Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் வெளியாகும் முழு நீள திரைப்படத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் வெளியாகும் முழு நீள திரைப்படத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்

_22794_1576302539_EBD22F0B-D839-44E4-85C6-7AFA13F5F324.jpeg

மட்டக்களப்பில் இருந்து வெளியாகும் முழு நீள திரைப்படத்திற்கு ஈழ தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பில் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ள வேட்டையன் என்னும் முழு நீளத்திரைப்படம் எதிர்வரும் 19ஆம் திகதி மட்டக்களப்பில் திரையிடப்படவுள்ளது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இளம் கலைஞர்களின் முயற்சியினால் முற்றுமுழுதாக தென்னிந்திய திரைப்படத்திற்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் இயக்குனர் நா.விஸ்ணுஜன் தலைமையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த விஸ்ணுஜன்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக இந்த முழு நீள திரைப்படத்தினை உருவாக்கியுள்ளோம்.இந்த திரைப்படத்தினை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 10.30க்கு கல்லடி சாந்தி திரையரங்கில் வெளியிடவுள்ளோம்.
இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளராக நோர்வேயினை சேர்ந்த பரணிதரன் என்பவர் இருக்கின்றார்.அவரின் சிறிய வயது ஆசையினை எங்களுடன் இணைந்து இன்று நிறைவுசெய்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே செய்யப்பட்டுள்ளது.அத்துடன் படப்பிடிப்பின் தொழில்நுட்பம்,இசையமைப்பு உட்பட அனைத்து செயற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மணித்தியாலங்களைக்கொண்டதாக படம் உருவாக்கப்பட்டுள்ளது.உண்மைச்சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு தற்போதைய காலத்தில் பெண்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசிகளினால் எதிர்நோக்கும் பிரச்சினையை பேசுவதாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் நடிகர் நடிகைகள் அனைவரும் மட்டக்களப்பினை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.நிறையக்கலைஞர்கள் இந்த திரைப்படத்திற்காக பணியாற்றியுள்ளனர்.
மட்டக்களப்பில் இந்த திரைப்படத்தினை உருவாக்கமுற்பட்டபோது பல சாவல்களை நாங்கள் எதிர்கொண்டோம்.எங்களுக்கு சரியான அங்கீகாரம் இங்கு கிடைக்கவில்லை.எங்களது அடையாளங்களை கொண்டுவரமுடியாத நிலையில் தென்னிந்திய சினிமாவில் எமது மக்கள் மூழ்கியுள்ளதன் காரணமாக அதன் ஊடாகவே எமது சினிமாத்துறையினை கொண்டுவரவேண்டிய நிலையேற்பட்டது.தொழில்நுட்ப வசதி மற்றும் கமரா,ஸ்ரூடியோ வசதிகள் மட்டக்களப்பில் இல்லாத நிலையே உள்ளது.இவற்றினையெல்லாம் தாண்டி இந்த திரைப்படத்தினை உருவாக்கியுள்ளோம்.
எதிர்காலத்தில் மட்டக்களப்பு மற்றும் இலங்கையின் அடையாளத்தினைக்கொண்டதாக சினிமாக்களை தயாரிப்போம்.இந்த திரைப்படம் நோர்வேயில் திரையிடப்படவுள்ளது.புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு வழங்கினால் ஏனைய நாடுகளிலும் இதனை திரையிடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படும்.
இந்த திரைப்படம் மூலம் கிடைக்கும் பணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பயன்படுத்தவுள்ளோம்.
எனவே எமது இந்த மூழுநேர வேட்டையன் திரைப்படத்திற்கு வடகிழக்கு உட்பட புலம்பெயர் தமிழர்கள் தமது ஆதரவினை வழங்கவேண்டும் என தெரிவித்தார்.
 

http://www.battinaatham.net/description.php?art=22794

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை பார்த்தபிறகுதன் கருத்தை சொல்லலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.படம் வெற்றி பெறட்டும்.......!   😁

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

இது இந்த பட பாட்டு இல்லை ...எம்மவரின் பாடல்...எங்கே இணைப்பது என்று தெரியாமல் இதில் இணைத்தேன் ...நன்றாக இருக்கின்றது...உங்கள் ஆதரவைக் கொடுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரதி said:

 

இது இந்த பட பாட்டு இல்லை ...எம்மவரின் பாடல்...எங்கே இணைப்பது என்று தெரியாமல் இதில் இணைத்தேன் ...நன்றாக இருக்கின்றது...உங்கள் ஆதரவைக் கொடுங்கள் 

பாட்டுக்கும் காட்சிக்கும் தொடர்பு இல்லாமலிருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பாட்டுக்கும் காட்சிக்கும் தொடர்பு இல்லாமலிருக்கு

அவர்களை பாராட்டி இன்னும் ஊக்கிவிக்கலாம் என்பது என் கருத்து.😎

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

அவர்களை பாராட்டி இன்னும் ஊக்கிவிக்கலாம் என்பது என் கருத்து.😎

எம்மவர்கள் மிக நன்றாகப் பலபாடல்களைச் செய்கின்றனர். எத்தனை அழகானவர்கள் நடிகர்கள் எம் தேசத்திலிருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு வெள்ளைக்காரர்களை, மற்றவர்களையும் போட்டிருப்பதனால் இந்தப் பாடல்க் காடசிகள் எனக்குப் பிடிக்கவில்லை குமாரசாமி .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எம்மவர்கள் மிக நன்றாகப் பலபாடல்களைச் செய்கின்றனர். எத்தனை அழகானவர்கள் நடிகர்கள் எம் தேசத்திலிருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு வெள்ளைக்காரர்களை, மற்றவர்களையும் போட்டிருப்பதனால் இந்தப் பாடல்க் காடசிகள் எனக்குப் பிடிக்கவில்லை குமாரசாமி .

தெற்காசியரின் தவறான கற்பிதங்களை சிறிது சிறிதாகத்தான் களைய வேண்டும். அவசரப்படக் கூடாது.

முயற்சி வெற்றிபெற உளமார்ந்த வாழ்த்துக்கள் முயற்சியாளர்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை வரிகளும், காட்சி அமைப்பும் அசத்தலாய் இருக்கின்றது.அவர்களின் முயற்சி வெற்றியளிக்கட்டும்.....!  👍

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரது கருத்திற்கும் நன்றி...காட்சியமைப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...போகப் போக இன்னும் சிறப்பாக செய்வார்கள் என்று எதிர் பார்க்கலாம்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.