Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நாடுகளை ஏமாற்றியுள்ள சீனா: அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில் முக்கிய தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளை ஏமாற்றியுள்ள சீனா: அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில் முக்கிய தகவல்!

 

 

     by : Litharsan

America.jpg

கொரோனா வைரஸால் நேரிட்ட உண்மையான உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை சீனா மறைத்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவை விட அமெரிக்காவில் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசிடம் கடந்த வாரம் அந்நாட்டு உளவுத் துறை அளித்துள்ள அறிக்கையில், சீனா வேண்டுமென்றே உண்மையான தகவல்களை மறைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த சீனாவின் புள்ளி விவரங்கள் போலியானவை எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க உளவுத்துறை அறிக்கை மிகவும் இரகசியமானது என்பதால் முழு விவரங்கள் தெரியவில்லை. பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அரச அதிகாரிகளே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

America-China.jpg

இந்த சூழலில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சீனா அளித்துள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

வொஷிங்ரனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீனாவை விட அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அது தவறான செய்தி என பதிலளித்த ட்ரம்ப், சீனா அளித்துள்ள தகவல்கள் உண்மை தானா என்பது யாருக்கு தெரியும் என்றார்.

மேலும் ஆரம்பம் முதலே கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சீனா மூடிமறைக்கவே முயன்றதாகவும், அமெரிக்க உளவுத்துறையும் சீனாவின் புள்ளிவிவரங்கள் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சீனாவுடன் நல்லுறவு நீடிக்கும் போதிலும், கொரோனா விடயத்தில் சீனா நம்பத்தகுந்த நாடு அல்ல எனவும் இழைத்துவிட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/உலக-நாடுகளை-ஏமாற்றியுள்ள/

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் மரண எண்ணிக்கையை எப்படி நம்புவது? டிரம்ப் கேள்வி

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பனிப் போர் வலுத்து வருகிறது. சீனா தரப்பில் சொல்லப்படும் மரண எண்ணிக்கையை நம்ப முடியவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரசை, 'சீன வைரஸ், வூஹான் வைரஸ்' எனக் சர்ச்சைக்குரிய வகையில் முத்திரை குத்தினார். இதற்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்த சீனா, 'அமெரிக்க ராணுவம் தான், கொரோனா வைரசை சீனாவில் பரப்பியது' எனக்கூறியது.
 


latest tamil news


 


'கொரோனா வைரசால், தங்கள் நாட்டில், 82,361 பேர் பாதிக்கப்பட்டனர். 3,316 பேர் உயிரிழந்தனர்' என, சீனா கூறியுள்ளதாக, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் இதுவரை, 2,06,207 பேருக்கு கொரோனா இருப்பதும், 4,542 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது.

 

 

latest tamil news


 


அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் பென் சாசே, 'சீனாவைவிட அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்கிற தகவல் மிகத் தவறானது. சீனா கொரோனா உயிரிழப்பு குறித்து பொய் சொல்லியிருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்தை ஏற்கும் வகையில், அமெரிக்காவின் 'கொரோனா வைரஸ் டாஸ்க்' படையைச் சேர்ந்த மருத்துவர் டெபோரா பிர்க்ஸ், 'சீனா முக்கியமான தகவல்களையும் உண்மை நிலையையும் மறைத்ததால், சீனாவில் கொரோனா பரவியபோது, அதை ஒரு பிரச்னையாக மருத்துவ உலகம் பார்த்தது. ஆனால், இவ்வளவு பெரிய பிரச்னையாகப் பார்க்கவில்லை' என, சீனா மீது குற்றம் சுமத்தினார்.


 

latest tamil news


 

 

இந்நிலையில், வாஷிங்டனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் பேசியதாவது:
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் குறித்து, அந்நாட்டு அரசு சொல்லும் எண்ணிக்கையை எப்படி நம்புவது. அவர்கள் சொல்லும் கணக்கு மிகவும் குறைவாக உள்ளது.
அமெரிக்கா சீனாவுடன் நல்ல நட்புறவு கொண்டுள்ளது. அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உடன் நான் நெருக்கமாகவே உள்ளேன். அதற்காக, சீனாவின் பொய்களை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


 

'கொரோனாவுக்கு எதிரான போரில், உலக நாடுகள் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்போதே, கொரோனா வைரசை முற்றிலுமாக அழித்தொழிக்க முடியும்' என, உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க, மற்ற நாடுகளை குறை சொல்லுவதிலும், எச்சரிக்கை விடுப்பதிலும் கவனம் செலுத்துவது, அபத்தமாக உள்ளதாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2514002

 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அரசியல்வாதிகள் இயல்பாகவே பொய்யர்கள்.. தகவலை மறைத்தோம் என்பது வெட்கங்கெட்ட குற்றச்சாட்டு: சீனா ஆவேசம்

கோப்புப் படம்.
 

கடந்த டிசம்பரில் சீனாவில் கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து வேகமாகப் பரவியுள்ளது, ஆனால் ஜனவரி 16ம் தேதி வரை பலிகள் எண்ணிக்கை இல்லை என்று கூறி வந்ததோடு மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றும் அபாயகரமான வைரஸ் என்ற உண்மையையும் மறைத்து உலக நாடுகளுக்கு சீனா பெரிய துரோகம் இழைத்து விட்டது என்று உளவுத்துறை தகவல்களை வைத்து அமெரிக்கா சீனாவைக் கடுமையாகச் சாடியது.

மேலும் சீனா கூறும் பலி எண்ணிக்கை பொய்யானது என்றும் அதற்கு மேல்தான் அங்கு பலிகள் இருக்கும் எனவும் ட்ரம்ப் முதற்கொண்டு அனைத்து அரசியல்வாதிகளும் கடுமையாகச் சாடினர்.

இதனையடுத்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சுன்யிங் ஹுவா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “சீனா மிகவும் வெளிப்படையாக உரிய நேரத்தில் கரோனா தகவல்களை உலகுக்கு அளித்தது.

பன்னாட்டு பொதுச்சுகாதார பாதுகாப்பு குறித்து உலகச் சுகாதார அமைப்பும், கொள்ளை நோய், தொற்று நோய் நிபுணர்களும்தான் தீர்ப்பளிக்க வேண்டும். அமெரிக்க அரசியல்வாதிகள் அல்ல, ஏனெனில் இவர்கள் இயல்பாகவே பொய்யர்கள். பொய்கூறியே பழக்கப்பட்டவர்கள்.

உலகச் சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவரே சீனா மீதான இத்தகையக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளார். சீனா கரோனா மீது மக்கள் நலன்களுக்காக விரைவு கதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு உலக அளவில் கரோனா பரவுவதைத் தடுப்பதற்கான தகவல்களை அவ்வப்போது அளித்துக் கொண்டுதான் இருந்தது.

அமெரிக்கா திண்டாடுகிறது என்பதை வருத்தத்துடன் புரிந்து கொள்கிறோம் அதன் சுகாதார அதிகாரிகள் கடும் நெருக்கடியில் இருக்கின்றனர் என்பதையும் புரிந்து கொள்கிறோம், அமெரிக்க மக்களின் கடினமான நிலைக்காக உண்மையில் வருந்துகிறோம்.

இதனையடுத்து மனிதாபிமான உணர்வில் சீனா எங்களால் முடிந்த உதவியை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கவே தயாராக உள்ளது.

எனவே கரோனாவுக்கு எதிரான போரில் பொறுப்பாகச் செயலாற்ற வேண்டிய நேரமே தவிர குற்றம்குறை காண்பதில் நேரத்தை அமெரிக்கா செலவிடுதல் கூடாது. அரசியலுக்கும் மேலாக மக்களின் ஆரோக்கியம் முக்கியம். பொதுமக்கள் சுகாதார விவகாரத்தை அறமற்ற முறையிலும் வெட்கங்கெட்ட முறையிலும் அரசியலாக்கக் கூடாது. இது அமெரிக்க மக்கள் உட்பட உலக மக்களின் கண்டனங்களையும் ஈர்த்து விடும்” என்றார்.

https://www.hindutamil.in/news/world/547664-china-refutes-u-s-officials-accusations-of-concealing-extent-of-virus-1.html

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் மறக்கமுடியாத கிறிஸ்மஸ் பரிசொன்றை தான் அமெரிக்காவுக்கு வழங்கப்போவதாக கடந்த ஆண்டு வடகொரிய தலைவர் சொல்லியிருந்தார் அதையும் இத்தருணத்தில் இங்கே நினைவுகூர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, vanangaamudi said:

உலகம் மறக்கமுடியாத கிறிஸ்மஸ் பரிசொன்றை தான் அமெரிக்காவுக்கு வழங்கப்போவதாக கடந்த ஆண்டு வடகொரிய தலைவர் சொல்லியிருந்தார் அதையும் இத்தருணத்தில் இங்கே நினைவுகூர வேண்டும்.

அதுக்காக ப்ரைஸ்சாக  வைரஸ்சா .......!   🥵

  • கருத்துக்கள உறவுகள்

ச‌ப்பை மூக்க‌ன் ப‌ச்சையாய் பொய் சொல்லுகிறான் /

உண‌வை கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌ நாடு சீனா / போலி அரிசி போலி முட்டை போலி இழை குழை / 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.