Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் நிதியை திருப்பி அனுப்பினேனா? மஹிந்தவின் கருத்தால் பொங்கி எழுந்த விக்கி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் நிதியை திருப்பி அனுப்பினேனா? மஹிந்தவின் கருத்தால் பொங்கி எழுந்த விக்கி!

cv-wikky.jpg

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் திருப்பி அனுப்பிவிட்டார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் தெரிவித்த கருத்து தொடர்பாக வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் போய் எங்களைக் குறை கூறி தனக்கு நற்பெயர் பெற்றுக்கொள்ள பார்க்கின்றாரா? அவர் உண்மையில் தெரியாமல் கூறினாரா அல்லது தெரிந்தும் எமக்கு மாசு கற்பிக்கக் கூறினாரா என்று தெரியவில்லை.

என்னுடைய 5 வருட பதவிக்காலத்தில் ஒரு சதத்தையேனும் நாம் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பவில்லை. முதலாவது, 2014ம் வருடத்தில் 12,000 மில்லியன் கேட்டோம். 1,650 மில்லியன் தான் தரப்பட்டது என்று நினைக்கின்றேன். அப்படி இருக்கையில் திருப்பி அனுப்ப காசு எங்கு இருக்கின்றது?

அதன்பின் வந்த வருடங்களில் ஒரு வருடத்தில் மூவாயிரத்து சொச்சம் தருவதாகக் கூறி பகுதி பகுதியாகத் தான் தரப்பட்டது. அதுவும் ஒரு பகுதி அடுத்த வருடத்தில் தரப்பட்டது. அந்தக் காரணத்தினால் எங்கள் செயற்றிட்டங்களும் பாதிக்கப்பட்டன. தாமதம் அடைந்தன.

நாங்கள் பதவியில் இருந்து வந்த பின்னர் சென்ற வருடம் கூட ஒரு பாரிய தொகை மத்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருக்கின்றது. ஆகவே பணத்தை மத்திய அரசாங்கம் எமக்குத்தராமல் இருந்துவிட்டு நாம் திருப்பி அனுப்பினோம் என்று இந்தியாவில் சென்று எமது பிரதமர் கூறுவது விந்தையாக இருக்கின்றது.

இரண்டாவது நாங்கள் உதாரணமாக 12,000 மில்லியன் கேட்டால் எமக்கு சுமார் பத்தில் ஒரு பங்கைத் தந்துவிட்டு மிகுதி அனைத்தையும் மத்திய அமைச்சர்களுக்கு தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் கொடுத்து வந்துள்ளன. அவர்கள் அந்தப் பணம் அனைத்தையும் வடக்கிற்குச் செலவிடுவதாக பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பிரசித்தப்படுத்துவார்கள்.

ஆனால் நடப்பது என்ன? அவர்களுக்குக் கிடைத்த பணம் அனைத்தையும் வடகிழக்கு மாகாணத்திற்கு அனுப்புகின்றார்களோ என்பது ஒரு புறம் இருக்க அனுப்பப்படும் பணம் எமக்கு அனுப்பப்படுவதில்லை. அரசாங்க அதிபர்களுக்கே அனுப்புகின்றார்கள். அவர்கள் பலர் பணத்தைத் திருப்பி அனுப்புகின்றார்கள் என்று கேள்வி.

ஒருவேளை பணத்தைத் திருப்பி அனுப்புவதால் மத்தியின் கடைக்கண் பார்வை தமக்குக் கிடைக்கும் என்று அவர்கள் அவ்வாறு அனுப்புகின்றார்களோ அல்லது வேறு காரணங்களுக்காகத் திருப்பி அனுப்புகின்றார்களோ என்பது பற்றி அவர்களே எமக்கு அறிவுறுத்த வேண்டும்.

பிரதமர் பிறநாடுகளில் பேசும் போது உண்மையை அறிந்து பேச வேண்டும். உள்நாட்டில் அரசியல் மேடைகளில் பேசுவது போல் பேசக்கூடாது.

மூன்றாவதாக பிரதமருக்கு 1992ம் ஆண்டின் 58ம் இலக்க சட்டம் பற்றித் தெரியுமோ என்று எனக்குத் தெரியவில்லை. அதன்படி 13வது திருத்தச் சட்டத்தில் எமக்கு வழங்கப்பட்ட மிகக் குறைந்த அதிகாரப் பகிர்வில் மத்திய அரசாங்கம் தமக்கென ஒரு அதிகாரப் பகிர்வொன்றை மேற்கொண்டுள்ளது.

அதாவது தந்த அதிகாரத்திலும் பாதிக்குமேல் குறித்த இந்த சட்டத்தின் ஊடாக மத்திய அரசாங்கம் எம்மிடம் இருந்து பறித்துவிட்டது. அரசாங்க அதிபர், மாவட்டச் செயலாளர், கிராம சேவகர் ஆகியோர் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் இருந்தனர். மேற்படி சட்டம் அவர்களை மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக மாற்றிவிட்டது. அவர்கள் தான் பணத்தைத் திருப்பி அனுப்பி வந்துள்ளார்கள் என்று நினைக்கின்றேன்.

அதாவது மத்திய அரசாங்கத்தின் அலுவலர்களே எமக்கு உதவி புரிவதாக காட்டிக் கொண்டு எம் சார்பில் செலவிடவேண்டியிருந்த பணத்தை மத்திய அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். அதைப் பிரதமர் அவர்களே பரிசீலித்துப் பார்க்க வேண்டும். அபாண்டமாக எம்மேல் பழி போடுவதை அவர் நிறுத்த வேண்டும்.

அவரின் புரிதலுக்கு ஒன்றைக் கூற விரும்புகின்றேன். 2016ம் ஆண்டில் முழு இலங்கையிலும் இருக்கும் 850க்கும் மேற்பட்ட திணைக்களங்கள், அமைச்சுக்கள் ஆகியவற்றில் சிறந்த நிதி நிர்வாகத்திற்காக எனது முதலமைச்சர் அமைச்சுதான் முதற் பரிசைப் பெற்றது. பிரதமரின் அமைச்சேதேனும் அவ்வாறு எப்பவென்றாலும் பரிசு பெற்றதோ என்பதை அவர்தான் கூற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/நான்-நிதியை-திருப்பி-அனு/

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நிர்வாக திறமை உலகறிந்தது ஐயா. நீங்கள் வெளிநாட்டில்வாழும் உங்க உறவினர் ஒருவரின் கைப்பாவையாக இயங்கியதாக சொல்கிறார்கள். 1. மகிந்த சொல்வதுபோல  போரில் நொந்த வடபகுதி ஏதிலியர்களின் பணத்தை திருப்பி மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தால் தமிழர் அரசியலுக்கு தகுதியற்றவர். 2. இனக்கொலைக்கு முகம் கொடுக்கும் மாநில முதல்வராக இந்தியா சென்ற நீங்கள் இந்திய பிரதமரிடம் ஒரு கொலைகார காமவெறியனான சாமியாரின் விடுதலைக்கு மனு கொடுத்த சேதி உண்மையா? உண்மையானல் நீங்க தமிழர் அரசியலுக்கு தகமையற்றவர்.  3.கூட்டமைப்பை உடைத்து தேசிய கட்ச்சிகளை வடக்கில் நிளை நிறுத்தவும் தேசிய கட்ச்சி ஆதரவாளர்களை வெற்றிபெற வைக்கவும் நீங்க பயன்படுத்தபடுவதாக சொல்கிறார்கள். உண்மையா? உண்மையானால் நீங்கள் தோற்கடிக்கபட வேண்டியவர். 

ஐயா நீங்கள் ஏற்கிறீங்களா மறுக்கிறீங்களா? 

 

5 hours ago, poet said:

உங்கள் நிர்வாக திறமை உலகறிந்தது ஐயா. நீங்கள் வெளிநாட்டில்வாழும் உங்க உறவினர் ஒருவரின் கைப்பாவையாக இயங்கியதாக சொல்கிறார்கள். 1. மகிந்த சொல்வதுபோல  போரில் நொந்த வடபகுதி ஏதிலியர்களின் பணத்தை திருப்பி மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தால் தமிழர் அரசியலுக்கு தகுதியற்றவர். 2. இனக்கொலைக்கு முகம் கொடுக்கும் மாநில முதல்வராக இந்தியா சென்ற நீங்கள் இந்திய பிரதமரிடம் ஒரு கொலைகார காமவெறியனான சாமியாரின் விடுதலைக்கு மனு கொடுத்த சேதி உண்மையா? உண்மையானல் நீங்க தமிழர் அரசியலுக்கு தகமையற்றவர்.  3.கூட்டமைப்பை உடைத்து தேசிய கட்ச்சிகளை வடக்கில் நிளை நிறுத்தவும் தேசிய கட்ச்சி ஆதரவாளர்களை வெற்றிபெற வைக்கவும் நீங்க பயன்படுத்தபடுவதாக சொல்கிறார்கள். உண்மையா? உண்மையானால் நீங்கள் தோற்கடிக்கபட வேண்டியவர். 

ஐயா நீங்கள் ஏற்கிறீங்களா மறுக்கிறீங்களா? 

 

எனக்கும் விக்கியரது நிர்வாகத் திறமையிலிருந்து அவரது அரசியல் வரைக்கும் நிறைய கேள்விகள் உள்ளன. இவர் முதலமைச்சராக வரும்போது இருந்த அனைத்து நம்பிக்கைகளையும் கேலிக்கூத்தாக்கியவர்.

ஆனால் விக்கியரால் செக்ஸ் குற்றவாளியான போலிச் சாமியார் பிரேமாந்தாவை விடுதலை செய்யச் சொல்லி தன் பதவிக் காலத்தில் கேட்டிருக்கவே முடியாது பொயட். ஏனென்றால் விக்கியர் முதலைச்சராக பதவியேற்றது 2013 அக்டோபர் மாதத்தில். பிரேமாந்தா சிறையிலேயே இறந்தது 2011 பெப்ரவரியில்.

5 hours ago, நிழலி said:

ஆனால் விக்கியரால் செக்ஸ் குற்றவாளியான போலிச் சாமியார் பிரேமாந்தாவை விடுதலை செய்யச் சொல்லி தன் பதவிக் காலத்தில் கேட்டிருக்கவே முடியாது பொயட். ஏனென்றால் விக்கியர் முதலைச்சராக பதவியேற்றது 2013 அக்டோபர் மாதத்தில். பிரேமாந்தா சிறையிலேயே இறந்தது 2011 பெப்ரவரியில்.

மகிந்தவைப் போலவே பொய்களை அள்ளிவீசி விக்கியர் மேல சேறை பூச வேற என்ன வழி? சுயலாபம் கருதி இப்பிடி ஏதாவது பொய்களை அவிழ்த்துவிடுவது கவிஜர்களின் வழக்கமான தொழில்தான்.

18 hours ago, poet said:

உங்கள் நிர்வாக திறமை உலகறிந்தது ஐயா. நீங்கள் வெளிநாட்டில்வாழும் உங்க உறவினர் ஒருவரின் கைப்பாவையாக இயங்கியதாக சொல்கிறார்கள். 1. மகிந்த சொல்வதுபோல  போரில் நொந்த வடபகுதி ஏதிலியர்களின் பணத்தை திருப்பி மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தால் தமிழர் அரசியலுக்கு தகுதியற்றவர். 2. இனக்கொலைக்கு முகம் கொடுக்கும் மாநில முதல்வராக இந்தியா சென்ற நீங்கள் இந்திய பிரதமரிடம் ஒரு கொலைகார காமவெறியனான சாமியாரின் விடுதலைக்கு மனு கொடுத்த சேதி உண்மையா? உண்மையானல் நீங்க தமிழர் அரசியலுக்கு தகமையற்றவர்.  3.கூட்டமைப்பை உடைத்து தேசிய கட்ச்சிகளை வடக்கில் நிளை நிறுத்தவும் தேசிய கட்ச்சி ஆதரவாளர்களை வெற்றிபெற வைக்கவும் நீங்க பயன்படுத்தபடுவதாக சொல்கிறார்கள். உண்மையா? உண்மையானால் நீங்கள் தோற்கடிக்கபட வேண்டியவர். 

ஐயா நீங்கள் ஏற்கிறீங்களா மறுக்கிறீங்களா? 

 

இது மட்டுமல்ல  அந்த உயர் பதவி வகித்தவரே இப்போது வழக்குகளை சந்திக்க படியேறிக்கொண்டிருக்கிறார்। 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பழுக்கற்ற ஒரு தமிழ் அரசியல்வாதியை தேடி காலத்தை வீணடிப்பதை விட்டு உள்ள கள்வர்களில் நல்ல கள்ளனை தேர்ந்தெடுப்பதுதான் ஜதார்த்தம். இப்படிதான் போராட்ட காலத்திலும் இயக்கங்களுக்கு எங்கள் ஆதரவை வழங்கினோம்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

எனக்கும் விக்கியரது நிர்வாகத் திறமையிலிருந்து அவரது அரசியல் வரைக்கும் நிறைய கேள்விகள் உள்ளன. இவர் முதலமைச்சராக வரும்போது இருந்த அனைத்து நம்பிக்கைகளையும் கேலிக்கூத்தாக்கியவர்.

ஆனால் விக்கியரால் செக்ஸ் குற்றவாளியான போலிச் சாமியார் பிரேமாந்தாவை விடுதலை செய்யச் சொல்லி தன் பதவிக் காலத்தில் கேட்டிருக்கவே முடியாது பொயட். ஏனென்றால் விக்கியர் முதலைச்சராக பதவியேற்றது 2013 அக்டோபர் மாதத்தில். பிரேமாந்தா சிறையிலேயே இறந்தது 2011 பெப்ரவரியில்.

நிழலி நீங்கள் சொல்வது சரி. நான் சொல்லுவது பாதி சரி. விக்னேஸ்வரன் பிரேமானந்தாவின் சகபாடிகளை விடுவிக்க கோரி மனுகொடுத்திருக்கிறார். பி.பி.சி தமிழில் சேதி வந்தது. விக்னேஸ்வரன் .

பிரேமானந்தாவுடன் இருந்தவர்களை விடுதலை செய்ய கோரிக்கை ......அவர்களின் குடும்ப உறவினர்கள் எழுதியுள்ள கடிதத்தை இலங்கையின் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார்.

  • 24 ஏப்ரல் 2015
  •  

https://www.bbc.com/tamil/sri_lanka/2015/04/150424_premananda_cvvletter

பிரேமானந்தாவுக்காக விக்னேஸ்வரன் சாட்ச்சியம் அழித்த சேதியும் வந்துள்ளது.

யாழ் இணையத்தில் அவர் பிரேமானந்தா சார்பாக சாட்ச்சி சொன்ன் சேதி வந்திருக்கிறது.

”விக்னேஸ்வரன் பாலியல் சுவாமி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் அவரது சாட்சியத்தை நிராகரித்தது. அவரை ஒரு கற்பனைவாதி (wishful thinker) என்று சொல்லி அவரது தலையில் குட்டு வைத்தது.

விக்னேஸ்வரன் முதலமைச்சராக வந்த அடுத்த ஆண்டு நவம்பர் 2014 இல் பூபாலகிருஷ்ண ஆசிரமம் சென்று பிரேமானந்தாவின் சமாதியில் வழிபட்டார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.”

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.