Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா எங்கள் நாட்டில் தான் உருவாகியிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.! சொல்கிறது சீனா

Featured Replies

கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் நடுங்கி வரும் வேளையில், இந்த உயிர்கொல்லியால் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் கொரோனா என்னும் கொடூரனை உலகம் முழுவதும் பரப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

வூகானில் இருந்து தான் சீனாவின் பல பகுதிகளுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது. இதுவரை கொரோனாவிற்கு 3800-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா சீனாவிலிருந்து உருவானது. வூகான் விலங்கு சந்தையில் விற்கப்பட்ட வௌவால் காரணமாக தான் இது தோன்றியது.

இதற்கு முக்கிய காரணம் சீனர்களின் வித்தியாசமான உணவு பழக்கவழக்கங்களே என்ற குற்றச்சாட்டு உலக மக்களால் பரவலாக முன் வைக்கப்பட்டது. ஆனால் சீனாவில் தான் உயிர்க்கொல்லி கொரோனா உருவாகியிருக்க வேண்டும் என்ற புகாரை அந்நாடு மறுத்துள்ளது.

இது குறித்து பேசியுள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன்(Zhao Lijian ), கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் வூகானை சேர்ந்தவர்கள் தான். ஆனாலும் கொரோனா வைரஸ் சீனாவில் தான் முதல் முதலாக உருவாகி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த கொடிய வைரஸ் முதலில் எங்கே தோன்றியது என்பதற்கான விடையை கண்டறியும் முயற்சியில் நாங்கள் இன்னமும் ஈடுபட்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் மனிதகுலத்தின் பொதுவான எதிரி. எனவே உலக மக்கள் அனைவரும் இணைந்து கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுகிறார்கள். எனினும் கொரோனா வைரஸை விட அதை பரப்பியதாக கூறி குறிப்பிட்ட நாட்டை களங்கப்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு கூட கூறியுள்ளது.

வைரஸை பரப்புவதாக எங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டை கூறுபவர்களின் நோக்கம் தான் என்ன என்று சீனா கேள்வியெழுப்பியுள்ளது. கடந்த 2009-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட H1N1 காய்ச்சல் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு பரவியது. இதில் சுமார் 18,449 பேர் இறந்தனர். அப்போது அமெரிக்காவை மன்னிப்பு கேட்க யாராவது கூறினார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளர் ஜாவோ லிஜியன்.

வைரஸை பரப்பியதாக கூறி எங்களை மன்னிப்பு கேட்க சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. சீனா உட்பட கொரோனவால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளும் கடும் சவாலை எதிர் கொண்டுள்ளன. வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சீனா பொறுப்புள்ள நாடாக செயல்பட்டு வருகிறது. பல உலக நாடுகள் சீனாவிற்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

வைரஸ் தொற்றுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை சீன அரசு எடுத்து வருகிறது. தொற்றுநோய் பரவாமல் தடுக்க அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மகத்தான தியாகங்கள் மற்றும் பங்களிப்புகளை வழங்கி வருவதாக சீனா கூறியுள்ளது.

https://www.polimernews.com/dnews/102803/கொரோனா-எங்கள்-நாட்டில்-தான்உருவாகியிருக்க-வேண்டும்என்ற-அவசியம்-இல்லை.!சொல்கிறது-சீனா

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ampanai said:

வைரஸை பரப்பியதாக கூறி எங்களை மன்னிப்பு கேட்க சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. சீனா உட்பட கொரோனவால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளும் கடும் சவாலை எதிர் கொண்டுள்ளன. வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சீனா பொறுப்புள்ள நாடாக செயல்பட்டு வருகிறது. பல உலக நாடுகள் சீனாவிற்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

வைரஸ் தொற்றுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை சீன அரசு எடுத்து வருகிறது. தொற்றுநோய் பரவாமல் தடுக்க அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மகத்தான தியாகங்கள் மற்றும் பங்களிப்புகளை வழங்கி வருவதாக சீனா கூறியுள்ளது.

"என்ட் ஆஃப் டேஸ்" புத்தகத்தில் கொரோனா வைரஸ் பற்றி கூறியவை.

kor.jpg

2008ம் ஆண்டு சில்வியா பிரவுன் வெளியிட்ட ‘என்ட் ஆஃப் டேஸ்’ புத்தகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தெரிவிக்கப்பட்டுள்ளது.12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘என்ட் ஆஃப் டேஸ்’ என்ற புத்தகத்தில் 2020ம் ஆண்டு மிகவும் மோசமான வைரஸ் பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதில், “2020 ஆம் ஆண்டில் கடுமையான நிமோனியா போன்ற நோய் உலகம் முழுவதும் பரவி, நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் குழாய்களைத் தாக்கும். உலகின் தலைசிறந்த மருத்துவர்களால் கூட இதை கட்டுபடுத்த முடியாது“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரிகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இந்த புத்தகத்தில் கொரோனா வைரஸ் என்று குறிப்பிடாமல் இருந்தாலும் உலகம் எதிர்கொள்ளும் தாக்கம் 12 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அதில் ஒரு குழப்பமும் ஏற்பட்டுள்ளது. என்னவென்றால் அதுவந்த உடன் திடிரென மறைந்து விடும். மேலும் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தாக்கி பின்னர் முற்றிலும் மறைந்து விடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.vanakkamlondon.com/என்ட்-ஆஃப்-டேஸ்-புத்தகத்/ 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ampanai said:

வைரஸை பரப்புவதாக எங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டை கூறுபவர்களின் நோக்கம் தான் என்ன என்று சீனா கேள்வியெழுப்பியுள்ளது.

சீனா கம்யூனிசத்தை கடைப்பிடிப்பதும், தங்கள் வழிக்குவந்து சனநாயகத்திற்குள் கட்டுப்படாதிருந்து அபாரர பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சியடைவதையும் விரும்பாத நாடுகளுக்குக் கிடைத்த ஒரு துருப்புச் சீட்டுத்தான் கொரோனா 🤪

  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2020 at 4:15 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

"என்ட் ஆஃப் டேஸ்" புத்தகத்தில் கொரோனா வைரஸ் பற்றி கூறியவை.

kor.jpg

2008ம் ஆண்டு சில்வியா பிரவுன் வெளியிட்ட ‘என்ட் ஆஃப் டேஸ்’ புத்தகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தெரிவிக்கப்பட்டுள்ளது.12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘என்ட் ஆஃப் டேஸ்’ என்ற புத்தகத்தில் 2020ம் ஆண்டு மிகவும் மோசமான வைரஸ் பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதில், “2020 ஆம் ஆண்டில் கடுமையான நிமோனியா போன்ற நோய் உலகம் முழுவதும் பரவி, நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் குழாய்களைத் தாக்கும். உலகின் தலைசிறந்த மருத்துவர்களால் கூட இதை கட்டுபடுத்த முடியாது“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரிகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இந்த புத்தகத்தில் கொரோனா வைரஸ் என்று குறிப்பிடாமல் இருந்தாலும் உலகம் எதிர்கொள்ளும் தாக்கம் 12 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அதில் ஒரு குழப்பமும் ஏற்பட்டுள்ளது. என்னவென்றால் அதுவந்த உடன் திடிரென மறைந்து விடும். மேலும் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தாக்கி பின்னர் முற்றிலும் மறைந்து விடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.vanakkamlondon.com/என்ட்-ஆஃப்-டேஸ்-புத்தகத்/ 

ஆரம்பத்தில் சீனாவில் நோய் பரவும்போது , இந்த நோய் நீண்ட காலம் நீடிக்காது  ஏனென்றால் இது ஒரு சீனத்தாயரிப்பு என்று கேவலமான நகைச்சுவை கூறிய அவுஸ்திரேலியர்,இப்பொழுது கழிவறை காகிதங்களுக்காக பைத்தியக்காரத்தனமாக சண்டை போடுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.