Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?

Featured Replies

On 8/11/2019 at 2:18 AM, ampanai said:

கோவிலின் விமானத்தில் உள்ள செப்புத்தகடுகளும் உமியியும் அண்டக் கதிர்களை (Cosmic Rays) தன் வசத்தே ஈர்த்து, கருவரைக்கு அனுப்பும். கருவரையிலும் செப்புத் தகடு உள்ளதால் அந்த அண்டக் கதிர்களை (Cosmic Rays) தன் வசத்தே ஈர்க்கும். அண்டக் கதிரானது ஒளியன்கள் (Photons) நிறைந்தது. ஆக அண்டக் கதிரானது இருட்டில் தங்காமல் வெளிச்சம் உள்ள இடத்தில் பிரதிபளிக்கிறது. அது கருவறைக்கு வெளியே நின்றிருக்கும் பக்தர்களை சென்றடைகிறது. அண்டக் கதிரானது மனிதர்களுக்கு நேர்மறையை (Positive) ஊக்குவிக்க வல்லது. இதனால் மனிதன் புத்துணர்வு பெறுகிறான். அறிவியல் ஆதாரம் வேண்டுவோர்: https://helios.gsfc.nasa.gov/qa_cr.html?fbclid=IwAR3PocYPIpICi8cTxvmleZV9ndDc6iKFlIs694pSGFJTbfbhxXgBo9AymlQ

பொய்யான தகவல்.

  • Replies 134
  • Views 10.8k
  • Created
  • Last Reply
7 hours ago, valavan said:

நீங்கள் அதிகமாக கோவபடுவதுபோல்  தெரிகிறது

உங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை நீங்க வெளிப்படுத்துவதை எவரும் ஏற்கிறார்கள் இல்லையே என்ற மான பிரச்சனையாக / கோபமாககூட  அது இருக்கலாம்.

பிறரை முட்டாள்கள் என்று தீர்ப்பு  சொல்ல  எந்த மனிதனுக்கும் உரிமையில்லை,

ஏனென்றால் தன்னை தானே  அறிவாளி என்று நினைக்கும் மனிதனும்  ஏதாவது ஒரு இடத்தில் முட்டாளாய் இருப்பான்.

உடன்கட்டை ஏறுவதும் மத கலாச்சாரங்களை விமர்சிப்பதும் ஒன்றல்ல,

உடன்கட்டை ஏறுவதை, அந்த கலாச்சாரத்தை  அடியோடு வெறுத்தது 

இதே நீங்க சொன்ன  காட்டுமிராண்டி கலாச்சாரத்தை கொண்ட இந்து மதம் தான்.

இடையிலே புகுந்து வேறு எந்த மதத்தவரும்  எவரும் அது தவறு என்று அடிச்சு திருத்தவில்லை

தான் செய்வது தவறு  என்று சுய விமர்சனம் செய்வதும், நான் செய்தது தப்பு என்று ஒத்துக்கொண்டு  திருந்தும் நாகரிகமும்  தில்லும் எந்த மதத்துக்கும் உண்டா இந்து மதத்தை தவிர>?

வல்லவன்,  உடன் கட்டை ஏறும் இந்து மதத்தவரின்  கலாசாரம் இந்து மதத்தவரால் சுயவிமர்சனம் செய்து கைவிடப்படவில்லை. ஆங்கிலேய அரசில் சட்ட தடையே காரணம் என்ற வரலாற்று உணமையை ஏன் மறைக்கப்பார்கிறீர்கள். அதுவும்  இந்துத்துவ வாதிகள் கடுமையாக எதிர்பபை மீறியே அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. 

இரண்டாவது நீங்கள் சொன்னது அறிவுக்கு ஒவ்வாத  முட்டாள் பழக்கங்களை இந்துமதம் தானாகவே சுயவிமர்சனம் செய்து கைவிடும் என்பதே. அந்த நாகரீகம் இந்து மதத்துக்கு உண்டு என்பது உண்மையானால் இந்துவாகிய நான் எனது மதத்தின் மூடத்தனமான பழக்கங்களை சுய விமர்சனம் செய்யும்போது உங்களுக்கு கோபம் வரவேண்டிய அவசியம் என்ன? நீங்கள் அப்படியான நாகரீகம் கொண்ட இந்து இல்லையா? 

4 hours ago, Eppothum Thamizhan said:

இந்தக்கதைகளை ஏன் சமய அனுட்டானங்களுடன் கலக்கிறீர்கள். இந்தக்கதையை நாமோ அல்லது நம்மவர்களோ நம்பியதாக எங்கும் எழுதப்படவில்லையே. தலையங்கத்திற்கு மட்டும் கருத்தெழுத பழகுங்கள். சும்மா கண்டமேனிக்கு திரியை திருப்பிவிடுவதே உங்களைப்போல் சில அறிவாளிகளின் வேலையாக இருக்கிறது என்பதை பல தடவைகள் நிரூபிக்கிறீர்கள். இதுவும் ஒரு மனோவியாதிதான்.

நான் கூறிய பதில் உங்களுக்கானதல்ல. இந்து மதம் அறிவியல்  பூர்வமானது என்ற அம்பனையின் விளக்கத்திற்கான பதிலே அது. இந்தி மதம் எத்தனை பொய் புரட்டுக்களை தன்னை நம்பிய மக்கள்மீது திணித்தது என்பதற்கான ஆதாரமே அது. இதனை  வாசித்து உங்களால் புரிய முடியாதது என் குற்றமல்ல. 

5 hours ago, வாதவூரான் said:

இங்கேநிழலி மற்றும் டுல்பென்  இந்து/சைவ சமயத்தில் உள்ளதாக கூறும்நிறைய விடயங்கள்நான் கேள்விப்படாதது/படிக்காதது உயர்தர பாடங்களில் அல்லது பல்கலைக்கழக பாடங்களில் இருப்பதாக கூட கேள்விப்படவில்லை. உண்மையாகவே இது எல்லாம் இந்து/சைவ சமயங்களில் இருக்குதா? அல்லது எனக்கு தான் எதுவும் தெரியவில்லையா?.நேற்று ஈலிங் அம்மனிலும்நிறைய காவடி அந்த மாதிரி இருந்துது

வாதவூரான் தங்கள் கருத்துக்கு நன்றி. நான் கூறியது காவடியைத்  தோளில்  வைத்து ஜாலியாக குத்துப்பாட்டுக்கு நடனமாடி  மகிழும் கலாச்சாரத்தை  அல்ல. அப்படியான காவடியை நானும்  விரும்பி ரசிப்பேன். அலகு  குத்தி அல்லது தூக்குக்காவடி, நிலத்தில் உருளுவது போன்ற மூடத்தனத்தையே நான் விமர்சித்தேன். 

29 minutes ago, tulpen said:

உடன் கட்டை ஏறும் இந்து மதத்தவரின்  கலாசாரம் இந்து மதத்தவரால் சுயவிமர்சனம் செய்து கைவிடப்படவில்லை. ஆங்கிலேய அரசில் சட்ட தடையே காரணம் என்ற வரலாற்று உணமையை ஏன் மறைக்கப்பார்கிறீர்கள். அதுவும்  இந்துத்துவ வாதிகள் கடுமையாக எதிர்பபை மீறியே அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. 

ராஜாராம் மோகன்ராய் என்ற பிராமணர் உடன்கட்டை ஏறுதலுக்கெதிராக குரல் கொடுத்து தான் அதற்கெதிராக சட்டம் கொண்டுவரப்பட்டது என்ற வரலாற்று உண்மை உங்களுக்கு தெரியாது போல.

Edited by Lara

8 minutes ago, Lara said:

ராஜாராம் மோகன்ராய் என்ற பிராமணர் உடன்கட்டை ஏறுதலுக்கெதிராக குரல் கொடுத்து தான் அந்த தடை கொண்டுவரப்பட்டது என்ற வரலாற்று உண்மை உங்களுக்கு தெரியாது போல.

ராஜாராம் மோகன்ராய்  இந்து மதத்தில் உள்ள மூடப்பழக்கங்களை கடுமையாக எதிர்தார். இந்து மதத்தை சீர்திருத்த விரும்பினார். இந்து மத வாதிகள் அவரை எதிர்ததனர். ராஜாராம் மோகன்ராயை இன்று ஆதரிக்கும் நீங்கள் இந்து மத மூடத்தனங்களை அவரைப்பின்பற்றி ஒழிக்க பாடுபடுங்கள். 👍

3 minutes ago, tulpen said:

ராஜாராம் மோகன்ராய்  இந்து மதத்தில் உள்ள மூடப்பழக்கங்களை கடுமையாக எதிர்தார். இந்து மதத்தை சீர்திருத்த விரும்பினார். இந்து மத வாதிகள் அவரை எதிர்ததனர். ராஜாராம் மோகன்ராயை இன்று ஆதரிக்கும் நீங்கள் இந்து மத மூடத்தனங்களை அவரைப்பின்பற்றி ஒழிக்க பாடுபடுங்கள். 👍

ராஜாராம் மோகன்ராய் இந்து மதத்தை கிறிஸ்தவ மிஷனரிகள் தாக்குவதற்கு எதிராக குரல் கொடுத்ததுடன் மதமாற்றத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர். எல்லா மத நம்பிக்கையாளர்களும் சகோதரர்களாக சேர்ந்திருக்க முடியும் எனவும் நினைத்தார்.

உங்களை போல் இந்து மதத்தவரை மட்டும் மட்டம் தட்டும் வேலையையோ அல்லது மக்கள் அழியும் போது கடவுள் காப்பாற்ற வில்லை என்றோ புலம்பவில்லை. 

தவிர ராஜாராம் மோகன்ராயை நான் ஆதரிப்பதாக எங்கும் எழுதவில்லை.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் சில சில பகுதிகளில் இடம்பெற்ற (ஏனைய பகுதிகளில் குறைவாக இடம்பெற்ற) உடன்கட்டையேறுதலை ஒட்டுமொத்த இந்துக்களின் கலாச்சாரமாக தூக்கிப்பிடித்து  கதைப்பதை முதலில் நிறுத்துங்கள்.

2 minutes ago, Lara said:

ராஜாராம் மோகன்ராய் இந்து மதத்தை கிறிஸ்தவ மிஷனரிகள் தாக்குவதற்கு எதிராக குரல் கொடுத்ததுடன் மதமாற்றத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர். எல்லா மத நம்பிக்கையாளர்களும் சகோதரர்களாக சேர்ந்திருக்க முடியும் எனவும் நினைத்தார்.

உங்களை போல் இந்து மதத்தவரை மட்டும் மட்டம் தட்டும் வேலையையோ அல்லது மக்கள் அழியும் போது கடவுள் காப்பாற்ற வில்லை என்றோ புலம்பவில்லை. 

தவிர ராஜாராம் மோகன்ராயை நான் ஆதரிப்பதாக எங்கும் எழுதவில்லை.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் சில சில பகுதிகளில் இடம்பெற்ற (ஏனைய பகுதிகளில் குறைவாக இடம்பெற்ற) உடன்கட்டையேறுதலை ஒட்டுமொத்த இந்துக்களின் கலாச்சாரமாக தூக்கிப்பிடித்து  கதைப்பதை முதலில் நிறுத்துங்கள்.

இந்து மதத்தில் தற்போது கடைப்பிடிக்கப்படும்  மூடத்தனங்களை பற்றியதே பிரதான விவாதம். ஏற்கனவே ஒழிக்கப்பட்ட உடன்கட்டை ஏறும் மூடத்தனம் ஒரு உதாரணத்திற்காகவே இங்கு பாவிக்கப்பட்டது எனபது உங்களுக்கு விளங்கவில்லையா? பிரதான விவாதத்திற்கு  வலு சேர்கக உதாரணங்கள் சுட்டிக்காட்டப்படும் போது அதை தூக்கிப்பிடிப்பது நீங்கள் தான். ராஜாராம் மோகன்ராய் அன்றைய இந்து மத  மூடப்பழக்கங்களை ஒழிக்க பாடு பட்டார் அவரால் முழுமையாக ஒழுக்கப்படாத மூடத்தனங்களை ஒழிக்க அவரின் சீடராக நீங்கள் பாடுபடலாமே? நம் எல்லோருக்கும் நல்லது தானே! 

21 minutes ago, tulpen said:

இந்து மதத்தில் தற்போது கடைப்பிடிக்கப்படும்  மூடத்தனங்களை பற்றியதே பிரதான விவாதம். ஏற்கனவே ஒழிக்கப்பட்ட உடன்கட்டை ஏறும் மூடத்தனம் ஒரு உதாரணத்திற்காகவே இங்கு பாவிக்கப்பட்டது எனபது உங்களுக்கு விளங்கவில்லையா? பிரதான விவாதத்திற்கு  வலு சேர்கக உதாரணங்கள் சுட்டிக்காட்டப்படும் போது அதை தூக்கிப்பிடிப்பது நீங்கள் தான். ராஜாராம் மோகன்ராய் அன்றைய இந்து மத  மூடப்பழக்கங்களை ஒழிக்க பாடு பட்டார் அவரால் முழுமையாக ஒழுக்கப்படாத மூடத்தனங்களை ஒழிக்க அவரின் சீடராக நீங்கள் பாடுபடலாமே? நம் எல்லோருக்கும் நல்லது தானே! 

ஈழத்தமிழர்கள் தம்மை சைவ சமயத்தவர்களாகவே (இந்து மதம் என அழைக்கப்பட்டாலும்) கருதுபவர்கள். அதிலிருந்து வட இந்தியர்கள் கடைப்பிடிக்கும் இந்து மதத்திற்கு பாரிய வேறுபாடு உள்ளது. 

ஈழத்து இந்துக்கள் மேல் விமர்சனம் வைக்கிறேன் என்ற பெயரில் தொட்டதுக்கும் இந்திய இந்துக்களை இழுத்து கதைப்பதை நிறுத்துங்கள்.

தூக்கு காவடி எடுப்பவர்கள் தமது விருப்பின் பேரிலேயே அதை செய்கிறார்கள். எனவே உங்கள் விமர்சனங்கள் அவர்களை பாதிக்கப்போவதில்லை.

தவிர நீங்கள் திரிக்கு திரி இந்துக்களுக்கெதிராக வாந்தி எடுத்து வருவதால் உங்கள் கருத்துகளை பார்த்தால் சனம் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடும். 😂

நான் ராஜாராம் மோகன்ராயின் சீடர் கிடையாது. 😎

Edited by Lara

26 minutes ago, Lara said:

 

நான் ராஜாராம் மோகன்ராயின் சீடர் கிடையாது. 😎

மூடப்பழக்கங்களை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கும் நீங்கள்  மூடப்பழக்கங்களை எதிர்த்த ஒருவரின் சீடராக இருக்க முடியாது என்பது எனக்கு தெரியும். நான் சும்மா விளையாட்டாக குறிப்பிட்டேன். மன்னித்து கொள்ளுங்கள்.

5 minutes ago, tulpen said:

மூடப்பழக்கங்களை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கும் நீங்கள்  மூடப்பழக்கங்களை எதிர்த்த ஒருவரின் சீடராக இருக்க முடியாது என்பது எனக்கு தெரியும். நான் சும்மா விளையாட்டாக குறிப்பிட்டேன். மன்னித்து கொள்ளுங்கள்.

ராஜாராம் மோகன்ராயின் சில நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது, ஆனால் அவரது வேறு சில நடவடிக்கைகளை நான் ஆதரிக்கவில்லை.

தவிர இன்னொருவரின் சீடராக இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2019 at 4:20 AM, Dash said:

தமிழர்களின் மத நம்பிக்கை இங்கு நிந்தனை செய்யப்பட்டிருக்கிறது ஆனால் இந்த திரியை மூடவோ அல்லது தவறான கருத்துக்களை நீக்கவோ இல்லை;ஆனால் கிறிஸ்த்தவ மதத்தையோ அல்லது இஸ்லாம் மதத்தையோ இப்படி தவறாக எழுதியிருந்தால் யாழ் நிர்வாகம் சும்மா இருந்திருக்குமா.....!!! 

ஐயா, இங்கே அதிகம் மெனக்கெடும் ஆர்வமில்லா விட்டாலும் இப்படியான கருத்துகளை விட்டு விட முடியவில்லை! தமிழரின் மத நம்பிக்கை என்று ஒன்று இல்லை! தமிழ் முதலில் வந்தது, நீங்கள் குறிப்பிட்ட மதங்கள் எல்லாமே பின்னர் வந்து தமிழின் முதுகின் மேல் ஏறியவை! மத நம்பிக்கைகளால் தமிழ் நலிவு கொள்ளவில்லை, பொலிவு தான் அடைந்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2019 at 6:27 PM, Eppothum Thamizhan said:

மூலக்கொதிப்பு இருந்தால் நான் டாக்டரிடம் காட்டி குணப்படுத்திக்கொள்கிறேன். அதற்கு உங்கள் அறிவுரை எனக்கு தேவையில்லை. 

விரதமிருப்பதால் வரும் நன்மைகள் இப்போதுதான் உங்கள் விஞ்ஞானிகளுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.. சைவசமய சடங்குகளையும் செயல்களையும் விமர்சிப்பதும் உங்கள் சமய காழ்ப்புணர்ச்சியை கொட்டித்தீர்ப்பதும்தான் உங்கள் வீரம் என்பது களத்தில் எல்லோருக்கும் தெரிந்தவிடயமே. மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் பல மருத்துவ ஆதாரங்களை எமது முன்னோர்கள் அன்றே சொல்லிவைத்திருப்பது உங்களுக்கு தெரியவில்லை போலும்.

இப்படி மற்றவனின் உழைப்பை எடுத்து மத நம்பிக்கையொன்றை வளர்க்கும் வேலையை இந்து மதம் மட்டுமே செய்கிறது என்பது பலருக்கும் தெரிந்ததே. அதை மட்டுமே நான் எதிர்க்கிறேன். மற்றபடி எதை யார் நம்புகிறார்கள் என்பது எனக்கு அக்கறையில்லை!

ஐரோப்பாவின் இருண்ட காலத்தில் விஞ்ஞானிகளை சிறையில் போட்டும் கொன்றும் அறிவியலை கிறிஸ்தவம் தடுக்கப் பார்த்தது! தொடர்ந்து வந்த மறுமலர்ச்சிக் காலத்தில் கலைகளையும் அறிவியலையும் தடுக்க முடியாது என்று உணர்ந்த பின்னர், அவை இரண்டிற்கும் ஆதரவு கொடுத்து வளர விட்டது. வத்திக்கான் அரண்மனையின் சிற்ப ஓவிய சிறப்புகளும், ஐரோப்பாவின் மிகப்பழமையான வான் தொலைநோக்கியும் இதற்கு சான்றுகள்! மனித வளர்ச்சியில் ஐரோப்பா எங்கே நிற்கிறது இப்போது?

இந்து மதவாதத்தின் பால் தெரிவான மோடி பரிசோதனைக் குழாய்க் குழந்தைகள் புராணங்களில் கண்டு பிடிக்கப் பட்டதாகச் சொல்லி இந்த அடுத்தவன் உழைப்பில் போலி மதநம்பிக்கையை வளர்க்க உங்கள் போன்ற கையிருப்பில் அதிகம் இல்லாதோர் அவரோடு இழுபடுகிறீர்கள், இது நடக்கும் இந்தியா உட்பட்ட நாடுகள் எங்கே நிற்கின்றன? தெருவில் பெண்களே தனியாகப் போக இயலாத நிலை இந்த நாடுகளில்!


போலி அறிவியல் கருத்துகளால் ஒரு மத நம்பிக்கையை முண்டு கொடுத்துக் காப்பாற்ற வேண்டியிருக்கிறதெனில் அந்த மத நம்பிக்கை கொள்வோர் ஆன்மரீதியில் உள்ளீடு எதையும் பெறாமல் கோதுகளைக் கட்டிக் கொண்டு அல்லாடுகிறார்கள் என்று தான் அர்த்தம்! இது எந்த மதத்திற்கும் பொருந்தும் ஆயினும், இந்த போலி விஞ்ஞானத்தை வைத்து முண்டு கொடுப்பது அதிகம் இந்து மதமே என்பதால் இது இந்து மதத்திற்கு அதிகம் பொருந்துகிறது!  

4 hours ago, tulpen said:

ராஜாராம் மோகன்ராய் அன்றைய இந்து மத  மூடப்பழக்கங்களை ஒழிக்க பாடு பட்டார்

கிறிஸ்துவத்தின் இறைவன், அவரின் மகன், புனித ஆவி வழிபாடு போன்றவற்றையும் நிராகரித்தவர், Percepts of Jesus என்ற நூலில் கிறிஸ்துவின் அற்புத செயல்களை சாத்தியமில்லை என்றும் நிராகரித்தவராம்.

சொல்ல மறந்திட்டன்.

Edited by Lara

29 minutes ago, Lara said:

கிறிஸ்துவத்தின் இறைவன், அவரின் மகன், புனித ஆவி வழிபாடு போன்றவற்றையும் நிராகரித்தவர், Percepts of Jesus என்ற நூலில் கிறிஸ்துவின் அற்புத செயல்களை சாத்தியமில்லை என்றும் நிராகரித்தவராம்.

சொல்ல மறந்திட்டன்.

அதை தானே நானும் எப்போதிருந்தே  சொல்லுகிறேன். எல்லா மதங்களும் மக்களை ஏமாற்ற படு பொய்களை கூறுகின்றன என்பது தானே எனது வாதம். கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து என்று எல்லாமே அப்படித்தான். ஆனால் எனது  மதம் எண்ணிலடங்கா மூடத்தனத்தையைம் புராண புரட்டுக்களையும் கொண்டுள்ளதை எப்படி என்னால் மறுக்கமுடியும். 

Edited by tulpen

19 minutes ago, tulpen said:

அதை தானே நானும் எப்போதிருந்தே  சொல்லுகிறேன். எல்லா மதங்களும் மக்களை ஏமாற்ற படு பொய்களை கூறுகின்றன என்பது தானே எனது வாதம். கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து என்று எல்லாமே அப்படித்தான். ஆனால் எனது  மதம் எண்ணிலடங்கா மூடத்தனத்தையைம் புராண புரட்டுக்களையும் கொண்டுள்ளதை எப்படி என்னால் மறுக்கமுடியும். 

உடன்கட்டையேறுதல் என்பதை உண்மையான இந்துமதம் ஆதரிக்கவில்லை என கூறி வாதாடி தான் உடன்கட்டையேறுதல் தேவையில்லை என்ற கருத்தை முன்வைத்தவர்.

1 minute ago, Lara said:

உடன்கட்டையேறுதல் என்பதை உண்மையான இந்துமதம் ஆதரிக்கவில்லை என கூறி வாதாடி தான் உடன்கட்டையேறுதல் தேவையில்லை என்ற கருத்தை முன்வைத்தவர்.

எத்தனை ஆயிரம் மூடத்தனம் இப்பவும் இருக்கிறது. நீங்க முடிந்து  போன ஒரு மூடப்பழக்கத்தொடு நிற்கிறீர்கள். அது உதாரணத்திற்கு மட்டும் சொல்லப்பட்டது. நடைமுறையில் உள்ள பல  மூடத்தனத்தை  இல்லாமல்  செய்ய உதவுவீர்களானால் அது  சிறப்பாக இருக்கும். 

12 minutes ago, tulpen said:

எத்தனை ஆயிரம் மூடத்தனம் இப்பவும் இருக்கிறது. நீங்க முடிந்து  போன ஒரு மூடப்பழக்கத்தொடு நிற்கிறீர்கள். அது உதாரணத்திற்கு மட்டும் சொல்லப்பட்டது. நடைமுறையில் உள்ள பல  மூடத்தனத்தை  இல்லாமல்  செய்ய உதவுவீர்களானால் அது  சிறப்பாக இருக்கும். 

உடன்கட்டையேறுதல் இந்துமத மூடப்பழக்கம் என நீங்கள் கூறியதால் தான் அது பற்றி எழுதினேன். அவர் அதை உண்மையான இந்துமதம் ஆதரிக்கவில்லை என கூறி தான் அதற்கெதிராக சட்டம் கொண்டுவர செய்தார்.

தூக்கு காவடியெடுக்கும் படி இந்துமதம் கூறவில்லை. அது மக்கள் தாமாக தமது நம்பிக்கை அடிப்படையில் செய்கிறார்கள்.

Edited by Lara

15 minutes ago, Lara said:

உடன்கட்டையேறுதல் இந்துமத மூடப்பழக்கம் என நீங்கள் கூறியதால் தான் அது பற்றி எழுதினேன். அவர் அதை உண்மையான இந்துமதம் ஆதரிக்கவில்லை என கூறி தான் அதற்கெதிராக சட்டம் கொண்டுவர செய்தார்.

தூக்கு காவடியெடுக்கும் படி இந்துமதம் கூறவில்லை. அது மக்கள் தாமாக தமது நம்பிக்கை அடிப்படையில் செய்கிறார்கள்.

அப்படியா அப்ப உலகிலேயே மிக அறிவியல்  பூர்வமான மதமான😂 இந்து மத பெரியோர்கள் அது தவறு எற்று மக்களுக்கு கூற வேண்டாமா? நான் அதை கூறியதற்காக என்னுடன் சண்டைக்கு வருகிறீர்களே? சுவஸ் ஆலயம் கடந்த வருடம் தீ மிதித்தலை ஆலய சார்பில் ஒழுங்கு செய்ததை கேள்விப்படவில்லையா? ஓ அது உண்மையான இந்து மதம் இல்லையோ? 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரில் தூக்குக்காவடியை கோவில் நிர்வாகத்தினர் நிறுத்தவில்லையாம். பாதுகாப்புப் படையினர்தான் நிறுத்தினராம்.

சிங்களப் படையினர் இவ்வாறு அடக்குமுறை செய்வது பற்றி அலசாமல் உடன்கட்டை ஏறுவது பற்றி ஏன் அலட்டவேண்டும்?

சிங்களப் படையினர் இருக்குமட்டும் உடன்கட்டை ஏறுவதை இந்துமதப் பண்பாடு என்று சொல்லி யாரும் செய்யமுடியாது. அவர்களின் அனுக்கிரகம் இருந்தால், முஸ்லிம் பெண்கள் அபயா அணிவதை நிறுத்தியது போன்ற பல மூடப்பழக்கங்களை பாதுகாப்புக் காரணங்களைக் காட்டியே நிறுத்திவிடலாம். 😎

 

 

2 minutes ago, tulpen said:

அப்படியா அப்ப உலகிலேயே மிக அறிவியல்  பூர்வமான மதமான😂 இந்து மத பெரியோர்கள் அது தவறு எற்று மக்களுக்கு கூற வேண்டாமா? நான் அதை கூறியதற்காக என்னுடன் சண்டைக்கு வருகிறீர்களே? சுவஸ் ஆலயம் கடந்த வருடம் தீ மிதித்தலை ஆலய சார்பில் ஒழுங்கு செய்ததை கேள்விப்படவில்லையா? ஓ அது உண்மையான இந்து மதம் இல்லையோ? 

நீங்கள் தூக்கு காவடியை இந்து மத காட்டுமராண்டித்தனம் என கூறி எழுதியிருந்தீர்கள். இந்து மதத்தில் தூக்கு காவடி எடுக்குமாறு கூறப்படாத போது அதை எவ்வாறு இந்துமத காட்டுமிராண்டித்தனம் என கூற முடியும் என்பது தான் என் கேள்வி.

மக்கள் தமது நம்பிக்கையின் அடிப்படையில் செய்யும் அனைத்திற்கும் மதத்தை காரணம் கூற முடியாது.

13 minutes ago, Lara said:

நீங்கள் தூக்கு காவடியை இந்து மத காட்டுமராண்டித்தனம் என கூறி எழுதியிருந்தீர்கள். இந்து மதத்தில் தூக்கு காவடி எடுக்குமாறு கூறப்படாத போது அதை எவ்வாறு இந்துமத காட்டுமிராண்டித்தனம் என கூற முடியும் என்பது தான் என் கேள்வி.

மக்கள் தமது நம்பிக்கையின் அடிப்படையில் செய்யும் அனைத்திற்கும் மதத்தை காரணம் கூற முடியாது.

அப்படி கூறப்பட வில்லை என்றால் அது அறியாமை என்று அதை நிறுத்த  ஏன் இந்து கோவில்கள் முயலவில்லை என்ற சிம்பிள்  அரிவரி கேள்விக்கு கூட நீங்கள் பதில் தரப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே. 

Edited by tulpen

1 minute ago, tulpen said:

அப்படி கூறப்பட வில்லை என்றால் அது அறியாமை என்று அதை நிறுதம ஏன் இந்து கோவில்கள் முயலவில்லை என்ற சிம்பிள்  அரிவரி கேள்விக்கு கூட நீங்கள் பதில் தரப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே. 

கடவுள் நம்பிக்கையுள்ளோர் நேர்த்தி வைத்து விட்டோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அதை செய்கிறார்கள். எனவே அதை நிறுத்த இந்து கோவில்கள் முயன்றிருக்காது.

1 minute ago, Lara said:

கடவுள் நம்பிக்கையுள்ளோர் நேர்த்தி வைத்து விட்டோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அதை செய்கிறார்கள். எனவே அதை நிறுத்த இந்து கோவில்கள் முயன்றிருக்காது.

அப்படி மூடத்தனத்தை மக்கள் செய்வதை ஊக்குவித்தால் தானே மத வியாபாரம் களை கட்டும். 

1 minute ago, tulpen said:

அப்படி மூடத்தனத்தை மக்கள் செய்வதை ஊக்குவித்தால் தானே மத வியாபாரம் களை கட்டும். 

மீண்டும் அதே புராணமா? 😀

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அது மூடத்தனம்.

கடவுள் நம்பிக்கையுள்ளோருக்கு அது மூடத்தனம் அல்ல.

1 minute ago, Lara said:

மீண்டும் அதே புராணமா? 😀

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அது மூடத்தனம்.

கடவுள் நம்பிக்கையுள்ளோருக்கு அது மூடத்தனம் அல்ல.

அறிவுள்ள மனிதர்களுக்கு அது மூடத்தனம். கருணை உள்ள கடவுள் என்று நீங்கள் நம்பும்  அந்த கற்பனைக் கதாபாத்திரம்  இது மூடத்தனம் என்றே கருதி அதை  விரும்பமாட்டார் என்பதை உணர  சாதாரண பொது அறிவுபோதும் . 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.