Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலில் தலையிட மாட்டோம்’ - அமெரிக்கா

Featured Replies

வடமேற்கு சிரியா பகுதியில் துருக்கி ராணுவம் குர்து இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தவுள்ள தாக்குதலில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது.

அந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து இஸ்லாமிய அரசு குழுக்களின் கைதிகளை பாதுகாக்கும் பொறுப்பை துருக்கி ஏற்றுகொண்டது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தாங்கள் பயங்கரவாதிகள் என கருதும் குர்து இன கிளர்ச்சியாளர்களை தங்கள் எல்லை பகுதியில் இருந்து நீக்க துருக்கி நினைக்கிறது.

அதோடு இரண்டு மில்லியன் சிரியா அகதிகளை எல்லையை ஒட்டிய ஒரு பாதுகாப்பு பகுதியில் தங்க வைக்க துருக்கி நினைக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்துவான் ஆகியோர் இது குறித்து பேசியுள்ளனர்.

 

அமெரிக்காவின் கூற்று

”துருக்கி தங்களின் நீண்ட நாள் திட்டப்படி சிரியாவின் வடக்கு பகுதியில் தாக்குதல் நடத்தவுள்ளது.

அமெரிக்கப் படைகள் இந்த தாக்குதலில் ஈடுபடவோ அல்லது இதற்கு ஆதரவு தெரிவிக்கவோ இல்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் ஆக்கிரமிப்பு பிராந்தியத்தின் முக்கிய பகுதியை வீழ்த்தியபின் தங்கள் படைகள் அந்த பகுதியில் இருக்காது” என கூறுகிறது அமெரிக்கா.

”மேலும், இரண்டு வருடங்களாக கைது செய்யப்பட்ட இஸ்லாமிய அரசு குழுவின் கைதிகளை துருக்கி பொறுப்பேற்றுக் கொண்டது.”

பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர்கள் நாட்டிலிருந்து வந்த ஐ.எஸ். போராளிகளை திரும்பப்பெறுமாறு நாங்கள் கேட்டபோது அந்த நாடுகள் அதை மறுத்துவிட்டது.”

”எங்களுக்கு அதிகம் செலவாகும் என்பதால் நாங்கள் அவர்களை நீண்டகாலம் வைத்திருக்கமாட்டோம்” என அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.

 

இதன் பின்னணி

துருக்கி பிரதமர் தாக்குதலைப் பற்றி அறிவித்த அடுத்த நாளே அமெரிக்க அரசு இவ்வாறு கூறியுள்ளது.

இந்த தொலைப்பேசி உரையாடலின்போது துருக்கி அதிபர், சிரியாவுடன் எல்லைப் பகுதியில் சேர்ந்து அமைக்கும் சிரியா அகதிகளுக்கான பாதுகாப்பு பகுதி மண்டலம் குறித்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த பாதுகாப்பு மண்டலம் அமைப்பது நேட்டோ நாடுகளால் ஆகஸ்ட் மாதம் ஒப்புக்கொண்ட ஒன்று ஆகும்.

குர்து இன கிளர்ச்சியாளர்கள்

படத்தின் காப்புரிமைAFP

துருக்கி, பயங்கரவாதிகள் என குறிப்பிடும் குர்து இன கிளர்ச்சியாளர்களின் அமைப்பான ஒய்பிஜி அமைப்பிடமிருந்து முழுமையாக விடுப்பட்ட பகுதியாக இது இருக்க வேண்டும் என்று எண்ணியது.

பெரும்பாலும் சிரியாவின் ஜனநாயக படை மற்றும் அமெரிக்காவின் ஆதரவு படையைக் கொண்டதே இந்த ஒய்பிஜி படை ஆகும்.

இந்த பாதுகாப்பு பகுதிக்குள் இரண்டு மில்லியன் அகதிகளை அனுப்ப விரும்பியது துருக்கி. இப்போது துருக்கியில் 3.6 மில்லியன் மக்கள் அகதிகளாக உள்ளனர்.

 

https://www.bbc.com/tamil/global-49958287

  • தொடங்கியவர்

குர்திஸ் மக்கள் மீது அமேரிக்கா முதுகில் குத்திவிட்டது. காரணமாக உள்ளவர் ட்ரம்ப்.
இவருக்கும் உருசியாவிற்கும் இடையே உள்ள சில பேணப்படும் இரகசியங்கள் காரணமாக இருக்கலாம்.

ட்ரம்பின் மிக நெருங்கிய சகாவான செனட்டர் கிரஹாம் கூட வெளிப்படையாக கண்டித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியின் பொருளாதாரத்தை முற்றாக அழித்துவிடுவேன் - டிரம்ப் எச்சரிக்கை

சிரியாவிற்குள் ஊடுருவது தொடர்பில் துருக்கி அளவுக்குமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் துருக்கியின் பொருளாதாரத்தை முற்றாக அழித்துவிடுவேன் என  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்திஸ் போராளிகளிற்கு எதிராக துருக்கி இராணுவநடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து அப்பகுதியிலிருந்த தனது படைகளை விலக்கிக்கொள்ளப்போவதாக டிரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார்,

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பிற்கு கடும் கண்டனங்கள் வெளியாகியிருந்தன.

அமெரிக்கா குர்திஸ் ஆயுத குழுக்களை கைவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே டிரம்ப் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

trump.jpg

துருக்கி எல்லை மீறிய நடவடிக்கைகளில ஈடுபடுகின்றது என நான் எனது பெரிய ஒப்பிட முடியாத ஞானத்தின் மூலம் நான் கருதினால் முன்னரை போன்று துருக்கியின் பொருளாதாரத்தை முற்றாக அழித்துவிடுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மத்திய கிழக்கில் உள்ள  நாடுகள் குறிப்பாக செல்வந்த நாடுகள் தங்களை தாங்களே பாதுகாக்கவேண்டிய தருணம்வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.virakesari.lk/article/66431

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இதேவேளை மத்திய கிழக்கில் உள்ள  நாடுகள் குறிப்பாக செல்வந்த நாடுகள் தங்களை தாங்களே பாதுகாக்கவேண்டிய தருணம்வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

சவூதியை விட்டு வெளியேறுவார்களா???

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்தது  தான்

ஆனால்  இங்கே புலிகளிடம்  இந்த ராஐதந்திரம் இருக்கவில்லை  என  எழுதினார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

எதிர்பார்த்தது  தான்

ஆனால்  இங்கே புலிகளிடம்  இந்த ராஐதந்திரம் இருக்கவில்லை  என  எழுதினார்கள்

எல்லா வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு 
இவ்வளவு காலமும் தீவிரவாதிகள் என்று இருந்த குர்திஸ் போராளிகள் 
இப்போது தீவிரவாதிகள் என்ற பதத்தில் இருந்து போராளிகள் ஆகி இருக்கிறார்கள் 
இதை இனி சாதுரியமாக அவர்கள்தான் பயன்படுத்த வேண்டும் 

இங்கு அமெரிக்காவை பொறுத்தவரை பெரும்பாண்மை மக்களும் 
ஊடகங்களும் குர்திஸ் போராளிகளுக்கு எதிராகவும் ட்ரமின் முடிவுக்கு
எதிராகவும்தான் பேசுகிறார்கள்.

எனக்கு என்னமோ துருக்கிதான் சொந்த காசில் சூனியம் செய்வது போல தெரிகிறது 
வரும் வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ட்ரமுக்கு ஒரு போர் நிச்சயம் வேண்டும் 
ஈரான் மீது போர் சாத்தியமில்லை ..... அதன் விளைவை அதன் பின்னர்தான் அறிய முடியும்.

ஆதலால் யூதர்கள் ட்ரமுக்கு துருக்கி வரைபடத்தை காட்டியிருக்கலாம் என்று எண்ணுகிறேன் 
துருக்கி எப்போதும் பால்ஸாதீனத்துக்கு ஆதரவு கொடுப்பதோடு .... அடிக்கடி உதவியும் இருக்கிறது.  
 

குர்திஸ் போராளிகக்கு ஆதரவாகவும் 
ட்ரம்மின் முடிவுக்கு எதிராகவும் பேசுகிறார்கள் ....
மேலே மாறி எழுதிவிட்டேன் 
 

  • கருத்துக்கள உறவுகள்

23 minutes ago, Maruthankerny said:

எல்லா வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு 
இவ்வளவு காலமும் தீவிரவாதிகள் என்று இருந்த குர்திஸ் போராளிகள் 
இப்போது தீவிரவாதிகள் என்ற பதத்தில் இருந்து போராளிகள் ஆகி இருக்கிறார்கள் 
இதை இனி சாதுரியமாக அவர்கள்தான் பயன்படுத்த வேண்டும் 

இங்கு அமெரிக்காவை பொறுத்தவரை பெரும்பாண்மை மக்களும் 
ஊடகங்களும் குர்திஸ் போராளிகளுக்கு எதிராகவும் ட்ரமின் முடிவுக்கு
எதிராகவும்தான் பேசுகிறார்கள்.

எனக்கு என்னமோ துருக்கிதான் சொந்த காசில் சூனியம் செய்வது போல தெரிகிறது 
வரும் வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ட்ரமுக்கு ஒரு போர் நிச்சயம் வேண்டும் 
ஈரான் மீது போர் சாத்தியமில்லை ..... அதன் விளைவை அதன் பின்னர்தான் அறிய முடியும்.

ஆதலால் யூதர்கள் ட்ரமுக்கு துருக்கி வரைபடத்தை காட்டியிருக்கலாம் என்று எண்ணுகிறேன் 
துருக்கி எப்போதும் பால்ஸாதீனத்துக்கு ஆதரவு கொடுப்பதோடு .... அடிக்கடி உதவியும் இருக்கிறது.  
 

குர்திஸ் போராளிகக்கு ஆதரவாகவும் 
ட்ரம்மின் முடிவுக்கு எதிராகவும் பேசுகிறார்கள் ....
மேலே மாறி எழுதிவிட்டேன் 

 

பேசுபவர்களும்   அமெரிக்கர்கள்  தானே??

அவர்களுக்கு அவர்களது  பொருளாதாரமும் 

அவர்களது முதன்மை  தலைப்பாகையுமே   இலக்கு.ழ

குர்திஸ் போராளிகளை போராளிகள் என்பது

இன்னும்  அவர்களுக்கு  தாம்  இருந்த  இடத்திலிருந்தபடி

மத்திய  கிழக்கில்  இவர்களது இலக்குகளை தாக்க மனிதக்கைக்கூலிகள்  தேவைப்படுகிறார்கள்

அத்துடன் இவர்களைவிட சிறந்த சொல் கேட்பவர்களோ

அல்லது  ஒப்பந்தத்தை  கனம்  செய்பவர்களே

நண்பர்களோ அகப்படவில்லை.

Edited by விசுகு

  • தொடங்கியவர்

கைவிட்டது அமெரிக்கா- தங்கள் மண்ணை தாங்களே காக்க குர்திஸ் மக்கள் சபதம்- துருக்கி படையினரை எதிர்கொள்ள மனிதகேடயங்களாக மாறுகின்றனர்

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்திஸ் இனத்தவர்களின் பகுதிகளை இலக்குவைத்து பாரிய இராணுவநடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக  துருக்கி அறிவித்துள்ளதை தொடர்ந்து  துருக்கி படையினரை எதிர்கொள்வதற்காக எல்லைப்பகுதிகளில் பாரிய மனிதகேடய  போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக குர்திஸ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

சிரிய படையினரின் நடவடிக்கையை எதிர்கொள்வதற்காக எல்லையிலுள்ள நகரங்களை நோக்கி  வயது வேறுபாடின்றி குர்திஸ் மக்கள் குவியத்தொடங்கியுள்ளனர்.

துருக்கி படையினரின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக அவர்கள் மனிதகேடயங்களாக மாற விரும்புகின்றனர் என கியுமிசிலி நகரத்தில் உள்ள செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐநா அலுவலகத்தின் முன்னாலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்தியத்தில் உள்ள குர்திஸ் இனத்தவர்கள், அராபியர்கள் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் என அனைவரும் துருக்கியின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை எதிர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

துருக்கி இந்த பகுதியில் காலடி எடுத்துவைத்தால் பாரிய படுகொலைகள் இடம்பெறும் என அஞ்சுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

துருக்கியின் தாக்குதலிற்கு வழிவிட்டு விலகி நிற்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதை தொடர்ந்தே குர்திஸ் மக்கள் வயதுவேறுபாடின்றி எல்லைகளை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.

அமெரிக்கா விலகிநிற்பதன் காரணமாக, துருக்கி எல்லைகளை கடந்து குர்திஸ் தலைமையிலான சிரிய ஜனநாயக படையணி மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன.

ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பாரிய பங்களிப்பை வழங்கிய சிரிய ஜனநாயக படையணி தற்போது அமெரிக்கா தனது படைகளை அப்பகுதியிலிருந்து விலக்கிக்கொள்ள முடிவுசெய்துள்ளதை முதுகில் குத்தும் நடவடிக்கை என வர்ணித்துள்ளது.

எனினும் எங்கள் மண்ணை எப்பாடுபட்டாவது பாதுகாப்போம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

2015 இல் உருவாக்கப்பட்ட சிரிய ஜனநாயக படையணி ரொஜாவா பிராந்தியத்தில் சிரியாவின் வடக்கு எல்லையை அண்மித்த பகுதிகளில் சுயாட்;சி பிராந்தியத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

சிரிய ஜனநாயக படையணியில் பெருமளவிற்கு குர்திஸ் வைஜேபி போராளிகளே இடம்பெற்றுள்ளனர்.

சிரிய ஜனநாயக படையணி தற்போது 480 கிலோமீற்றரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.

https://www.virakesari.lk/article/66474

13 hours ago, கிருபன் said:

துருக்கி எல்லை மீறிய நடவடிக்கைகளில ஈடுபடுகின்றது என நான் எனது பெரிய ஒப்பிட முடியாத ஞானத்தின் மூலம் நான் கருதினால் முன்னரை போன்று துருக்கியின் பொருளாதாரத்தை முற்றாக அழித்துவிடுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்

குர்திஸ் போராளிகளின் விநியோக பாதையை இலக்குவைத்து விமானதாக்குதலை ஆரம்பித்தது துருக்கி-வீடியோ இணைப்பு

சிரியாவின் வடகிழக்கு பகுதியில்  உள்ள குர்திஸ் பகுதிகளை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஈராக் சிரிய எல்லையில் உள்ள குர்திஸ் போராளிகளின் விநியோக பாதையொன்றில் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

வடஈராக்கிலும் சிரியாவிலும்  குர்திஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைக்கும் பாதையில் குர்திஸ் போராளிகள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுப்பதற்காக துருக்கி விமான தாக்குதல்களை மேற்கொண்டது என இரு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செமல்க எல்லை பகுதியிலேயே விமானதாக்குதல்கள் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் குர்திஸ் பகுதிகளை இலக்குவைத்து நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஈராக் சிரியாவிற்கு இடையே குர்திஸ் ஆயுதக்குழுக்கள் பயன்படுத்தும் பாதையை துண்டிப்பதே துருக்கியின் தாக்குதலின் நோக்கம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தாக்குதல் இடம்பெறுவதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

இதேவேளை துருக்கியின் தாக்குதலிற்கு முன்னதாக அமெரிக்க படைகளை அந்த பகுதியிலிருந்து விலக்கிக்கொண்டுள்ளமைக்காக கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  அமெரிக்கா குர்திஸ் மக்களை கைவிடவில்லை என தெரிவித்துள்ளார்.

நாங்கள் சிரியாவை விட்டு வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் ஆனால் குர்திஸ் மக்களை கைவிடவில்லை அவர்கள் மிகச்சிறந்தவர்கள் மிகத்திறமை வாய்ந்த போர்வீரர்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

https://www.dailymail.co.uk/news/article-7549407/Turkey-says-ready-create-peace-corridor-northern-Syria.html?ico=embedded

https://www.virakesari.lk/article/66480

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.