Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

Featured Replies

7 minutes ago, மாங்குயில் said:

மேற்குலகம் ஒன்றை நல்லது என்று ஏற்றால், அது கண்டிப்பாக உண்மையாக இருக்கும் என்பது நாம் நினைப்பது சரியல்ல

நான் மேற்குலகம் சொன்னால் சரியென்று சொல்லவில்லை. நீங்கள் கேட்ட அறிவியல் ஆராய்ச்சி சொல்கிறது தியான முறை பலன்தருகிறது என்று. 

தியான முறையினா நன்மையை என் அனுபவத்திலும் உணர்ந்தவர்கள் என் போன்றோர்.

அது நிற்க, இங்கு வாதிடும் நாத்திகர்கள் மேற்குலகம் அறிவியல் முன்னேற்றம் கண்டுள்ளதால் அது சொன்னால் சரி என்ற ரீதியில் எழுதுகிறார்கள். அதற்கு தரப்பட்ட விளக்கமே இது.

 

  • Replies 412
  • Views 38.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, மல்லிகை வாசம் said:

நான் மேற்குலகம் சொன்னால் சரியென்று சொல்லவில்லை. நீங்கள் கேட்ட அறிவியல் ஆராய்ச்சி சொல்கிறது தியான முறை பலன்தருகிறது என்று. 

 

 



எந்த மதத்தினதும் தியான முறைகள்,  எந்தவொரு அறிவியலாளராலும் அறிவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாது என்றுதான் நான் சொன்னேன்.  

7 minutes ago, மாங்குயில் said:


 

கஞ்சா கெடுதல் தரும் என்று எந்த மேற்குலக நாடுதான் கருதவில்லை.

ஒன்றை மேற்குலகம் கடைப்பிடிக்காததை, தற்போது கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது என்று கண்டால், அந்தந்த நாடுகளைத்தான் கேட்க வேண்டும்.

கஞ்சா அடிப்பது, அறிவியல் ரீதியாக மனிதனுக்கு  தீங்கு தரும்  என்று எல்லாருக்கும் தெரிந்த விடயம்.

இங்கு நான் கூறவந்தது முன்பு தவறு என்றார்கள். இப்போது அனுமதி கொடுக்கிறார்கள். இதன் பின்னால் உள்ள அரசியல் பெரியது. 

இதனால் புலனாவது என்னவென்றால், அறிவியல் முடிவுகளை அரசியலும் பாதிப்பதால் நமக்கு கிடைக்கும் அறிவியல் தகவல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே. 

இந்த அறிவியல் தான் மதங்களை எடை போடுகிறதாம்! வேடிக்கை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, மல்லிகை வாசம் said:

 

அது நிற்க, இங்கு வாதிடும் நாத்திகர்கள் மேற்குலகம் அறிவியல் முன்னேற்றம் கண்டுள்ளதால் அது சொன்னால் சரி என்ற ரீதியில் எழுதுகிறார்கள். அதற்கு தரப்பட்ட விளக்கமே இது.

 


இங்கு வாதிடும் நாத்திகர்கள், கனடாவில் கஞ்சா அடிப்பதை சரி காணமாட்டார்கள் - நிச்சயமாக.

அறிவியல் முன்னேற்றம் வேறு. 

கஞ்சா அடிப்பது வேறு.

10 minutes ago, மாங்குயில் said:

யாரும் எந்த  புத்தகத்தையும் எழுதலாம்.

அவை யதார்த்தமாக இருக்கும் என்ற கொள்கையில் உலகத்தார் யாரும் இல்லை. 

நான் குறிப்பிட்ட புத்தகம் ஆய்வுரீதியாக பேராசிரியர் இணைந்து எழுதியது. உளவியல் மற்றும் meditation துறையில் பிரபலமானது. உங்களுக்கு ஏற்றுக்கொள்ள கசப்பாக இருப்பதால் இந்த உண்மையை மாற்ற முடியாது. உண்மையான அறிவுத்தேடல் இருந்தால் தேடி வாசிக்கலாம். 😊

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

இன்னுமா  முடியல  இந்த திரி (வெறி)??

மதம்  பிடித்தவர்களால்  தான்  அதிகம்  தாக்கங்களை  உருவாக்க  முடியும்

எது  நடந்தபோதும்

மதமே  உலகில்  எல்லா  அழிவுகளையும் செய்வதற்கு  இந்த  திரியே  சாட்சியாகிவிட்டது

இதுவரை எமது இனம் பற்றி  

எமது இனத்தின்  வரும்காலம் பற்றி 

தாயகத்தின் அடுத்த  கட்டங்கள்  பற்றி  எல்லாம்  எழுதப்பட்ட திரிகளையெல்லாம்  

நினைக்கும்  போது இனி எம்  இனம்???????😥

எம் இனமா?  அது என்ன   ??? 

எமக்கு சாதி முக்கியம்,  மதம் முக்கியம்,  பிரதேசவாதம் முக்கியம்,  இதில் எங்கே இனம் வருகிறது  ?? 

உங்களுக்கு எல்லாமே விளையாட்டுதான் போங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஞ்சாவின் வீரியத்தைக் குறைத்து தயார்பண்ணி, விற்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

வீரியத்தைக் குறைப்பதும், அறிவியல்தான் போல.

Just now, மல்லிகை வாசம் said:

நான் குறிப்பிட்ட புத்தகம் ஆய்வுரீதியாக பேராசிரியர் இணைந்து எழுதியது. உளவியல் மற்றும் meditation துறையில் பிரபலமானது. உங்களுக்கு ஏற்றுக்கொள்ள கசப்பாக இருப்பதால் இந்த உண்மையை மாற்ற முடியாது. உண்மையான அறிவுத்தேடல் இருந்தால் தேடி வாசிக்கலாம். 😊


 

எந்தப் புத்தகத்தையும் அறிவுத் தேடலின்மூலம்தான் படிக்கிறார்கள் மக்கள்.

மக்கள்தான் முடிவெடுக்கிறார்கள் - தான்படித்தது சரியா அல்லது பிழையா என்பதை.  

Meditation என்பது பலனற்ற ஒன்று என்பது எனது அனுபவ தேடலின் ஒன்று.

 

 

14 minutes ago, மாங்குயில் said:



எந்த மதத்தினதும் தியான முறைகள்,  எந்தவொரு அறிவியலாளராலும் அறிவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாது என்றுதான் நான் சொன்னேன்.  

அறிவியல் விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டு பரவலாக பின்பற்றும் முறை தான் இந்த meditation, அதாவது எங்கள் தியானமுறை. மீண்டும் மீண்டும் இதை மறுப்பதால் பயனில்லை. போய் தேடிப்பாருங்கள்.

12 minutes ago, மாங்குயில் said:


இங்கு வாதிடும் நாத்திகர்கள், கனடாவில் கஞ்சா அடிப்பதை சரி காணமாட்டார்கள் - நிச்சயமாக.

அறிவியல் முன்னேற்றம் வேறு. 

கஞ்சா அடிப்பது வேறு.

நான் சொல்ல வந்ததை புரிந்து கொள்ளாமல் மழுப்புவதால் பயனில்லை. மேற்குலகில் கஞ்சா அனுமதி தொடர்பான அரசியலைச் சொன்னேன். அறிவியல் இங்கே என்ன செயதுகொண்டிருக்கிறது?

10 minutes ago, மாங்குயில் said:

 

 

Meditation என்பது பலனற்ற ஒன்று என்பது எனது அனுபவ தேடலின் ஒன்று.

 

அதை நீங்கள் சரியான முறையில் பின்பற்றவில்லை என நினைக்கிறேன்.

 

13 minutes ago, மாங்குயில் said:


எந்தப் புத்தகத்தையும் அறிவுத் தேடலின்மூலம்தான் படிக்கிறார்கள் மக்கள்.

மக்கள்தான் முடிவெடுக்கிறார்கள் - தான்படித்தது சரியா அல்லது பிழையா என்பதை.  

 

அதே போலத்தான் இந்து மதம் பற்றிய எந்த அறிஞரும் கருத்துக் கூறலாம். ஆனால், அதன் உண்மைத் தன்மையை சீர்தூக்கி பார்த்து  அதன் பொருத்தப்பாட்டை ஏற்பதும், மறுப்பதும் எமது உரிமை.

இங்கு இந்து மதத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் என் அனுபவத்துக்கு முரணாக இருப்பதனால் அவற்றை உதாசீனம் செய்யும் உரிமை எனககு உண்டு.

57 minutes ago, விசுகு said:

மதம்  பிடித்தவர்களால்  தான்  அதிகம்  தாக்கங்களை  உருவாக்க  முடியும்

எது  நடந்தபோதும்

மதமே  உலகில்  எல்லா  அழிவுகளையும் செய்வதற்கு  இந்த  திரியே  சாட்சியாகிவிட்டது

விசுகு அண்ணா, 

மதங்களை விட பிறர் மத நம்பிக்கையை கேவலப்படுத்துவது தான் அழிவுகளுக்கு முதற்காரணம்.

நாத்திகரோ, ஏனைய மதங்களை நம்பாதோரோ தம் வழியே சென்றால் ஒரு தீமையும் இல்லை. ஆனால் பிறர் நம்பிக்கைக்குள் மூக்கு நுழைத்து சரி பிழைத் தன்மையை தீர்மானிக்கும்போது எதிர்ப்பு எழுவது இயற்கையே! 😊

அது தான் இங்கு நிகழ்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, மல்லிகை வாசம் said:

 

இங்கு இந்து மதத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் என் அனுபவத்துக்கு முரணாக இருப்பதனால் அவற்றை உதாசீனம் செய்யும் உரிமை எனககு உண்டு.


 


 


இந்து மக்கள், கல்லால் செதுக்கப்பட்ட சிலைகளுக்கு ஆயிரக்கணக்கான லீட்டர் பால், ஊத்துகிறார்கள் என்று ஏன் என்று ஒரு சகோதரர் கேட்டதற்கு, உங்களிடம் ஒரு பதிலும் இல்லை.

இதுவும் உங்கள் அனுபவத்திற்கு முரணாக இருப்பதால், உதாசீனம் செய்யும் உரிமை உங்களுக்கு உண்டு என்று தட்டிக் கழிப்பீர்களோ?

33 minutes ago, மல்லிகை வாசம் said:

 

 

அதே போலத்தான் இந்து மதம் பற்றிய எந்த அறிஞரும் கருத்துக் கூறலாம். ஆனால், அதன் உண்மைத் தன்மையை சீர்தூக்கி பார்த்து  அதன் பொருத்தப்பாட்டை ஏற்பதும், மறுப்பதும் எமது உரிமை.

 


இந்து மத அறிஞர்கள், இந்து மதத்தின் உண்மைத்தன்மைபற்றி எடுத்துரைக்கும்போதுதான், மக்கள் அது பிழை என்று உணர்ந்து வேறு மதங்களுக்கும்  நாத்திகத்திற்கும்  திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Meditation என்ற தியானத்தால், எந்தவிதப் பலனும் இல்லை.

Meditation என்ற தியானத்தை செய்து அதை நிறுத்தியவர்கள் ஏராளம்.

இதை அனுபவ ரீதியாகக் கண்டிருக்கிறேன்.

20 minutes ago, மல்லிகை வாசம் said:

 

மதங்களை விட பிறர் மத நம்பிக்கையை கேவலப்படுத்துவது தான் அழிவுகளுக்கு முதற்காரணம்.

நாத்திகரோ, ஏனைய மதங்களை நம்பாதோரோ தம் வழியே சென்றால் ஒரு தீமையும் இல்லை. ஆனால் பிறர் நம்பிக்கைக்குள் மூக்கு நுழைத்து சரி பிழைத் தன்மையை தீர்மானிக்கும்போது எதிர்ப்பு எழுவது இயற்கையே! 😊

 


 

இந்து மதத்தை, புத்த மக்களோ, கிறிஸ்தவ மக்களோ, முஸ்லீம் மக்களோ கேவலப்படுத்துவதில்லை.

இந்து மதத்தை, கேவலப்படுத்துவது, இந்து மக்கள்தான்.
 
மேலும், இந்து மதத்தில் இருந்து வெளியேறிய மக்கள்தான் அதிகமதிகமாக விமரிசிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

 

கஞ்சாவின் வீரியத்தைக் குறைத்து, விற்பனை செய்கிறார்கள்.

கஞ்சாவின் வீரியத்தைக் குறைத்து தயாரிப்பதும், அறிவியலின் தேடல்தான்!

கஞ்சா அடிப்பதை கனடா மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

கனடா அரசு,  மக்களை கண்டிப்பாக கஞ்சா அடித்துத்தான் தீர வேண்டும் என்று தீர்மானிப்பதில்லை.

மதம் வேறு.  அரசியல் வேறு என்ற சித்தாந்தங்களைக் கடைப்பிடிக்கும் நாடுதான் கனடா.

Canada is so-called free country.  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.