Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசனம்

 

by : Dhackshala

Untitled-2.jpg

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை தமிழர்களை புறக்கணிக்கும் நடவடிக்கையாகும் என இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, வரலாற்று ரீதியாக சிங்களம் மாத்திரம் போதும் என்ற கொள்கை எமது நாட்டை எவ்வாறு அழித்திருந்தது என்பதை கடந்த காலத்தில் உணர்ந்திருந்தும் அந்த தவறை மீண்டும் செய்து விடக்கூடாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படுவதை எதிர்த்து இன்று (செவ்வாய்க்கிழமை) பொரளை சுற்றுவட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதத்தை இசைக்கும் வகையில் இலங்கை மனித உரிமைகள் செயற்பட்டாளர்கள் ஒன்றுகூடினர் .

இரு மொழிகளிலும் தேசிய கீதத்தை இசைத்த பின்னர், மனித உரிமைகள் செயற்பாட்டளர் சுவஸ்திகா அருள்லிங்கம் கூறுகையில்,

“இந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் தேசிய கீதம் பாட உரிமையுண்டு. சிங்கள மற்றும் தமிழ் இரண்டுமே இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளாக இருப்பதை அங்கீகரிக்கவேண்டும்.

இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் குறைகள் எந்த வகையிலும் மொழி பிரச்சினைக்குள் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதை முழுமையாக ஒப்புக்கொள்கிறோம்.

எவ்வாறாயினும் சிங்கள மொழி பேசாத மக்களை பாகுபாடு காட்டும் அல்லது புறக்கணிக்கும் அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

வரலாற்று ரீதியாக சிங்களம் மாத்திரம் போதும் என்ற கொள்கை எமது நாட்டை எவ்வாறு அளித்திருந்தது என்பதை கடந்த காலம் உணர்ந்திருந்தோம். இதுபோன்ற ஒரு வரலாறு மீண்டும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்த ஒன்றிணைவோம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/தமிழ்-மொழியில்-தேசிய-கீத-2/

  • கருத்துக்கள உறவுகள்

பாடப்பட்டதோ சிங்கள பெளத்த நாடொன்றின் தேசிய கீதம். இதற்கும் தமிழினத்திற்கும் உள்ள தொடர்பென்ன? நடைபெற்றது யாருக்கான சுதந்திர தினம்? சிங்கள பெளத்த நாட்டிற்கான சுதந்திர தினமே அதுவன்றி, தமிழர்களுக்குச் சுதந்திரதினம் இன்னும் அமையவில்லை என்பது எமக்கேன் தெரியாமல்ப் போனது?

அவன், தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடி, தனது மொழியில் தனது தேசிய கீதத்தைப் பாடுகிறான். இதுபற்றி நாம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. நடைபெற்ற நிகழ்விற்கோ அல்லது பாடப்பட்ட தேசியகீதத்திற்குமோ எம்முடன் தொடர்பிருப்பதாக நான் நினைக்கவில்லை.

நான் தமிழில் அவனது தேசிய கீதத்தைப் பாடுவதால் கிடைக்கப்போவது என்ன? அப்படி நான் தமிழில் பாடுவதால் மட்டும் நாடோ அல்லது கிடைத்த சுதந்திரமோ எனதாகிவிடுமா? இல்லையே! பிறகேன் நாங்கள் இதுபற்றிக் குத்திமுறிவான்?

இன்னும் சொல்லப்போனால், அவன் சரியாகத்தான் இதைச் செய்திருக்கிறான். நடப்பவற்றிற்கும், பாடப்பட்டதற்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை என்பதை அவனே ஏற்றுக்கொண்டபின், நாம் மட்டும் தமிழிலும் பாடுங்கள் என்று இரைஞ்சுவது நல்லதல்ல.

என்னைப்பொறுத்தவரை எனது தாய்மொழியில் என்னை ஆக்கிரமித்து நிற்பவனின் தேசிய கீதத்தைப் பாடுவதை முற்றாக வெறுக்கிறேன். அவனது தேசிய கீதத்தை என தாய்மொழியில் பாடுவதைக் காட்டிலும் எனது உதடுகளும் நாவும் அழுகிப் போனால்க் கூடப் பரவாயில்லை.

பிரிவினவாதத்தை பலப்படுத்தியுள்ளது

தேசியக் கீதத்தை தமிழ் மொழியில் பாடாமையானது, பிரிவினைவாதத்தை பலப்படுத்தியுள்ளாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இலங்கையர் என்ற அடையாளத்தைப் பகிர்ந்துக்கொள்ள கிடைத்த சந்தர்ப்பம் தமிழ் மக்களுக்கு கிடைக்காமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பரவனவததத-பலபபடததயளளத/175-245021

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழருக்கெண்டு தேசியகீதம் இருக்க.....என்ன கோதாரிக்கு சிங்களவனோடை தேசியகீதத்துக்கு அடிபடவேணும்?

image_0ffa259c13.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

தமிழருக்கெண்டு தேசியகீதம் இருக்க.....என்ன கோதாரிக்கு சிங்களவனோடை தேசியகீதத்துக்கு அடிபடவேணும்?

இக் கேள்விக்குப் பதிலேதுமுண்டோ?

7 hours ago, nunavilan said:

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசனம்

எந்த மொழில பாடினாலும் இதுவரை சிங்கள கொலைகார தேசிய கீதத்தை ஒருநாளும் பாடினதும் இல்லை மதிச்சதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படுவதை எதிர்த்து இன்று (செவ்வாய்க்கிழமை) பொரளை சுற்றுவட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதத்தை இசைக்கும் வகையில் இலங்கை மனித உரிமைகள் செயற்பட்டாளர்கள் ஒன்றுகூடினர் .

தமிழர் தேசிய கீதத்தை தமிழில் பாடக்கூடிய சுதந்திரம் இலங்கையில் இருக்கிறது என்பதை பறைசாற்ற உதவியிருக்கிறார்கள் தமிழில் பாடியோர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.