Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதமாற்றத்தினால் பௌத்த மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்- மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mahintha-720x450.jpg

மதமாற்றத்தினால் பௌத்த மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்- மஹிந்த

மதமாற்றத்தினால், பௌத்த மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில், நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றே ஆக வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் சர்வதேச சதித்திட்டங்களுக்கு மத்தியில்தான் இடம்பெற்றது.

எனினும், தேரர்களின் ஒத்துழைப்பினாலேயே, கடந்த 5 வருடங்களாக நாட்டையே அழிவுக்குட்படுத்திய அரசாங்கத்தை எம்மால் கவிழ்க்க முடியுமாக இருந்தது. இதன் ஊடாக நாட்டையும் பௌத்தத்தையும் நாம் பாதுகாத்துள்ளோம்.

மேலும்,மக்களும் யதார்த்தத்தையே விரும்புகிறார்கள் என்பதையும் நாம் இதன் ஊடாக தெரிந்துக்கொண்டோம். எனினும் இன்னும் சிலர் இந்த யதார்த்தத்தை இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பதையும் நாம் கூறியே ஆக வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியும் பிரதமராக நானும் பதவியேற்றுக்கொண்டாலும், நாடாளுமன்றில் எமக்கு பெரும்பான்மை பலம் கிடையாது.

எதிர்த்தரப்பினரே நாடாளுமன்றில் பலம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். 19ஆவது திருத்தச்சட்டத்தின் விளைவாகவே இது ஏற்பட்டுள்ளது. இதனால், எந்தவொரு அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியாதுள்ளது.

நவம்பரில் நாம் பெற்றுக்கொண்ட வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில், நாம் எதிர்காலத்தில் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இன்று மதமாற்றத்தினால், பௌத்த மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக அனைவரும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

http://athavannews.com/மதமாற்றத்தினால்-பௌத்த-மக/

5 hours ago, தமிழ் சிறி said:

மதமாற்றத்தினால், பௌத்த மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில், நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றே ஆக வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

நாட்டில் உள்ள சகல மக்களையும் பௌத்தர்களாக்கி விடுவது மட்டுமே இதற்கு தீர்வாக அமையும் ?

5 hours ago, தமிழ் சிறி said:

மதமாற்றத்தினால் பௌத்த மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்- மஹிந்த

அதாவது நீங்க சிங்கள-பௌத்தம் என்டு சொல்லி அரசை கைப்பற்றியும் ஒரு பிரயோசனம் இல்லை என்கிறீங்க? உங்கட நோக்கம் வேற என்டும் மறைமுகமா சொல்றீங்க.

 

மதம் மாத்துற வெறிக் கோஷ்டிக்கும் பௌத்தர் இல்லாத இடங்களில பௌத்த சிலைகளை நிறுவுற உங்கட கோஷ்டிக்கும் என்ன வித்தியாசம்?

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மை பவுத்த மக்களாலேயே தான் ஜனாதிபதியானேன் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொன்னது பொய்யா? இலங்கை புள்ளி விபரம் சொல்வது பொய்யா? என்பதை நீங்களே நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் மாத்தையா.... எப்போ புத்தத்துக்காக நீங்கள்அழுகிறீங்களோ: அப்போ உங்களுக்கு அரசியலில் ஏதோ சாதிக்க, நாட்டை அழிக்க புத்தத்தின்  உதவி தேவைப்படுகிறது என்று அர்த்தம்.இலங்கையில் இருப்பது அழிவின் புத்த மதம். 

14 minutes ago, satan said:

இலங்கையில் இருப்பது அழிவின் புத்த மதம். 

தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிக கல்வி அறிவு வீதத்தை கொண்ட நாடக இருந்தும், மக்களை ஒரு மதத்தை, இனவாதத்தை மட்டுமே வைத்து அரசியல் செய்யும் ஞானிகள் 😞 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, satan said:

இலங்கையில் இருப்பது அழிவின் புத்த மதம். 

 

 

அளவுக்கு மீறிய அஹிம்சாக் கொள்கையுடைய மதங்கள், மனிதனின் நடைமுறை வாழ்க்கைக்கு  ஏற்புடையதல்ல.

புத்த மதம், சில நூற்றாண்டுகளின் பின், இலங்கையில் அடியோடு இருக்காது 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மாங்குயில் said:

 

 

அளவுக்கு மீறிய அஹிம்சாக் கொள்கையுடைய மதங்கள், மனிதனின் நடைமுறை வாழ்க்கைக்கு  ஏற்புடையதல்ல.

புத்த மதம், சில நூற்றாண்டுகளின் பின், இலங்கையில் அடியோடு இருக்காது 

தான் அழிவதற்கு  முன் அந்த மதம்,  தமிழ் இனத்தை  இலங்கையில் வேரோடு அழித்துவிடுமோ என்கிற சந்தேகம் எழுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, satan said:

தான் அழிவதற்கு  முன் அந்த மதம்,  தமிழ் இனத்தை  இலங்கையில் வேரோடு அழித்துவிடுமோ என்கிற சந்தேகம் எழுகிறது.

 

 

தமிழ் இனம் ஒருபோதும் அழியாது.

தமிழ் பேசும் இனமும் அழியாது.

இந்த இரண்டு இனமும், தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டாலும்,  தமிழ் மொழியை அழிய விடமாட்டார்கள்.

 

11 minutes ago, மாங்குயில் said:

புத்த மதம், சில நூற்றாண்டுகளின் பின், இலங்கையில் அடியோடு இருக்காது 

எப்ப சிங்களவன் கைல புத்த மதம் முழுசா சிக்கிச்சோ அப்பவே புத்த மதம் இலங்கைல அழிஞ்சு போச்சு. இப்ப புத்த மதவெறி தான் இருக்கு.

சிங்களவன் அடங்கேக்க புத்த மதவெறியும் அடங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ampanai said:

தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிக கல்வி அறிவு வீதத்தை கொண்ட நாடக இருந்தும், மக்களை ஒரு மதத்தை, இனவாதத்தை மட்டுமே வைத்து அரசியல் செய்யும் ஞானிகள் 😞 

இல்லை இலங்கை வெளியுலகில் வேண்டிக்கட்டும் நிலைகள் வரும்போது அல்லது உள்நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம் வரும்போது இப்படியான உசுப்பேத்தல் கதைகள் வரும் ஒரு கதைக்கு தன்னும் ஒரு சிங்கள பவுத்தன் முஸ்லிமா அல்லது ஹிந்துவா மாறினால் தங்கள் இனமே அழிந்தது  போன்று ஊளையிடும் இந்த கூட்டம் மேலே சொல்வது   நம்புகிற மாதிரியா இருக்கு ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.