Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

Featured Replies

Curfew-2.jpg

கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அதேபோல் ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம், பின்னர் திங்கள் மாலை 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதிவரை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி எதிர்வரும் 24ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

http://athavannews.com/ஊரடங்குச்-சட்டம்-நீடிப்ப/

  • Replies 111
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஊரடங்கு சட்டம் நீடிப்பு;   தளர்த்தப்படும் நேரம் தொடர்பான விவரம்

கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

24ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.

அத்துடன், ஏனைய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 23 திகதி காலை 6 மணிக்கு நீக்கப்படும்.

மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுக்கப்படவுள்ளது.

அப்பகுதிகளில் இந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் நாட்டில் உள்ள மதுபான சாலைகளை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஊரடஙக-சடடம-நடபப-தளரததபபடம-நரம-தடரபன-வவரம/150-247314

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரடங்கு சட்டத்தை மீறினவையை பொலிஸ் கூட்டி அள்ளும் காட்சி....

 

 

ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் நுகர்வோர் வர்த்தக நிலையங்கள் உடனடியாக திறக்கப்பட வேண்டும் - அரசாங்கம் அறிவிப்பு

அனைத்து பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் நுகர்வோர் வர்த்தக நிலையங்கள் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் முடிவுக்கு வந்தவுடன் உடனடியாக நுகர்வோருக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக திறக்குமாறு அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்காக கூட்டுறவு வர்த்தக நிலையங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களில் தட்டுப்பாடு காணப்படுமாயின் தமது பிரதேச கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மூலம் வரையறுக்கப்பட்ட இலங்கை கூட்டுறவு விற்பனை சங்கத்துடன் தொடர்பு கொண்டு மொத்த பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

வரையறுக்கப்பட்ட இலங்கை கூட்டுறவு விற்பனை சங்கம் கொண்டுள்ள கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் மொத்தமாக பெருமளவில் கையிருப்பில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/78357

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

இதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் நாட்டில் உள்ள மதுபான சாலைகளை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

6 hours ago, ampanai said:

யாழ்ப்பாணம் அாியாலை, நாவலடி பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கள்ளு தவறணையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் வாழைச்சேனை பகுதியில் 9 பேர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட ஒன்பது பேரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.

நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் நேற்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய கடந்த 24 மணித்தியாலங்களில் (இன்று சனிக்கிழமை மாலை வரை) ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் மது போதையில் பயணம் செய்த வேளையில் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் பிரிவில் பொதுமக்கள் நடமாடுவதை தவிர்த்து கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் மீறும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் தமது பிரதேசத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதேவேளை நாடு பூராகவும் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பாட்ட 130க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.tamilwin.com/community/01/241534

வடக்கு மாகாணத்தில் ஊரடங்குச்சட்டம் நீடிப்பு

வடக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச்சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் அன்றைய தினம் (24ஆம் திகதி) இரண்டு மணிக்கு அமுல்படுத்தப்படும்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் கொரோனா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டநிலையிலும் மற்றுமொருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதனாலுமே இந்த ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/139561

வடக்கு மாகாணம் கொழும்பில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வெள்ளிவரை நீடிப்பு!

In இலங்கை     March 23, 2020 6:52 am GMT     0 Comments     1045     by : Jeyachandran Vithushan

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு மீளவும் மதியம் 12 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அத்துடன், நாளை நண்பகல் 12 மணிக்கு நடைமுறைத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்றும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஏனைய 17 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விதிக்கப்பட்டு வியாழக்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்படும். மேலதிக அறிவிப்பு வரும்வரை வியாழக்கிழமை நண்பகலில் அந்த 17 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு மீண்டும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/வடக்கு-மாகாணம்-கொழும்பில/

வட மாகாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் வெள்ளி வரை நீடிப்பு

வட மாகாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செலயகம் அறிவித்துள்ளது.

எனினும் இந்தப் பகுதியில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் நண்பகல் 12 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு, வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்படும் என செயலகம் அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்த ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் 26ஆம் திகதி காலை 6 மணிக்கு நீக்கப்படும். பின்னர் அன்றைய தினம் 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

இந்த காலப்பகுதியில் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான பயணங்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இடங்களுக்கு இடம் கொண்டு செல்வது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எந்த மாவட்டமாக இருந்தாலும் விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

https://www.tamilwin.com/security/01/241653?ref=imp-news

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா – இலங்கையில் மீண்டும் ஊரடங்கு நீடிப்பு – புதிய அட்டவனை வெளியாகியது…

March 23, 2020

curfew-2.jpg

இன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை ஆறு மணி வரை மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் 26ஆம் திகதி வியாழக்கிழமை பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை ஆறு மணிக்கு நீக்கப்படவுள்ளது.

குறித்த எட்டு மாவட்டங்களிலும் நாளை பகல் 12 மணியிலிருந்து 27ஆம் திகதி வௌ்ளிக்கிழமை காலை ஆறு மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் 27ஆம் திகதி நண்பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நாடளாவிய ரீதியில் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சுற்றுலாப் பயணிகளை ஆங்காங்கே அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற காலப்பகுதியில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாய செய்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் வர்த்தக துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் இந்த விடயங்களை முறையாக நிருவகிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://globaltamilnews.net/2020/138989/

  • தொடங்கியவர்

நாளை வெளியே செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டியவை! மீறினால் சட்ட நடவடிக்கை

ஶ்ரீலங்காவில் நாளைய தினம் ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ள நிலையில் மக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய பல விடயங்கள் தொடர்ந்தும் அறிவுறுத்தப்பட்டுவருகின்றன.

ஶ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

கொழும்பு கம்பஹா புத்தளம் வடமாகாணம் தவிர்ந்த ஏனைய இடங்களில் இன்றைய தினம் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டு இன்று 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கொழும்பு கம்பஹா புத்தளம் வடமாகாணம் போன்ற இடங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் நாளை 12 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்மூலம் மக்கள் அத்தியாவசிய தேவைகளை மேற்கொள்வதற்காக 6 மணித்தியாலங்கள் நாளை வழங்கப்படவுள்ளது.

இதனால் நாளை மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்காக பரபரப்புடன் செயற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே கொரோனா தொற்று அதிகாமாவதற்கு காரணமாக அமையக்கூடாது என அரசாங்கத்தால் மக்களுக்கு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

அதில் நாளை மக்கள் வெளியில் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டியவையாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள்...

  • தேவையான விடயத்தின் அடிப்படையில் மாத்திரம் பொதுப்போக்குவரத்து சேவையை பயன்படுத்துதல்
  • எல்லா சந்தர்ப்பத்திலும் இரண்டு நபர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளி தூரத்தை கடைப்பிடித்தல்.
  • அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நீங்கள் வீட்டிலிருந்து வர்த்தக நிலையத்திற்கு மாத்திரம் செல்ல வேண்டும்.
  • வீட்டில் ஒரு நபர் மாத்திரம் வர்த்தக நிலையத்திற்கு செல்வதை வரையறுக்கவும்.
  • தனியார் வைத்திய ஆலோசனைகளை கடைப்பிடிக்கவும்
  • வயோதிப நபர்களை வீட்டிலேயே தங்க வைக்கவும்.
  • பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களில் செலவிடும் காலத்தில் நபர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளி தூரத்தை பேணுங்கள்.
  • பொருட்களை கொள்வனவு செய்யும் பொளுது வர்த்தக நிலையங்களில் செலவிடும் காலத்தை வரையறை செய்யுங்கள்.
  • இந்த வர்த்தக நிலையங்களுள் கூடுதலானோர் உட்பிரவேசிப்பதில் கட்டுப்படுத்துவதில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் முகாமையாளர் பாதுகாப்பு பிரிவினர் கவனம் செலுத்த வேண்டும்.
  • வெளியிடங்களுக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வரும்போது வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை மாத்திரம் கடைப்பிடித்து வீடுகளுள் பிரவேசிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களையும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியாமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நாளைய தினம் காலை 6 மணிக்கே வர்த்தக நிலையங்களை திறக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/139648

இன்றைய ஊரடங்குச் சட்டம் தளர்வு பொருட்களை வாங்க மக்களுக்கு போதிய அவகாசத்தை கொடுக்கேல்லையாம்.

ஊரடங்குச் சட்டத்தின்போது மருந்தகங்கள் திறந்திருக்கும் - சுகாதார அமைச்சு அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் வைத்தியசாலைகளிலும் மருந்தகங்களிலும் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் பெருந்திரளான நோயாளர்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்களைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மருந்தகங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நோயாளர்களின் பதிவேடு மற்றும் மருந்துகளுக்கான பற்றுச்சீட்டுக்களை, ஊரடங்கின்போது பயன்படுத்தக்கூடிய அனுமதிப் பத்திரங்களாகக் கவனத்தில்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல், மருந்தகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஔடதங்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்குமாறும் பதில் பொலிஸ்மா அதிபருக்கு சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார் எனவும் சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/139737

  • தொடங்கியவர்

ஊரடங்கு அமுலில் உள்ள வேளையில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வீடு தேடி வரவுள்ள குழு

நாட்டு மக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் செயற்பாடுகளுக்காக பசில் ராஜபக்ச தலைமையில் செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தால் நாட்டு மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் மக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் செயற்பாடுகளுக்காக பசில் ராஜபக்ச தலைமையில் செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மக்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வது, அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பது உட்பட பல விடயங்களை இந்த செயலணி கையாளும்.

அரச அதிபர்மார், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் இந்த செயலணியில் அங்கம் வகிப்பார்கள்.

நாளை முதல் இந்த செயலணி வேலைகளை ஆரம்பிக்கவுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/139742

வடக்கு தவிர்ந்த 16 மாவட்டங்களில் நாளை தளர்கிறது 'ஊரடங்கு'

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் நாளைமறுதினம் வௌ்ளிக்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் வௌ்ளிக்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நாடளாவிய ரீதியில் தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3 ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வௌ்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் இன்று புதன்கிழமை காலை 6 மணி வரை இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் 715 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/139807

நாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்!

In இலங்கை     March 26, 2020 1:52 am GMT     0 Comments     1533     by : Benitlas

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களையும் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களையும் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வரும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்து முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஆங்காங்கே அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தமது பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள், மரக்கறி, மீன், இறைச்சி மற்றும் மருந்து வகைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் வர்த்தக விவகார அமைச்சர் இந்த விடயத்தை முறையாக நிர்வகிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

http://athavannews.com/நாட்டின்-சில-பகுதிகளில்-10/

 

யாழில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது – அரசாங்கம்

In இலங்கை     March 26, 2020 5:52 am GMT     0 Comments     1013     by : Jeyachandran Vithushan

வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படாது என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டே குறித்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மறுஅறிவிப்பு வரும்வரை தொடரும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/யாழில்-ஊரடங்கு-உத்தரவு-த/

  • கருத்துக்கள உறவுகள்

மீள அறிவிக்கும் வரை யாழில் ஊடரங்கு

Lயாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை (27) காலை 6 மணிக்கு நீக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய மாவட்டங்களில் நாளை காலை மாலை 6 மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுலுக்கு வரும்.

பின்னர், பொலிஸ் ஊரடங்குச் சட்டம் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என கூறப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா நோய்க்கிருமி தொற்று பரவும் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும்.
 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மள-அறவககம-வர-யழல-ஊடரஙக/150-247470

யாழ். மாவட்டத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டது ஏன்? அரசாங்க அதிபர் விடுத்துள்ள விசேட கோரிக்கை

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை ஆறு மணிக்கு சில மாவட்டங்களில் நீக்கப்படுகிறது.

எனினும் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்திற்கு மட்டும் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பில் பொது மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

இது தொடர்பில் யாழ். அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை கணேசன் விளக்கியுள்ளதுடன், யாழ். மக்களிடம் விசேட கோரிக்கையினையும் விடுத்துள்ளார்,

இது தொடர்பில் எமது இணையத்திற்கு அவர் வழங்கிய செவ்வியில்,

https://www.ibctamil.com/srilanka/80/139892?ref=ibctamil-recommendation

யாழ். தீவகப் பகுதி மக்களுக்கு அவசர அறிவித்தல்!

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெறுகின்ற தீவகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வைத்தியசாலைப் பணிப்பாளர் அவசர அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று தாக்கம் காரணமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் நோயாளர் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெறுகின்றவர்கள் எதிர்நோக்கும் பாதிப்பையடுத்து யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய நாளை 27 ஆம் திகதி தீவகத்தைச் சேர்ந்த மருத்துவ கிளினிக் பெறும் நோயாளர்களுக்கு மருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை காலை 9 மணிமுதல் 1 மணிவரையிலான நேரத்திற்குள் 021-2222268 என்ற தொலை பேசி இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்குமாறு பணிப்பாளர் கேட்டுள்ளார்.

அவ்வாறு தெரிவிக்குமிடத்தே உங்களுக்கு தேவையான மருந்துகள் உங்களது பிரதேசத்திற்கு அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு பொதி செய்து அனுப்பி வைக்கப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே நாளை தீவகப் பிரதேசத்திற்காக முதலில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்த நடவடிக்கை தொடர்ந்தும் ஏனைய பிரதேசங்களுக்கும் ஆரம்பிக்க உள்ளதாகவும் அது தொடர்பான அறிவித்தல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/india/80/139893

ஊரடங்கு நேரத்தில் செய்ய வேண்டியது என்ன? அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகளையும் உடனடியாக சந்தித்தார் பசில்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழந்நிலையில் மக்களின் தேவைகளை எவ்வாறு முழுமையான செய்து கொடுப்பது என்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடாத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின்தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் மருந்துத் துறை சார்ந்த அதிகாரிகளின் பங்கேற்புடன் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதேபோன்று, ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இலங்கையின் வங்கித் துறையின் செயல்பாட்டை திறன்பட வைத்திருப்பதில் இருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்‌ஷ தலைமையில் இன்று கூடியது.

இதன்போது பேசிய அவர்,

சர்வதேச மட்டத்தில் நிதி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் வணிக வங்கிகள் தொடர்ந்து சேவையில் ஈடுப்பட வேண்டும். அத்துடன் கசோலை ஊடான கொடுக்கல் வாங்கலும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

எ.டி.ம் இயந்திரம் ஊடான சேவைகள் தொலைபேசி ஊடாக அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும். குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டாவது ஊரடங்கு சட்டம் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் பிரதேச செயலக பிரிவுகளில் குறைந்தபட்சம் ஒரு வங்கியாவது வழமையான நேரத்திற்கு அதிகமான நேரம் ஈடுப்பட வேண்டும் .

இதன்போது, இலங்கையின் அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலுக்கு சமூகமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/139954

ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மஹிந்த விளக்கம்!

In இலங்கை     March 28, 2020 7:34 am GMT     0 Comments     1159     by : Benitlas

ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பதில் பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் பரவலை அலட்சியமாக எண்ண முடியாது. குறுகிய காலத்தில் உலகளாவிய ரீதியில் பாரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குமான நடவடிக்கைகள் நாடு தழுவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பல காரணிகளை கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை இனி கடுமையாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் உற்பத்தி, மரகறிகள், பழங்கள் மற்றும் தேங்காய் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் பொருள் விநியோகிக்க போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் எந்நிலையிலும் தடைகள் ஏற்பட கூடாது.

அத்துடன் மக்களும் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/ஊரடங்கு-சட்டம்-கடுமையாக்/

கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிப்பு!

In இலங்கை     March 29, 2020 4:07 am GMT     0 Comments     1174     by : Benitlas

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை(திங்கட்கிழமை) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் அடுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தில் அகுரணை கிராமங்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டள்ளன.

எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

http://athavannews.com/கொழும்பு-யாழ்ப்பாணம்-உள/

கொரோனா ஒழிப்பு கடமைகளில் தொழில்வாய்ப்பற்ற பட்டதாரி பயிற்சியாளர்கள்!

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரி பயிற்சியாளர்கள் கொரோனா வைரஸ் ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதினால் இவர்களுக்கு சேவைக்கு சமூகமளிப்பதற்கு சிரமம் என்பதினால் நாளைய (30.03.2020) தினத்தில் சுகாதார வைத்திய அதிகாரி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கடமைக்கு சமூகமளிப்பது அத்தியாவசியமல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இதுதொடர்பில் குறிப்பிட்ட காலத்தில் அறிவிக்கப்படும் என அரச நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140132

ஊரடங்கிற்கு முழு ஆதரவு வழங்கும் முல்லைத்தீவு மக்கள்!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடுதழுவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது வீட்டிற்குள் முடங்கி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு.

இந்நிலையில்நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ஊரடங்கு உத்தரவின் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மக்களும் அதற்கு ஆதரவு வழங்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டமெங்கும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.

அந்த வகையிலே பொதுவாக வீதிகள் நகரங்கள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதோடு மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு வழங்கும் முகமாக வீடுகளில் முடங்கி இருக்கின்றனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/140130

ஊரடங்கு மூலம், அரசு கட்டுப்படுத்துவது கொரானவை மட்டுமல்ல, மக்களையும் 

அதுவே நாளை இராணுவ அரசிற்கு வழி கோலலாம் 😞 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.