Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் இன்று

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் இன்று

வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னனான பண்டார வன்னியன் இலங்கையில் பிரித்தானிய காலனித்துவத்தை எதிர்த்துப் போராடி மடிந்தவராவார்.இவரின் திறமை மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது என 1782இல் லூயி என்கிற டச்சு ஆட்சியாளர் ஒருவர் எழுதிய நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இத்தகைய மாபெரும் வீரத்தினை இந்த மாவீர மன்னனை தவிர்த்து உலகில் வேறொரு அரசனிடமும் கண்டதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளமை இவரின் வீரத்திற்கு சான்றாகும்.இந்நிலையில் வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் நினைவுகூறப்பட்டது.வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

காலை 8.15மணிக்கு வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு, ஜனாதிபதி சட்டத்தரணியும் அவரது சிலை மாவட்ட செயலகத்தில் அமைவதற்கு காரணமாகவிருந்தவருமான மு.சிற்றம்பலம் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து நகரசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்பினரும் சிலைக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் தமிழ்மணி அகளங்கனால் நினைவுரையும் நிகழ்த்தப்பட்டது.

இதனையடுத்து காலை 9.30 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து நினைவுப்பேருரையை மூத்த ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை நிகழ்தியதுடன், உரையோவியத்தை எழுத்தாளர் தமிழருவி த.சிவகுமாரன் வழங்கியிருந்தார்.இந்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறீஸ்கந்தராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநோதரலிங்கம், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.வவுனியா நகரசபையும் பண்டாரவன்னியன் விழாக்குழுவும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.(15)Vanniyan-1-720x480Vanniyan-2-720x480

 

 

http://www.samakalam.com/செய்திகள்/வன்னி-இராச்சியத்தின்-இறு/

5.15 இல் “பண்டார வன்னியனின் வாரிசல்லவா....”

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவை சேனாதிராசா கட்டாயம் இதுக்கு போயிருக்கவேணும்.

20 hours ago, குமாரசாமி said:

மாவை சேனாதிராசா கட்டாயம் இதுக்கு போயிருக்கவேணும்.

பண்டாரவன்னியனை யார் சுட்டுக்கொன்றது😁 என்ட உண்மை தெரியாமல் மாவை அங்க போகமாட்டார்!

’வன்னி மண் அடங்கிவிட்டதாக தப்புக்கணக்குப் போடாதீர்கள்’

-செ.கீதாஞ்சன்

வன்னி மண் அடங்கிவிட்டதாக யாரும் தப்புக்கணக்குப் போடாதீர்களெனத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், இன்று கொக்கரித்துக்கொண்டு பழைய இருண்ட யுகத்தைக் எடுத்துக்கொண்டு வர சிலர் துடித்துக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.

ஒட்டுசுட்டான் – கற்சிலைமடுவில், நேற்று (25) நடைபெற்ற மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இறுதிப் போரின் போது, தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனிப்பு செய்தார்களெனவும் ஆனால் அவர்கள் அடிமண்டியிட்டு அடங்கிப்போகவில்லையெனவும் கூறினார்.

எனவே, வன்னி மண் அடக்கிவிட்டதாக யாரும் தப்புக்கணக்கு போடாதீர்கனெவும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், எது எப்படி இருந்தாலும், தேர்தல்களில், தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லையெனத் தெரிவித்த அவர், எனவே, பண்டாரவன்னியனின் வரலாறுகளை இல்லாமல் செய்வதற்காக எத்தனையோ மாற்றங்கள் தற்போது அரசியல் ரீதியில் நடந்துகொண்டிருப்பதாகவும் கூறினார்.

http://www.tamilmirror.lk/வன்னி/வன்னி-மண்-அடங்கிவிட்டதாக-தப்புக்கணக்குப்-போடாதீர்கள்/72-237337

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Rajesh said:

பண்டாரவன்னியனை யார் சுட்டுக்கொன்றது😁 என்ட உண்மை தெரியாமல் மாவை அங்க போகமாட்டார்!

  இனிமேலும் ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு எண்டு உசுப்பேத்தி அப்பாவியளை பலிகுடுக்காமல்  பாத்துக்கொள்ள வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

  இனிமேலும் ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு எண்டு உசுப்பேத்தி அப்பாவியளை பலிகுடுக்காமல்  பாத்துக்கொள்ள வேணும்.

ஓம் ஓம் உண்மைதான்  அதுக்கிடையில் விபத்தில கனபேர் செத்துபோயிடுவானுகள் போல இருக்கு

Edited by தனிக்காட்டு ராஜா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.