Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழு விரைவில் டெல்லி பயணம்

Featured Replies

TNA-Trio2.jpg?itok=HqCnxIPu

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளது. 

இதன்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமாக இந்திய பிரதமருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.  

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாலைதீவுக்கு சென்றுவரும் வழியில் நான்கு மணித்தியால அவசர விஜயமொன்றை இலங்கைக்கு மேற்கொண்டிந்தார். இதன்போது ஜனாதிபதி, பிரதமர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.  

இது குறுகிய விஜயமாக இருந்தமையால் கூட்டமைப்புடன் சினேகபூர்வமான சந்திப்பொன்றை மாத்திரமே இந்திய பிரதமரால் நடத்த முடிந்துள்ளதுடன், விரிவான பேச்சுக்களை நடத்த புதுடெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்து சென்றிருந்தார்.  

அதன் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், சித்தார்த்தன் உட்பட பலர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். 

இந்தியப் பிரதமரிடம், தேசிய பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு அளித்த உறுதிப்பாட்டை பேணுவதை உறுதி செய்வதில் இந்தியா இன்னும் தீவிரமான பங்கை வகிக்க வேண்டும். தேசிய பிரச்சினைக்கு இலங்கை இன்னும் தீர்வை வழங்கவில்லை என்ற உண்மை குறித்து கூட்டமைப்பு ஆணித்தரமாக எடுத்துரைக்கவுள்ளதாக அறிய முடிகிறது.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

https://www.thinakaran.lk/2019/08/31/உள்நாடு/39575/தமிழ்-கூட்டமைப்பு-பிரதிநிதிகள்-குழு-விரைவில்-டெல்லி-பயணம்

  • தொடங்கியவர்

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 2 பà¯à®°à¯, à®à®°à¯

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லியில் முகாமிடும் மகிந்த, சம்பந்தன், மனோ, டக்ளஸ், ஹக்கீம், றிசாத்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லி செல்லவுள்ள அதே காலப்பகுதியில் இந்திய அரசின் அழைப்பின் பேரில், இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பல கட்சி குழுவை புதுடெல்லி வருமாறு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 9ஆம் நாள் தொடக்கம் 14ஆம் நாள் வரை, 10 பேர் கொண்ட சிறிலங்காவின் பல கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் புதுடெல்லியில் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்தக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இ.ரா.சம்பந்தன், அவை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கூட்டு எதிரணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

இந்தியத் தலைவர்களுடன் இந்தக் குழு நடத்தவுள்ள பேச்சுக்களின் போது, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும் இந்திய தரப்புக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லியில் வரும் 12ஆம் நாள் நடைபெறும் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றவுள்ளார்.

அவர் வரும் 11ஆம் நாள் புதுடெல்லி செல்லவுள்ளார். அங்கு 3 நாட்கள் தங்கியிருப்பார்.

மகிந்த ராஜபக்ச புதுடெல்லியில் தங்கியிருக்கும் தருணத்திலேயே சிறிலங்காவின் பல கட்சி நாடாளுமன்றக் குழுவும் அங்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://mulakkam.com/archives/1301

  • தொடங்கியவர்

"இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பல கட்சி குழுவை புதுடெல்லி வருமாறு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது"

இருதரப்பு விவகாரங்கள் ? அவை என்னவாக இருக்கும் ? 

ஆனால், அவை நிச்சயமாக இவையாக இல்லை

  • தமிழர் தரப்பின் 13ஆம் சட்ட திருத்தத்தின் கீழான அரசியல் தீர்வு 
  • தமிழக மீனவர்கள் விவகாரம் 
18 minutes ago, nunavilan said:

இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும்

தமிழினப் படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுக்கும் கைக்கூலிக் கும்பல்களின்  தலைவர்கள் சிலர். இதில் சித்தார்த்தன், அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆனந்தசங்கரி, தொண்டமான் போன்ற நீண்டகால எடுபிடிக்கள் அடங்கவில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதக் கும்பலிடம் போதியளவு பணம் இல்லைப்  போலும்.

23 minutes ago, nunavilan said:

இந்தக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இ.ரா.சம்பந்தன்,

இங்கே இவரை தமிழினத்தின் எதிர்க்கட்சித் தலைவராக,  தமிழினப் படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுக்கும் கைக்கூலிக் கும்பல்களின் தலைவராக குறிப்பிட்டுள்ளனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன், சுமந்திரன், மாவை எல்லாம்... இவ்வளவு காலமும் பேச்சு வார்த்தை நடத்தி,
ஒரு சிறிய  விடயத்தை கூட... தமிழ் மக்களுக்கு பெற்றுக்  கொடுக்க திறமை  அற்றவர்கள்.
பிறகெதற்கு...  ஊர் சுத்திப் பார்க்கவா... டெல்லிக்கு, போகிறார்கள். 

உள்ளூரிலேயே.... உழவு செய்ய, லாயக்கில்லாத  மாடு, 
வெளியூர் போய் உழவு செய்யும்... என்று எதிர்பார்ப்பது, முட் டாள்  தனம். 

அடக்கருமமே, இன்னும் இந்த கோஷ்டி டெல்லி போகேலையோ?
மோடி சொறிலங்காவுக்கு வந்து இவங்களுக்கு மொத்தி 3 மாதத்துக்கு மேலே ஆகப்போகுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.