Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

30/1 பிரேரணை தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தால் தமிழர்களுக்கு நன்மையும் உண்டு - மாவை

Featured Replies

 (எம்.ஆர்.எம்.வஸீம்)

47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலக எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேசத்தை நாட்டுக்கள் வலிந்து அழைக்கும் நிலை ஏற்படும். அதன்மூலம் தமிழ் மக்களின் இனப்பிச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்க இடமிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இலங்கை தொடர்பான ஐ.நா.வின் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளது.

பொறுப்புக்கூறல், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல், நிலங்களை விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் போன்றவற்றுக்கே அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து விலகியுள்ளது. அரசின் இந்த முடிவை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.

அத்துடன் அரசின் இந்த விலகல் அறிவிப்பால் தமிழ் மக்களுக்கு நன்மையும் உண்டு. ஏனெனில் ஐ.நா.வின் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளதால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கப்போகின்றன. அரசாங்கம் சர்வதேசத்தை வலிந்து அழைத்துக்கொள்ளப்போகின்றது.

அத்துடன் அரசாங்கம் விலகப்போகும் பிரேரணையானது மனித உரிமை பேரவையின் 47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகும். அதனால் எதிர்காலத்தில் சர்வதேச நாடுகள் இங்கை தொடர்பாக கூடுதல் கவனம்செலுத்தும் வாய்ப்பு இருக்கின்றது. சர்வதேச நாடுகளின் இலங்கை மீதான தலையீடுகள் மூலம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்கக்கூடும் என்றும் கூறினார்.

https://www.virakesari.lk/article/76106

  • தொடங்கியவர்
2 hours ago, ampanai said:

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாரளுமன்றில் மௌனமாக இருப்பது நன்று.

 

2 hours ago, ampanai said:

இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கப்போகின்றன. அரசாங்கம் சர்வதேசத்தை வலிந்து அழைத்துக் கொள்ளப்போகின்றது.

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ampanai said:

பாரளுமன்றில் மௌனமாக இருப்பது நன்று.

மாவை... மௌனமாக இருந்தால், அடுத்த தேர்தலுக்கு... ஒரு வாக்கும் விழ  மாட்டுதே....
இடைக்கிடை... "சவுண்டு" கொடுத்தால் தான்... ஆள் இருக்கு என்றே தெரியும்.   :grin:

  • தொடங்கியவர்
29 minutes ago, தமிழ் சிறி said:

மாவை... மௌனமாக இருந்தால், அடுத்த தேர்தலுக்கு... ஒரு வாக்கும் விழ  மாட்டுதே....
இடைக்கிடை... "சவுண்டு" கொடுத்தால் தான்... ஆள் இருக்கு என்றே தெரியும்.   :grin:

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாத தலைப்பு "ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள்". அதில் இவர் இந்த விடயம் பற்றி பேசியுள்ளார். ஒருவேளை கனவு கண்டு பேசினாரோ தெரியவில்லை 🙂 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ampanai said:

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாத தலைப்பு "ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள்". அதில் இவர் இந்த விடயம் பற்றி பேசியுள்ளார். ஒருவேளை கனவு கண்டு பேசினாரோ தெரியவில்லை 🙂 

சவுண்டுதான்... கொடுக்கப் போகிறார் என்றால்...
அதற்கு... இடம், பொருள், ஏவல்... எல்லாம் ஒரு பொருட்டே  அல்ல.
செய்திகளில்... மாவையின்  பெயர் அடிபட்டால் போதும் என்று நினைத்திருப்பார். 🤣

39 minutes ago, ampanai said:

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாத தலைப்பு "ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள்". அதில் இவர் இந்த விடயம் பற்றி பேசியுள்ளார். ஒருவேளை கனவு கண்டு பேசினாரோ தெரியவில்லை 🙂 

மிகவும் ஆக்ரோஷமாக உணர்ச்சிவசப்பட்டு பேசினார்। என்ன நடந்ததென்று சரியாக தெரியவில்லை। நீங்கள் எழுதியதுபோல ஒரு வேளை கனவில்  இருந்து எழும்பி பேசினாரா தெரியவில்லை।எப்படியோ நமக்கு ஈழம் கிடைத்தால் சரிதான்।

  • தொடங்கியவர்

இலங்கையில் போர்க்குற்ற விசாரணை நடக்குமா?

கொழும்பு: இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், இலங்கை ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி, ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு, தங்கள் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்தது.

gallerye_132355671_2485801.jpg
 

இதற்கு, இலங்கை அரசிற்கு ஆலோசனைகள் வழங்கும் பவுத்த மத அமைப்பு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட, 30/1 மற்றும் 40/1 தீர்மானங்களிலிருந்து விலகுவதாக, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே கடந்த 19ம் தேதி அறிவித்தார்.மேலும், '2015ம் ஆண்டு ஐ.நா., சபையின் மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு, அப்போதைய இலங்கை அரசு உடன்பட்டது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயல்' என, ராஜபக்சே தெரிவித்தார்.

போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதாகவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்குவதாகவும் இலங்கை அரசு ஒப்புக்கொண்டதற்கான நம்பிக்கையே ஐ.நா., தீர்மானங்கள். தற்போது அவற்றில் இருந்து விலகுவதாக இலங்கை அறிவித்துள்ளதால், போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணை நடக்குமா என்ற கேள்வி இலங்கைத் தமிழர்களிடத்தில் எழுந்துள்ளது.

சிக்கலில் இலங்கை அரசு

இந்நிலையில், ''ஐ.நா., மனித உரிமைகள் சபையில், 47 நாடுகளால் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து இலங்கை அரசு விலகுவதால் அனைத்து நாடுகளும் இலங்கையை எதிர்க்கும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும். இதனால், தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்' என, இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஐ.நா., மீது மட்டுமே தங்களது இறுதி நம்பிக்கையை வைத்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு, ஐ.நா., நீதியை பெற்றுத் தர வேண்டும் என்பதே, உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து தவிக்கும் இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2485801

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ampanai said:

இந்நிலையில், ''ஐ.நா., மனித உரிமைகள் சபையில், 47 நாடுகளால் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து இலங்கை அரசு விலகுவதால் அனைத்து நாடுகளும் இலங்கையை எதிர்க்கும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும்.

அதிலிருந்து காப்பதற்கான ஆலோசனையையும் வழங்கி, சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவார் உங்கள் ஊடகப் பேச்சாளர். இலங்கையை இந்த இக்கட்டிலிருந்து மீட்க சகல ஒத்துழைப்பையும் வழங்குவார். என்பதையும் சொல்லி விட வேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

மாவை...  🔨 தனது,  சேவையை... முடித்துக் கொண்டு,
அரசியலில்... இருந்து, ஒதுங்குவதே...  நன்மை தரும்.  💓 

  • தொடங்கியவர்

எந்தவிதத்திலும்-தாக்கத்தை-செலுத்தாது

நிறைவேற்றப்பட்ட ஜெனிவா பிரேரணையில் இருந்து ஒருவர் விலகுவதால் அது, அந்த பிரேரணைக்கு எந்தவிதத்திலும் தாக்கத்தை செலுத்தாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/235026/எந்தவிதத்திலும்-தாக்கத்தை-செலுத்தாது

On 2/20/2020 at 10:05 PM, ampanai said:

47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலக எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேசத்தை நாட்டுக்கள் வலிந்து அழைக்கும் நிலை ஏற்படும். அதன்மூலம் தமிழ் மக்களின் இனப்பிச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்க இடமிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மாவை சேனாதிராஜாவின் கூற்றிலிருந்தும் வரலாற்றிலிருந்தும்  இரண்டு விடயங்களை முடிவு செய்யலாம்.

(1) தமிழரசுக் கட்சிக்கோ, கூட்டமைப்புக்கோ தமிழ் மக்களின் இனப்பிச்சினைக்கான தீர்வுக்கு தேவையான முன்னெடுப்புக்களை முன்நகர்த்தும் பலமும் தகுதியும் அறவே இல்லை என்பது.

(2)  தமிழரசுக் கட்சி, கூட்டமைப்பு தொடர்ந்து மக்களை ஏமாற்றி சுயநல, சுயலாப அரசியல் செய்ய மேலும் வாய்ப்புக்கள் கிடைக்கிறது என்பது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.