Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியலுக்கு விடைகொடுக்க தயாராகும் ரணில்?

Featured Replies

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிக விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, கட்சியின் தலைமைப்பதவியை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது.

கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களில் கருத்துக்களுக்கு எப்போதும் செவிகொடுக்கும் தலைவர் என்ற ரீதியில் கட்சியின் தலைமை பதவியை கைவிடுவதற்கு தான் தயாராக உள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.

2010 மற்றும் 2015 ஆம் வருடங்களில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பெரும்பான்மையானவர்களின் கோரிக்கைக்கு அமையவே வேட்பாளராக நிறுத்தியதாகவும், இம்முறை பெரும்பான்மையினரின் கோரிக்கைக்கு அமையவே முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு வாய்ப்பு வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அரசயலகக-வடகடகக-தயரகம-ரணல/175-241511

  • தொடங்கியவர்

தலைமைத்துவம் குறித்து ரணிலின் தீர்க்கமான தீர்மானம்

(ஆர்.யசி)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியில் தொடர்ந்தும் இருக்கப்போவதில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தைரியமாக முன்னெடுக்க வேண்டுமென அவர் அறிவுரை வழங்கியதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து கட்சியின் சகல தரப்புடனும் கலந்துரையாடி வெகு விரைவில் தீர்மானம் எடுப்பதாகவும் அவர் கூறினார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் கூறினார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் தொடர்ந்தும் இருக்க ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்க்கவில்லை என்பதை அவர் தெளிவாக கூறியுள்ளார்.  அவர் குறித்து சிந்திக்க வேண்டாம் என்ற அறிவுரைகளை எமக்கு வழங்கியுள்ளார். எனினும் கட்சியாக பிளவுபடாது, முரண்பாடுகளை ஏற்படுத்தாத வகையில் எப்போதும் இணைத்து பயணிக்க தான் தயாராக இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியதாகவும் அவர் இதன்போது கூறினார்.

https://www.virakesari.lk/article/69710

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே ஓய்வுக்கு செல்லும் ரணிலிடம்   மன்றாட்டமாய் கேட்க்கிரம் இங்கும் இரண்டு பேர் சம்பந்தன் சுமத்திரன் என்ற பெயரில் இரண்டு இருக்கு கூட்டிக்கொண்டு போனால் தமிழ் இனம்  உங்களுக்கு கடமைபட்டு இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ampanai said:

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிக விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் இருந்திருந்து உள்ளவனுக்கெல்லாம் முதுகில் குத்தாமல் வெளியேறினால் நல்லது தானே.
எப்போதோ வெளியேறியிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
47 minutes ago, பெருமாள் said:

அப்படியே ஓய்வுக்கு செல்லும் ரணிலிடம்   மன்றாட்டமாய் கேட்க்கிரம் இங்கும் இரண்டு பேர் சம்பந்தன் சுமத்திரன் என்ற பெயரில் இரண்டு இருக்கு கூட்டிக்கொண்டு போனால் தமிழ் இனம்  உங்களுக்கு கடமைபட்டு இருக்கும் .

கனக்க வேண்டாம்...  எனக்கும் உங்களுக்கும் இடையிலை பத்து ரூவாய் பந்தயம். நான் சொல்லுறன் சம்பந்தன் சுமந்திரனை கனவிலையும் கலைக்கேலாது. நீங்கள் என்ன சொல்லுறியள்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அப்படியே ஓய்வுக்கு செல்லும் ரணிலிடம்   மன்றாட்டமாய் கேட்க்கிரம் இங்கும் இரண்டு பேர் சம்பந்தன் சுமத்திரன் என்ற பெயரில் இரண்டு இருக்கு கூட்டிக்கொண்டு போனால் தமிழ் இனம்  உங்களுக்கு கடமைபட்டு இருக்கும் .

கருணாநிதி மாதிரி பதவியில் இருந்தே ஒன்றடியாக இளைப்பாற வேண்டும்.

49 minutes ago, குமாரசாமி said:

கனக்க வேண்டாம்...  எனக்கும் உங்களுக்கும் இடையிலை பத்து ரூவாய் பந்தயம். நான் சொல்லுறன் சம்பந்தன் சுமந்திரனை கனவிலையும் கலைக்கேலாது. நீங்கள் என்ன சொல்லுறியள்? 😎

நான் சொல்லுரன் இரண்டு பேரையும் கலைக்கேலாது.

ஏலுமா?

ஏலாது

ஏலுமென்றால்

பண்ணிப் பார்.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அப்படியே ஓய்வுக்கு செல்லும் ரணிலிடம்   மன்றாட்டமாய் கேட்க்கிரம் இங்கும் இரண்டு பேர் சம்பந்தன் சுமத்திரன் என்ற பெயரில் இரண்டு இருக்கு கூட்டிக்கொண்டு போனால் தமிழ் இனம்  உங்களுக்கு கடமைபட்டு இருக்கும் .

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு லாப நஷ்ட்டம் இல்லை என்றாலும் 
இனியாவது ஐ தே கடைசி கொஞ்சம் தேறும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.