Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தருணத்தில் கொலையும் செய்வாள் பத்தினி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

B9625-F21-FE66-473-C-9-DD6-3-A9-E6-F59-D
அவள் இரண்டு
தடவைகள் தனது கணவன் Adrian கத்தியால் குத்தியிருக்கிறாள்அவன் சம்பவ இடத்திலேயே இறந்து போனான். 2018இல் நடந்த இந்தச் சம்பவத்துக்கு இப்பொழுது தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது.

34 வயதான Natascha தனது வாழ்க்கைத் துணைவன் Adrianஆல் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அதிலிருந்து விடுபட வேண்டும் என நினைத்தாள். ஆனால் அது கொலையில் போய் முடிந்து விட்டது.

Adrian பொறாமைக் குணம் கொண்டவன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் Nataschaவைத் தாக்கிக் கொண்டிருந்தான். முகத்தில் உதைவது, சைக்கிளில் செல்லும் போது தள்ளி விழுத்துவது என்று பலவிதத்திலும் அவளைத்  தாக்கிக் கொண்டிருந்தான். தன்னை அவன் எப்பொழுது தாக்குவான் என்று தெரியாமல் Natascha அச்சத்துடனேயே எப்பொழுதும் இருந்தாள். அவளது பிள்ளைகளுக்கு முன்னாலேயேபெட்டை நாய், பரத்தைஎன்று பேசிக் கொண்டும் இருந்தான். நாளடைவில் அவனது ஏச்சுக்களும் தாக்குதல்களும் மணிக்கணக்கில் இடம் பிடிக்க ஆரம்பித்தன. Adrianக்கும் Natascha வுக்கும் இடையே அடிக்கடி  தகராறு ஆரம்பமாவதால்  ஒரு கட்டத்தில் அவள் தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு Adrian இடமிருந்து பிரிந்து சென்று விட்டாள். பின்னர் இருவருக்கும்  சமரசம் ஏற்பட மீண்டும் இணைந்து கொண்டார்கள்

14.12.2019இல்  தங்கள் இருவருக்கும் உள்ள மதுப் பழக்கத்தை நிறுத்துவதற்காக ஒரு நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது மீண்டும் இருவருக்கும் இடையில்  சண்டை ஆரம்பித்தது. Adrian உடனடியாகவே Natascha வைத் தாக்க ஆரம்பித்து விட்டான். அவனது தாக்குதலுக்கு மத்தியிலும் Natascha தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி நிலவறைக்குள் மறைந்து கொண்டாள். அந்தச் சந்தர்ப்பத்தில் அவளது குடியிருப்பில் இருந்த பக்கத்து வீட்டுக்காரர் அவளுக்கு உதவியாக நின்றார்

ஒரு நிலையில் வீட்டில் Adrian இன் சத்தம் அடங்கிப் போனதுஇதை அவதானித்த Natascha, பிள்ளைகளை பக்கத்து வீட்டுக்காரனுடன் விட்டு விட்டு தனது வீட்டுக்குள் சென்று தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேற எத்தனித்த போது அவள் முன்னல் Adrian வந்து நின்றான்அப்பொழுது Natascha நின்ற இடம் சமையலறை. அந்த வாசலை மறைத்துக்  கொண்டு  நின்று அவள் மேல் தாக்குதலை Adrian ஆரம்பித்தான். அவளால் வெளியேற முடியாத நிலைஅடி, உதைகள் பலமாக இருந்தன. இந்த நிலையில் சமையலறை மேசை இழுப்பறையைத் திறந்து  அங்கிருந்த கத்தியை எடுத்து தன் பலம் கொண்ட மட்டும் Adrian உடலில் சொருகினாள். நிலை தடுமாறி கீழே விழுந்தவன் மீது மீண்டும் ஒரு தடவை கத்தியால் குத்தினாள்சமையலறைக்குள்ளேயே Adrian இறந்து போனான்

Natascha, Adrianஐ கத்தியால் குத்தும் போது அவளது இரத்தத்தில் 2 வீதமான அற்ககோல் செறிவு காணப்பட்டிருக்கிறது என்பதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்திருந்தது. பாதுகாப்புக்காக Adrian Natascha கத்தியால் ஒருதடவை குத்தியபின் அந்த இடத்தில் இருந்து தப்பிக்கப் பார்த்திருப்பாள். ஆனால் அவள் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் அவனைக் கத்தியால் குத்தியிருக்கிறாள். இது ஒருவரைக் காயப்படுத்தி மரணம் விளைவிப்பதற்கான செயல் என்று கருதி நீதிமன்றம் Natascha வுக்கு  மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கியிருந்தது.

`கொலை நடந்த நேரத்தில் உள்ள சூழ்நிலை, அந்த நேரத்தில் அவளுக்கு இருந்த பதட்டம், அவள் இரத்தத்தில் இருந்த அற்ககோல் செறிவு, அவளது பிள்ளைகளின் எதிர்காலம்,  மற்றும் Natascha தப்பிக்க முடியாத  ஒரு வன்முறையின் சூழலில் அந்தக் கத்தியைப் பாவித்து தன்னை  விடுவிக்க முடிந்தது போன்ற காரணங்களைக் கவனத்தில் கொண்டு Natascha வை நீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும்` என்று Nataschaவின்  சார்பில் அவளுடைய வழக்கறிஞர் ஒரு மேன் முறையீடு செய்தார்.

அந்த மேன் முறையீட்டுக்கன தீர்ப்புத்தான் நீதிமன்றில் இப்பொழுது அறிவிக்கப் பட்டிருக்கிறது. "ஒரு அவசர நிலையிலேயே Natascha  கத்தியை எடுத்து தனது வாழ்க்கைத் துணைவனைக் கொன்றிருக்கிறாள். Nataschaவின் நிலையைக் கருத்தில் கொண்டு அவளுக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தங்கள் நீங்க அவளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப் பட வேண்டும்" என நீதிமன்றம் அறிவித்து அவளை விடுதலை செய்திருக்கிறது.

2018 ஆம் ஆண்டில், ஜெர்மனியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் என்ற வீதத்தில் தனது கணவனாலோ அல்லது வாழ்க்கைத் துணைவனாலோ ஆபத்தான உடல் காயங்களுக்கு உள்ளாகிறாள் என்றும் வீடு என்பது பெண்களுக்கு வாழ்விடம் மட்டுமல்ல மிகவும் ஆபத்தான இடமுமாகும்  என்று ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு சமீபத்தில் எச்சரித்திருக்கிறதுமேலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஐந்தில் ஒரு பெண் மட்டுமே சட்ட உதவியை நாடுகிறாள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருவருமே மதுவுக்கு அடிமையானவர்கள் என்பதால் தினசரி பிரச்சனைகள் சந்தர்பங்கள் அதிகம். கணவனை பிரிந்து சென்று பாதுகாப்பாக பிள்ளைகளுடன் வாழ்ந்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

2018 ஆம் ஆண்டில், ஜெர்மனியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் என்ற வீதத்தில் தனது கணவனாலோ அல்லது வாழ்க்கைத் துணைவனாலோ ஆபத்தான உடல் காயங்களுக்கு உள்ளாகிறாள் என்றும் வீடு என்பது பெண்களுக்கு வாழ்விடம் மட்டுமல்ல மிகவும் ஆபத்தான இடமுமாகும்  என்று ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு சமீபத்தில் எச்சரித்திருக்கிறதுமேலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஐந்தில் ஒரு பெண் மட்டுமே சட்ட உதவியை நாடுகிறாள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

என்னய்யா ஜேர்மனி இந்தியாவையே வென்றுவிடும் போல இருக்கே.

அந்தப் பெண்ணுக்கு விடுதலை கொடுப்பது தான் நீதி.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பெண்களும் எதோ ஒருவிதத்தில் அடக்குமுறையால் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இது ஆண்களும் பெண்களும் சேர்ந்து வாழும்போது தவிர்க்க முடியாததாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

என்னய்யா ஜேர்மனி இந்தியாவையே வென்றுவிடும் போல இருக்கே.

அந்தப் பெண்ணுக்கு விடுதலை கொடுப்பது தான் நீதி.

ஜேர்மனியில் மட்டுமல்ல இங்கே அவுஸ்ரேலியாவிலும் domestic violenceஇனால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். 

https://mobile.abc.net.au/news/2020-02-21/turning-domestic-violence-into-culture-war-thwarts-real-action/11989328?nw=0&pfmredir=sm

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் திருத்தி எழுதப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

தற்காப்புக்காக கொலையும் செய்வாள் மனைவி, தலைப்பை இப்பிடி போட்டிருக்கலாம்.
பத்தினி என்ற சொல் எனக்கு பிடிக்கல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

என்னய்யா ஜேர்மனி இந்தியாவையே வென்றுவிடும் போல இருக்கே.

அந்தப் பெண்ணுக்கு விடுதலை கொடுப்பது தான் நீதி.

இது தப்பித்தவறி நடந்திருக்கு. நோர்மலாய் ஜேர்மனியிலை பெண்கள் தெய்வத்துக்கு சமம். ஒரு பெண் ஆணுக்கெதிராய் முறைப்பாடு செய்தால் அவ்வளவுதான்......
என்ரை மூனா சும்மா செல்லமாய் தன்ரை மனிசிக்காரியின்ரை கன்னத்திலை தட்டினதுக்கே ஆறுமணித்தியாலம் உள்ளுக்கை இருந்தவர்.:grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இது தப்பித்தவறி நடந்திருக்கு. நோர்மலாய் ஜேர்மனியிலை பெண்கள் தெய்வத்துக்கு சமம். ஒரு பெண் ஆணுக்கெதிராய் முறைப்பாடு செய்தால் அவ்வளவுதான்......
என்ரை மூனா சும்மா செல்லமாய் தன்ரை மனிசிக்காரியின்ரை கன்னத்திலை தட்டினதுக்கே ஆறுமணித்தியாலம் உள்ளுக்கை இருந்தவர்.:grin:

 

தெய்வத்தை கருவறையில் வைத்துத்தான் அர்ச்சனை, அபிசேகம் எல்லாம் செய்யிறது....இவர் என்ன கோதாரிக்கு கண்ட இடத்திலயும் வைத்து கன்னத்தில தட்டினவர்......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

தற்காப்புக்காக கொலையும் செய்வாள் மனைவி, தலைப்பை இப்பிடி போட்டிருக்கலாம்.
பத்தினி என்ற சொல் எனக்கு பிடிக்கல.

https://youtu.be/8kSxNWoeX3Y

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

என்னய்யா ஜேர்மனி இந்தியாவையே வென்றுவிடும் போல இருக்கே.

அந்தப் பெண்ணுக்கு விடுதலை கொடுப்பது தான் நீதி.

ஈழப்பிரியன் அண்ணா...
நீங்கள், ஜேர்மனியையையும்... இந்தியாவையும்....
ஒரே... தராசில் வைத்து ஒப்பிட்டதை, மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2020 at 2:51 PM, Kavi arunasalam said:

2018 ஆம் ஆண்டில், ஜெர்மனியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் என்ற வீதத்தில் தனது கணவனாலோ அல்லது வாழ்க்கைத் துணைவனாலோ ஆபத்தான உடல் காயங்களுக்கு உள்ளாகிறாள் என்றும் வீடு என்பது பெண்களுக்கு வாழ்விடம் மட்டுமல்ல மிகவும் ஆபத்தான இடமுமாகும்  என்று ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு சமீபத்தில் எச்சரித்திருக்கிறதுமேலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஐந்தில் ஒரு பெண் மட்டுமே சட்ட உதவியை நாடுகிறாள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

 

21 hours ago, குமாரசாமி said:

இது தப்பித்தவறி நடந்திருக்கு. நோர்மலாய் ஜேர்மனியிலை பெண்கள் தெய்வத்துக்கு சமம். ஒரு பெண் ஆணுக்கெதிராய் முறைப்பாடு செய்தால் அவ்வளவுதான்......
என்ரை மூனா சும்மா செல்லமாய் தன்ரை மனிசிக்காரியின்ரை கன்னத்திலை தட்டினதுக்கே ஆறுமணித்தியாலம் உள்ளுக்கை இருந்தவர்.:grin:

 

 

14 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன் அண்ணா...
நீங்கள், ஜேர்மனியையையும்... இந்தியாவையும்....
ஒரே... தராசில் வைத்து ஒப்பிட்டதை, மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.  :grin:

மேலே கவி அருணாசலம் எழுதியதை வைத்தே இந்தியாவுடன் ஜேர்மனியை ஒப்பிட்டேன்.

இப்போ நீங்கள் இருவரும் சொல்வதைப் பார்த்தா கவி அருணாசலம் ஒரு பொய்யன் என்றெல்லோ இருக்கிறது?

சிறி கண்டிப்பதாக இருந்தால் கவி அருணாசலத்தையே கண்டிக்க வேண்டும்.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

 

மேலே கவி அருணாசலம் எழுதியதை வைத்தே இந்தியாவுடன் ஜேர்மனியை ஒப்பிட்டேன்.

இப்போ நீங்கள் இருவரும் சொல்வதைப் பார்த்தா கவி அருணாசலம் ஒரு பொய்யன் என்றெல்லோ இருக்கிறது?

சிறி கண்டிப்பதாக இருந்தால் கவி அருணாசலத்தையே கண்டிக்க வேண்டும்.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்.

இது பொயினட்.இனி பண்ணிப்பாருங்கோவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.