Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவு! சுகாதார அதிகாரிகள் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவு! சுகாதார அதிகாரிகள் குற்றச்சாட்டு

Report us Vethu 5 hours ago

கொரோனா நோயாளியான சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட மாகாண சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அரியாலையில் சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 200 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படாமல் மறைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டவர்களில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தள்ளார்.

முதலில் ஒரு நோயாளியும் பின்னர் தலா மூன்று நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று 16 பேரின் இரத்த மாதிரிகள் சோதனையிட்ட போது எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்றுமொரு தொகுதியினரின் மருத்துவ அறிக்கைகள் இன்று வெளியாகும் என பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/security/01/242722?ref=home-top-trending

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா இன்னும் 200 ஆ இப்பவே கண்ண கட்டுதே அப்ப வடமாகாணம் வழமைக்கு திரும்ப சான்சே இல்ல

15 hours ago, பெருமாள் said:

இவர்களில் 200 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படாமல் மறைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திருட்டுக் கூட்டம் எப்ப வெளிவருமோ அல்லது பிடிபடுமோ தெரியல்ல?

13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அடப்பாவிகளா இன்னும் 200 ஆ இப்பவே கண்ண கட்டுதே அப்ப வடமாகாணம் வழமைக்கு திரும்ப சான்சே இல்ல

ம்ம்ம். அதான் நடக்கும்!
இந்த கோஷ்டியோட இனி கொஞ்ச நாளைக்கு யாரும் பழகாமல் இருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி வடகிழக்கில் அல்லுலோயா போன்றவர்கள் வீதிக்கு  வீதி நின்று தேவன் வருகிறான் என்றால் அவ்வளவுதான் கதை அங்குள்ள பொது மக்களே  கலைத்து  கலைத்து  அடி  போடுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

இனி வடகிழக்கில் அல்லுலோயா போன்றவர்கள் வீதிக்கு  வீதி நின்று தேவன் வருகிறான் என்றால் அவ்வளவுதான் கதை அங்குள்ள பொது மக்களே  கலைத்து  கலைத்து  அடி  போடுங்கள் .

அடிப்படையிலிருந்து வந்த கிறிஸ்தவன் கூட இவங்களை வெறுக்கிறான்  ஏனென்றால் அவங்களை கூட சாத்தான் என்று சொல்கிறார்களாமே  என்று என்னுடன் பழகும் ஓர் ஆசிரியர் சொல்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

இனி வடகிழக்கில் அல்லுலோயா போன்றவர்கள் வீதிக்கு  வீதி நின்று தேவன் வருகிறான் என்றால் அவ்வளவுதான் கதை அங்குள்ள பொது மக்களே  கலைத்து  கலைத்து  அடி  போடுங்கள் .

கலைத்துக் கலைத்து அடி போடுவாங்கள்  என்பது  தவறுதலாக அடி போடுங்கள் என வந்துவிட்டதோ ? 🤔

12 hours ago, Rajesh said:

திருட்டுக் கூட்டம் எப்ப வெளிவருமோ அல்லது பிடிபடுமோ தெரியல்ல?

ம்ம்ம். அதான் நடக்கும்!
இந்த கோஷ்டியோட இனி கொஞ்ச நாளைக்கு யாரும் பழகாமல் இருக்க வேண்டும்.

உங்களிடம் எதைத் திருடினார்கள் ?  😜

வெட்கத்தையோ ? 😂

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் இருந்துஎத்தனையோ பேர் வந்திருக்கிறார்கள். சிலரிடம்  கொரோனா தொற்று இருந்திருக்கிறது. சிலருக்கு இங்கு வந்த பின் தொற்றி இருக்கிறது. சிலருக்கு இவர்களிடம் இருந்து தொற்றி இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வந்தவர் இறந்திருக்கிறார். அல்லது அவருடன் பழகியவர் இறந்திருக்கிறார். நிலைமை இப்படி இருக்கும்போது, நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக வாய்க்கு வந்தபடி குற்றம் சாட்டக்கூடாது. கொரோனாவின் தாக்கம் இப்போ எல்லோருக்கும் தெரியும். அந்த நிலையில் தொற்று உள்ள ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து  வெளிநாட்டில் இருந்து வந்திருப்பாரா? தென்பகுதியில் எத்தனை பேர் இறந்துள்ளார்கள். நீர்கொழும்பில் இறந்தவர் ஒரு இஸ்லாமியர். அவர் இந்த ஜெபக்கூட்டத்துக்கு போனவரா? நீங்கள் சொல்லும் போதகர் சுவிஸ் போனபின் அல்லது போகும்போது தொற்றுக்கு இலக்காகி இருக்கலாம். அவர் இறக்கவில்லை. அவரால் பரப்பப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட யாரும்  இதுவரை இறக்கவில்லை. சந்தோசப்படுவோம். ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிறோம்.  பராமரிக்கப்படும் இடங்களிலே இவர்களுக்கு  தொற்று ஏற்படும் சாத்தியங்களும் உண்டு. சரி. இப்படியான தொற்று உள்ளவர்களை ஏன் உள்ளே அரசாங்கம் அனுமதித்தது? அவர்களே இந்த நோயின் தன்மையை அறிந்து தம்மை சுதாகரித்துக்கொள்ள முதல்  இது பரவியது. போதகர் ஏற்கெனவே திட்டமிட்ட பயணத்தை வந்துள்ளார். அவரே இதை இங்கு வந்தபின் தான் அறிந்திருக்க கூடும்.   காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாய் போய்விட்டது. ஏற்கெனவே எரிந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியதுபோல்,  இப்போ கொழுந்துவிட்டு எரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

வெளிநாட்டில் இருந்துஎத்தனையோ பேர் வந்திருக்கிறார்கள். சிலரிடம்  கொரோனா தொற்று இருந்திருக்கிறது. சிலருக்கு இங்கு வந்த பின் தொற்றி இருக்கிறது. சிலருக்கு இவர்களிடம் இருந்து தொற்றி இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வந்தவர் இறந்திருக்கிறார். அல்லது அவருடன் பழகியவர் இறந்திருக்கிறார். நிலைமை இப்படி இருக்கும்போது, நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக வாய்க்கு வந்தபடி குற்றம் சாட்டக்கூடாது. கொரோனாவின் தாக்கம் இப்போ எல்லோருக்கும் தெரியும். அந்த நிலையில் தொற்று உள்ள ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து  வெளிநாட்டில் இருந்து வந்திருப்பாரா? தென்பகுதியில் எத்தனை பேர் இறந்துள்ளார்கள். நீர்கொழும்பில் இறந்தவர் ஒரு இஸ்லாமியர். அவர் இந்த ஜெபக்கூட்டத்துக்கு போனவரா? நீங்கள் சொல்லும் போதகர் சுவிஸ் போனபின் அல்லது போகும்போது தொற்றுக்கு இலக்காகி இருக்கலாம். அவர் இறக்கவில்லை. அவரால் பரப்பப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட யாரும்  இதுவரை இறக்கவில்லை. சந்தோசப்படுவோம். ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிறோம்.  பராமரிக்கப்படும் இடங்களிலே இவர்களுக்கு  தொற்று ஏற்படும் சாத்தியங்களும் உண்டு. சரி. இப்படியான தொற்று உள்ளவர்களை ஏன் உள்ளே அரசாங்கம் அனுமதித்தது? அவர்களே இந்த நோயின் தன்மையை அறிந்து தம்மை சுதாகரித்துக்கொள்ள முதல்  இது பரவியது. போதகர் ஏற்கெனவே திட்டமிட்ட பயணத்தை வந்துள்ளார். அவரே இதை இங்கு வந்தபின் தான் அறிந்திருக்க கூடும்.   காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாய் போய்விட்டது. ஏற்கெனவே எரிந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியதுபோல்,  இப்போ கொழுந்துவிட்டு எரியுது.

போதகர் மத போதனை செய்ததல்ல பிரச்சனை. மிகவும் இக்கட்டான கால கட்டத்தில் கூட்டம் கூட்டியதுதான் பிரச்சனை. 

ஆனால் தற்போது கூட்டம் கூடியது மறக்கப்பட்டு மத போதனை முன்னிலைப் படுத்தப்படும் போக்கு  தெரிகிறது.

உண்மையில் போதகரின் ஒன்றுகூடல் நடந்திராவிடின் வடபுலத்தில் கொறோனாவின் தாக்கம் பூச்சியமாக இருந்திருக்க சந்தர்ப்பம் அதிகம். ☹️

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் முதலிலேயிருந்தாtw_lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

தொற்று உள்ளவர்களை ஏன் உள்ளே அரசாங்கம் அனுமதித்தது? அவர்களே இந்த நோயின் தன்மையை அறிந்து தம்மை சுதாகரித்துக்கொள்ள முதல்  இது பரவியது. போதகர் ஏற்கெனவே திட்டமிட்ட பயணத்தை வந்துள்ளார். அவரே இதை இங்கு வந்தபின் தான் அறிந்திருக்க கூடும்.   காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாய் போய்விட்டது. ஏற்கெனவே எரிந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியதுபோல்,  இப்போ கொழுந்துவிட்டு எரியுது.

எங்களுக்குஎல்லாம்  மறதி கூடி போச்சு உதயனில் கொரோனோவில்  இருந்து விடுதலை என்று போட்டுத்தானே விளம்பரமே வந்தது ?

அதுக்கு முதலே கூட்டம்கள் ஒன்று கூடல்கள் போன்றவற்றை செய்ய வேண்டாம் என்று அறிவித்து உள்ள நிலையில் அதாவது எல்லாம் தெரிந்தும் வீம்புக்கு கூட்டம்  கூட்டி நோயை  பரப்பி உள்ளீர்கள் மிக முக்கியம்  போதகருக்கு  உடம்பு சுகமில்லை என்று தெரிந்தும் இருக்கிறது .இந்த கேவலத்தில் கொர்னோவில்  இருந்து விடுதலை என்று விளம்பரம் வேறை , நடந்தது  ஒரு மோசமான செயல் காகம் இருக்க பணம் பழம்  விழுந்துவிட்டது இப்ப சொல்லி மழுப்ப  வேண்டாம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

எங்களுக்குஎல்லாம்  மறதி கூடி போச்சு உதயனில் கொரோனோவில்  இருந்து விடுதலை என்று போட்டுத்தானே விளம்பரமே வந்தது ?

அதுக்கு முதலே கூட்டம்கள் ஒன்று கூடல்கள் போன்றவற்றை செய்ய வேண்டாம் என்று அறிவித்து உள்ள நிலையில் அதாவது எல்லாம் தெரிந்தும் வீம்புக்கு கூட்டம்  கூட்டி நோயை  பரப்பி உள்ளீர்கள் மிக முக்கியம்  போதகருக்கு  உடம்பு சுகமில்லை என்று தெரிந்தும் இருக்கிறது .இந்த கேவலத்தில் கொர்னோவில்  இருந்து விடுதலை என்று விளம்பரம் வேறை , நடந்தது  ஒரு மோசமான செயல் காகம் இருக்க பணம் பழம்  விழுந்துவிட்டது இப்ப சொல்லி மழுப்ப  வேண்டாம் .

வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரை தனிமைப்படுத்தல் இல்லாமல் விட்டவர்கள் நோயின் தீவிரத்தை அறியாதவர்களா? அறிவித்தல் போட்டவர்களை மீறி இந்தக்கூட்டம் நடந்திருக்கிறது.அப்போ அறிவித்தல் போட்டதன் காரணம் என்ன? ஏன் சம்பந்தப்பட்ட்டவர்கள் கூட்டத்தை தடுக்கவில்லை? இத்தனையையும் மீறி ஒரு கூட்டம் விரும்பி பங்குபற்றி இருக்கிறது. அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு. அது அவர்களை கைவிடாமல் இருக்கோணும். அதுமட்டுமில்லை பயமில்லாமல்  இன்னும் மறைந்து இருக்கிறார்கள். புதுமை ஏதும் நடந்திருக்கலாம். பொறுத்திருந்து பாப்போம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரை தனிமைப்படுத்தல் இல்லாமல் விட்டவர்கள் நோயின் தீவிரத்தை அறியாதவர்களா? அறிவித்தல் போட்டவர்களை மீறி இந்தக்கூட்டம் நடந்திருக்கிறது.அப்போ அறிவித்தல் போட்டதன் காரணம் என்ன? ஏன் சம்பந்தப்பட்ட்டவர்கள் கூட்டத்தை தடுக்கவில்லை? இத்தனையையும் மீறி ஒரு கூட்டம் விரும்பி பங்குபற்றி இருக்கிறது. அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு. அது அவர்களை கைவிடாமல் இருக்கோணும். அதுமட்டுமில்லை பயமில்லாமல்  இன்னும் மறைந்து இருக்கிறார்கள். புதுமை ஏதும் நடந்திருக்கலாம். பொறுத்திருந்து பாப்போம். 

கீழே உள்ள இணைப்பை எனக்கு விளங்கப்படுத்துங்க பாஸ் 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்வது தான்: விளம்பரம் செய்து கூட்டம் நடந்திருக்கிறது. தடுக்க வக்கில்லாத சட்டம் சமூக உணர்வு இல்லாத சமுதாயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

தடுக்க வக்கில்லாத சட்டம் சமூக உணர்வு இல்லாத சமுதாயம்

சட்டம் எல்லாம் சொறிலங்காவின் சட்டம் எப்பவும் தமிழருக்கு எதிரான ஒன்று அது பற்றி நிறைய விளக்க தேவையில்லை .

எங்கடை  மக்களை குறை  கூறுவதை ஏற்க  முடியாத ஒன்று நீண்ட நெடிய போரின் பின் அவர்களுக்கு மன  தைரியம் ஊட்டும் உளவியலை நாங்கள் யாருமே மேட்கொள்ளவில்லை எங்களின்  பிழை அது மூன்று நேர உணவை குடுக்க தெரிந்த எங்களுக்கு அவர்களின் மனவியலை  சிந்திக்க மறந்து விட்டம் .அதன் பிழை இன்று இவ்வளவு சிக்கலில் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.