Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்!

ranjan-ramanayke1.jpg

நாடாளுமன்றில் இன்று மாலை 6 மணிக்கு முன்னதாக தன்னிடம் இருக்கும் பல குரல் பதிவுகளை சமர்ப்பிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அரச தலைவர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள், அமைச்சர்களின் குடும்ப உறவுகள் என அனைவரின் குரல் பதிவுகளும் உள்ளன என ரஞ்சன் ராமநாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

அத்தோடு அவற்றினை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பதாகவும் குரல் பதிவுகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்காமல் அவற்றினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு காஞ்சனா விஜயசேகர தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, இந்த குரல்பதிவுகள் அடங்கிய இறுவெட்டு மற்றும் வன் தட்டு ஒரு குறிப்பிட்ட வங்கியில் பாதுகாப்பு லொக்கரில் இருப்பதாகவும் இன்று மாலை 6 மணிக்கு முன்னதாக சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.

http://athavannews.com/இன்று-முக்கிய-குரல்பதிவு/

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இவரது பாராளுமன்ற உரையை கேட்டவை பலர் இவர் நல்லவர் என்று சொல்லினம் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, ரதி said:

நேற்று இவரது பாராளுமன்ற உரையை கேட்டவை பலர் இவர் நல்லவர் என்று சொல்லினம் 🤣

ஏன் மொட்டை அடிச்சவராம்?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஏன் மொட்டை அடிச்சவராம்?

ஜெயிலுக்குள்ள வைச்சு மொட்டை அடிச்சிட்டாங்கள் போல இருக்கு ...அங்கே இருந்து தான் வந்தவர் 

மருதரின்ட ஹிருனிகாவின்ட  குரல் பதிவும் இருக்குதாம்😂

இன்னும் குரல் பதிவுகள் வெளியிடவில்லை। இரண்டு நாட்கள் வெளியில் விடடால் எல்லாவற்றையும் சமர்ப்பிப்பதாக கூறி இருக்கிறார்। இன்று அவரின் குரல் பதிவு சோதனை நடைபெற இருக்கிறது। 

  • கருத்துக்கள உறவுகள்

ஒலி பதிவுகளை வைத்து என்ன செய்வது அட போங்கப்பா..  😄

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஒலி பதிவுகளை வைத்து என்ன செய்வது அட போங்கப்பா..  😄

<ரஞ்சன் ராமநாயக்க>இந்த நொடியில் என் மனதில்…(22/01/20)

மதுபானசாலை பர்மிட் உள்ள 100 எம்பீக்கள் பற்றி சொன்னார். போதை தூள் வியாபாரம் செய்யும் 2 எம்பீக்களை பற்றி சொன்னார். எதனோல் இறக்குமதி செய்யும் 4 எம்பீக்களை பற்றி சொன்னார். மணல் பர்மிட் உள்ள 75 எம்பீக்களை பற்றி சொன்னார். சூது வியாபாரம் செய்யும் 1 எம்பீயை பற்றி சொன்னார். கொகெயின் புகைக்கும் எம்பீகளை பற்றியும் சொன்னார்.

பிரதமர் மகிந்தவுடன் நடத்திய உரையாடல்களை பற்றி சொன்னார். மகிந்தவுடன் நடத்திய மொத்தம் ஏழு உரையாடல்கள் இருப்பதாக சொன்னார்.

ஷாருக்கானை நோக்கி வீசப்பட்ட குண்டின் பின் யார் இருக்கிறார்கள் என எம்பி உதய கம்மன்பிலவிடம் கேட்கும்படி சொன்னார்.

கிரிகட் போட்டி முடிவுகளை நிர்ணயம் செய்கிறார் என எம்பி திலங்க சுமதிபாலவை பற்றி சொன்னார்.

பிரதமர் யோகம் கிடைக்கும் என்று ஜோசியர் சொன்னதால், தன்னை விவாகரத்து செய்து விட்டு, இன்னொரு அமைச்சரின் மனைவியை கல்யாணம் செய்த ஒரு அமைச்சரை பற்றி, அவரது முன்னாள் மனைவி சொன்னதை சொன்னார். இன்னமும் பல அமைச்சர்களின் மனைவிகள் பேசிய உரையாடல்களை பற்றி சொன்னார்.

அர்ஜுனா அலோசியசின் பென்த்ஹவுஸின் (Penthouse Apartment) கதவை தட்டிய போது திறந்த பெண்மணி யாருடைய மனைவி என சொன்னார்.

பிணைமுறி வழக்கின் பிரதான சந்தேக நபர் தனக்கு லஞ்சம் வழங்க பேசிய உரையாடல் பற்றி சொன்னார்.

இன்னமும் பல கேலோலி, காணொளி ஆதாரங்கள், உள்நாட்டு, வெள்நாட்டு பாதுகாப்பு பெட்டகங்களில் இருப்பதாகவும் சொன்னார்.

தன் மாமா விஜய குமாரதுங்கவை போல் தன்னையும் கொலை செய்தால், அந்த ஆதாரங்கள் உடன் வெளிவரும் வண்ணம், தான் ஏற்பாடு செய்து இருப்பதாகவும் ஒரு அதிர்ச்சி குண்டை அவர் சபையில் வீசினார்.

'எனது ஒலிநாடாக்களில் வெளியாகியுள்ள விடயங்களை பற்றி ஆராய ஒரு ஆணைக்குழு நியமியுங்கள். அனைத்து ஆதாரங்களையும் அள்ளி வழங்குகிறேன். ஆணைக்குழு நியமிக்க முடியுமா?' என ஜனாதிபதி, பிரதமர் இருவரை விளித்து ஒரு சவாலையும் ரஞ்சன் விடுத்தார்.

அவரது கைபேசியில் நிரந்தரமாக 'Recording App' ஐ 'On' செய்து வைக்க வேண்டிய தேவை இருந்ததால், தனிப்பட்ட உரையாடல்களும் பதிவாகி விட்டன என்று என்னிடம் சொன்னார். அதற்காக அவர் பொது மன்னிப்பும் கேட்டுகொண்டார்.

இனி அவரது தனிப்பட்ட உரையாடல்களை பற்றி எவரும் பெரிதும் அலட்டிக்கொள்ள போவதில்லை.

ஆனால், அவருடன் உரையாடிய, இன்றைய அரசின் பல, அன்றைய அரசின் ஒருசில, "பெரீய" மனிதர்கள் தான் ஆடிப்போயுள்ளனர்.

ரஞ்சன் என்ற பூதத்தை “ஜீபூம்பா” என மந்திரம் போட்டு ஜாடியிலிருந்து வெளியில் எடுத்தோர், இப்போது அதை மீண்டும் எப்படி ஜாடிக்குள் போடுவது என்ற மந்திரத்தை மறந்து தடுமாறுகின்றனர்.

பூதத்தையும் போட முடியாது. அவரையும் போட முடியாது. இதுதான் சிக்கல்.

ரஞ்சன் உண்மையை பேசி சுய விளக்கம் அளித்தார். தனக்கு சொந்த வீடு கூட இல்லை. தான் நினைத்திருந்தால், ரகசியங்களை விலை பேசி விற்றிருக்கலாம். அதை செய்யவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பின் பக்கத்திலேயே எப்போதும் இருந்தேன் என்றார்.

ரஞ்சன் பேசி முடித்த பிறகு, என்னிடம் வந்து, ‘சிறு குற்றம்’ ஒன்றை செய்ததால், இன்று தன்னுடன் சிறையில் இருக்கும், கொழும்பை சேர்ந்த நானறிந்த ஒரு நபரை பற்றி சொன்னார். அந்த கைதியின் குடும்பத்துக்கு உதவி செய்யும்படி அவர் என்னிடம் கூற சொன்னதாக, ரஞ்சன் என்னிடம் சொன்னார்.

“நானறிய இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இந்தளவு வெளிப்படுத்தல் (Revelation) உரையை நான் கேட்டதில்லை. நானும் 2001ம் ஆண்டு முதல் 15 வருடங்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறேன். நீ அடையாளம் காட்டிய மதுசாலை பர்மிட், போதை தூள், மணல் பர்மிட், எதனோல், சூது, கொகெயின் என்ற எந்தவொரு பாவச்செயலையும் செய்யாத அனைத்து கட்சிகளையும் சார்ந்த ஒரு சில எம்பிக்களின் நானும் ஒருவன் என்பதில் நான் பெருமை அடைகிறேன்” என்று கூறி நான் நண்பன் ரஞ்சனின் கையை குலுக்கினேன்.

Image may contain: 2 people
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.