Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’600 ரூபாய்க்கு குறைவாக எந்தவொரு மரகறிகளும் இல்லை’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

’600 ரூபாய்க்கு குறைவாக எந்தவொரு மரகறிகளும் இல்லை’

 

 

மரக்கறிகளின் விலை அதிகரித்து செல்வதன் காரணமாக பொதுமக்கள் கடும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கிலோகிராம் ஒன்று 600 ரூபாய்க்கு குறைவாக எந்தவொரு மரகறிகளும் தற்போது இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


?c=b&m=i&uniq=baa038a1cf3c36dc5ec960c09f

 

விலைவாசி அதன் சுமை, அது சார்ந்த பொருளாதாரம் வறிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களை கடுமையாக பாதித்து வருகின்றது.

தலைக்கு மேலான நாட்டின் கடன், ஊழல் மற்றும் போலி இலவசங்கள் மாறும் குறைக்கப்படும் பாணின் விலை என்ற இவ்வாறான மெழுகு பூசல்கள் நீடிக்க மாட்டா.

அரசுகள் மக்களால் இந்த காரணங்களால் தூக்கி எறியப்படலாம்.

 

நுகர்வோருக்கு சலுகை விலையில் தேங்காய்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

அத்தியவசிய பொருட்களுக்கான விலைகளை குறைப்பதற்கான திட்டம் குறித்து இன்று பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதனை தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.                       

http://www.hirunews.lk/tamil/235801/மகிழ்ச்சிகர-செய்தி-தேங்காய்-விலையை-குறைக்க-அரசு-தீர்மானம்

 

சில நாட்களுக்கு முன்னர் பாணின் விலை குறைப்பு
இப்பொழுது சம்பலும் மலிவாகிவிட்டது 🙂 

தேர்தல் வரைக்கும் விலைகள்  குறைப்பு
வெற்றிக்கு பின்னால் அவர்காள் பணப்பைகள் நிறைப்பு

மக்களுக்கு மீண்டும் காதினிலே பூஊஊ 😞 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ampanai said:

அத்தியவசிய பொருட்களுக்கான விலைகளை குறைப்பதற்கான திட்டம் குறித்து இன்று பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மாவின் விலையை அரசு நிர்ணயிக்கலாம்.

தேங்காயின் விலையை நிர்ணயிக்கலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் தேங்காய்க்குப் பஞ்சமா..??!

எம்மவர்கள் தேங்காய் விற்றாலே.. நல்ல வருவாய் ஈட்டலாமே. 

3 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் மாவின் விலையை அரசு நிர்ணயிக்கலாம்.

தேங்காயின் விலையை நிர்ணயிக்கலாமோ?

ஆம். மா வை  ( சேனாதிராசா அல்ல 🙂  ) இறக்குமதி செய்யவேண்டும். அதில் வைக்கப்படுவது உலக சந்தை விலை. அதிலும், மாவில் செய்யும் பாணை குறைத்துள்ளார்கள். பிறகு அந்த மக்களின் தலையில் வட்டியுடன் கட்டிவிடுவார்கள். 

ஆனால், தேங்காய் - அப்படி அல்ல. உள்ளூரில் உற்பத்தியாகவும் ஒரு பொருள். 

4 hours ago, ampanai said:

நுகர்வோருக்கு சலுகை விலையில் தேங்காய்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

உற்பத்தியாளர்கள் பாவம். அவங்க தலைல தங்கட அரசியலை ஏத்தி மூழ்கடிக்கிறாங்க.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய், மரக்கறிகளின் விலை தொடர்பில் பிரதமரின் அதிரடி பணிப்புரை!

தேங்காய், மரக்கறிகளின் விலை தொடர்பில் பிரதமரின் அதிரடி பணிப்புரை!

 
 

 

சந்தையில் அதிகரித்து வரும் தேங்காயின் விலையை கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை மீளாய்வு செய்வதற்காக கலந்துரையாடலின் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்படி குருநாகல் பெருந்தோட்டக் கம்பனி, சிலாபம் பெருந்தோட்டக் கம்பனி, தெங்கு செய்கை சபை என்பவற்றுடன் இணைந்து சதொஸ உள்ளிட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் சலுகை விலையில் நுகர்வோருக்கு தேங்காயை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

டின் மீன், கோழி இறைச்சி, முட்டை என்பவற்றின் விலை தொடர்பில் அங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், உள்நாட்டு பால்மா உற்பத்திக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கி போட்டித் தன்மையுடன் நுகர்வோருக்கு பால்மாவை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

உழுந்து மற்றும் மஞ்சளுக்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரையறையை தற்காலிகமாக நீக்குமாறும் பிரதமர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

மரக்கறி விலைகளை கட்டுப்படுத்துவதற்காக பொருளாதார மத்திய நிலையங்களை பயன்படுத்தி, சதொஸ நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் ஒரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

நுகர்வோரை பாதிக்கும் வகையில், விலையை அதிகரிக்கும் பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் இடைத்தரகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
 
  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2020 at 10:53 AM, nunavilan said:

கிலோகிராம் ஒன்று 600 ரூபாய்க்கு குறைவாக எந்தவொரு மரகறிகளும் தற்போது இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்ப  லண்டனில் விக்கும் விலைக்கு கிட்ட வந்துவிட்டினம் .😄

2/3 பெரும்பான்மை பெற யுத்தம் இல்லை. வெற்றியையும் 10 வருடங்கள் கழிந்தும் கூறிக்கொண்டே ஏமாற்ற முடியாத நிலை.

மக்களும் அன்றாட வாழ்வை சமாளிக்க முடியாது உள்ளனர். சீனாவையும் காய் கொடுக்காது. அமெரிக்காவின் மிலேனியமும் வேண்டாம். இந்தியாவின் உதவி வேண்டும். மீள் கொடுக்கவேண்டிய கடனும்/வட்டியும் சரியும் உல்லாசத்துறை, பொருளாதாரம். வேலையில்லா பட்டதாரிகள் அரச வேலைகள் கேட்டு ஆர்ப்பாட்டம். வேளையில் உள்ளவர்கள் அதிக சம்பளம் கேட்டு  ஆர்ப்பாட்டம். இந்ததனைக்குள்ளும் இராணுவத்திற்கு முன்னிடடம், பௌத்தத்திற்கு முன்னிடடம்.

ஆனால், வாய் கிழிய சுதந்திர நாடு, இறையாண்மை என்று படம் காட்டுவது 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

ஊரில் தேங்காய்க்குப் பஞ்சமா..??!

எம்மவர்கள் தேங்காய் விற்றாலே.. நல்ல வருவாய் ஈட்டலாமே. 

போரினால் பாதிக்கப்பட்ட பின்பு தென்னம் கன்றுகள் வைத்து வளர்க்கும் பழக்கம் காணாமல் போய் விட்டதாம்   வீட்டுக்கு குறைந்தது நாலு தென்னையாவது அப்போது இருந்தது .இப்ப வெளிநாட்டு காசில் சமைப்பதும் இல்லை கடை சாப்பாடும் தமிழக தொடர் நாடகங்களை பார்த்து பொழுது போக்கும் சுத்தி திரிய மோட்டார் சைக்கிளும் புலத்தில் ஒரு சோம்பேறி கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கோமாம் . ஊர் போய்  வந்தவரின் ஆதங்கம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.