Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டாவின் நேரடிக் கண்காணிப்பில் 12 விடயங்கள் உடன் அமுல்படுத்தப்பட்டது மக்களோடு மக்களாக 2,500 பொலிஸார் அவதானிப்பு

Featured Replies

ஜனாதிபதி கோட்டாவின் நேரடிக் கண்காணிப்பில் 12 விட யங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட் டுள்ளதாக தென்னிலங்கை ஊட கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1. குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டால் 10 வருட கடூழியச் சிறை.

2.முச்சக்கரவண்டிகள் இற க்குமதி செய்வது முற்றாகத் தடை.

3. பாடசாலை அனு மதியின்போது நேரடியாகவோ மறைமுகமாகவோ லஞ்சம் கோரப்பட்டால் 48 மணித்தி யாலத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

4.பகிடிவதை செய்து சிக்கினால் 8 வரு டம் பரீட்சை எழுத தடை விதிக்கப் படும்.

5. பாராளுமன்ற உறுப்பினர் 80மூ மேல் அமர்வுகளில் சமுகமளித்திருத்தல் வேண்டும். தவறினால் 5 வருடங் களுக்கு எந்தவித வாக்கெடுப்பிற்கும் விண்ணப்பிக்க முடியாது.

6. அரச ஊழியர்கள் சேவை துஷ்பிர யோகம் செய்தால் 48 மணி நேரத்திற் குள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

7. ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர் போட்டியிட்டு 1  வீதத்திற்கு குறைவான வாக்குகளை பெறுவாரேயானால் 1 கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு தண் டப்பணமாக செலுத்த வேண்டும்.

8. அரசியல்வாதிகளின் சிபாரிசின் மூலம் வருபவர்களுக்கு வாழ் நாள் முழுதும் அரச சேவையில் இணையத்தடை.

9. வைத்தியரின் சிபாரிசு இல்லாமல் மருந்து வழங்கும் மருந்தகங்களில் அனுமதிப்பத்திரம் 48 மணித்தியாலத் திற்குள் ரத்துச் செய்யப்படும்.

10. சொத்துக்களை வாங்கி 5 வருடங் களுக்கு முன் விற்பனை செய்யப்பட் டால் விற்கப்படும் தொகையில் 50மூ வரியாக செலுத்தப்பட வேண்டும்.

11. மோட்டார் வாகன பொலிஸார் இரக சிய பொலிஸாரால் கண்காணிக்கப்படு வர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 48 மணி நேரத்திற்குள் பணி நீக்கம்.

12. தனியார் வைத்தியசாலையில் அற விடப்படும் கட்டணங்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும்.

இவை அனைத்தையும் மக்களோடு மக்களாக இருக்கும் 2500 இரகசிய பொலிஸார் அவதானிப்பர்.

வழமையாக மக்களை ஏமாற்றி மக்களை அடிமையாக நடத்திய அதிகாரிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.   

http://valampurii.lk/valampurii/content.php?id=20287&ctype=news

 

  • தொடங்கியவர்

இலஞ்சம் பெறுவோரை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை

அரசாங்க நிறுவனங்களில் சேவைகளைப்  பெற்றுக் கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் இலஞ்சம் பெறும் நபர்களை, அதே இடத்தில் வைத்துக் கைது செய்வதற்கான  விசேட நடவடிக்கைகளை  அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

lanjam.jpg

மேல் மாகாணத்தைக் கேந்திரமாகக் கொண்டு இதற்கென தனியான  பொலிஸ் பிரிவு ஒன்று செயற்பட்டு வருவதுடன், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் இதன் தலைமை அதிகாரியாகச் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாகச் செயற்படும் இந்த விசேட பிரிவில் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பொதுமக்களிடம் இலஞ்சம் பெற்றுவருவதற்கான குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படும் பல நிறுவனங்கள் தொடர்பில், அரசாங்கத்துக்கு தற்போது தகவல்கள் கிடைத்துள்ளதைக் கவனத்தில் கொண்டே, இவ்விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/72661

ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு அது பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடனாவது நிறைவேற்றப்பட்டு இருத்தல் வேண்டும். ஆனால் இந்த சட்டங்கள் எதுவும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவோ, விவாதிக்கப்பட்டதாகவோ ஒரு செய்தியும் வரவில்லை. சனாதிபதிக்கும் இப்ப இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு இவ்வாறு நிறைவேற்றப்படுவதும் சாத்தியமும் இல்லை.

கோத்தா பற்றிய பிம்பத்தை மேலும் பெரிதாக்கி, அதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் வெல்வதற்காக அரச தரப்பு சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளும் போலிப் பிரச்சாரம் போலிருக்கின்றது இது.

  • தொடங்கியவர்
4 hours ago, ampanai said:

இவை அனைத்தையும் மக்களோடு மக்களாக இருக்கும் 2500 இரகசிய பொலிஸார் அவதானிப்பர்

காவல்துறை ஆதாரத்துடன் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.

அப்பொழுது இந்த 'அதிரடி' மாற்றங்கள் உண்மையாக சட்டத்தில்  உள்ளனவா இல்லையா என தெரிந்துவிடும்.

ஆனாலும், அது தெரிவதற்கு முன்னர் தேர்தலில் வென்றுவிடலாம் 😞 

4 hours ago, ampanai said:

7. ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர் போட்டியிட்டு 1  வீதத்திற்கு குறைவான வாக்குகளை பெறுவாரேயானால் 1 கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு தண் டப்பணமாக செலுத்த வேண்டும்.

சுயேட்சையாக யாரும் போட்டியிட முடியாத நிலை !

  • கருத்துக்கள உறவுகள்

"குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டால் 10 வருட கடூழியச் சிறை"

இதன்படி பார்க்கும்போது குடிபோதையில் விபத்து நிகழ்ந்தால் மட்டுமே சிறை தண்டனை கிடைக்கும் என்றால் இந்த விதியால் எதுவித பயனும் இல்லை. உண்மையில் "குடிபோதையில் வாகனம் செலுத்தினால் 10 வருட கடூழியச் சிறை" என்றுதான் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2020 at 12:44 PM, நிழலி said:

ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு அது பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடனாவது நிறைவேற்றப்பட்டு இருத்தல் வேண்டும். ஆனால் இந்த சட்டங்கள் எதுவும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவோ, விவாதிக்கப்பட்டதாகவோ ஒரு செய்தியும் வரவில்லை. சனாதிபதிக்கும் இப்ப இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு இவ்வாறு நிறைவேற்றப்படுவதும் சாத்தியமும் இல்லை.

கோத்தா பற்றிய பிம்பத்தை மேலும் பெரிதாக்கி, அதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் வெல்வதற்காக அரச தரப்பு சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளும் போலிப் பிரச்சாரம் போலிருக்கின்றது இது.

இதில் பெரும்பான்மையானவை ஏற்கனவே சட்டத்தில் உள்ளவை தான்.

ஆனால் இதுவரை சட்டம் ஒழுங்கை சரியான வகையில் கையாளவில்லை.

இனியும் கையாள முடியாது.

இவர் சொல்வதை நடைமுறைப்படுத்டுவதாக இருந்தால் முதலில் மந்திரிமாரில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

On 1/7/2020 at 12:43 AM, ampanai said:

காவல்துறை ஆதாரத்துடன் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.

அப்பொழுது இந்த 'அதிரடி' மாற்றங்கள் உண்மையாக சட்டத்தில்  உள்ளனவா இல்லையா என தெரிந்துவிடும்.

ஆனாலும், அது தெரிவதற்கு முன்னர் தேர்தலில் வென்றுவிடலாம் 😞 

சுயேட்சையாக யாரும் போட்டியிட முடியாத நிலை !

இவை ஊடக செய்திகளே தவிர இன்னும் சடடமகவில்லை. இதை பாராளுமன்றில் நிறைவேற்றி வர்த்தமானியில் வெளியிடட பின்னர்தான் சடடமாகும். இப்போது யாரையும் தண்டிக்கவேண்டுமாக இருந்தால் இருக்கிறதான சடடத்தின்கீழ்தான் நடவடிக்கை எடுக்கலாம்.

சுயேட்ச்சியாக போட்டியிடுபவர் எதோ ஒரு நோக்குடன்தான் போட்டியிடுகிறாரே தவிர வெல்லும் நோக்கம் அவருக்கு இல்லை. கடந்த தேர்தலில் முப்பதுக்கும் மேட்படடோர் போட்டியிட்டு நேர காலம் பணத்தை வீணாக்கினார்கள். எனவே இப்படியாக கடுமையான நிபந்தனைகளை இடுவதன்மூலம் இந்த proxy வேட்பாளர்களை தடை செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2020 at 1:55 AM, ampanai said:

இவை அனைத்தையும் மக்களோடு மக்களாக இருக்கும் 2500 இரகசிய பொலிஸார் அவதானிப்பர்.

பாலுக்கு பூனையை காவல் வைத்த கதைதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.