக்காவில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அங்கு இடது பக்கத்தில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை வலது பக்கத்தில் மாறி செய்து விட்டார்கள். இதனால் அமெரிக்காவில் அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடுத்து பின் பணம் வழங்கப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டது. இக்காலகட்டத்தில் போனி கபூர் ஶ்ரீதேவியுடன் நின்றார் என்றும் வாசித்தேன். 

ஶ்ரீதேவியை சுற்றியிருந்த பலரும் அவரை விட்டு விலகிய நேரம் போனி கபூர் அருகில் இருந்ததால் ஶ்ரீதேவிக்கு அவரில் விருப்பம் வந்திருக்கலாம். ஶ்ரீதேவியின் சூழ்நிலையை போனி பயன்படுத்தியிருக்கலாம். ஶ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்ய முன்னமே போனி கபூர் சில படங்களில் தோல்வியடைந்து கடனில் இருந்தவர். ஶ்ரீதேவியின் சொத்துக்கள் பலவற்றை விற்று தான் அவரது கடனை அடைத்தார்கள். அதனால் தான் ஶ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்தார். ஶ்ரீதேவியை பணமீட்டும் இயந்திரமாக போனி பயன்படுத்தி வந்தவர். ஆனால் ஶ்ரீதேவியின் பிள்ளைகள் வளர்ந்து விட்ட பின் ஶ்ரீதேவி அவருக்கு தேவையில்லை. ஶ்ரீதேவியின் மரணத்துடன் பிள்ளைகளுக்கு விளம்பரம் தேடி முதல் மகளின் படமும் வெற்றி பெற்று விட்டது. இனி அவர்கள் இருக்கிறார்கள் காசு மரமாக.

ஶ்ரீதேவி இறந்ததும் உடனே அர்ஜுன் கபூர் துபாய்க்கு ஓடிப்போய் தந்தையுடன் நின்றார். திடீரென அவ்வளவு பாசம் வந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. ஏற்கனவே அனைவரும் போட்ட பிளான் படி செயற்பட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

போனி கபூருக்கு ஶ்ரீதேவி மேல் 70 களின் இறுதியிலேயே விருப்பம் இருந்ததாம்

எங்களுக்கு இப்பவும் விருப்பம் இருக்குதாக்கும்! நாங்கள் ஐந்து வயதிலிருந்தே உயிரையும் கொடுக்கும் விசிறிகளாக்கும்😍

Screen+Shot+2018-07-13+at+11.26.11+AM.pn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Lara said:

ஶ்ரீதேவியை சுற்றியிருந்த பலரும் அவரை விட்டு விலகிய நேரம் போனி கபூர் அருகில் இருந்ததால் ஶ்ரீதேவிக்கு அவரில் விருப்பம் வந்திருக்கலாம். ஶ்ரீதேவியின் சூழ்நிலையை போனி பயன்படுத்தியிருக்கலாம். ஶ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்ய முன்னமே போனி கபூர் சில படங்களில் தோல்வியடைந்து கடனில் இருந்தவர். ஶ்ரீதேவியின் சொத்துக்கள் பலவற்றை விற்று தான் அவரது கடனை அடைத்தார்கள்.

ஶ்ரீ தேவியின் தாயாரின் சத்திர சிகிச்சையின் தவறுதலால் வந்த நஷ்டயீட்டு பணத்தை அப்படியே போனிகபூருக்கு கொடுத்ததாகவும் ஒரு கதை உலாவியது.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎7‎/‎14‎/‎2019 at 10:16 AM, Lara said:

 

போனி கபூருக்கு ஶ்ரீதேவி மேல் 70 களின் இறுதியிலேயே விருப்பம் இருந்ததாம் (ஶ்ரீதேவியின் தமிழ் படம் பார்த்து, முதலாவது ஹிந்தி படம் பார்த்து). தயாரிப்பாளர் என்ற ரீதியில் தனது படத்தில் ஶ்ரீதேவியை நடிக்க வைக்க முயற்சி செய்து ஶ்ரீதேவியின் தாயாருடன் கதைத்து Mr India படத்தில் நடிக்க வைத்தார். அப்படம் 1987 இல் வெளியிடப்பட்டது. அப்பட வெளியீட்டின் பின் ஶ்ரீதேவிக்கு பின்னால் சுற்றி திரிந்தவர்.

போனி கபூரும் மோனா கபூரும் 1983 இல் திருமணம் செய்திருந்தார்கள். இங்கு திருமணம் செய்த பின்னும் இன்னொருவர் பின் சுற்றியது போனி கபூர். போனி கபூருக்கும் மோனா கபூருக்கும் 1989 இலிருந்து பிரச்சினை இருந்து வந்தது என்றும் வாசித்தேன். அவர்கள் முன்னமே விவாகரத்து பெற்றிருக்க வேண்டியவர்கள், ஶ்ரீதேவி பிரச்சினையுடன் பிரிந்தார்கள் என நினைக்கிறேன். பிரிந்ததும் மோனா கபூர் போனி கபூரின் குடும்பத்தினரையும் தனது பிள்ளைகளையும் ஶ்ரீதேவிக்கு எதிராக திருப்பி விட்டிருந்தார். அதனால் தான் அர்ஜுன் கபூருக்கு ஶ்ரீதேவியை பிடிக்கவில்லை. ஶ்ரீதேவியின் பிள்ளைகளுக்கு எதிராகவும் கதைத்து வந்தவர். மற்றும்படி அர்ஜுன் கபூரும் அதே விடயத்தை தான் செய்தவர். Malaika Arora என்ற ஏற்கனவே திருமணம் செய்த, வளர்ந்த பிள்ளையை கொண்ட ஒருவருடன் சுற்றித்திரிந்து அவர் விவாகரத்து பெற்று முன்னர் ஒளிச்சொளிச்சு இடைக்கிட மட்டும் மீடியா கண்ணில் பட சுற்றினவை இப்ப வெளிப்படையா சொல்லிட்டு சுத்தினம்.

அக்காலகட்டங்களில் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் கறுப்பு பணத்தை தான் சம்பளமாக கொடுப்பார்கள் என்றும் அப்பணத்தை ஶ்ரீதேவியின் தந்தை தனது உறவினர்கள், நண்பர்கள் பலரிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் அவர் இறந்ததும் அவர்கள் அப்பணத்தை ஶ்ரீதேவிக்கு மீள கொடுக்காமல் துரோகம் செய்து விட்டார்கள் என்றும் வாசித்தேன். 90 களில் ஶ்ரீதேவியின் தாய்க்கு brain tumor இருந்தது. அவருக்கு மூளையில் அறுவைச்சிகிச்சை செய்யும்படி போனி கபூர் கூறி அமெரிக்காவில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அங்கு இடது பக்கத்தில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை வலது பக்கத்தில் மாறி செய்து விட்டார்கள். இதனால் அமெரிக்காவில் அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடுத்து பின் பணம் வழங்கப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டது. இக்காலகட்டத்தில் போனி கபூர் ஶ்ரீதேவியுடன் நின்றார் என்றும் வாசித்தேன். 

ஶ்ரீதேவியை சுற்றியிருந்த பலரும் அவரை விட்டு விலகிய நேரம் போனி கபூர் அருகில் இருந்ததால் ஶ்ரீதேவிக்கு அவரில் விருப்பம் வந்திருக்கலாம். ஶ்ரீதேவியின் சூழ்நிலையை போனி பயன்படுத்தியிருக்கலாம். ஶ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்ய முன்னமே போனி கபூர் சில படங்களில் தோல்வியடைந்து கடனில் இருந்தவர். ஶ்ரீதேவியின் சொத்துக்கள் பலவற்றை விற்று தான் அவரது கடனை அடைத்தார்கள். அதனால் தான் ஶ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்தார். ஶ்ரீதேவியை பணமீட்டும் இயந்திரமாக போனி பயன்படுத்தி வந்தவர். ஆனால் ஶ்ரீதேவியின் பிள்ளைகள் வளர்ந்து விட்ட பின் ஶ்ரீதேவி அவருக்கு தேவையில்லை. ஶ்ரீதேவியின் மரணத்துடன் பிள்ளைகளுக்கு விளம்பரம் தேடி முதல் மகளின் படமும் வெற்றி பெற்று விட்டது. இனி அவர்கள் இருக்கிறார்கள் காசு மரமாக.

ஶ்ரீதேவி இறந்ததும் உடனே அர்ஜுன் கபூர் துபாய்க்கு ஓடிப்போய் தந்தையுடன் நின்றார். திடீரென அவ்வளவு பாசம் வந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. ஏற்கனவே அனைவரும் போட்ட பிளான் படி செயற்பட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

நீங்கள் தான் மேலே எழுதினீர்கள் இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்து விட்டார்கள் என்று. அதே நீங்கள் போனிக்கு சிறீதேவியால்  வரும் பணம் பெரிதில்லை என்று எழுதுகிறீர்கள் ..சினிமாத துறையில் இருப்பவர்கள் எல்லோரும்,எல்லோருடன் படுப்பது தான்...நாளைக்கே அர்ஜுனுக்கு ஏதாவது நடந்தால் மலைக்காவின் மகன் தான் எதோ செய்து விட்டார் என்று சொல்வீர்கள் போல இருக்கு.


இருவரும் பிரியும் பிள்ளைகள் ரீன் ஏஜ் பருவத்தில் இருந்தார்கள்...தாயாரோடு இருந்ததால் தகப்பன் மேல் இன்னும் கோபம் அதிகமாய் இருந்திருக்கும்...ஆனால் தப்பான மேல் பாசம் இருக்கும்... அதனால் தகப்பனின் துயரத்தில் பங்கு எடுத்திருக்கலாம்...சில நேரம் அர்ஜுனுக்கு சிறிதேவி செத்தது சந்தோசமாய் இருக்கும்...ஆனால் அவர்கள் தான் கொன்றது என்பது விசர்க்கதை 


முதல், எழுதும் போது முதல் மனைவியை அவர் கொன்றார் என்று எழுதினீர்கள்...நான் வந்து எழுதின பிறகு மகனையும்,தகப்பனையும் குற்றம் சாட்டுகிறீர்கள்.


எழுந்தமானமாய் கதைப்பதை நிப்பாட்டுங்கள் 

1 hour ago, ரதி said:

நீங்கள் தான் மேலே எழுதினீர்கள் இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்து விட்டார்கள் என்று. அதே நீங்கள் போனிக்கு சிறீதேவியால்  வரும் பணம் பெரிதில்லை என்று எழுதுகிறீர்கள் ..சினிமாத துறையில் இருப்பவர்கள் எல்லோரும்,எல்லோருடன் படுப்பது தான்...நாளைக்கே அர்ஜுனுக்கு ஏதாவது நடந்தால் மலைக்காவின் மகன் தான் எதோ செய்து விட்டார் என்று சொல்வீர்கள் போல இருக்கு.


இருவரும் பிரியும் பிள்ளைகள் ரீன் ஏஜ் பருவத்தில் இருந்தார்கள்...தாயாரோடு இருந்ததால் தகப்பன் மேல் இன்னும் கோபம் அதிகமாய் இருந்திருக்கும்...ஆனால் தப்பான மேல் பாசம் இருக்கும்... அதனால் தகப்பனின் துயரத்தில் பங்கு எடுத்திருக்கலாம்...சில நேரம் அர்ஜுனுக்கு சிறிதேவி செத்தது சந்தோசமாய் இருக்கும்...ஆனால் அவர்கள் தான் கொன்றது என்பது விசர்க்கதை 


முதல், எழுதும் போது முதல் மனைவியை அவர் கொன்றார் என்று எழுதினீர்கள்...நான் வந்து எழுதின பிறகு மகனையும்,தகப்பனையும் குற்றம் சாட்டுகிறீர்கள்.


எழுந்தமானமாய் கதைப்பதை நிப்பாட்டுங்கள் 

நான் எழுந்தமானதாக கதைக்கவில்லை. நீங்கள் எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.

கொலை செய்யப்பட்டமைக்கு பல காரணங்கள், அதில் ஒரு காரணமான insurance பணத்துக்காக துபாயில் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என எழுதினேன். (ஶ்ரீதேவி உயிருடன் இருப்பதை விட இறப்பதன் முலம் அவர்களுக்கு அதிக இலாபம். இறந்த பின் ஶ்ரீதேவியின் சொத்துக்களை யார் எடுப்பது என ஒரு பிரச்சினையும் நடந்தது.)

அதே நேரம் இன்னொரு காரணமாக ஶ்ரீதேவியின் மூத்த மகளின் முதல் படம் வரும் வெளிவரும் நேரம் நடந்த கொலை என்றும் எழுதினேன். அர்ஜூன் கபூரின் முதல் படம் வெளிவரும் நேரம் அவர் தாயார் இறந்தார். (அதுவும் கொலையா என தெரியாது என எழுதியிருந்தேன். கொலை என்றே நான் நினைக்கிறேன். அது Bollywood சம்பந்தமான விடயம். அது பற்றி விரிவாக எழுத யாழில் மட்டுக்கள் விட மாட்டார்கள். அதனால் தான் மேலதிகமாக எழுதவில்லை. அவருக்கு புற்று நோய் இருந்தது எனக்கு முன்னமே தெரியும். நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிய வேண்டியதில்லை). 

இன்னொரு காரணமாக கபூர் குடும்ப மீளிணைவுக்காக என எழுதியிருந்தேன் (அதில் அர்ஜூன் கபூரையும் சேர்த்து தான் கூறினேன்).

இன்னும் பல காரணங்கள் இருக்கலாம் என்றும் எழுதினேன்.

அர்ஜுனுக்கு தனது தாய் தந்தையை பிரித்தது ஶ்ரீதேவி என்பதால் கதைக்காமல் இருந்தார், எந்த மானமுள்ள பிள்ளையும் அதைத்தான் செய்யும் என எழுதியிருந்தீர்கள். அர்ஜுனும் இன்னொரு குடும்பத்தை பிரித்தவர் என்பதால் அவரை நீங்கள் மானமுள்ள பிள்ளை என கூற முடியாது. 

அர்ஜூனுக்கு ஏதும் நடந்தால் மலைக்காவின் மகன் ஏதும் செய்து விட்டார் என நான் சொல்லப்போவதில்லை. காரணம் அர்ஜுனை ஶ்ரீதேவிக்கு எதிராக ஶ்ரீதேவியை வெறுக்குமளவுக்கு அவரது தாயார் திருப்பியது போல் மலைக்காவின் மகனை அர்ஜுனுக்கு எதிராக யாரும் திருப்பப்போவதில்லை.

ஶ்ரீதேவி மரணம் பற்றி வந்த செய்திகளை பார்த்தவர்களுக்கு அது கொலை என இலகுவில் விளங்கியிருக்கும், அது பற்றி ஒரு சிலவற்றை பின்னர் எழுதுகிறேன்.

Edited by Lara

20 ஆம் திகதி திருமண நிகழ்வில் போனி கபூர், ஶ்ரீதேவி, இரண்டாவது மகள் கலந்து கொண்டார்கள். முதல் மகள் படப்பிடிப்பில் இருந்ததால் கலந்து கொள்ளவில்லை. கபூர் குடும்பத்தை சேர்ந்த வேறு பலரும் கலந்து கொண்டார்கள். பின் கபூர் குடும்பத்தினர் இந்தியா திரும்பியிருந்தார்கள். 

ஶ்ரீதேவியை துபாய் ஹொட்டலில் தனியா விட்டிட்டு போனியும் மகளும் கூட இந்தியா திரும்பியிருந்தார்கள். ஶ்ரீதேவி தனது சகோதரியை சந்திக்க நின்றதாக ஒருக்காவும், ஷொப்பிங் செய்ய நின்றதாக ஒருக்காவும், ஓவியங்களை ஏலம் விட நின்றதாக இன்னொருக்காவும் கூறினார்கள்.

ஶ்ரீதேவி மரணமடைந்த செய்தி வந்ததும் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு இந்தியா திரும்பிய சஞ்சய் கபூர் மீண்டும் துபாய்க்கு சென்று அங்கிருந்து போனி தரப்பில் ஊடகத்துக்கு கூறியது ஶ்ரீதேவி இரவு (24 ஆம் திகதி) 11, 11.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார், அதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள் என.

Edited by Lara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலியாணவீடு முடிஞ்சு இந்தியாவுக்கு போன போனி கபூர்  திரும்பி  சிறிதேவிக்கு இன்ப அதிர்ச்சி குடுக்க துபாய்க்கு திரும்பி வந்தவராம். 
புருசன் வீட்டிலை தனிய இருக்க பொண்டாட்டி  பாத்றூமை பூட்டிப்போட்டு குளிக்க போனாராம்.🤪

பின் மாரடைப்பால் மரணமடைந்த கதை, “accidental drowning” ஆக மாறிய கதை பலருக்கும் தெரியும்.

ஶ்ரீதேவி மரணம் தொடர்பாக போனி தரப்பு முதலில் கொடுத்த விளக்கம்.

இந்தியா திரும்பிய போனி மகளை இந்தியாவில் விட்டுட்டு ஶ்ரீதேவிக்கு சப்ரைஸ் குடுக்க நினைத்து மீண்டும் 24 ஆம் திகதி துபாய்க்கு போனாராம். (வந்திட்டு திரும்பி போக இது என்ன பக்கத்து வீடா?) மாலை 5.30 க்கு ஹொட்டல் அறைக்கு சென்று ஶ்ரீதேவியை எழுப்பி சுமார் 15 நிமிடங்கள் அவருடன் கதைத்து விட்டு பின் dinner க்கு போக அழைத்ததாகவும் ஶ்ரீதேவி fresh ஆகிட்டு வாறதா சொல்லி bathroom உள்ளே சென்றாராம். 15 நிமிடங்களாகியும் காணவில்லை என்றதும் தான் கதவை தட்டிப்பார்த்து பதிலில்லாததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல ஶ்ரீதேவி குளியல் தொட்டிக்குள் ஒரு அசைவுமில்லாமல் இருந்தவராம். (Dinner போக fresh ஆகிட்டு வாறதா சொன்னவா குளியல் தொட்டிக்குள் bath எடுக்க நினைத்திருப்பாவா, தொட்டிக்குள் அவ்வளவு விரைவில் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்குமா?) உடனே தனது நண்பர் ஒருவரை அழைத்திருந்தாராம். பின் 9 மணிக்கு பொலிஸுக்கு call பண்ணினார்களாம். (6 மணியிலிருந்து 9 மணிவரை பொலிஸ், மருத்துவர், அம்புலன்ஸ் எதையும் அழைக்காமல் என்ன செய்தார்கள்?) 

பின் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஶ்ரீதேவி ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார்களாம். ஶ்ரீதேவி 11 மணியளவில் இறந்திருப்பதாக கூறப்பட்டது. (9 மணிக்கு பொலிஸுக்கு சொன்னவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 11 மணிக்கு மேலானதா?)

பின் நேரத்தையும் சம்பவங்களையும் மாற்றி மாற்றி கதைத்தார்கள்.

ஹொட்டல் தரப்பில் துபாய் ஊடகமொன்றுக்கு வழங்கப்பட்டதாக வந்த செய்தி, ஶ்ரீதேவி 24 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் room service க்கு அழைத்து தண்ணீர் தருமாறு கேட்டிருந்தாராம். 15 நிமிடத்தால் hotel staff ஶ்ரீதேவி தங்கியிருந்த அறைக்கு வந்து பெல் அடித்தும் அவர் கதவை திறக்கவில்லை. அதனால் பயத்தில் alarm ஐ அடித்ததாகவும். தாம் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது குளியலறை நிலத்தில் (தொட்டியிலல்ல) ஶ்ரீதேவியை கண்டதாகவும் அவர் தனியாக தான் இருந்ததாகவும் (போனி அருகில் இல்லை) அப்பொழுது 11 மணியிருக்கும், அவருக்கு pulse இருந்ததாகவும் உடனே தாம் விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறப்பட்டதாகவும் கூறினார்கள்.

இரு வேறு செய்தி.

Edited by Lara

accidental drowning என்பது நம்பும் வகையில் இல்லை என பலர் கூற traces of alcohol இருந்ததாக கூறினார்கள். (ஶ்ரீதேவி உண்மையில் அல்கஹோல் பானங்கள் அருந்துவதில்லை என அவரை நெருங்கிய பலர் கூறியிருந்தார்கள்).

ஶ்ரீதேவியின் தலையிலும் உடலிலும் காயங்கள் இருந்ததாகவும் அது பற்றி முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை எனவும் துபாயிலுள்ள ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

ஶ்ரீதேவி மரணம் பற்றி சரியான விசாரணை நடத்த பலரும் கேட்டார்கள். ஆனால் 24 ஆம் திகதி ஶ்ரீதேவி மரணிக்க 27 ஆம் திகதி துபாயில் case ஐ அவசரமாக முடித்து விட்டார்கள்.

Edited by Lara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, Lara said:

accidental drowning என்பது நம்பும் வகையில் இல்லை என பலர் கூற traces of alcohol இருந்ததாக கூறினார்கள். (ஶ்ரீதேவி உண்மையில் அல்கஹோல் பானங்கள் அருந்துவதில்லை என அவரை நெருங்கிய பலர் கூறியிருந்தார்கள்).

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.