Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்களில் மாற்றங்கள் [2020]

Featured Replies

'நாம் தமிழர் அரசியல் - பாகம் 2' என்ற தலைப்பிலிருந்து அண்மையில் பதியப்பட்ட விளம்பர அறிவிப்புப் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

  • Replies 65
  • Views 15.7k
  • Created
  • Last Reply

உற‌வுக‌ளே விழிப்புன‌ர்வுட‌ன் இருங்கோ , காணொளி இணைப்பு எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2 திரியின் போக்கு முற்றிலும் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத் திரியாகவும், அக் கட்சியின் காணோளிகள் அனைத்தையும் மீண்டும் மறு பிரதி செய்யும் திரியாகவும் மாறிக் கொண்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. இப் போக்கின் உச்சக்கட்டமாக நாம் தமிழர் கட்சியில் எப்படி இணைவது எனும் 100 வீத கட்சி பிரச்சார காணொளியும் நேற்று இணைக்கப்பட்டு எம்மால் நீக்கப்பட்டது.

இந்த திரியில் இனிமேல்

1. நாம் தமிழர் கட்சியின் பிரச்சார காணொளிகள் இணைப்பதை முற்றாகத் தவிர்க்கவும்
2. தனிமனித துதி பாடும் காணொளிகள், உரைகள், கருத்துகளை தவிர்க்கவும்

இந்த போக்கின் இன்னொரு அம்சமாக "ஈகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்" எனும் திரி யாழில் வாழிய வாழிய பகுதியில் இணைக்கப்பட்டு இருந்தது (இப்பொழுது எம்மால் நீக்கப்பட்டு விட்டது). யாழ் உறுப்பினர் மற்றும் அவர்களின் குடும்ப உறவுகள் அல்லாத, மாவீரர்கள் மற்றும் போற்றுதலுக்குரியவர்கள் அல்லாதவர்களின் பிறந்த நாள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு யாழில் வந்து திரி திறந்து வாழ்த்து சொல்வதை தவிர்க்கவும்.

நன்றி

  • தொடங்கியவர்

குறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு எனும் திரியில் இணைக்கப்படும் தமிழக அரசியல் பற்றிய காணொளிகளின் நம்பகத்தன்மை சந்தேகமாக உள்ளதால் திரி பூட்டப்பட்டுள்ளது. 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மேதகு திரைப்பட முன்னோட்டம் எனும் திரியில் இருந்து வெளி அமைப்பு ஒன்றுக்கு நிதிசேர்க்க உதவும் நோக்கில் இணைக்கப்பட்ட முகநூல் பதிவு நீக்கப்பட்டுள்ளது.

இத்தகைய வெளி அமைப்புக்களுக்கு பணமீட்ட உதவும் பதிவுகள் முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.

 

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

"சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மேலும் 15ஆண்டுகள் பதவியில் நீடிக்க ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல்!"  உண்மைக்கு புறம்பான தகவல்களை கொண்டுள்ளதால் அத்திரி மூடப்படுகிறது.

நாம் தமிழர் திரியில் உள்ளடக்கம் பற்றிய விவரம் இல்லாமல் இன்று இணைக்கப்பட்ட அனைத்து காணொளிகளும் நீக்கப்பட்டன,

யாழ் கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 4.0: புதிய விதி 

6. காணொளிகள்

காணொளிகளை இணைக்கும்போது அவற்றின் உள்ளடக்கம் பற்றிய சிறு விளக்கத்தை சுருக்கமாகக் கட்டாயம் குறிப்பிடுதல் வேண்டும். கள உறுப்பினர்களின் சொந்தமான காணொளிகளுக்கு இந்த விதி தளர்த்தப்படுகின்றது. அத்துடன் அரும்பாலை [இளைப்பாறுங்களம்] பகுதியில் இணைக்கப்படும் காணொளிகளுக்கும் இவ்விதிமுறை தளர்த்தப்படுகிறது. ஆயினும் திரியொன்றில் (குறிப்பாகப் பொழுதுபோக்குத் திரிகளில்)  சிறுகால இடைவெளியில்  அளவுக்கதிகமாக காணொளிகளைத் தொடர்ச்சியாகப் பதிவது தவிர்க்கப்படல் வேண்டும். 

 

  • தொடங்கியவர்

தொடர்ச்சியாக ஒரு அரசியல் கட்சி சார்ந்த பரப்புரை காணொளிகளை பதிந்து வருவதாலும், ஏற்கனவே இணைக்கப்பட்ட காணொளிகளை மீண்டும் இணைப்பதாலும், தம் நம்பிக்கைகளுக்கு மாறான கருத்துக்களை வைப்பவர்களை பண்பற்ற முறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சிப்பதாலும், யாழ் களம் கருத்தாடல் களம் என்பதை உணராமல் திரியில் இருந்து ஒதுங்குமாறு கோரிக்கை வைப்பதனாலும் நாம் தமிழர் அரசியல் - பாகம் 2 திரி நிரந்தரமாகப் பூட்டப்படுகின்றது.

இனி வருங்காலத்தில் அரசியல் கட்சி சார்ந்த பிரச்சாரப் பதிவுகளையும், பரப்புரைக் காணொளிகளையும் புதிய திரிகள் திறந்து பதிவதனையும் கள உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும்.

 

தொடர்பான களவிதிகள்:

  • சக கருத்துக்கள உறுப்பினர்களோடு நட்போடும், பண்போடும் கருத்தாடல் செய்யவேண்டும்
  • சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ உடற்தோற்றம், கல்வி, சமூகநிலை, பால்நிலை, இன்ன பிற நிலைகளைச் சுட்டி  பண்பற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் விமர்சிப்பதும், நையாண்டி செய்வதும் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.
  • யாழ் கருத்துக்களம் உலகத் தமிழர்களை, அவர்கள் நம்பும்/ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் ஒன்றிணைக்கும் தளம் என்பதால், அரசியல் கட்சிகளின் நேரடிப் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் போன்றவை எழுத்தில், படங்களில், காணொளிகளில், சமூகவலை இணைப்புக்களில் பதிதல் முற்றாகத் தவிர்க்கப்படல்வேண்டும்.
  • அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வமான இணையத்தளங்களில் இருந்தோ, சமூகவலை தளங்களில் இருந்தோ கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • அரசியல் கட்சிகளின் ஆதரவாக ஒரு பக்கச் சார்பானதாகக் காணப்படும் கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்
  • காணொளிகளை இணைக்கும்போது அவற்றின் உள்ளடக்கம் பற்றிய சிறு விளக்கத்தை சுருக்கமாகக் கட்டாயம் குறிப்பிடுதல் வேண்டும். 
  • யாழ் கருத்துக்களத்தில் குழுக்களாக இணைந்து இயங்குவதையும், ஆரோக்கியமற்ற குழுநிலைக் கருத்தாடல்களையும் தவிர்த்தல் வேண்டும். கருத்துக்கள விதிகளைச் சட்டை செய்யாது தொடர்ந்தும் குழுக்களாக இயங்குவது அவதானிக்கப்பட்டால் விதிகளுக்கு அப்பால் சென்று கடுமையான தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

ஈபிடிபி கட்சியின் பிரச்சாரத் தளத்தில் இருந்து பதியப்பட்ட ஒரு செய்தி அகற்றப்படுகின்றது. எந்த அரசியல் கட்சியினதும் உத்தியோகபூர்வ மற்றும் பினாமித் தளங்கள் (என்று கருதப்படுவனவற்றில்) இருந்து செய்திகளை / ஆக்கங்களை ஒட்டுவதை முற்றாகத் தவிர்க்கவும்.

  • தொடங்கியவர்

வடக்கில் 9 ஆயிரம் தமிழ் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க திட்டம்..! ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையிலான கூட்டத்தில் பேச்சு.. எனும் திரியிலிருந்து கருத்தாடலின் திசையைத் திருப்பும் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

 

 

  • தொடங்கியவர்

தமிழ்நாட்டு அரசியல் காணொளிகள் எனும் திரியில் அரசியல் கட்சி சார் பரப்புரை காணொளிகள் நீக்கப்பட்டு திரியும் பூட்டப்பட்டுள்ளது.

 

  • அரசியல் கட்சிகளின் ஆதரவாக ஒரு பக்கச் சார்பானதாகக் காணப்படும் கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • தொடங்கியவர்

தீபாவளி பற்றி சீமான் எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • கள உறுப்பினர்கள் சமூகப் பொறுப்புடனும், கருத்துக்களத்தின் தரத்தினை பேணும் வகையிலும் பொறுப்பானவர்களாக இருத்தல்வேண்டும்.
  • 3 weeks later...
  • தொடங்கியவர்

யாப்பாணச் சாமி எனும் சிறுகதையில் பாலியல்ரீதியிலான வசைச்சொற்கள் காணப்பட்டமையால் நீக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

அங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர் நிரோஷிடம் பொலிஸ் வாக்குமூலம் எனும் திரியில் அநாவசியமான கருத்துக்கள் பல நீக்கப்பட்டுள்ளன. 

 

  • தொடங்கியவர்

 

அண்மையில் கள விதிமுறைகளை மீறும் கருத்துக்களும், அப்படியான கருத்துக்களை நிர்வாகத்திற்கு முறைப்பாடு முறை மூலம் தெரியப்படுத்துவதை இழிவுபடுத்தும் கருத்துக்களும், நிர்வாகம் பக்கச்சார்பாக நடக்கின்றது என திரிகளில் எழுதப்பட்ட கருத்துக்களும் பல திரிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

யாழ் கருத்துக்கள விதிமுறைகளை மீறும் பதிவுகளை, திரிகளில் முறையிடுவதைத் தவிர்த்து, நேரடியாக நிர்வாகத்துக்கு முறைப்பாட்டு முறை (Report) மூலம் அறியத்தரவேண்டும். இது உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து கருத்துக்களத்தின் தரத்தினைப் பேண உதவும் என்பதைக் கள உறுப்பினர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். அதைவிடுத்து முறைப்பாடு செய்வதையே “பெட்டிசம் போடுதல்” என்று இழிவுபடுத்துவது மிகவும் பொறுப்பற்ற செயல்.

மட்டுறுத்தப்பட்ட கருத்துகள் தொடர்பாக அல்லது நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக முரண்பாடுகள் இருப்பின் மட்டுறுத்துனர்களிடம் முறைப்பாட்டு முறை மூலமாக அல்லது தனி மடலில் விளக்கம் கோரலாம். அதை விடுத்து திரிகளிலும், திண்ணையிலும் விமர்சிப்பது யாழ் கள நிர்வாகச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்.

யாழ் கருத்துக்களத்திலும் திண்ணையிலும் எழுதும் ஒவ்வொருவருக்கும் சமூகப்பொறுப்பு இருக்கிறது என்பதை உணராமல் உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை எழுதுவதும், ஆக்கபூர்வமான கருத்தாடல்களைத் தொடராமல் வெறுமனே மற்றவரைத் தாக்கவேண்டும் என்பதற்காகவே கருத்துக்களை பதிவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நாம் பலமுறை அறிவுறுத்திவிட்டோம். பலதடவைகள் எச்சரித்துவிட்டோம். இதற்குமேலும் நிர்வாகம் பொறுமைகாக்கும் - நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கவேண்டாம்.

கருத்துக்கள விதிமுறைகளுக்கு முரணாகவும், மலினத்தனமாகவும் கருத்துக்களை வைப்பவர்கள் மீதும் இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இங்கு புதிய உறுப்பினர்கள், நீண்டகால உறுப்பினர்கள், முன்னர் நல்ல கருத்துக்கள் எழுதியவர் என்கிற தயவு எதுவும் பார்க்கப்படமாட்டாது.


யாழ் கருத்துக்களம் என்பது கள உறுப்பினர்களிடையே பகையுணர்வை வளர்ப்பதற்கான களமில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கும் - எல்லோரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தால் யாழ் கருத்துக்களம் என்பது அவசியமில்லை. எனவே, கருத்துக்களத்தில் ஏற்படும் கருத்தாடல் முரண்பாடு என்பது பகையுணர்வாக வளரக்கூடாது என்பதே எமது அவா.

அந்தவகையில், உங்கள் "சண்டைகளுக்கு" - "பகையுணர்வுக்கு" கருத்துக்கள திரிகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம். இது ஒரு கருத்தாடற் களம் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றோம்.

கருத்துக்களில் இருக்கும் முரண்பாடுகள் தாண்டி அனைவரும் நட்பு பாராட்ட வேண்டும் என்பதே எமது அவா.

உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை "மறைமுகமாகவோ, நேரடியாகவோ" களத்தில் எழுதாதீர்கள். மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஒருவரைத் தாக்கி எழுதுவதைத் தவிர்க்கவும்.

கருத்துக்களம் சார்ந்த பிரச்சனைகளாக இருப்பின் நிர்வாகத்தினருக்கு அறியத்தாருங்கள்.
இவையனைத்துமே கருத்துக்கள விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இருந்தும் சில உறுப்பினர்கள் பொறுப்பற்று செயற்படுவது வருத்தமளிக்கிறது. நாம் யாரையும் நேரடியாக சுட்டிக்காட்ட விரும்பவில்லை. அனைவரும் நட்போடும், பொறுப்போடும் கருத்துக்களத்தை அடுத்தகட்ட வளர்ச்சிப்பாதையில் நகர்த்திச்செல்ல ஒத்துழைக்கவேண்டும் என்பதே எமது விருப்பு.

கருத்துக்கள விதிமுறைகளுக்கு உட்பட்டு சுதந்திரமான கருத்தாடலை செய்ய இங்கு அனுமதியுண்டு. கருத்துக்கள விதிமுறைகளை இதுவரை வாசிக்காதவர்கள் மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். கருத்துக்கள விதிமுறைகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லையெனின் கருத்துக்களத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம் அல்லது கருத்துக்களை எழுதாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.