Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சஜித்திற்கு வாக்களிப்பதன் ஊடாகவே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது : சுமந்திரன்

Featured Replies

(நா.தனுஜா)

சஜித்திற்கு வாக்களிப்பதன் ஊடாகவே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருப்பதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானதாகும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் சுமந்திரன் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிப்பதன் ஊடாக மாத்திரமே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்று வடமாகாண தமிழ் மக்களுக்கு சுமந்திரன் கூறியதாக நாட்டின் இரு பிரதான சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் இன்று செய்தியொன்று வெளியாகியிருந்து.

அவ்விரு பத்திரிகைகளிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பில் அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் சுமந்திரன், 'ஏற்கனவே இத்தகைய செய்தியை தனியார் பத்திரிகையொன்று வெளியிட்டிருந்த நிலையில் நான் அதனை மறுத்திருந்தேன்.

அதன் பின்னரும் இவ்விரு ஊடகங்களும் இந்தப் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளன' என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான வர்ணகுலசூரிய மற்றும் அத்துகோரள ஆகியோரும் குறித்த இரு பத்திரிகைகளின் செயற்பாடு தொடர்பில் கண்டனம் வெளியிட்டனர்.

ஏற்கனவே ஊடகமொன்றினால் தான் கூறியதாக வெளியிடப்பட்ட செய்திக்கு சுமந்திரன் மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் அச்செய்தியை வெளியிடுவதென்பது ஊடக தர்மத்திற்குப் புறம்பானது மாத்திரமன்றி, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டதிட்டங்களையும் மீறுவதாகவே அமைந்துள்ளது.

மக்களின் அனுதாப வாக்குகளைத் திரட்டிக்கொள்வதற்காக பொதுஜன பெரமுனவினால் ஒருபுறம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, மறுபுறம் எதிரணி வேட்பாளருக்கு சேறுபூசும் நோக்கில் அவர்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு இச் செய்தி சிறந்த உதாரணமாகும்.

இவற்றுக்கு மத்தியிலேயே சஜித் பிரேமதாஸ அவருடைய தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

https://www.virakesari.lk/article/68904

மூன்று பத்திரிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: சுமந்திரன்

தேர்தல் பிரசார மேடையில் தாம் தெரிவித்த கருத்தைத் திரிபுபடுத்தி செய்தி வௌியிட்ட 3 பத்திரிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மனற-பததரககளகக-எதரக-சடட-நடவடகக-சமநதரன/150-240991

10 hours ago, ampanai said:

சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிப்பதன் ஊடாக மாத்திரமே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்று வடமாகாண தமிழ் மக்களுக்கு சுமந்திரன் கூறியதாக நாட்டின் இரு பிரதான சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் இன்று செய்தியொன்று வெளியாகியிருந்து.

இவை தான் அந்த செய்திகள். ராஜபக்சாக்களை தோற்கடிப்பது பற்றி சுமந்திரன் கூற அதை சிங்களவர்களை தோற்கடிப்பது பற்றி அவர் கூறியதாக திரிவுபடுத்தியுள்ளார்கள்.

EJOqPXCUUAAeaiB?format=jpg&name=medium

EJOqPzTUcAMoE2Z?format=jpg&name=medium

10 hours ago, ampanai said:

ஏற்கனவே ஊடகமொன்றினால் தான் கூறியதாக வெளியிடப்பட்ட செய்திக்கு சுமந்திரன் மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில்

முன்னைய செய்தி இது.

EJDp_gsU0AA0z1J?format=jpg&name=large

15 hours ago, ampanai said:

சஜித்திற்கு வாக்களிப்பதன் ஊடாகவே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருப்பதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானதாகும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் சுமந்திரன் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

அதானே!

சுமந்திரனவாது சிங்கள கொலைகாரர்களை தோற்கடிக்க முயற்சி செய்வதாவது.

சஜித்துக்கு வாக்களிப்பதன் மூலம்தான் தமிழின அழிப்பை நாசூக்காக மேற்கொள்ளும் சிங்கள பேரினவாதிகளை வெற்றிகொள்ளச் செய்து அதன் மூலம் சுமந்திரன் உட்பட தமிழரசுக் கட்சியினர் அந்த சிங்கள பேரினவாதிகளுக்கு முண்டு கொடுத்து, சுமந்திரன் உட்பட தமிழரசுக் கட்சியினர் அந்த சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து பெருமளவு காசை பின்கதவு வழியா பெறமுடியும்!

தமிழரசுக் கட்சியின் ஒரே நோக்கம் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு கிடைக்கும் வாக்குகள் மூலம் அவர் பலம் பெறுவதையும், அதன் மூலம் அவர் ஐ.நா. சபை போன்ற இடங்களில் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதை பலவீனப்படுத்துவதுமே ஆகும்!

கோத்தா பூச்சாண்டி காட்டி சஜித்துக்கு வாக்களிப்பவர்கள் வாக்களிக்க கோருபவர்கள் அனைவரும் தமிழரை பலவீனப்படுத்தும் கைங்கரியங்களில் தான் ஈடுபடுகின்றனர்.

9 hours ago, Rajesh said:

அதானே!

சுமந்திரனவாது சிங்கள கொலைகாரர்களை தோற்கடிக்க முயற்சி செய்வதாவது.

சஜித்துக்கு வாக்களிப்பதன் மூலம்தான் தமிழின அழிப்பை நாசூக்காக மேற்கொள்ளும் சிங்கள பேரினவாதிகளை வெற்றிகொள்ளச் செய்து அதன் மூலம் சுமந்திரன் உட்பட தமிழரசுக் கட்சியினர் அந்த சிங்கள பேரினவாதிகளுக்கு முண்டு கொடுத்து, சுமந்திரன் உட்பட தமிழரசுக் கட்சியினர் அந்த சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து பெருமளவு காசை பின்கதவு வழியா பெறமுடியும்!

தமிழரசுக் கட்சியின் ஒரே நோக்கம் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு கிடைக்கும் வாக்குகள் மூலம் அவர் பலம் பெறுவதையும், அதன் மூலம் அவர் ஐ.நா. சபை போன்ற இடங்களில் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதை பலவீனப்படுத்துவதுமே ஆகும்!

கோத்தா பூச்சாண்டி காட்டி சஜித்துக்கு வாக்களிப்பவர்கள் வாக்களிக்க கோருபவர்கள் அனைவரும் தமிழரை பலவீனப்படுத்தும் கைங்கரியங்களில் தான் ஈடுபடுகின்றனர்.

உண்மையை பிச்சு பிச்சு சொல்லீட்டீங்க அண்ணா

👌

  • தொடங்கியவர்
10 hours ago, Rajesh said:

கோத்தா பூச்சாண்டி காட்டி சஜித்துக்கு வாக்களிப்பவர்கள் வாக்களிக்க கோருபவர்கள் அனைவரும் தமிழரை பலவீனப்படுத்தும் கைங்கரியங்களில் தான் ஈடுபடுகின்றனர்.

அத்துடன், இன்னொரு உறவு கூறியது போன்று, கோத்தா வென்றால் ஒட்டுக்குழுக்கள் பலம்பெற வைக்கப்படும், சஜித் வென்றால் முஸ்லீம்கள் ஊடாக தமிழின அழிப்பு நடக்கும்.

அடுத்த அடுத்த தேர்தல்களில் சிவாஜியின் தேவை மேலும் தெளிவாக புரியலாம், ஆனால், அப்பொழுது ஒரு சிவாஜி கிடைக்கமாட்டார்.

22 minutes ago, ampanai said:

அத்துடன், இன்னொரு உறவு கூறியது போன்று, கோத்தா வென்றால் ஒட்டுக்குழுக்கள் பலம்பெற வைக்கப்படும், சஜித் வென்றால் முஸ்லீம்கள் ஊடாக தமிழின அழிப்பு நடக்கும்.

அடுத்த அடுத்த தேர்தல்களில் சிவாஜியின் தேவை மேலும் தெளிவாக புரியலாம், ஆனால், அப்பொழுது ஒரு சிவாஜி கிடைக்கமாட்டார்.

கோத்தாவுக்கு ஆதரவளிக்கும் உங்களை போன்றோர் சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு மக்களை கேட்டு மக்களை ஏமாற்றுவதை விட கோத்தாவுக்கு வாக்களிக்குமாறு நேரடியாக கேட்கலாமே.

கீழுள்ள செய்தியையும் பாருங்கள்.

 

Edited by Lara

  • தொடங்கியவர்
20 minutes ago, Lara said:

கீழுள்ள செய்தியையும் பாருங்கள்.

இதை செய்தி, நீங்கள் கூறுவது எல்லாம் மட்டுமே உண்மை 😞 

4 hours ago, ampanai said:

இதை செய்தி, நீங்கள் கூறுவது எல்லாம் மட்டுமே உண்மை 😞 

நான் கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். மனோ கணேசன் கூறியதையாவது பார்க்கட்டும் என்றே இணைத்தேன்.

தனிக்காட்டு ராஜா, அக்னியஷ்த்ரா, ரதி போன்றோர் கோத்தாவுக்கு வாக்களிக்க வேண்டும் என நேரே கூறியுள்ளார்கள்.

நீங்கள் தான் கோத்தாவை ஆதரித்துக்கொண்டு ஒருக்கா சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்குமாறு, இன்னொருக்கா அநுரவுக்கு வாக்களிக்குமாறு, இன்னொருக்கா ஹிஸ்புல்லா வாக்குகளை பிரிக்க நிற்பது ஜனநாயகம் என அவருக்கும் ஆதரவளித்து எல்லாப்பக்கமும் சுழன்று கொண்டிருக்கிறீர்கள்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Rajesh said:

சுமந்திரனவாது சிங்கள கொலைகாரர்களை தோற்கடிக்க முயற்சி செய்வதாவது.

இது சுத்துமாத்து சுமத்திரனின் நரி வேலைகளில் ஒன்று அநேகமா கோத்தா குடுத்த பெட்டிகள் சுத்து மாத்து சுமத்திரன் கையில் இருக்கும் சுமத்திரனுக்கு யாரையும் வித்து பிழைத்துத்தான் பழக்கம் அதுயாரா இருந்தாலும் அவரின் குறி பணம் ஒன்றே . தமிழ் மக்களின் உரிமைகளை வித்து திரிந்தவர் இப்ப கட்சியின் கொள்கையை கூட கொத்தாவின் பணம் மூலம் வித்து விட்டார் . இப்படி ஒரு சிங்கள மக்களை உசுப்பும் அறிக்கையை விட்டாரோ இல்லையோ மூன்று பேப்பர்களில் வந்துள்ளது இவரின் மறுப்பு அறிக்கை பெரிதாக வரவில்லை காரணம் விளனகுபவர்களுக்கு விளங்கும்.  

 

  • தொடங்கியவர்
43 minutes ago, Lara said:

நீங்கள் தான் கோத்தாவை ஆதரித்துக்கொண்டு ஒருக்கா சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்குமாறு, இன்னொருக்கா அநுரவுக்கு வாக்களிக்குமாறு, இன்னொருக்கா ஹிஸ்புல்லா வாக்குகளை பிரிக்க நிற்பது ஜனநாயகம் என அவருக்கும் ஆதரவளித்து எல்லாப்பக்கமும் சுழன்று கொண்டிருக்கிறீர்கள்.

நாலு பக்கமும் சுழன்றால் தான் உண்மையையை அறியலாம் என இருக்கோமோ என்னவோ 🙂 

17 hours ago, Lara said:

இவை தான் அந்த செய்திகள். ராஜபக்சாக்களை தோற்கடிப்பது பற்றி சுமந்திரன் கூற அதை சிங்களவர்களை தோற்கடிப்பது பற்றி அவர் கூறியதாக திரிவுபடுத்தியுள்ளார்கள்.

அமெரிக்காவிற்கு ஒரு ஆபிரகாம் இலிங்கன் ஈழத்திற்கு ஒரு ஆபிரகாம் சுமந்திரன். என்ன தவம் செய்தோமோ

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

நாலு பக்கமும் சுழன்றால் தான் உண்மையையை அறியலாம் என இருக்கோமோ என்னவோ

உன்மைதான் எல்லா பக்கமும் சுழன்று கொண்டே இருக்கணும் 

11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 

நல்லவேளை இப்பொழுது வந்தீர்கள். உங்கள் பெயரை தான் மாறி தனி ஒருவன் என்று எழுதியிருந்தேன். இப்பொழுது மாற்றி விட்டேன். 12 மணித்தியாலத்தின் பின் வந்திருந்தால் மாற்ற முடியாமல் போயிருக்கும். 😂

  • தொடங்கியவர்

ரூ.1000 கோடி நஷ்டஈடு கோரி சுமந்திரன் கோரிக்ைக கடிதம்

மூன்று நாளேடுகளுக்கு எதிராக

தேர்தல் பிரசாரத்தின் போது தான் தெரிவித்த கருத்தை திரிபுபடுத்தி செய்தி வெளியிட்ட 3 பத்திரிகைகளுக்கு எதிராக ஒவ்வொரு பத்திரிகைகளிடமும் தலா ஆயிரம் கோடி ரூபா நஷ்டஈடு கோரி தனது சட்டத்தரணியூடாக கோரிக்ைக கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்

பேச்சாளரும் பாராளுன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தான் இவ்வாறான கருத்தை தெரிவிக்கவில்லை என்பதுடன் திரிபுபடுத்தியே இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளதுடன் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் பதில் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

சிங்கள மக்களை தோற்கடிப்பதற்காக தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கூறியதாக அருண பத்திரிகை 2019 நவம்பர் 12 ஆம் திகதியும் சிலோன் டுடே மற்றும் மவ்பிம ஆகிய பத்திரிகைகள் 2019 நவம்பர் 13 ஆம் திகதியும் மேற்படி பொய்யான செய்தியை பிரசுரித்துள்ளன. அவ்வாறு வெளியிடப்பட்ட செய்தி அப்பட்டமான பொய்யாகும்.

எனவே இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி, சம்பவம் தொடர்பாக சட்டப் பிரகாரம் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுமாறு எம்.ஏ.சுமந்திரனின் சார்பில் சின்னத்துரை சுந்தரலிங்கம் மற்றும் பாலேந்திரா சட்ட நிறுவனம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளது. அத்துடன் அக் கடிதத்தின் பிரதியொன்றை தேர்தல் ஆணையாளருக்கும் அனுப்பி வைத்துள்ளது.

இவ்வாறான பொய்ச் செய்தி இன வெறுப்பை பரப்புவதுடன் இனப் பாகுபாட்டை தூண்டுவதாகவும் அமைகிறது என அக் கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளது.

http://www.thinakaran.lk/2019/11/14/உள்நாடு/43857/ரூ1000-கோடி-நஷ்டஈடு-கோரி-சுமந்திரன்-கோரிக்ைக-கடிதம்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Lara said:

நல்லவேளை இப்பொழுது வந்தீர்கள். உங்கள் பெயரை தான் மாறி தனி ஒருவன் என்று எழுதியிருந்தேன். இப்பொழுது மாற்றி விட்டேன். 12 மணித்தியாலத்தின் பின் வந்திருந்தால் மாற்ற முடியாமல் போயிருக்கும். 😂

நான் விளங்கிக்கொண்டன் கிழக்கு மகாணத்தில் விழும் வாக்குகள் அனைத்தும்  கோட்டாவுக்கு தமிழரசுக்கட்சியின் அரசியல் வங்கு ரோந்தினாலே  என்பதை சுட்டிக்காட்டுகிறேன் 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.