Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

பெயரளவிலிலேயே மட்டும் இருக்கும் சிறப்புரிமைகளையும் இழப்பதையும் நாம் ஆதரிப்பதென்பது, எமக்கு வரக்கூடிய (நாம் இன்றுவரை இந்தியா மூலமாகக் கிடைக்கலாம் என்று நம்பும்) ஒரு சில சலுகைகளையும் இல்லாமல் ஆக்கிவிடாதா?

நீங்கள் கிந்தியாவின் அட்டூழியங்கள், காஷ்மீரின் இப்போது 370 ஐ நீக்கியது என்ற கோணத்தில் மட்டும் பார்க்கிறீர்கள்.

ஆனால், மோடியும், BJP உம இந்த முடிவை எடுத்து, வெளிப்படையாக அறிவிக்கவில்லை ஆயினும், வரலாற்றின் அடிப்படையில்.

காஷ்மீர் வரலாற்றை சுருக்கமாக பின்பு பார்க்கலாம்.

ஆனால், காஷ்மீரில் பிஜேபி செய்திருப்பது, அவரவர் பிரதேசங்களை அவரவர் நிர்வாகம் செய்யும் நிலையை அடைவதற்கு.

காஷ்மீரில் 4 பூர்விக இனங்கள், அவர்களின் பூர்விக பிரதேசத்தை கொண்டுள்ளார்கள்.

1) இ(கி)ந்திய காஸ்மீர்
2) ஜம்மு
3) லடாக்
4) பாகிஸ்தான் காஷ்மீர்

1) இ(கி)ந்திய காஸ்மீர்

சமகால வரலாற்றில், முஸ்லீம் தீவிரவாதம்  இ(கி)ந்திய காஸ்மீர்  இல் ஊடுருவி, 1980 களில் அங்கிருந்த இந்து பண்டிட்ஸ் எனப்படும் சைவ சமயத்தவரை துரத்தி விட்டது, இவர்கள் ஏறத்தாழ 600,000.

துரத்தப்பட்டவர்களின் சொத்துக்கள், காஷ்மீர் முஸ்லிம்கள் எடுத்து விட்டனர்.

இதுவும் , கிந்தியாவின் ராணுவப் பிடியை இறுக்கியதற்கு மிக முக்கியமான காரணம்.

ஆனாலும், துரத்தப்பட்டவர்களை ஹிந்தியா கவனிக்கவேயில்லை.

இந்த 370 ஐ வைத்து, காஷ்மீர் முஸ்லிம்கள்,  மற்ற இனங்கள், மற்றும் அவர்களின் பிரதேசத்தில் நிர்வாக உரிமையை அனுபவித்து வந்தனர்.

காஸ்மீர் உண்மையில் சைவ சமயத்தவரே  தொன்று தொட்டு பூர்விகமாக இருந்தனர். இவர்கள் காஸ்மீர் மொழியை உடையவர்கள். 

இப்போதும் காஷ்மீரில், காஷ்மீரி மொழியே வழங்குகிறது. இது டார்டிக் (DARDIC) எனும் வகையை சேர்ந்த இந்தோ ஆரியன்  மொழியாகும்.

1500 களில் ஆப்கனிஸ்தான் இல் இருந்து வந்த முஸ்லீம் ஆயுதக்க கும்பல்களின் படையெடுப்பால் (கவனிக்கவும் இவ்வாறே பாகிஸ்தான் ஆப்கான் பஸ்தூன் ஆயுதக்க கும்பல்களை அனுப்பியது முதலில்), காஸ்மீரிகள் பலவந்தமாக  இஸ்லாம் சமயத்திற்கு மாற்றப்பட்டனர். இஸ்லாம் சமயத்தை தழுவாவிட்டால், சிரச்சேதமே தெரிவாக இந்த ஆப்கானிஸ்தான் முள்சிம் ஆயுதக்க கும்பல்காளால் வழங்கப்பட்டது.

அப்படி மாற்றப்படாமல் தப்பிய சைவ இந்துக்களும், பின்பு வாய்ப்பு கிடைத்த பொது மீண்டும் சைவ மதத்தை தழுவியவர்களுமே இந்த காஸ்மீர் ஹிந்து பண்டிட்ஸ் என்போர்.

காஷ்மீரி சைவ இந்துக்கள் துரத்தப்படுவதற்கு முதல், 90% காஷ்மீரி முஸ்லிகள், 10% காஷ்மீரி சைவ இந்துக்கள், அதாவது காஷ்மீரி பண்டிட்ஸ்.  

காஷ்மீரி சைவ இந்துக்களே காஸ்மீரின் உண்மையான பூர்விக குடிகள். அதாவது, சைவத் தமிழர்களே இலங்கையின் பூர்விக குடிகள் போல.


தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கு  முஸ்லிம்கள், முழு காஷ்மீரையும் தமது  எனவும், தாமே நிர்வகிக்க வேண்டும் எனவும் உரிமை கோருகிறார்கள். இதற்கு, 370 முண்டு கொடுத்து நின்றது.

அதாவது,   கட்டுக் கதை  ஆரிய வழி    சிங்களமும்,  கட்டுக் கதை அரேபிய வழி முஸ்லிம்களும், தாமே இலங்கையின் பூர்விக குடிகள் தாமே, தமிழர்கள் வந்தேறிகள் என்று சாதிப்பது போல.


370 இ நீக்கியதன் மூலம், தற்போதைய நிலையில்  நிலையில், அவரவர் பிரதேசங்களை அவரவர் நிர்வகிப்பதற்கு பாதை திறந்து விட்டுள்ளது.   

இதை BJP இலங்கைத் தீவிற்கும் அறிவுறுத்தலாக, இந்த 370 ஐ நீக்கிய கையுடன், ராஜபக்ஸவிற்கு எழுதிய கடிதத்தில், இலங்கை தீவில் தொன்று தொட்டு சைவ சமயத்தவர்கள் இரு தனர் என்றும் , அதில் ஓர் பகுதியினர் பௌத்தத்திற்கு மாறியுள்ளனர் என்றும், இப்போதைய நிலையில் சைவ இந்துக்கள் அவர்களின் பிரதேசத்தில்(north east) ஆட்சி செய்வதற்கு உரிமை உள்ளவர்கள் என்றும் பொருள் பட கடிதத்தில் எழு தியுள்ளது. இத பற்றி சிங்களம் மூச்சு இல்லை. வழமையான, கீழ்த்தரமான கிந்தியவை பற்றிய நக்கல்களோ, நளினங்களோ சிங்களம் வெளிப்படுத்தவில்லை.

https://en.wikipedia.org/wiki/Exodus_of_Kashmiri_Hindus

https://vedicfeed.com/ancient-hindu-temples-of-kashmir/

https://en.wikipedia.org/wiki/Amarnath_Temple


2) ஜம்மு

ஜம்மு இல் உள்ளவர்கள் இந்து டோக்ராஸ் (Dogras), இவர்கள் பஞ்சாபியர்களுடன் வரலாற்று உறவு  கொண்டவர்கள். இவர்கலின் மொழி டோகிரி (Dogri). இந்தோ ஐரோப்பிய மொழியாகும்.

தற்போதையா நிலையில், ஜம்முவில் 67% இந்து டோக்ராஸ், மிகுதி,  பஞ்சாபி இந்துக்கள், மேற்கு பஞ்சாபில் இருந்து பிரிவின் பொது ஜம்முவிற்கு வந்தவர்கள், 1980 துரத்தப்பட்ட காஸ்மீரி இந்துக்களும் ஜம்முவில் உள்ளார்கள், சில மாவட்டங்களில் காஸ்மீரி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள்.

3) லடாக்

புவியியல் அடிப்படையில் காஷ்மீரின் மிகப் பெரிய, பாலைவனத் தமையான பிரதேசம். இங்கு உள்ளவர்கள் திபெத்திய இனத்தவர்கள், சமயத்தில் பௌத்தர்கள். சிறிய அளவு காஷ்மீரி முஸ்லிம்கள் இங்கு உள்ளனர்.

4) ) பாகிஸ்தான் காஷ்மீர்

ஏறத்தாழ, காஷ்மீரின் 1/3 புவிப்  பரப்புடையது.

இங்கு காஷ்மீரிகளை தவிர, பல்டிஸ்டான் (Baltistan ) எனும் இனம் தன பூர்விக பிரதேசத்தை கொண்டுள்ளது.


இந்த நான்கு வேவ்வேறு இனங்களின், பூர்விக நில பரப்புக்களை கொண்டதே இந்து மஹாராஜாவால் ஆட்சி செய்யப்பட்ட காஷ்மீர் ஆகும். இந்து மகாராஜாவின் முன்பு இப்பிரதேசங்களை சீக்கியார்களே ஆண்டனர். இதுவே ஜம்மு-காஸ்மீர் என்ற அரசு அமைந்ததன் வரலாறு.

லடாக்கும், ஜம்முவும் என்றைக்குமே முஸ்லீம் காஸ்மீரின் பகுதியாகவோ அல்லது ஆட்சியையோ ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்து மகாராஜா ஆட்சி அகன்றவுடன், ஜம்முவும், லடடக்கும் கி(இ)நதியாவின் பகுதியாக விரும்பியே இணைந்தன. ஏனெனில், அவர்களுடைய மொழி, கலாசாரம், சமயம், பூர்விங்க்ம் எல்லாமே தனித்துவமானதும், காஷ்மீர் முஸ்லிம்களளோடு தொடர்பில்லாததும்.

இதனாலேயே, முஸ்லீம் கஸ்மீறி ஆரம்பகால போராட்டம், இஸ்லாமியா காஷ்மீரிகள் என்ற அடையாளத்தை கொண்டிருந்தது.

தட்றபோதைய நிலைமையில், இந்த ஜம்மு, காஷ்மீர், லடாக் ஒன்றிப்பு, அதாவது 370 தேவையற்றதும், மேலாக ஓர் இனம் மற்ற இனத்தின் நிர்வாகத்தில், தயவில் இருப்பதற்கானா ஏதுக்களை செயற்கையாக வழிகோலுமாகவுள்ளது.

அதானல், தற்போது பிஜேபி எடுத்த முடிவான, 370 ஐ நீக்கியது, அதுவும் முஸ்லீம் காஷ்மீரிற்கு, துரத்தப்பட்ட ஹிந்து pandits ஐ பற்றி கரிசனை காட்டாமல், தனியான மாநிலமாக வழங்கபட்டது, வரலாற்று தவறை BJP திருத்தி உள்ளது என்றே எண்ணப்பட வேண்டும்

இன்னும் சிலவற்றை பின்பு எழுதுகிறேன்.

 

  • Replies 156
  • Views 18.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விசுகு said:

அது  என்   கனவு

உங்க‌ளின் க‌ன‌வு ஒரு நாள் ந‌ன‌வாக‌ட்டும் 😍😍🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நரி  மூளைக்கு முதலிடம் கொடுத்தலே உலக வெற்றிகள்  தரும்  பாடம்

 

2 hours ago, பையன்26 said:

எப்ப‌டியோ உந்த‌ நாடு நாச‌மாய் போய் இந்த‌ உல‌க‌ வ‌ர‌ ப‌ட‌த்தில் இருந்து இந்தியா என்ர‌ நாடு காணாம‌ல் போக‌னும்

 

2 hours ago, பையன்26 said:

வைக்கோ சொன்ன‌ மாதிரி நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ர‌ நாடு இருக்காது என்று  , 
அது ந‌ட‌ந்தா முத‌ல் ச‌ந்தோச‌ ப‌டுவ‌து ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் தான்

 

நரி மூளையின் படி இது மிகவும் கடினம்.

சிங்களம், கிந்தியாவை  தமிழர்களுடன் பகைக்க வைத்தது.  

சிங்களத்தை, கிந்தியவுடன் பகைக்க வைப்பது எமது 2ஆம் படிநிலை முனைவாக இருக்க வேண்டும்.

இதற்கு, கோத்த ஆட்சி வருவதே சிறந்த அரங்காக  இருக்கும், தமிழ்டர்ற்க்கு பாதிப்பாயினும்.  

கிந்தியாவில், பிஜேபி இருப்பது, களம் தானாகவே அமைந்தாயிற்று.

பிஜேபி இன் இந்த ராஜபக்ச விற்கான கடிதம், சில வேளைகளில் கிருஷ்ண தூதாக கூட இருக்கலாம்.

மலையாளிகளை, பிஜேபி விலத்தி வைத்திருப்பதற்கு, ஒர் பிரச்சார உத்தி - தந்தை மேனன் சீனாவை வடக்கில் கொண்டு வாந்தி நிறுத்தினார். மகன் மேனன் சீனாவை தெற்கில் நிறுத்தினார் என்பதை அடிக்கடி நினைவு படுத்துவது. 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித்,

மேலே விசுகு கோடிட்டதுதான் இப்போதைக்கு எமது அணுகுமுறையாக இருக்கவேண்டும். 

தனிப்பட்ட ரீதியில், இந்து மதவாத சிந்தனை உள்ளோர்களை தவிர பெரும்பாலான ஈழத்தமிழ் மக்கள் கஸ்மீரிகளின் பக்கமே என்பது என் அனுமானம்.

இஸ்ரேலும் ஆர் எஸ் எஸ் சும் ஒரே சிந்தனை உள்ளவர்கள். 

1. 2000 வருடங்களுக்கு முன் இஸ்ரேல் யூத பூமி. பின்னர் சிலுவை யுத்தங்களில் அது கிறீஸ்தவ/முஸ்லிம் அரசுகளிடையே மாறி, மாறி கைமாறி, அதன் பின் ஓட்டமான் ஆளுகைக்கு மத்திய கிழக்கு வந்தபின் அந்த நிலத்தின் ஆளுகை பன்னெடுங்காலமாக முஸ்லீம்கள் வசமிருந்தது. 1ம் உலக யுத்ததில், லாரண்ஸ் ஓப் அரேபியா உதவியுடன் அரபு புரட்சி நடந்து, அங்கிருந்து ஓட்டமான் (துருக்கி) அரசு அகற்றப்பட்டு அங்கே, யுகேயின் காபாந்து நிர்வாகம் அமைந்தது (protectorate). இதன் பின்னரே, 2ம் உலக யுத்த முடிவில் அதே மண்ணில் மீண்டும் இஸ்ரவேல் சிருஸ்டிக்கப் பட்டது.

இங்கே நடந்தது என்ன?

யூதரின் பார்வையில்- 2000 ஆண்டு வரலாற்று தோல்வியில் இருந்து மீண்டு - யூதர்கள் தமக்கென ஒரு நாட்டை அதே நிலத்தில் மீள அமைத்தனர்.

பலஸ்தீனரின் பார்வையில் - 2000 ஆண்டாக தாம் வாழ்ந்த நிலத்தை பால்வோர் ஒப்பந்தம் மூலம் ஆங்கிலேயே சதியுடன் யூதர்கள் பறித்து கொண்டனர்.

2. இதே கொள்கையைதான் மோடியும் எடுக்கிறார். கிபி 700 வரை கஸ்மீர் ஒரு இந்து தேசமே. ஆனால் தொடர் இஸ்லாமிய படை எடுப்புக்களால் இப்போ கஸ்மீர் பள்ளத்தாக்கு 97% முஸ்லீம் பகுதி ஆகி விட்டது. ஜம்மு இப்போதும் இந்து பெரும்பான்மை. லடாக் பெளத்த பெரும்பானமை.

இங்கே இந்துத்துவாவின் வாதம் - நாங்கள் 8ம் நூற்றாண்டில் இழந்த கஸ்மீரை மீட்கிறோம்.

கஸ்மீரிகளின் வாதம் - நாம் 1200 ஆண்டுகளாய் வாழ்ந்த சுயநிர்ணயத்தை கோருகிறோம்.

3. அவரவர்கு அவரவர் நியாயம். ஆனால் கஸ்மீரை 1947 இல் இந்தியா ஒரு தனிநாடாக அங்கீகரித்துளது. அதன் பின் ஒரு சர்வததேச ஒப்பந்தத்தை ராஜா ஹரிசிங்கின் கஸ்மீருடன் செய்து, அதன் படி கஸ்மீருக்கு சில சலுகைகளை வழங்கி இந்தியா காஸ்மீரின் இந்திய கட்டுப்பாட்டு பகுதியை தன்னோடு இணத்தது. இப்போ இவ்வாறு கஸ்மீரிகளுக்கு கொடுத்த வாக்கை காற்றில் பறக்க விட்டு இந்த சலுகைகளை இந்தியா நீக்கியுள்ளது. ஆனால் இதே மாதிரி, நாகலாந்து, சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்ட சிறப்புரிமை சலுகைகள் ரத்து செய்யப்படவில்லை. இது கஸ்மீரிகள் முஸ்லீம்கள் என்ற ஒரே காரணதுக்காக செய்யபட்ட செயல். இது 1200 வருச வரலாற்று சமன்பாட்டை மீள எழுதும் ஹிந்துதுவாவின் முனைப்பே அன்றி வேறில்லை.

பிகு: இந்திய பாக் பிரிவின் போது, தனி நாடாக அறிவிக்கப் பட்ட கஸ்மீரின் நிலப்பரப்பு இப்போ 5 ஆக பிரிக்கப் பட்டுளது.

1. இந்திய ஆக்கிரமிப்பு கஸ்மீர்( லடாக், கஸ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு)

2. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஸ்மீர் (மீர்பூர், முசபரபாத்)

3. ஜில்ஜிட் பாலிஸ்தான் - கஸ்மீரின் வட பகுதி. ஆப்கானின் வக்கான் காரிடார் (Wakkan Corridor) மற்றும் சீனாவுடன் தொடர்புள்ள பகுதி. இதை சத்தமில்லாமல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஸ்மீரில் இருந்து பிரித்து ஒரு தனி பாகிஸ்தானிய மாகாணமாக பாகிஸ்தான் அறிவித்து கொண்டுளது. இதனூடாகவே சீனா-பாகிஸ்தானை இணைக்கும், சீனாவின் புதிய பட்டுப்பாதை, கக்கோரம் நெடுஞ்சாலை போகிறது.

4. அக்சய் சின் - லடாக்கின் எல்லையோரமாக இருக்கும் பகுதி. தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில்.

5. Trans Kakoram tract அல்லது ஷாக்ஸ்காம் tract - உலகின் அதி உயரமான யுத்த பூமியான சியாச்சின் பனிச்சிகரத்துக்கு வடக்கே உள்ள பகுதி. முன்பு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்து பின், பாகிஸ்தானல் சீனாவுக்கு விட்டுக்கொடுக்கப் பட்டது.

 

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில்:

எமக்கு ஒரு விடிவெண்டால் அது இந்தியா சிதறுவதில் இருந்தே ஆரம்பமாகும். ஆனால் இதை நாம் இப்போதே சொன்னால், அடித்து நொருக்கி விடுவார்கள். யூதர்களை போல 2000 ஆண்டுகள் கூட காத்திருக்க நேரலாம். 

 

  • தொடங்கியவர்
11 minutes ago, goshan_che said:

தனிப்பட்ட ரீதியில், இந்து மதவாத சிந்தனை உள்ளோர்களை தவிர பெரும்பாலான ஈழத்தமிழ் மக்கள் கஸ்மீரிகளின் பக்கமே என்பது என் அனுமானம்.

கனம் கோட்டார், ச்சீ கோசான் அவர்களே,
மறுத்த தரப்பு விவாதத்தையும், அதாவது யூதர்கள் போன்று காஸ்மீர் இந்துக்களும் இழந்த நிலத்தை தான் இப்பொழுது  மீட்டிருக்கின்றார்கள் என்ற விவாதக்காரணத்தையும் உள்வாங்கி பார்த்தால் தீர்ப்பு மாறிவிடலாம்.

எமது வாதத்தையும் கருத்தில் கொள்வீர்கள் என நம்புகின்றோம் 🙂 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

எனது பார்வையில்:

எமக்கு ஒரு விடிவெண்டால் அது இந்தியா சிதறுவதில் இருந்தே ஆரம்பமாகும். ஆனால் இதை நாம் இப்போதே சொன்னால், அடித்து நொருக்கி விடுவார்கள். யூதர்களை போல 2000 ஆண்டுகள் கூட காத்திருக்க நேரலாம். 

 

இது தான் உண்மையும் கூட‌ பிரோ /
இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிரிந்தா ஒரு க‌ல்லில் இர‌ண்டு மாங்காய் ந‌ம‌க்கு /

முன்னால் யூகோசுலோபியா உடைந்த‌து போல் / 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய‌ன் என்று சொல்லி பெருமை ப‌ட‌ என்ன‌ இருக்கு , பெருத்த‌ அவ‌மான‌ம் தான் இந்திய‌ன் என்று சொன்னா /

எல்லாத்திலும் பின் நோக்கி போன‌ நாடு இந்தியா , ஊழ‌லில் முத‌லாவ‌து நாடு இந்தியா, ஒலிம்பிக் போன்ற‌ புக‌ழ் பெற்ற‌ விளையாட்டில் க‌ட‌சி இட‌த்தில் இந்தியா  , 
சுத‌ந்திர‌ இந்தியாவில் ம‌க்க‌ளின் அன்ராட‌ வாழ்க்கையை பாருங்கோ /

வ‌ட‌ நாட்டானின் ஆனுவ‌ம் ம‌ற்ற‌ மானில‌க் கார‌ங்க‌ள் த‌ங்க‌ளின் ஹிந்தி மொழிக்கு அடிமையாய் இருக்க‌னும் என்று /

த‌மிழ் நாட்டில் இருக்கிற‌ பெரும்பாலான‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு இந்தியா என்ர‌ ந‌ச்சு கூடார‌த்துக்கை இருந்து தாங்க‌ள் எவ‌ள‌வ‌த்தை இழ‌ந்து இருக்கிறோம் என்று கூட‌ தெரியாம‌ வாழுகின‌ம் /
ஆண்ட‌வ‌ர் தான் அந்த‌ ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌ சிந்திக்கிர‌ புத்தியை குடுக்க‌னும் / 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

கனம் கோட்டார், ச்சீ கோசான் அவர்களே,
மறுத்த தரப்பு விவாதத்தையும், அதாவது யூதர்கள் போன்று காஸ்மீர் இந்துக்களும் இழந்த நிலத்தை தான் இப்பொழுது  மீட்டிருக்கின்றார்கள் என்ற விவாதக்காரணத்தையும் உள்வாங்கி பார்த்தால் தீர்ப்பு மாறிவிடலாம்.

எமது வாதத்தையும் கருத்தில் கொள்வீர்கள் என நம்புகின்றோம் 🙂 

வக்கீல் அம்பனை அவர்களே 😂,

மேலே நான் சொல்லிவிட்டேனே 8ம் நூற்றாண்டிலும் அதன் பின் முகமது கஜினி போன்றோராலும் இந்துக்கள் வசமிருந்து முஸ்லீம்களிடம் போன நிலம்தான் காஸ்மீர். அதில் மாற்றுக் கருத்து இல்லை.    

ஆனால் யூதர்களுக்கும் கஸ்மீரிகளுக்கும் உள்ள வித்தியாசம் யாதெனில், ஓட்டமான் ஆக்கிரமிப்பின் பின் யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறினர்/துரத்தப் பட்டனர்.

ஆனால் கஸ்மீரிகள் அப்படியல்ல, குறிப்பாக பள்ளத்தாக்கில் உள்ளவர்கள், அவர்கள் இந்துக்கள், முஸ்லீம்களாக மாறியவர்கள். தைமூர், கஜினி, கோரி, பாபர் இப்படி படை கொண்டு வந்தோரும், அரேபியர்களும், இவர்களை முஸ்லீமாக்கிவிட்டார்கள். ஆகவே அவர்கள்தான் கஸ்மீரின் மண்ணின் மைந்தர்கள். அவர்களிடம் இருந்து, குஜராத்தி மோடியும், அமித்தும் கஸ்மீரை மீட்பதாக சொல்வதை, யூதர்கள் இஸ்ரேலை மீட்டதுடன் ஒப்பிட முடியாதல்லவா?

 

பிகு: ஆனால் இந்த லொஜிக்கின் படி பார்த்தால், காந்தாரியின் நாடானா கந்தஹார் (ஆப்கானிஸ்தான்) வரை மோடிஜி படை நடத்த வேண்டிவரும் 😂.

 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

ஆகவே அவர்கள்தான் கஸ்மீரின் மண்ணின் மைந்தர்கள். அவர்களிடம் இருந்து, குஜராத்தி மோடியும், அமித்தும் கஸ்மீரை மீட்பதாக சொல்வதை

முஸ்லீம் அல்லாத, காஷ்மீருடன் தொடர்பில்லாத மக்களை இணைத்து, காஷ்மீர் முஸ்லிமகளை சிறுபான்மை ஆக்கவில்லை.

35 ஐ எடுத்ததால் எல்லோருக்கும் வந்துள்ள பயமே தவிர, ஹிந்திய கட்டாயமான குடியேற்றம் செய்கிறதா என்பதை பொறுத்திருக்கிறது.

மற்றது, காஷ்மீரில் 370 வந்தபோது, 90% காணிகள் காஷ்மீர் இந்துக்களிடம் இருந்ததாகவும், அதனை பஞ்சாபிகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கிலேயே 370, 35 சரத்துக்கள் சேர்த்துக்கொள்வதற்கு கிந்தியா இணங்கியது என்பதுவே யதார்த்தமானது.

காஷ்மீரி முஸ்லிம்கள், ஏறத்தாழ 10% காணிகளையே 370 வந்தபோது வைத்திருந்தனர்.

வணிகமும், வர்த்தகமும் காஷ்மீரி இந்துக்கள் வசமே பெரும்பாலும் இருந்தது, 370 வந்த போது.  

பின்னர், காணி அதிகாரம் இருந்ததாலும், 1980 களில் காஸ்மீரி இந்துக்கள் துரத்தப்பட்டதன் விளைவாகவே, காஸ்மீரி முஸ்லிம்கள் பெருமளவில் காணிகளுக்கு உரிமையாளராக வர முடிந்தது  என்பதும் உண்மையாகவே  இருக்கிறது.             


முக்கியமாக, இந்த கொள்கையின் பரந்த யதார்த்தமானது, எமது தற்போதைய பிரச்னையுடன் ஒத்துப்போகிறது.

அதாவது, கிழக்கிலே தமிழர்களின் காணிகளை சிங்களமும், முஸ்லிம்களும் பங்கு போட்டுக்கொண்டிருப்பது, கல்லோயாவில் தொடங்கி, 1970 தொடக்கம் சிறிமமா / பதியுதீன் காலத்தில் தீவிரமடைந்து, இற்றைவரைக்கும் தொடர்வது.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kadancha said:

முஸ்லீம் அல்லாத, காஷ்மீருடன் தொடர்பில்லாத மக்களை இணைத்து, காஷ்மீர் முஸ்லிமகளை சிறுபான்மை ஆக்கவில்லை.

35 ஐ எடுத்ததால் எல்லோருக்கும் வந்துள்ள பயமே தவிர, ஹிந்திய கட்டாயமான குடியேற்றம் செய்கிறதா என்பதை பொறுத்திருக்கிறது.

மற்றது, காஷ்மீரில் 370 வந்தபோது, 90% காணிகள் காஷ்மீர் இந்துக்களிடம் இருந்ததாகவும், அதனை பஞ்சாபிகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கிலேயே 370, 35 சரத்துக்கள் சேர்த்துக்கொள்வதற்கு கிந்தியா இணங்கியது என்பதுவே யதார்த்தமானது.

காஷ்மீரி முஸ்லிம்கள், ஏறத்தாழ 10% காணிகளையே 370 வந்தபோது வைத்திருந்தனர்.

வணிகமும், வர்த்தகமும் காஷ்மீரி இந்துக்கள் வசமே பெரும்பாலும் இருந்தது, 370 வந்த போது.  

பின்னர், காணி அதிகாரம் இருந்ததாலும், 1980 களில் காஸ்மீரி இந்துக்கள் துரத்தப்பட்டதன் விளைவாகவே, காஸ்மீரி முஸ்லிம்கள் பெருமளவில் காணிகளுக்கு உரிமையாளராக வர முடிந்தது  என்பதும் உண்மையாகவே  இருக்கிறது.             


முக்கியமாக, இந்த கொள்கையின் பரந்த யதார்த்தமானது, எமது தற்போதைய பிரச்னையுடன் ஒத்துப்போகிறது.

அதாவது, கிழக்கிலே தமிழர்களின் காணிகளை சிங்களமும், முஸ்லிம்களும் பங்கு போட்டுக்கொண்டிருப்பது, கல்லோயாவில் தொடங்கி, 1970 தொடக்கம் சிறிமமா / பதியுதீன் காலத்தில் தீவிரமடைந்து, இற்றைவரைக்கும் தொடர்வது.

கடஞ்சா,

உங்கள் பதிவில் இருந்து எனக்கு எழுந்த கேள்விகள் பின்வருமாறு.

1. கஸ்மீரி இந்துக்கள் வெளியேற்றம் நிகழ்ந்தது 1988-1990 காலப்பகுதியில். வெளியேற்றம் பள்ளதாக்கில் மட்டுமே நிகழ்ந்தது. 370 வந்தது 1948(?). 1948 இல் 10% காணிகள்தான் கஸ்மீர்பள்ளதாக்கில், கஸ்மீரி முஸ்லீம்கள் வசம் இருந்தது என்பதற்கு நீங்கள் காட்டும் ஆதாரம் என்ன? இந்துக்கள் வெளியேற முன்னரே பள்ளத்தாக்கு முஸ்லிம் பெரும்பான்மை பகுதி, அதில் 10% மட்டுமே பெரும்பான்மையான மக்களிடம் இருந்தது என்பது, நம்பகமான தகவலாக தெரியவில்லை.

2. கஸ்மீரிய இந்துக்கள் வெளியேற்றம் என்றதும், அவர்கள் ஏதோ முழு மாநிலத்தையும் விட்டு வெளியேறியதாக அர்த்தமில்லை. பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் - ஏலவே இந்து பெரும்பான்மை பகுதியாக இருந்த ஜம்முவில் மீள்குடியேறி விட்டனர். ஆகவே கஸ்மீர் மாநிலத்தின் இந்துக்கள் அளவில் இது மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இவர்களுக்கு நிகழ்ந்தது, உள்ளக இடப்பெயர்வு. வெளியேற்றம் அல்ல.

3. பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறிய கஸ்மீரி இந்துக்களின் மொத்த எண்ணிக்கை 300,000 என்பதே, பக்கம் சாராதவர்களின் கணிப்பு. தற்போதைய கஸ்மீரின் மொத்த சனத்தொகை 7 மில்லியன். 90 இல் இது 5 மில்லியனாக இருந்ததாக ஒரு எடுகோளை வைத்தாலும், வெளியேற்றப் பட்ட இந்துக்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் குறைந்த (ஆனால் கணிசமான) சதவீதமே. இவர்களிடத்தில் பள்ளத்தாக்கில் இருந்த சொத்துக்களளை இவர்கள் பெரும்பாலானோர் விற்கவில்லை எனவும் அந்த சொத்துக்கள் சிதிலமாய் உள்ளன என்பதுமே நான் கேள்விப்பட்டது.

5. நடந்தது அநியாயமே என்றாலும் தம் அநியாயத்தை மறைக்க, இந்துதுவாவினரும், இந்தியாவும் கஸ்மீர் இந்துக்கள் உள்ளக இடெப்பெயர்வை இனச்சுத்தீகரிப்பு ரேஞ்சுக்கு தூக்கி பிடிப்பதும் வழமை. 

6. கஸ்மீர் பள்ளத்தாக்கில் 1948இலும், 1990இலும், இன்றும் கஸ்மீரி முஸ்லீம்களே அறுதிப் பெரும்பான்மை. அந்த மண் 8ம் நூற்றாண்டுக்கு முன் இந்துக்களாக இருந்த போதும் அவர்களுடையது. 8 ம் நூற்றாண்டில் இருந்து முஸ்லீம்களாக மாறிய பின்பும் அவர்களுடையதே. ஆகவே அவர்கள்தான் அந்த மண்ணின் மைந்தர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் 

என் மூளைக்கு எட்டினதை எழுதினேன். மற்றபடிக்கு கடல் வற்றி கருவாடு தின்ன வேண்டாமென்று சொல்லவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

6.

15 hours ago, goshan_che said:

5. நடந்தது அநியாயமே என்றாலும் தம் அநியாயத்தை மறைக்க, இந்துதுவாவினரும், இந்தியாவும் கஸ்மீர் இந்துக்கள் உள்ளக இடெப்பெயர்வை இனச்சுத்தீகரிப்பு ரேஞ்சுக்கு தூக்கி பிடிப்பதும் வழமை. 

6. கஸ்மீர் பள்ளத்தாக்கில் 1948இலும், 1990இலும், இன்றும் கஸ்மீரி முஸ்லீம்களே அறுதிப் பெரும்பான்மை. அந்த மண் 8ம் நூற்றாண்டுக்கு முன் இந்துக்களாக இருந்த போதும் அவர்களுடையது. 8 ம் நூற்றாண்டில் இருந்து முஸ்லீம்களாக மாறிய பின்பும் அவர்களுடையதே. ஆகவே அவர்கள்தான் அந்த மண்ணின் மைந்தர்கள். 


6. இதை ஒருவருமே குழப்பவில்லை.   

5. இனச்சுத்திகரிப்பு நடந்தது, நடக்கவில்லை என்பதற்கப்பால், காஸ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து ஜம்முவை பிரிக்கவில்லை.  ஆனால், அதற்காக லடாக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு நிர்வாகத்தின் கீழ் இருக்க வேண்டுமா?

அந்த அநியாயம் நடந்திருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் இந்து மதத்தவராக இருந்தும், அவர்கள் இன்னமும் அகதிகளாகவும், அலைபவர்களாகவும் இருந்தும், பிஜேபி பழி தீர்க்கும் வண்ணமாக நடக்கவில்லை, அதாவது, ஜம்முவை பிரிக்கவில்லை.

இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும். baltistan ஐ பிரித்து பாகிஸ்தான் தனது நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்த போது, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் மூச்சு கூட காட்டவில்லை.

எவர் எது சொன்னாலும், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பாகிஸ்தானின் செயலை மிக கடுமையாக கண்டித்திருக்க வேண்டும்.

இவ்வளவுக்கும் மத்தியில், கிந்தியா ஜம்மு-காஷ்மீர் என்பதை பிரிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

உங்கள் பதிவில் இருந்து எனக்கு எழுந்த கேள்விகள் பின்வருமாறு.

1. கஸ்மீரி இந்துக்கள் வெளியேற்றம் நிகழ்ந்தது 1988-1990 காலப்பகுதியில். வெளியேற்றம் பள்ளதாக்கில் மட்டுமே நிகழ்ந்தது. 370 வந்தது 1948(?). 1948 இல் 10% காணிகள்தான் கஸ்மீர்பள்ளதாக்கில், கஸ்மீரி முஸ்லீம்கள் வசம் இருந்தது என்பதற்கு நீங்கள் காட்டும் ஆதாரம் என்ன? இந்துக்கள் வெளியேற முன்னரே பள்ளத்தாக்கு முஸ்லிம் பெரும்பான்மை பகுதி, அதில் 10% மட்டுமே பெரும்பான்மையான மக்களிடம் இருந்தது என்பது, நம்பகமான தகவலாக தெரியவில்லை.

2. கஸ்மீரிய இந்துக்கள் வெளியேற்றம் என்றதும், அவர்கள் ஏதோ முழு மாநிலத்தையும் விட்டு வெளியேறியதாக அர்த்தமில்லை. பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் - ஏலவே இந்து பெரும்பான்மை பகுதியாக இருந்த ஜம்முவில் மீள்குடியேறி விட்டனர். ஆகவே கஸ்மீர் மாநிலத்தின் இந்துக்கள் அளவில் இது மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இவர்களுக்கு நிகழ்ந்தது, உள்ளக இடப்பெயர்வு. வெளியேற்றம் அல்ல.

3. பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறிய கஸ்மீரி இந்துக்களின் மொத்த எண்ணிக்கை 300,000 என்பதே, பக்கம் சாராதவர்களின் கணிப்பு. தற்போதைய கஸ்மீரின் மொத்த சனத்தொகை 7 மில்லியன். 90 இல் இது 5 மில்லியனாக இருந்ததாக ஒரு எடுகோளை வைத்தாலும், வெளியேற்றப் பட்ட இந்துக்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் குறைந்த (ஆனால் கணிசமான) சதவீதமே. இவர்களிடத்தில் பள்ளத்தாக்கில் இருந்த சொத்துக்களளை இவர்கள் பெரும்பாலானோர் விற்கவில்லை எனவும் அந்த சொத்துக்கள் சிதிலமாய் உள்ளன என்பதுமே நான் கேள்விப்பட்டது.

1, 3.

நானும் முதல் நம்பவில்லை தான். ஏனெனில், வரலாறாக ஒரு குறிப்புக்களும் இல்லை.

காஷ்மீரின் காணிகள் நிலச்சுவாந்தர், ஜமீன் போன்றோர்களிடமே இருந்தது. இவர்கள், காஷ்மீர் இந்துக்கள்.   

https://kashmirlife.net/costly-land-reforms-issue-16-vol-11-215417/

https://thewire.in/government/radical-land-reforms-key-sheikh-abdullahs-towering-influence-kashmir

செய்தியின் படி, 250,000 சாதி குறைவான (செய்தியின் படி) இந்துக்களும் தாம் பாவித்த காணிகளுக்கு உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.  

https://www.dailyo.in/politics/article-370-kashmiriyat-nehru-sheikh-abdullah-referendum-in-kashmir-kashmir-s-land-reforms/story/1/31905.html

இது இன்னுமோர் குறிப்பு.

https://nlsiumppblog.wordpress.com/2016/09/06/trajectory-of-land-reforms-in-jk-and-its-outcomes/

1950 இல், 250,000 காஷ்மீர் இந்துக்கள்,  செய்தியின் படி, மற்ற இந்துக்களை கணக்கில் எடுக்காமல்.

எனவே, 1980 - 1990 களில், 300, 000 நம்பும் படியாக இல்லை.   500, 000 - 600, 000 அண்ணளவாக சரியாக இருபதற்கே, குழந்தை இறப்பு வீதத்தையும் உள்ளடக்கி, வாய்ப்புக்கள் அதிகம். ஏனெனில், 1950 - 1990 வரையில், குழந்தைகள் 3 க்கு மேற்றப்பட்டே குடும்பங்கள் வளர்ந்தன. அதுவம் peasants இல், இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

 

2. துரத்தபட்டவர்களில், ஒரு தொகுதியினர் ஜம்முவில், ஆனால் அகதிகளாக. ஒரு தொகுதியினர் முற்றாக வெளியேறி விட்டார்கள்.  

 

கிந்தியா, வலுக்கட்டாயமாக குடியேற்றம் செய்யாதவிடத்து, ஜம்மு-காஷ்மீர் குடிப் பரம்பல், இனப் பரம்பலை மாற்றுவது மிகவும் கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்முடைய தற்போதைய பிரச்சனைக்கு (வடக்கு கிழக்கு இணைப்பு, எமது குடிப் பரம்பல் போன்றவை), பிஜேபி இந்த கொள்கையின் யதார்த்தில் ஒத்துப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

Kaanjcha,

நல்ல அருமையானதொரு உரையாடலை தொடங்கி விட்டு, விடுமுறையில் வந்துவிட்டேன். மன்னிக்கவும். விடுமுறை முடியவந்து நீங்கள் தந்த தரவுகளையும் படித்து விட்டு, பதிலிடுகிறேன். 

  • தொடங்கியவர்

தனி தமிழீழம் தனி காஸ்மீர் ?
ஏன் 2009இல் 40 உறுப்பினர்களை கொண்ட தி.மு.க. ஏன் அன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை ஆனால் இன்று ஏன் காசுமீருக்கு ஆகி செய்கின்றது ? 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/19/2019 at 9:36 PM, பையன்26 said:

எல்லாத்திலும் பின் நோக்கி போன‌ நாடு இந்தியா , ஊழ‌லில் முத‌லாவ‌து நாடு இந்தியா, ஒலிம்பிக் போன்ற‌ புக‌ழ் பெற்ற‌ விளையாட்டில் க‌ட‌சி இட‌த்தில் இந்தியா  , 
சுத‌ந்திர‌ இந்தியாவில் ம‌க்க‌ளின் அன்ராட‌ வாழ்க்கையை பாருங்கோ /

எமக்கு இருக்கும் ஆத்திரத்தில், மற்றும் எமது நோக்கங்களுக்கு எதிராக இருப்பவர்கைளயும், குறைத்து  மதிப்பிடக்கூடாது.

நீங்கள், கிந்தியா பற்றி எல்லாவற்றையும் சீர்துக்கிப் பாருங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

எமக்கு இருக்கும் ஆத்திரத்தில், மற்றும் எமது நோக்கங்களுக்கு எதிராக இருப்பவர்கைளயும், குறைத்து  மதிப்பிடக்கூடாது.

நீங்கள், கிந்தியா பற்றி எல்லாவற்றையும் சீர்துக்கிப் பாருங்கள்.

 

அண்ணா , ஜ‌ரோப்பாவில் இருக்கும் குட்டி நாடுக‌ள் அபிவிருத்து அடைஞ்சு முன்னேறிட்டு போராங்க‌ள் , 

இந்தியா என்ன‌த்தில் முன்னோரி இருக்கு என்று நீங்க‌ள் தான் என‌க்கு விள‌க்கி சொல்ல‌னும் , இந்தியாவின் காசின் வீழ்ச்சி அடையுது , அதோடு அந்த‌ நாட்டு ம‌க்க‌ளின் நிலையை பாருங்கோ நாட்டையும் பாருங்கோ , இந்தியா த‌லைந‌க‌ர‌மான‌ டெல்லி ஒரு குப்பை கூடார‌ம் அதோடு டெல்லியில் இப்ப‌வும் ம‌க்க‌ள் குடிசை வீட்டில் வாழ்கிறார்க‌ள் /

அணுகுண்டு வைச்சு இருப்ப‌து பெருமை இல்லை , பெருத்த‌ ஆவ‌த்து , சுத‌ந்திர‌ம் கிடைச்சு 70 வ‌ருட‌ம் தாண்டி விட்ட‌து , கோயில் வாச‌லில் பிச்சை எடுக்கின‌ம் ம‌க்க‌ள் ,ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ள் மூன்று நேர‌ சாப்பாடு சாப்பிடின‌மா இல்லை , எத்த‌னையோ கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌ம் ,
இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளின் ந‌ரி த‌ன‌ம் இருக்கும் வ‌ர‌ நாடும் முன்னேராது ம‌க்க‌ளும் ந‌ல்ல‌ நிலைக்கு வ‌ர‌ மாட்டின‌ம் /

உல‌கிலையே ஓட்டுக்கு காசு குடுத்து ஓட்டை ம‌க்க‌ளிட‌த்தில் இருந்து வாங்கி , நாட்டை நாச‌ம் செய்யும் அர‌சிய‌ல் வாதிக‌ள் ப‌ல‌ர் இந்தியாவில் / 

சைனா ம‌க்க‌ளோடு இந்திய‌ ம‌க்க‌ளை ஒப்பிட்டு பார்த்தா , இந்திய‌ ம‌க்க‌ளுக்கு அறிவு க‌ம்பி / 

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , நீங்க‌ள் நான் எழுதின‌துக்கு ப‌தில் அளியுங்கோ உங்க‌ளின் ப‌திவுக்கு நான் ப‌தில் அளிக்கிறேன் அண்ணா 

On 8/21/2019 at 4:12 PM, goshan_che said:

நல்ல அருமையானதொரு உரையாடலை தொடங்கி விட்டு, விடுமுறையில் வந்துவிட்டேன்.

விடுமுறை மகிழ்வுடன் கழிய வாழ்த்துக்கள். 😊

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Lara said:

விடுமுறை மகிழ்வுடன் கழிய வாழ்த்துக்கள். 😊

நன்றி💐

  • கருத்துக்கள உறவுகள்
On 8/22/2019 at 8:25 AM, பையன்26 said:

இந்தியா என்ன‌த்தில் முன்னோரி இருக்கு என்று நீங்க‌ள் தான் என‌க்கு விள‌க்கி சொல்ல‌னும் , இந்தியாவின் காசின் வீழ்ச்சி அடையுது , அதோடு அந்த‌ நாட்டு ம‌க்க‌ளின் நிலையை பாருங்கோ நாட்டையும் பாருங்கோ , இந்தியா த‌லைந‌க‌ர‌மான‌ டெல்லி ஒரு குப்பை கூடார‌ம் அதோடு டெல்லியில் இப்ப‌வும் ம‌க்க‌ள் குடிசை வீட்டில் வாழ்கிறார்க‌ள் /

 

 

On 8/22/2019 at 8:25 AM, பையன்26 said:

சுத‌ந்திர‌ம் கிடைச்சு 70 வ‌ருட‌ம் தாண்டி விட்ட‌து , கோயில் வாச‌லில் பிச்சை எடுக்கின‌ம் ம‌க்க‌ள் ,ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ள் மூன்று நேர‌ சாப்பாடு சாப்பிடின‌மா இல்லை , எத்த‌னையோ கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌ம் ,

On 8/22/2019 at 8:25 AM, பையன்26 said:

சுத‌ந்திர‌ம் கிடைச்சு 70 வ‌ருட‌ம் தாண்டி விட்ட‌து , கோயில் வாச‌லில் பிச்சை எடுக்கின‌ம் ம‌க்க‌ள் ,ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ள் மூன்று நேர‌ சாப்பாடு சாப்பிடின‌மா இல்லை , எத்த‌னையோ கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌ம் ,

 

On 8/22/2019 at 8:25 AM, பையன்26 said:

இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளின் ந‌ரி த‌ன‌ம் இருக்கும் வ‌ர‌ நாடும் முன்னேராது ம‌க்க‌ளும் ந‌ல்ல‌ நிலைக்கு வ‌ர‌ மாட்டின‌ம் /

உல‌கிலையே ஓட்டுக்கு காசு குடுத்து ஓட்டை ம‌க்க‌ளிட‌த்தில் இருந்து வாங்கி , நாட்டை நாச‌ம் செய்யும் அர‌சிய‌ல் வாதிக‌ள் ப‌ல‌ர் இந்தியாவில் / 

சைனா ம‌க்க‌ளோடு இந்திய‌ ம‌க்க‌ளை ஒப்பிட்டு பார்த்தா , இந்திய‌ ம‌க்க‌ளுக்கு அறிவு க‌ம்பி / 

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , நீங்க‌ள் நான் எழுதின‌துக்கு ப‌தில் அளியுங்கோ உங்க‌ளின் ப‌திவுக்கு

நீங்கள் சொல்லிய எல்லாமும்,  மேலதிகமாக சொல்லாமல் விட்டதையும் (உங்களின் எழுத்துப்படி) இருந்த போதும், ஈழத்தமிழர்களின் மிகவும் வலிமையன, அதி உச்ச திறனுள்ள சக்தியான விடுதலைப் புலிகள், வரலாற்றில் தமது வலிமையில்  அதி உச்ச நிலையிலும், கிந்தியாவை  பெருந்தன்மையாக இருக்கும் படி வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள்.

வரலாற்றில் விடுதலைப் புலிகள் தமது வலிமையில்  அதி உச்ச நிலையிலும், சுந்ததிர  தமீழீழ தனியரசை பிரகடனம் செய்ய முன்வரவில்லை.

விடுதலைப் புலிகள், கிந்தியாவைப் பொறுத்த வரை, வேண்டிக் கேட்டதும், விடுதலைப் புலிகளால் சர்வ  சாதாரணமாக  செய்யக் கூடிய சுதந்திர  தமீழீழ தனியரசை பிரகடனம் செய்யாமல் விட்டதிற்கும்  ஆனா retrospective thought space இல் உங்களின் ஹிந்தியா  பற்றிய மதிப்பீட்டிட்ற்கு பதில் இருக்கிறது  என்றே எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அரபு நாடுகளும் பாகிஸ்தானும் இலங்கை அரசை ஆதரித்தத சூழலில்  பலஸ்தினிய அமைப்புகளோ காஸ்மீர் மக்கள் அமைப்புகளோ இறுதி யுத்தத்தில் இனக்கொலை சூழலில்கூட ஈழத் தமிழர்களை ஆதரிக்கவில்லை. அதன் அர்த்தம் அவர்களுக்கு எங்கள்மீது அனுதாபம் இருந்திருக்காதென்பது அல்ல. அதன் அர்த்தம் அவர்களுக்கு புவிசார் அணிகள் தொடர்பான தெளிவும்  அது சார்ந்த தங்கள் எதிர்காலம் தொடர்பான பொறுப்புணர்வும் ராஜதந்திரமும் இருந்தது என்பதுதான்.

காஸ்மீர் பிரச்சினை தொடர்பாக ஈழத் தமிழர் எவ்வாறு நிலைபாடு எடுக்க வேண்டுமென்கிற செயல்பாட்டு முறைமையை ஈழத் தமிழர்கள் காஸ்மீரிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.  

On 8/15/2019 at 9:53 PM, Kadancha said:

காஸ்மீரிகள் முதலில் ஆரம்பித்தது முஸ்லீம் என்ற (மத) அடையாளத்துடன். இது நிச்சயமாக, பாகிஸ்தானுடன் இணைவதை (அப்படி இல்ல விட்டாலும்) என்ற புரிதலே. ஏனெனினுள் ஹிந்தியா பன்முகத்தன்மை என்கிறது, பாக்கிதான் முஸ்லீம் என்கிறது.

ஷேக் அப்துல்லா ஆரம்பத்தில் முஸ்லிம் என்ற மத அடையாளத்துடன் போராட்டத்தை ஆரம்பித்த போது பாக்கிஸ்தான் என்ற நாடு இல்லை.

மன்னர் ஹரிசிங்கின் நிலப்பிரபுத்துவ கொடுங்கோலாட்சிக்கு எதிராகவும் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தவர். ஹரிசிங்கின் ஆட்சியில் முஸ்லிம் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். ஆரம்பத்தில் மக்கள் இயக்கமாக இருந்து பின் “அனைத்து ஜம்மு மற்றும் காஷ்மீர் முஸ்லிம் மாநாட்டு கட்சி” உருவாக்கப்பட்டது. இதை மதசார்பற்று மாற்றும் நோக்கில் முஸ்லிம் என்ற பெயரை நீக்கி 1939 இல்“ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி” என மாற்றினார். மன்னராட்சி நீங்கி மக்களாட்சி வரவேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.

1947 இல் தான் பிரிட்டிஷ் இந்தியா பிரிந்து முஸ்லிம்களை அதிகமாக கொண்ட பகுதி பாக்கிஸ்தான் என்றும் இந்துக்களை அதிகமாக கொண்ட பகுதி இந்தியா என்றும் உருவானது. அத்துடன் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலையும் கிடைத்தது. அந்நேரம் ஏனைய சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைவதா பாக்கிஸ்தானுடன் இணைவதா அல்லது தனிநாடாக இருப்பதா என்பதை அவர்களை முடிவு செய்யும்படி ஆங்கிலேயர்கள் கூறினார்கள். அந்நேரம் காஷ்மீர் தனிநாடாக இருக்க தான் விரும்பியது. 

பின்னர் தான் இந்திய இராணுவ உதவியை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவுடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டது. அதன் பின்னான இந்தியாவின் குளறுபடிகள் தெரிந்ததே.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

ஷேக் அப்துல்லா ஆரம்பத்தில் முஸ்லிம் என்ற மத அடையாளத்துடன் போராட்டத்தை ஆரம்பித்த போது பாக்கிஸ்தான் என்ற நாடு இல்லை.

மன்னர் ஹரிசிங்கின் நிலப்பிரபுத்துவ கொடுங்கோலாட்சிக்கு எதிராகவும் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தவர். ஹரிசிங்கின் ஆட்சியில் முஸ்லிம் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். ஆரம்பத்தில் மக்கள் இயக்கமாக இருந்து பின் “அனைத்து ஜம்மு மற்றும் காஷ்மீர் முஸ்லிம் மாநாட்டு கட்சி” உருவாக்கப்பட்டது. இதை மதசார்பற்று மாற்றும் நோக்கில் முஸ்லிம் என்ற பெயரை நீக்கி 1939 இல்“ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி” என மாற்றினார். மன்னராட்சி நீங்கி மக்களாட்சி வரவேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.

1947 இல் தான் பிரிட்டிஷ் இந்தியா பிரிந்து முஸ்லிம்களை அதிகமாக கொண்ட பகுதி பாக்கிஸ்தான் என்றும் இந்துக்களை அதிகமாக கொண்ட பகுதி இந்தியா என்றும் உருவானது. அத்துடன் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலையும் கிடைத்தது. அந்நேரம் ஏனைய சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைவதா பாக்கிஸ்தானுடன் இணைவதா அல்லது தனிநாடாக இருப்பதா என்பதை அவர்களை முடிவு செய்யும்படி ஆங்கிலேயர்கள் கூறினார்கள். அந்நேரம் காஷ்மீர் தனிநாடாக இருக்க தான் விரும்பியது. 

பின்னர் தான் இந்திய இராணுவ உதவியை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவுடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டது. அதன் பின்னான இந்தியாவின் குளறுபடிகள் தெரிந்ததே.

நீங்கள் எழுதியவை facts.

இதை, நான் எழுதியதற்கு  பதிலாக ஏன் எழுத வேண்டும்?

அதன் மூலம் உங்கள் எண்ணம் என்ன?

 

2 hours ago, Lara said:

1947 இல் தான் பிரிட்டிஷ் இந்தியா பிரிந்து

ஒரே ஒரு திருத்தம், உத்தியோக பூர்வமாக இந்தியா பிரிந்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.