Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூரில் பாதுகாப்புக் கெடுபிடிகள்: திட்டமிட்ட கலாசார சீரழிவை உடன் நிறுத்தவேண்டும் – ஸ்ரீதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

S.Sritharan-MP-1.jpg

நல்லூரில் பாதுகாப்புக் கெடுபிடிகள்: திட்டமிட்ட கலாசார சீரழிவை உடன் நிறுத்தவேண்டும் – ஸ்ரீதரன்

நல்லூரில் இடம்பெறும் வரலாற்றில் இல்லாத பாதுகாப்புக் கெடுபிடிகள் மற்றும் திட்டமிட்ட கலாசாரச் சீரழிவை உடன் நிறுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “தமிழர்களின் வரலாற்றில் நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழா என்பது மிகப்பெரும் கலாசார அடையாளமாகவும். தமிழர்கள் ஒன்று கூடுகின்ற பெருந் திருவிழாவாகவும் காணப்படுகிறது.

இவ்வாறு நல்லூர் திருவிழாவின் வரலாற்றில் மக்களை உடல் ரீதியாக பரிசோதனை செய்து பெரும் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில் ஆலயத்துக்குள் அனுப்பிய வரலாறு இல்லை.

ஆனால் இம்முறை பல்வேறு கெடுபிடிகளும் மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.

குண்டு வெடிப்புக்களின் பின்னர் தற்போது நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மட்டத்திலும் அரசாங்கத் தரப்பிலும் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், தென்னிலங்கையில் இதுபோன்ற பரிசோதனைகளோ அல்லது கெடுபிடிகளோ இல்லை. ஆனால் வடக்கில் மாத்திரம் இவ்வாறான பரிசோதனைகள் எதற்காக எனக் கேட்கின்றேன்.

இவ்வாறு சோதனை நடவடிக்கைகளைச் செய்யுமாறு ஆலய நிர்வாகமோ அல்லது மாநகர சபையோ அல்லது நாங்கள் யாருமோ கேட்கவில்லை.

எனவே இது தொடர்பாக அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பும் மக்களை அசௌகரியப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தும் படி கேட்டுக்கொள்கின்றேன்” என்று தெரிவித்தார்.

http://athavannews.com/நல்லூரில்-பாதுகாப்புக்-க/

மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் குண்டுத்தாக்குதல் நடைபெற்று மக்கள் கொல்லப்பட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகளை குற்றம் சாட்டுவதும் இவர்கள் தான். ஈஸ்டர் தாக்குதல் போல் ஒரு தாக்குதல் மதவாதிகளால் மேற்கொள்ளப்படாது என்பதற்கு எந்த உத்தவாதமும் இல்லை என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nallur-Festival-Security-700x450.jpg

நல்லூர் திருவிழா சோதனை நடவடிக்கைகளை நிறுத்த முடிவு

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ காலத்தில் இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பாக விமா்சனங்கள் எழுந்துவரும் நிலையில், சோதனை நடவடிக்கைகளை நிறுத்தவுள்ளதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாதுகாப்பை உறுதிப்படுத்த ஸ்கானர் (metal detector) இயந்திரங்களைப் பொருத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வடக்கு ஆளுநரின் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது  கூறுகையில், “பாதுகாப்பு ஒழுங்குகள் எப்போதும் மக்களுடைய சுதந்திரத்தை பறிப்பதாகவே அமையும். இந்நிலையில் நல்லுார் கந்தசுவாமி ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பும் அவ்வாறானதே. இதனை மக்களும் ஆலய நிர்வாகமும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

எனவே வடக்கு மாகாண சபை ஊடாக 4 ஸ்கானர் இயந்திரங்களை குத்தகைக்குப் பெறுவதற்குத் தீர்மானித்துள்ளோம். இதனூடாக பக்தர்களை நிறுத்தி சோதனை செய்யவேண்டிய தேவையில்லை.

ஸ்கானர் இயந்திரம் (வெடிபொருட்கள், உலோக பொருட்களை கண்டறியும் கருவி) ஊடாக மக்களை அனுப்பினால் போதுமானதாக இருக்கும்.

இதற்கடையில் வேறு சிலரும் இவ்வாறு இயந்திரத்தைப் பொருத்த முயற்சிப்பதாக அறிகின்றோம். அது நல்ல விடயம். எவ்வளவு தேவையோ அதனை நாங்களும் பெற்றுக் கொடுக்கலாம்” என்று குறிப்பிட்டார்.

http://athavannews.com/நல்லூர்-திருவிழா-சோதனை-ந/

நல்லூர் முருகனுக்கு ஓர் அன்பு மடல்

 
நல்லூர்க் கந்தப் பெருமானுக்கு நமஸ்காரம்.  தங்களை வழிபாடு செய்வதற்காக கடந்த ஆறாம் திகதி தாங்கள் வீற்றிருக்கும் நல்லூர் திருப்பதிக்கு வந்தேன். கொடியேற்றத்தைக் கண்டு விட வேண்டும் என்பதுதான் என் ஒரே நோக்கம்.
 
ஆனால் இம்முறை ஆலயச் சூழலில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. எதற்காக என்பது எனக்குத் தெரியவில்லை. சீருடை தரித்த ஒருவர் என்னைச் சோதனையிட முற்பட்டார். நான் முருகனின் ஆள் என்றேன். முருகனின் ஆதரவாளர்களைத்தான் சேதனையிடுகிறோம் என்றார் அந்த சீருடை தரித்தவர்.
 
இஃது என்ன? ஆட்சி மாற்றம் ஏதும் ஆகியிருக்குமோ என்று பயந்தேன். சிலவேளை சூரர்கள் முருகனைத் தம் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட் டார்களோ என்ற ஏக்கமும் என்னைச் சூழ்ந்து கொண்டது.  நிலைமையை யாரிடமும் கேட்டறிய முடியவில்லை. சோதனை நடத்துபவர்களை மேற்பார்வை செய்கின்ற அதிகாரி ஒருவர் அவ்விடத்தில் நின்றார்.  அவரை அணுகி, ஐயா, நான் முருகனின் ஆதரவாளன். சூரனுக்கு எதிரானவன். என் னையேன் சோதிக்கிறீர்கள் என்று கேட்டேன்.
 
அவர் மெல்லிய சிரிப்புடன் நான் சூரன் தரப்பைச் சேர்ந்தவன் என்றார். நிலைமையைப் புரியமுடியவில்லை. திகைத்து நின்றேன். என் திகைப்பைப் பார்த்த அந்த அதிகாரி தானே குரல் கொடுத்தார். முன்பெல்லாம் நாங்கள் உங்களைச் சோதித்ததுண்டு. அது உங்களிடம் இருந்து எங்களைப் பாதுகாக்க. இப்போதும் நாங்கள் உங்களைச் சோதிக்கின்றோம். இது உங்களைப் பாதுகாக்க என்றார். இவ்வாறு அந்த அதிகாரி கூறியதும் என் குழப்பம் மேலும் அதிகரித்தது. சோதனை யிடுபவர்கள் அவர்கள். சோதிக்கப்படுபவர்கள் நாங்கள். அதிலும் சோதனை இரண்டு வகைப்படுகிறதாம். முன்பு எங்களைச் சோதித்தது தங்க ளைப் பாதுகாப்பதற்கு. இப்போது எங்களைச் சோதிப்பது எங்களைப் பாதுகாக்கவாம். 
 
இஃது எங்ஙனம் பொருத்துடையது. என் கேள்வி என்னைத் துளைத்துக் கொண்டது.
 
பரவாயில்லை சோதிக்கட்டும். எத்தனை சோதனைகளைத் தாண்டியவர்கள் நாங்கள்.  எங்களின் வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பெற்றவர்களே எங்களுக்கு சோதனை தரும்போது இதெல்லாம் ஒரு சோதனையா என்ன? தலையில் தொட்டு முழங்கால் வரையில் சோதனை முடிவுறுகிறது.  சோதனை முடிவுற்ற கையோடு வேகமாக நல்லூரானை நோக்கிச் செல்கிறேன்.  ஆலய முன்றலில் மணிமண்டபத்தில் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் என்னைப் பார்க்கிறார்.
 
அனுட்டான விதி பற்றிப் பேசுகிறார். சிவ தீட்சை பெற்றவர்கள் நீராடி திருநீற்றை நீரில் குழைத்து சிரசில், நெஞ்சில், தோளில், கையில், முழங்காலில் முக்குறிகளாக அணி தல் வேண்டும். ஓ! அனுட்டானம் பார்த்து வராததால்தான் அந்த ஆள் நமக்கு அனுட்டானம் செய்தாரோ. நமக்கு விதிக்கப்பட்டதை நாமே பின்பற்றினால் எல்லாம் சரியாகும் என்பதை முருகா நீ எமக்கு உணர்த்தி நின்றாய் போற்றி.
 
  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிக்கு  தேர்தலில் நிக்கிற பிளான் இருக்கும்...சில நேரம் கோத்தா போன்றவர்கள் தேர்தலில் வெல்வதற்காக தாமே குண்டு வைக்க கூடும்...அப்படி ஏதும் நடந்தால் மைத்திரிக்கு திரும்ப வர சான்ஸ் கிடைக்காது...எல்லாருக்கும் தங்கட அரசியல் சுய நலத்திற்காய் தமிழரை பயன் படுத்தினம்...இனி ஒரு உயிர்ப்பலி தமிழ் பகுதியில் நடக்காமல் முன்னெச்சரிக்கையாய் இருப்பது நல்லது அல்லவா 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.