Jump to content

வடகொரியாவின் கிறிஸ்மஸ் பரிசு தயாரா? அதிர்ச்சியில் அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

missile-gty-ml-191031_hpEmbed_2_3x2_992-720x450.jpg

வடகொரியாவின் கிறிஸ்மஸ் பரிசு தயாரா? அதிர்ச்சியில் அமெரிக்கா

சர்வதேசத்தின் கருத்துகளையும், அறிவுறுத்தல்களையும் செவிமடுக்காது செயற்பட்டுவரும் வடகொரியா, ஏவுகணைகளை உருவாக்குவதற்கான தளபாடங்களின் உற்பத்தியை விரிவுபடுத்துவதாகத் தெரிகின்றது.

இந்த மாதம் 31ஆம் திகதிக்குள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கு ‘கிறிஸ்மஸ் பரிசாக அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக வட கொரியா எச்சரித்துள்ள நிலையில், இந்த செய்தியானது அமெரிக்காவை சற்று அச்சமடைய வைத்துள்ளது.

வட கொரியாவில் பாதுகாப்புத் தளபாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருவது கடந்த 19ஆம் திகதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 7ஆம் திகதி எடுக்கப்பட்ட படங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது எடுக்கப்பட்டுள்ள படத்தில் கூடுதல் கட்டடங்கள் இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. தடையையும் மீறி அணு ஆயுதங்களையும், நீண்ட தொலைவு ஏவுகணைகளையும் வட கொரியா சோதித்து வந்தது. அதற்குப் பதிலடியாக ஐ.நா. பாதுகாப்பு சiபியிலும், அமெரிக்காவும் அந்த நாடு மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இந்தச் சூழலில், தனது அணு ஆயுதங்களையும், சக்தி வாய்ந்த ஏவுகணையையும் கைவிடுவதாக வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் அறிவித்தார். அதனை ஏற்றுக் கொண்ட அமெரிக்க தலைவர் டொனால்ட் ட்ரம்ப், இதுகுறித்து கிம் ஜோங்-உன்னை 3 முறை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எனினும், வட கொரியா மீதான பொருளாதாரத் தடையை உடனடியாகத் தளர்த்த ட்ரம்ப் மறுத்ததையடுத்து, இருதரப்பு பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து,இருநாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், இருநாடுகளும் பேச்சுவார்த்தையை கைவிடுவதாக அறிவித்தன. அதுமட்டும் இன்றி இந்த அறிவிப்பை வெளியிட்ட ஒரு வாரத்துக்குள் அடுத்தடுத்து 2 முறை முக்கிய சோதனைகளை நடத்தி வடகொரியா அதிரவைத்தது.

இதற்கிடையில், வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வேண்டுமென, ஐக்கிய நாடுகள் சபையிடம் ரஷ்யாவும், சீனாவும் வலியுறுத்தியுள்ளன.

http://athavannews.com/வடகொரியாவின்-கிறிஸ்மஸ்-ப/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Donald-Trump-3.jpg

வட கொரியாவின் கிறிஸ்மஸ் எச்சரிக்கையை வெற்றிகொள்ள அமெரிக்கா தயார் – ட்ரம்ப் பதிலடி

வட கொரியாவின் “கிறிஸ்மஸ் பரிசு” பற்றிய எச்சரிக்கையை சமாளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கு ‘கிறிஸ்மஸ் பரிசாக அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக வட கொரியா எச்சரித்துள்ள நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

மார்-எ-லாகோ விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆச்சரியம் என்ன என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம், அதை நாங்கள் வெற்றிகரமாக சமாளிப்போம். அத்தோடு என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

சிலவேளைகளில் இது ஒரு நல்ல பரிசாக கூட இருக்கலாம், ஒரு ஏவுகணை சோதனைக்கு மாறாக அவர் எனக்கு ஒரு அழகான குவளை அனுப்பும் நடவடிக்கையாக கூட இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சிங்கப்பூரில் ட்ரம்ப் மற்றும் வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன் இடையே கடந்த ஆண்டு உச்சிமாநாட்டின் போது எட்டப்பட்ட ஒப்பந்தங்களை விரைவில் செயற்படுத்த “உறுதியான நடவடிக்கைகளை” எடுக்குமாறு வொஷிங்டனை சீனா வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர், “ஒரு நிரந்தர சமாதான ஆட்சியை நிறுவுவதற்கும் கொரிய தீபகற்பத்தில் முழுமையான அணுசக்தி மயமாக்கலை உணர்ந்து கொள்வதற்கும் சாத்தியமான ஒரு உறவுப்பாலத்தை உருவாக்க வட கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

http://athavannews.com/u-s-ready-to-deal-with-any-north-korean-christmas-gift-trump/

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் ஆறாவது படையணையாம் விண்வெளி படையை அமெரிக்க நாடு அமைத்து அதற்கு பணமும் தந்து முன்னெடுத்து வருகின்றது. 

இதற்கு சீனா, உருசியா மற்றும் இந்தியாவாக இருந்தாலும் வட கொரியாவும் ஒரு இலக்குத்தான். 

உலகம் அறிந்த ஜிபி.எஸ். இற்கு மாற்றாக ஒரு தொழில்நுட்பத்தையும் இதற்கு பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகின்றது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ampanai said:

அமெரிக்காவின் ஆறாவது படையணையாம் விண்வெளி படையை அமெரிக்க நாடு அமைத்து அதற்கு பணமும் தந்து முன்னெடுத்து வருகின்றது. 

இதற்கு சீனா, உருசியா மற்றும் இந்தியாவாக இருந்தாலும் வட கொரியாவும் ஒரு இலக்குத்தான். 

உலகம் அறிந்த ஜிபி.எஸ். இற்கு மாற்றாக ஒரு தொழில்நுட்பத்தையும் இதற்கு பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகின்றது.  

தோழர் கிருஸ்மஸ் பரிசு எண்டு பல்ப் கொடுக்கினம் .. 

இம்முறையாவது  பூமி சுமை குறையுமா..? 😢

Link to comment
Share on other sites

6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் கிருஸ்மஸ் பரிசு எண்டு பல்ப் கொடுக்கினம் .. 

இம்முறையாவது  பூமி சுமை குறையுமா..? 😢

இதெல்லாம் டியூப் பல்ப்ப்புக்கள். வெளிச்சம் தரும் ஆனாலும் தராது. 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டெல்லியில் 7 தொகுதிகளிலும் பா.ஜ.கவிற்கு அமோக வெற்றி வாய்ப்பு! டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது. இந்திய மக்களைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், டெல்லியில் இன்று காலை 11 மணி நிலவரப்படி, இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரசும் ஆம் ஆத்மியும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. அத்துடன், பா.ஜ.க பல சுற்று வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை பெற்று நிலையில், பா.ஜ.க வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385894
    • இன்று எனக்கு அப்பா இல்லை, அம்மா இல்லை, கூடப்பிறந்த சகோதரங்கள் யாருமே இல்லை. தனித்துவிட்டேன் என்று கலங்கினேன், மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்தான் உலகம் என்றிருந்தேன். என் பதிவை இந்த யாழ்களத் திரியில் பார்த்தபின்புதான் எனக்கு எத்தனை சொந்தங்கள் பந்தங்கள் என்று அறிந்து மகிழ்ந்தேன் வியந்தேன். என்னைத் தேடிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்!! எனக்க இப்போ வயது கீழிறங்கிப் 18 ஆகிவிட்டது.😍😁🙏
    • திருச்சி தொகுதியில் துரை வை .கோ முன்னணியில்  தருமபுரியில் செளம்யா அன்புமணி பா ம க முன்னணியில் 
    • 11 மணி நிலவரம் தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி முன்னிலை நிலவரம் திமுக - 39 (முன்னிலை) அதிமுக - 0 பாஜக - 1 நாம் தமிழர் - 0 மற்றவை - 0 தருமபுரியில் பா.ம.க. சவுமியா அன்புமணி ஒருவர்தான் திமுக கூட்டணியைத் தவிர்த்து முன்னிலையில் நிற்கின்றார்
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.