Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுரேன் ராகவன் எந்த முகத்துடன் கூட்டமைப்பிடம் ஆசனம் கேட்கிறார்.?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழா்கள் மீது போா் குற்றம் புாியப்படவில்லை என ஐ.நா வரையில் சென்ற சுரேன் ராகவன் எந்த முகத்துடன் கூட்டமைப்பிடம் ஆசனம் கேட்கிறாா்..?

suren.jpg

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவுடன் இணைந்து தமிழா்கள் மீது போா் குற்றங்கள் புாியப்படவில்லை, மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் நடக்கவில்லை. எ ன ஐ.நா மனித உாிமைகள் ஆணையகம் வரை சென்று கூறியவா் சுரேன் ராகவன்.

அவருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற தோ்தலுக்கான ஆசனம் வழங்குவதா? அதனை மக்கள் ஏற்றுக் கொள்வாா்களா ?  என வடமாகாணசபை அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியிருக்கின்றாா்.

முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தமிழ்தேசியக்கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளதாகப் பேசப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக இருந்தபோது பெரிதாக எதையும் சாதிக்கவில்லை.

அந்த காலப்பகுதியில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை அமர்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் இவரும் சென்று அங்கே தமிழர்களுக்கு எதிராகச் சாட்சியம் சொல்வதற்கு சென்றிருந்த நபர் அப்படியான ஒருவர் ஏன் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தனக்கு ஆசனம் வழங்குமாறு கோரிக்கை விடுகின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை.

நாம் எவ்வாறுதான் அவருக்கு அதை வழங்க முடியும். எனவே இந்த விடயம் தொடர்பில் பரிசீலிக்க முடியாது. அவருக்கு ஆசனம் வழங்கத் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிப் பேசுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு .

அதனைப் பற்றிப் பேச யாருக்கும் அருகதை இல்லை என்று கூற முடியாது ஆனால் தவறான போலிப் பிரச்சாரங்கள் செய்ய முடியாதே தவிர அனைவருக்கும் அவர்கள் தொடர்பில் கதைக்க முடியும் எனவே அது தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவோர் அவதானமாக தமது கருத்துக்களை வெளியிடவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

https://jaffnazone.com/news/16196

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை அமர்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் இவரும் சென்று அங்கே தமிழர்களுக்கு எதிராகச் சாட்சியம் சொல்வதற்கு சென்றிருந்த நபர் அப்படியான ஒருவர் ஏன் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தனக்கு ஆசனம் வழங்குமாறு கோரிக்கை விடுகின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை.

இப்ப புரிகிறதா சிங்களவன் தமிழனை கையாளும் திறமை. அதுமட்டுமல்ல, நமது அரசியல் தலைவர்கள் தமது கட்சியில் ஆட்களை சேர்க்கும்போது எதிர் நோக்கும் திறமை: தமிழருக்குயார் துரோகம் செய்தார்களோ, யார் காட்டிக்கொடுத்தார்களோ அவர்களுக்கு கட்சியில் முதலிடம். இதை அறிந்தே சிங்களவன் தனக்கு சார்பானவர்களை தமிழ் பிரதேசங்களில் நியமிப்பதும், பின்  அவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்ளமாறுநமது தலைவர்களுக்கு சிபாரிசு செய்வதும், இவர்கள் மறுபேச்சின்றி உள்வாங்கிக்கொள்வதும்.  சீ.வி.கே.சிவஞானம் இப்போ ஒரு நாடகம் ஆடி தம்மை நல்லவர்களாக காட்ட முயற்சிக்கிறார்.  

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவர் ஐநா சென்று மேற்கூறியவாறு கூறினாரா ? 

உண்மையென்றால், அவ்வாறு கூறியபின் கூட்டமைப்பிடம் ஆசனம் கேட்கும் துணிவை அவருக்குக் கொடுக்கும் அளவிற்கு கூட்டமைப்பின் மீதான நம்பகத்தன்மை கீழிறங்கிவிட்டதென்று பொருள். 

இவர் அவ்வாறு கூறவில்லையெனில், ஆசனம் கேட்பதில் பிழை என்ன ? ஏன் அவர் கேட்கக் கூடாதா ? அவருக்கு தகுதி இல்லையா ?

On 3/5/2020 at 10:42 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழா்கள் மீது போா் குற்றம் புாியப்படவில்லை என ஐ.நா வரையில் சென்ற சுரேன் ராகவன் எந்த முகத்துடன் கூட்டமைப்பிடம் ஆசனம் கேட்கிறாா்..?

தமிழா்கள் மீது போா்க்குற்றங்கள் புாியப்படவில்லை, மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் நடக்கவில்லை என கூறிவரும் சிங்கள-பௌத்த போர்க்குற்றவாளிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்துவரும் சுமந்திரன், சம்மந்தன், மாவை, சிவிகே சிவஞானம் போன்றவர்கள் இருப்பது தமிழரசுக்கட்சி என்பதால் அதுதான் தனக்குப் பொருத்தமான இடம் என சுரேன் இராகவன் கருதுவதில் பிழை ஏதுமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.