Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`நிறைவான சொத்து... முறையான வரி... சிறிய குடும்பம்!' - ப.சிதம்பரம் குடும்பத்தினர் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு எதிராக ஓர் ஆதாரத்தைக் கொடுக்க முடியுமா என அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் சவால் விடுத்திருக்கிறார்கள்.

P Chidambaram

P Chidambaram ( Twitter

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளின் விசாரணையை ப.சிதம்பரம் எதிர்கொண்டு வருகிறார். சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு மேலாக முன்ஜாமீன் பெற்றுவந்த சிதம்பரத்துக்குக் கடந்த 20-ம் தேதி முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, டெல்லி ஜோர்பார்க் இல்லத்தின் சுவர் ஏறிக் குதித்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அவருக்கான 5 நாள்கள் காவல் முடிவடைந்த நிலையில், மேலும் 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவர், தற்போது சி.பி.ஐ கஸ்டடியில் இருக்கிறார். இந்த நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை கைது செய்ய நாளை (28.8.2019) வரை தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

இந்த நிலையில், ஊடகங்கள் ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டு வருவதாக ப.சிதம்பரம் குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,``ப.சிதம்பரம் குறித்து பரப்பப்படும் தகவல்கள் பொய்யானவை. உண்மை ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும்வரை, அவர் நிரபராதியாகவே கருதப்பட வேண்டும்.

பல நாடுகளில் சொத்துகள், வங்கிக் கணக்குகள் இருப்பதாகக் கூறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. ஏறக்குறைய 50 ஆண்டுகளாக ப.சிதம்பரம் பொதுவாழ்வில் இருக்கிறார். இதன்மூலம் அவருக்குக் கிடைத்த நற்பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது. நிறைவான சொத்துகளைக் கொண்டு, முறையாக வருமானவரி செலுத்தும் சிறிய குடும்பம் நாங்கள். வெளிநாடுகளில் சொத்துகள், பல்வேறு வங்கிக் கணக்குகள், போலி நிறுவனங்களை வைத்திருக்கிறோம் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை. ஆதாரமற்ற இந்தக் குற்றச்சாட்டுகள் கட்டுக்கதைகளே. ஒருநாள் இவையனைத்தும் உண்மை இல்லை என்பது நிரூபிக்கப்படும். இவை குறித்த ஓர் ஆதாரத்தையாவது அரசால் காண்பிக்க முடியுமா?'' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

https://www.vikatan.com/government-and-politics/politics/p-chidambarams-family-releases-statement-about-allegations

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்திடம் உள்ள சொத்து விவரங்களை... கேரளா தொலைக்காட்சி வெளியிட்டது.

சென்னையில் மட்டும் 12 வீடுகள், 40 மால்கள், 16 தியேட்டர்கள், 300 ஏக்கர் நிலம், மற்றும் 3 அலுவலகங்கள். இந்தியாவிலும், வெளி நாட்டிலும் சேர்த்து 500 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனைகள். 
ராஜஸ்தானில் 2000 ஆம்புலன்ஸ்கள். ஆப்பிரிக்காவில் குதிரைப்பண்ணை. இது ஒரு சிறு பிசிறு மட்டுமே மீதி உள்ள சொத்து விவரங்களை காணொளியில் காணுங்கள்.

(கருத்தும்,  காணொளியும்...   மீள் பதிவு. )

சாத்தான்... குடும்பம், வேதம் ஓதுகின்றது. 
சிதம்பரத்தின்... குடும்பங்கள், அடித்த கொள்ளைகள்... கருணாநிதி குடும்பத்துக்கு நிகரானது.   சில மட்டுமே... வெளியில் வந்துள்ளது. 🤬
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Quote

நிறைவான சொத்து... முறையான வரி... சிறிய குடும்பம்!' - ப.சிதம்பரம் குடும்பத்தினர் அறிக்கை...

அண்டப்புளுகு...

மக்களிடம் நிதி உதவ கோரினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

சிதம்பரம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் நிர்வாணமாக காட்சி தருகின்றது !

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ampanai said:

மக்களிடம் நிதி உதவ கோரினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

சிதம்பரம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் நிர்வாணமாக காட்சி தருகின்றது !

உண்மைதான்.... ஜெயலலிதா சிறைக்கு சென்ற போதும், 
கருணாநிதி சிறைக்கு சென்ற போதும்....
தமிழகமே... கொந்தளிப்பு நிலையில், இருந்தது.

சிதம்பரம்.... சிறைக்கு போய்,  7 நாட்களாகியும்...
ஒரு,  அசு மாத்தத்தையும்....   தமிழகத்தில் காணவில்லை.
அவரது கட்சி   காங்கிரசும்.... கைகழுவி விட்டது, போலுள்ளது. 

இவ(ர்)ன்,  இன்னும்...  பத்து வருடங்கள் சிறையில் இருந்தால் தான், 
ஈழத்ததமிழருக்கு செய்த... சகுனி வேலையின் செயலின்...  எனது ஆத்திரம் தீரும்.

  • கருத்துக்கள உறவுகள்

390m68.jpg

வாங்க ஏழைகளா வாங்க..

டிஸ்கி:

1 hour ago, பிழம்பு said:

நிறைவான சொத்துகளைக் கொண்டு, முறையாக வருமானவரி செலுத்தும் சிறிய குடும்பம் நாங்கள்.

சத்தியமா.. எனக்கு வாய் வழியா சிரிப்பு வரல..😂

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ் நாட்டில் மிக‌ பெரிய‌ ப‌ண‌க்கார‌ர்க‌ள் , அர‌சிய‌ல் வாதிக‌ள் தான் , ஊழ‌ல் ம‌ற்றும் பிராட்டு த‌ன‌ம் செய்து கோடிஸ்வ‌ர‌ர்க‌ள் ஆகின‌வை /

நாட்டு ம‌க்க‌ள் ஒரு நாளுக்கு கூலி வேலைக்கு போனா 100ரூபாய் ச‌ம்ப‌ள‌ம் எடுக்கிர‌ ம‌க்க‌ளும் இருக்கின‌ம் 😁😉

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.