Jump to content

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்


Recommended Posts

  • Replies 317
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Lara said:

அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.

ரணில், சஜித் ஜனாதிபதியாக வருவதை விட கோத்தபாய ஜனாதிபதியாக வருவதை விரும்பியவர். எனவே பாராளுமன்றத்தை கலைத்து உடனே பாராளுமன்ற தேர்தலை நடத்தவும் சம்மதிக்கலாம்.

தேர்தலின் பின் ரணில் எதிர்க்கட்சி தலைவராவார் என நினைக்கிறேன்.

சஜீத் கூட கோத்தா வருவதையே விரும்பி இருக்க கூடும்😄

Link to comment
Share on other sites

30 minutes ago, ரதி said:

சஜீத் கூட கோத்தா வருவதையே விரும்பி இருக்க கூடும்😄

சஜித் மகிந்த ஆதரவாளர். ஆனாலும் கோத்தாவுடன் உண்மையிலேயே போட்டியிட்டார் என நினைக்கிறேன். 

சஜித்துக்கும் ரணிலுக்கும் பிரச்சினை சஜித்தை வேட்பாளராக அறிவிக்க முன்பிலிருந்தே இருந்தது.

இன்றைய கூட்டத்திலும் சஜித் தரப்பும் ரணில் தரப்பும் முரண்பட்டதாம்.

Link to comment
Share on other sites

Just now, nunavilan said:

 

74602109_2839016296142612_59745518337696

தமிழ் மக்களின் மனோ நிலை மாறிவிட்டது என்பது இவர்களுக்கு புரிந்து விட்டது...... அப்படி இவர் பெறுவதானல் வடக்கின் மீள் நிர்மாணம், மீள் குடியேற்றம் சம்பந்தமான அமைச்சை பெறுவது நன்று....... வடக்கின் அடாவடி மினிஸ்ட்டருக்கு விட்டு குடிக்காமல்.

Link to comment
Share on other sites

சஜித் பிரேமதாஸவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து பகிரங்கமாக அறிவித்தது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழர் பகுதிகளில் மேடை போட்டு சஜித் பிரேமதாஸ வுக்காகப் பிரசாரமும் செய்தது. தாங்கள் செய்கின்ற பிரசாரம் தென்பகுதி மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் கூட்டமைப்பிடம் இருந்ததை எவரும் அவதானிக்க முடியும்.

இதற்கு மேலாக ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச­வைக் கூட்டமைப்பினர் கடுமையாக விமர்சனம் செய் தனர். இந்த விமர்சனங்களைப் பார்த்தவர்கள் கோத்தபாய ராஜபக்­ வென்றால் இவர்களின் கதி என்ன என்று மூக்கில் விரலை வைக்குமளவுக்கு அவர்கள் கோத்தபாய ராஜபக்ச­வை கடுமையாகச் சாடினர்.

தாங்கள் அறிவிக்காமல் விட்டாலும் தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கே தங்களின் வாக்குகளை வழங்குவர் என்பதை கூட்ட மைப்பு நன்கு அறிந்திருந்தது.

இதற்கு மேலாக, சஜித் பிரேமதாஸவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்தால், சிங்கள மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக் களிக்க மாட்டார்கள் என்ற உண்மையையும் கூட்டமைப்பு நன்கு தெரிந்து வைத்திருந்தது.

நிலைமை இதுவாக இருந்தும் தேர்தலுக்கு மூன்று தினங்களுக்கு முன்பாக கூட்டமைப் பின் முக்கிய புள்ளிகள் சிலர் கண்டபாட்டில் கதைக்க, ஒட்டுமொத்த சிங்கள மக்களும் திரண்டெழுந்து தங்கள் வாக்குகளை கோத்த பாய ராஜபக்சவுக்கு வழங்கினர்.

ஆக, சமபலத்துடன் இருந்த தேர்தல் களத்தை மூன்று நாட்களுக்குள் மாற்றியமைத்து சஜித் பிரேமதாஸவுக்கு நம்பிக்கைத் துரோகத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்து முடித்தது. கூடவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி சஜித்தை வஞ்சித்தார்.
 

http://valampurii.lk/valampurii/content.php?id=19865&ctype=news

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

தாங்கள் அறிவிக்காமல் விட்டாலும் தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கே தங்களின் வாக்குகளை வழங்குவர் என்பதை கூட்ட மைப்பு நன்கு அறிந்திருந்தது.

கூட்டமைப்பு அறிவிக்காவிட்டாலும் பலர் தாமாக சஜித்துக்கு போட்டிருப்பார்கள். ஆனாலும் சஜித்துக்கு கிடைத்த வாக்குகள் குறைவாகவே இருந்திருக்கும். கூட்டமைப்பு சொல்வதை கேட்டு வாக்களிக்கும் மக்களும் வடக்கு கிழக்கில் உள்ளார்கள். அவ்வாறானவர்கள் கூட்டமைப்பு சொல்லாமல் விட்டிருந்தால் வாக்களிக்காமல் விட்டிருப்பார்கள் அல்லது சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

ஆக, சமபலத்துடன் இருந்த தேர்தல் களத்தை மூன்று நாட்களுக்குள் மாற்றியமைத்து சஜித் பிரேமதாஸவுக்கு நம்பிக்கைத் துரோகத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்து முடித்தது. 

3 நாட்களுக்கு முன் சமபலத்துடன் தேர்தல் களம் இருக்கவில்லை. முன்பே கோத்தாவின் வெற்றி உறுதியாகி விட்டது.

வலம்புரிக்காரர் தெற்கில் முன்னரே நடந்த பிரச்சாரங்களை பற்றி கதையில்லை. 

ஈஸ்டர் குண்டு தாக்குதலை காட்டி கோத்தபாய தான் நாட்டின் பாதுகாவலன் என்பது போன்ற கதை.

கோத்தபாயவின் குடியுரிமையை கேள்விக்குட்படுத்தியதன் மூலம் கோத்தபாயவை ஜனாதிபதியாக வர விடாமல் செய்ய விளைகிறார்கள், அவரை வெல்ல வைக்க வேண்டும் என மக்கள் மத்தியில் கருத்தை உருவாக்கியமை.

2009 போர் வெற்றி.

2015 இல் தமிழர்கள் வாக்குகளால் மகிந்த தோற்கடிக்கப்பட்டதால் இம்முறை கோத்தபாய தோற்கக்கூடாது என நினைத்தமை.

மைத்திரி-ரணில் ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சஜித்தையும் பலர் நம்பாமல் கோத்தபாயவுக்கு வாக்களித்தமை.

அநுர தனிய போட்டியிட்டமை.

பலவேறு வேட்பாளர்கள் வாக்குகளை பிரிக்க களமிறங்கியமை.

5 கட்சிகள், மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய 13 அம்ச கோரிக்கைகள்.

இன்னும் பல காரணங்கள் உள்ளன.

கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவளிக்குமாறு கூறாமல் விட்டிருந்தாலும் கோத்தபாய வென்றிருப்பார்.

1 hour ago, ampanai said:

கூடவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி சஜித்தை வஞ்சித்தார்.

ரணிலின் பல நடவடிக்கைகள் அவ்வாறு தான் இருந்தன.

ரணில் தரப்பு சஜித்துக்கான தேர்தல் பிரச்சார நிதிக்கு பங்களிப்பு செய்யவில்லை எனவும் வாசித்தேன்.

Link to comment
Share on other sites

நான் (நீங்கள்) ஏமாற்றலாம். (நான்) நீங்கள் தோற்கலாம். ஆனால், நாங்கள் வென்றாகவேண்டும்.

Link to comment
Share on other sites

புதிய அரசில் ஹக்கீம், ரிசாத் இருவருக்கும் இடமில்லை என தினேஷ் குணவர்தன கூறியுள்ளாராம்.

 

Link to comment
Share on other sites

Mano Ganesan - மனோ
< ஏன் பின்னடைவு? பின்னர் நிறைய சொல்லலாம். இப்போது கொஞ்சம் சுருக்கமாக...>

1) சின்னம் ஒரு பிரச்சினை அல்ல. இதற்கு முன்னும் “அன்னம்” சின்னம் பயன்படுத்தப்பட்டு வெற்றி பெற்றது. சிலருக்கு தனிப்பட்ட காரணங்களால், சின்னம் தெரியாமல் இருந்திருக்கலாம். இப்படியான நபர்கள் எப்போதும் இருப்பார்கள். சின்னத்தையும் ஒரு காரணமாக சொல்வது தலையை விட்டுவிட்டு வாலை பிடிப்பதாகும் என நினைக்கிறேன்.

2) முதல் கோணல், வேட்பாளர் அறிவிப்பின் தாமதம். இதற்குள் நாடு முழுக்க சுமார் ஆறாயிரம் விகாரைகளுக்கு சென்று, ஒரு சிங்கள-பெளத்த வலை பின்னலை ஏற்படுத்த எஸ்எல்பிபி கட்சிக்கு சாவகாசமான அவகாசம் கிடைத்தது.

3) தேர்தலுக்கு நிதி இல்லை. அரசாங்கமானாலும் தேர்தல் நிதி இல்லை. அப்படியானால், இது “நல்லவரா? கெட்டவரா?” (நல்ல அரசாங்கமா? கெட்ட அரசாங்கமா?) என்ற கேள்விக்கு ஒப்பானதாகும். நிதி இல்லாமல் களத்தில் குதித்து விட்டார்கள். இதுதான் உண்மை.

4) முக்கியமாக, 2009 “யுத்த வெற்றி” க்கு பிறகு, ஒரு “அரசியல் வெற்றி” சிங்கள பெளத்த நிறுவனத்துக்கு (Sinhala Buddhist Establishment) தேவைப்பட்டது. அதற்கு வேட்பாளர் கோடாபய ராஜபக்ச மிக சரியாக பொருந்தி வந்தார். இன்று இதுதான் இங்கே தேசிய யதார்த்தம்.

5) மேலே சொன்ன தேசிய யதார்த்தத்தை சமாளிக்க எம்மால் இந்நேரம் நியமிக்க கூடிய மிக சிறந்த வேட்பாளர்தான் சஜித். உண்மையில் வேறு எவரும் போட்டியிட்டிருந்தால், இதில் பாதி வாக்குகள்கூட சந்தேகமே. நிறைய யூஎன்பி மற்றும் சிறுபான்மையினர் தேர்தலில் வாக்களிக்க சென்றே இருக்க மாட்டார்கள்.

6) பிரதான விடயமாக ஐஎஸ்ஐஎஸ் சஹரான் குண்டுவெடிப்பு, எமக்கு எதிராக பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அமைச்சர் ரிசாத் மீதான எந்த ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்ற தர்க்கரீதியான உண்மையை ஒரு பொருட்டாகவே “சிங்கள-பெளத்தம்” கணக்கில் எடுக்கவில்லை. அமைச்சர் ரிசாத் மூலம், சஜித்துக்கு வரும் சராசரி முஸ்லிம் வாக்குகளை விட, சஜித்துக்கு வரவிருந்த கணிசமான சிங்கள வாக்குகளை, அமைச்சர் ரிசாத்தின் பெயரை பயன்படுத்தி, எஸ்எல்பிபி கட்சி, கவனமாக திட்டமிட்டு, சமூக ஊடக, நேரடி ஊடக பிரசாரங்கள் மூலம், தடுத்து நிறுத்தியது. இது நான் கண்ட யதார்த்தம்.

7) மேலே சொல்லப்பட்ட உத்தியை அல்லது தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டை பயன்படுத்தி, வன்னியிலும், கிழக்கிலும் சஜித்துக்கு வரவிருந்த தமிழ் வாக்குகளை தடுத்து நிறுத்தவும், எஸ்எல்பிபி கட்சி முயன்றது. இந்த திட்டத்துக்கு எதிராக நான் விசேட கவனம் எடுத்து என்னால் இயன்றதை செய்தேன். எப்படி இருந்தாலும் இவையெல்லாம் எஸ்எல்பிபி கட்சியின் “ரியல் பொலிடிகல்” கெட்டிக்காரத்தனம் என்பேன். அவர்கள் எல்லாமே சரியாக திட்டமிட்டு செய்தார்கள்.

😎 மற்றபடி, இந்த “ரணிலை மதிக்கவில்லை” என்ற குற்றச்சாட்டு எல்லாம் பெரிய விஷயம் அல்ல. ரணிலுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், நின்று, நிதானித்து, சிந்திக்க கூட நேரம் இல்லாத, தேர்தல் பரபரப்பிலும், சிங்கள வாக்கை தேடிய ஓட்டத்திலும், ரணிலுக்கு இயற்கையான இடம் கிடைக்கவில்லை என்பதால் அவர் ஒதுக்கப்பட்டார் அல்லது ஒதுங்கினார். இந்த யதார்த்தம், மேலே இரண்டாவதில் சொன்ன, “வேட்பாளர் அறிவிப்பின் தாமதம்” என்பதால் வந்த வினை. இதற்கு யார் பொறுப்பு?

9) ஒருவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக ஒரு நிலைப்பாட்டை எடுத்து, பெருங்கூட்டங்களை அதிகாரபூர்வமாக ஊடக ஒளியொலி வாங்கிகளின் முன் நடத்தாமல், தம் தரைமட்ட கட்சி இயந்திரம் மூலம் பிரச்சாரம் செய்து இருக்கலாமோ என யோசிக்கிறேன். (கூட்டமைப்பு பகிரங்க நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்திருந்தால் அது இன்று அவர்களுக்கே நன்மையாக முடிந்திருக்கும் என்பது வேறு விஷயம்!) அதேபோல் அமைச்சர் ரிசாத் வெளியே வராமல், தமது பிரதேசங்களுக்குள் மாத்திரம் செயற்பட்டு இருக்கலாமோ என யோசிக்கிறேன். எஸ்எல்பிபி கட்சி திட்டமிட்டு சாணக்கியமாக செயற்படும் போது, அதற்கு பதில் நாமும் சாணக்கியமாக செயற்பட்டிருக்கவேண்டும். அதற்காக சில விட்டுக்கொடுப்புகளை செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும்.

10) மேலே சொன்னதில் ஒரு பகுதியாக ஒரு விஷயம் சொல்ல வேண்டும். எமது அணியின் முதலாம் கூட்டம், காலி முக திடலில் நடைபெற்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கூட்டம் அதுவாகும். அதில் சிறுபான்மை கூட்டு கட்சி தலைவர்கள் உரையாற்றவில்லை என்பது ஒரு பெரும் விவாதமாக நீண்டநாள் பேசப்பட்டது. அது இப்படிதான் நடந்தது.

அன்றைய கூட்டம் ஆரம்பமாகும் முன், கூட்ட மேடையில் நாம் சென்று அமர்ந்தோம். இது கொழும்பு என்ற காரணத்தால், முதல் வரவேற்பு உரையை சிங்களத்தில் ரவி கருணாநாயக்கவும், தமிழில் நானும் ஆற்ற இருந்தோம். மேலும் அதன் பின் அமைச்சர்கள் ரவுப் ஹக்கீம், ரிசாத் ஆகியோரும் உரையாற்ற இருந்தார்கள். எல்லோர் பெயரும் பேச்சாளர் பெயர் பட்டியலில் இருந்தது.

அப்போது அமைச்சர் திகாம்பரம் என்னை தொலைபேசியில் அழைத்து, அமைச்சர் ரிசாத் பேசும் போது கூட்டத்தின் மத்தியில் இருந்து கூச்சல் எழுப்பப்பட இருப்பதாகவும், ஒரு தனியார் ஊடக நிறுவனம் அதை படம் பிடித்து அதிரடி செய்தியாக வெளியிட உள்ளதாகவும், இதுபற்றி சஜித்துக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும், எனக்கு சொன்னார். இதன்மூலம் அந்த மாபெரும் கூட்ட செய்தியை தலைகீழாக மாற்றும் உத்தேச சதி திட்டம் அதுவாகும் என தெரிய வந்தது. இதை எப்படி ரிசாத்திடம் சொல்லி, அவரை பேசாமல் இருக்க சொல்வது என சஜித் யோசிப்பதாகவும் சொன்னார்.

உடனே நான்தான், அங்கே மேடையில் இருந்த ரவுப் ஹக்கீம், ரிசாத் ஆகியோரிடம் இதை கூறினேன். ரவுப் ஹக்கீமும் பேசாவிட்டால், நானும் பேசாமல் இருக்கிறேன் என ரிசாத் என்னிடம் கூறினார். அதன்பிறகு நான்தான் அப்படியானால் சரி, நானும் உரையாற்றாமல் இருக்கிறேன், எந்தவொரு கூட்டு சிறுபான்மை கட்சி தலைவரும் உரையாற்றவில்லை என்று போய் விடட்டும் என்று தீர்மானித்தோம்.

கூட்டம் நடைபெறும், கொழும்பு எனது தேர்தல் மாவட்டம். முழு நாடும் கேட்கும் அந்த மேடையில் பேசும் சந்தர்ப்பம் அரியது. யார் பேசினாலும், பேசாவிட்டாலும் நான் பேசியே ஆக வேண்டும் என்று நான் கூறியிருந்தால், எவரும் என்னை தடுத்திருக்க முடியாது. உண்மையில் நான் பேசுவதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாவிட்டாலும் கூட, நான் அன்று ஒரு விட்டுக்கொடுப்பை செய்தேன். பொது நன்மை கருதி இப்படி நடந்து கொள்வது என் இரத்தத்தில் ஊறியது. ஆனால், நமது அணியில் இருக்கும் பலரின் இரத்த குரூப் வேறு.

11) ரணில், சந்திரிகா, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க போன்றோர், பிரசார பயணத்தில் இம்முறை இலகு பரப்பை (Soft Zone) தேடி, தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கு சென்றார்கள். இவர்கள் சொல்லி தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்கும் நிலையில் இருக்கவில்லை. உண்மையில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் சொல்ல முன்பேயே தமிழ், முஸ்லிம் மக்கள் தயாராகி விட்டார்கள். இதுதான் தரை உண்மை (Ground Truth). உங்களுக்கு உசிதமான சிங்கள பிரதேசங்களுக்கு சென்று சிங்கள வாக்கை தேடுங்கள் என்று பலமுறை தகவல் அனுப்பினேன். எவரும் கேட்கவில்லை. இந்த அரசியல்வாதிகளுக்கு சிங்கள மக்கள் மத்தியில் போக முடியாது என்பதுதான் உண்மை காரணம் என்றால், அவர்கள் இனி அரசியலில் இருக்கவே முடியாதே!

12) உண்மையில் சஜித் மிக கடுமையாக உழைத்தார். ஐதேகவில் ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே தேசியரீதியாக உழைத்தார்கள். மற்றோர் தம் வட்டத்துக்குள் நின்று விட்டார்கள். சஜித்தை முன்மொழிந்த அமைச்சர்கள் என்ற பக்கத்தையும் இடையில் காணவில்லை.

13) நானும், ஐ.தே. முன்னணியின் ஏனைய கூட்டு கட்சி தலைவர்களும் மிக கடுமையாக உழைத்தோம். எங்களது சிறுபான்மை கட்சிகளின் எம்பீக்களும் கடுமையாக உழைத்தார்கள். என்னை பொறுத்தவரை நான் நாடோடியாக நாடு முழுக்க ஓடினேன். எனது சொந்த தேர்தலுக்கு கூட நான் இப்படி ஓடவில்லை. எனக்கு அப்போது களைப்பே தெரியவில்லை. இப்போது மிகவும் களைப்பாக இருக்கிறது.

14) இறுதி இரண்டு வாரத்தில், ஐதேகவின் சில முன்னணியாளர்கள், மாற்று அணியுடன் இரகசிய கள்ள உறவு கொண்டனர். இவர்கள் வெறுக்கத்தக்க கீழ்த்தர மனித மிருகங்கள். ஒருபுறத்தில் உயிரை கொடுத்து நாம் போராடும் போது உள்ளேயே இருந்தபடி துரோகம் செய்பவர்களை என்னவென்று சொல்வது? என்ன இனம், என்ன மதம் என்றாலும் இவர்கள் ஒன்றுதான். இந்த மனிதர்களை, “நாய்கள்” என்று சொல்ல நான் விரும்பவில்லை. ஏனென்றால் “நாய்” எனக்கு பிடித்த ஒரு “மனிதன்”.

 
Image may contain: 11 people, people smiling, people standing
Link to comment
Share on other sites

11 minutes ago, nunavilan said:

9) ஒருவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக ஒரு நிலைப்பாட்டை எடுத்து, பெருங்கூட்டங்களை அதிகாரபூர்வமாக ஊடக ஒளியொலி வாங்கிகளின் முன் நடத்தாமல், தம் தரைமட்ட கட்சி இயந்திரம் மூலம் பிரச்சாரம் செய்து இருக்கலாமோ என யோசிக்கிறேன். (கூட்டமைப்பு பகிரங்க நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்திருந்தால் அது இன்று அவர்களுக்கே நன்மையாக முடிந்திருக்கும் என்பது வேறு விஷயம்!) அதேபோல் அமைச்சர் ரிசாத் வெளியே வராமல், தமது பிரதேசங்களுக்குள் மாத்திரம் செயற்பட்டு இருக்கலாமோ என யோசிக்கிறேன். எஸ்எல்பிபி கட்சி திட்டமிட்டு சாணக்கியமாக செயற்படும் போது, அதற்கு பதில் நாமும் சாணக்கியமாக செயற்பட்டிருக்கவேண்டும். அதற்காக சில விட்டுக்கொடுப்புகளை செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும்.

இதை ஒத்த கருத்தையே யாழின் வலம்புரியும் நேற்று கூறி இருந்தது 

12 minutes ago, nunavilan said:

4) முக்கியமாக, 2009 “யுத்த வெற்றி” க்கு பிறகு, ஒரு “அரசியல் வெற்றி” சிங்கள பெளத்த நிறுவனத்துக்கு (Sinhala Buddhist Establishment) தேவைப்பட்டது. அதற்கு வேட்பாளர் கோடாபய ராஜபக்ச மிக சரியாக பொருந்தி வந்தார். இன்று இதுதான் இங்கே தேசிய யதார்த்தம்.

சரத்தும் அதேபோன்ற கருத்துக்களை பிரச்சார மேடைகளில் முன்வைத்தார். எது ஏன் எடுபடவில்லை ? 

இது சிங்கள தேசிய யதார்த்தம் என்றால் அதன் மூலம் சரத்தால் மற்றும் தனியே போட்டியிட்ட மகேசால் அந்த வாக்குகளை 'பிரிக்க' முடியவில்லை ? 

Link to comment
Share on other sites

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

Link to comment
Share on other sites

சஜித் பிரேமதாசாவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்குமாறு கோரி 45 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடனான கடிதமொன்று சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

2019 ஜனாதிபதி தேர்தல் உணர்த்திய – வராற்றுச் சந்தர்ப்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது. விட்டுக் கொடுப்புக்கு இடமில்லாத – அதிகாரப் பகிர்வுக்கு சம்மதிக்காத ஒருவரை சிறுபான்மை இனங்கள் ஒன்றிணைந்து எதிர்த்ததன் மூலம் – அடிப்படை அனைவருக்குமான பொதுத் தேவை அதிகாரப் பகிர்வு என்பதையே உணர்த்தியுள்ளது. எனவே, ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களின் தலைமைகளும் தனி நலன்களைத் துறந்து ஒன்றிணைவதன் மூலம், அனைத்து இனங்களும் சரிநிகர் சமானமாக – உரிமைகள் பெற்றவர்களாக தலைநிமிர்ந்து வாழமுடியும்.

இதுபற்றி சாத்தியப்பாடுகள் – ஏற்பாடுகள் உடனடியாக நிகழ்ந்து விட முடியாது என்பது யதார்த்தம். ஆனால், இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டால் சிறுபான்மை இனங்கள் எவற்றுக்கும் தீர்வு என்பதே கிடையாது. அரசுக்கு முட்டுக் கொடுக்கும் இனங்கள் – தலைமைகள் சலுகைகளை – சுகபோகங்களை அனுபவிக்க முடியுமே தவிர உரிமைகளையோ – சுதந்திரத்தையோ அனுபவிக்க முடியாது.

இதேபோன்று, இலங்கைத் தமிழர்களுக்குள் கட்சி ரீதியாக பிரிந்தும் – முரண்பட்டும் கிடக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் ஒரு படிப்பினை. சலுகைகளுக்கும் – சுகபோகங்களுக்கும் சோரம் போகாமல், தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து – ஓரணியில் நிற்பது அவசியம் மட்டுமல்ல வரலாற்றுக் கடமையும்கூட. மீறி தனிக் கட்சி நலன்கள்தான் முக்கியம் என்று கருதி ஒன்றிணையவோ – இணைந்து செயற்படவோ மறந்தால் – அல்லது மறுத்தால் அடிமை வாழ்வும் – உரிமைகள் இல்லா வாழ்வும் – நிச்சயம்.

வரலாற்றுக் கடமையை சிறுபான்மை இனம் – தமிழினம் செய்து விட்டது. தமிழினம் ஏற்றிய இந்த சிறு தீயை அணையவிடாது எரிய வைத்து ஒளி கொடுப்பார்களா சிறுபான்மை – தமிழினத் தலைமைகள்…?

-தமிழ்க் குரலுக்காக செவ்வேள் –

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
    • 😀........ நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.
    • எல்லோருக்கும் நன்றி  "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு"  
    • உண்மை தான்.. ஆசிரியர் மாணவர்களும் நல்ல கட்டுப்பாடு. அதற்கு பிறகு எல்லாம் ஒரே மேய்ச்சல்.   அதிபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    • எங்களுக்கு தகவல்கள் துண்டு துண்டாகவே கிடைக்கின்றன. முழுமையான தகவல்களுடன் செய்தி வருவதும் குறைவு, செய்தியை பிரசுரம் செய்பவர்களும் அக்கறை எடுப்பது இல்லை. செய்தியை கிரகிப்பவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட  அறிவுடன் தமக்கு தெரிந்ததை விளங்கிக்கொள்கின்றார்கள்.  கல்வித்திணைக்களத்தின்/பரீட்சை திணைக்களத்தின் பங்கு இங்கு உள்ளது. நான் நினைக்கின்றேன் விசாரணைகளின் பின் பரீட்சை முடிவுகள் வெளிவிடப்படும். அல்லது இம்மாணவர்களுக்கு மீண்டும் பிரத்தியேக பரீட்சை வைக்கவேண்டும்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.