Jump to content

பெரியார் படமும்.. முரண்பாடுகளும்..!


Recommended Posts

பெரியார் எந்த ஒரு மொழியும் ஒரு இனத்தின் மீது திணிக்கப்படுவதை எதிர்த்தார்.

தமிழர்கள் மீது ஹிந்தி திணிக்கப்பட்ட போது அதை எதிர்த்தார்.

ஹிந்தி மீது பெரியாருக்கு எந்த ஒரு வெறுப்பும் இல்லை.

பெரியார் முக்கியமாக கற்றுக் கொடுத்தது "சுயமரியாதை". அவர் தன்னுடைய இயக்கத்தை சுயமரியாதை இயக்கம் என்றுதான் சொன்னார். "சுயமரியாதை" என்ற சொல்லே வடமொழிச் சொல்தான்.

.

அவர் இன வெறியரோ அல்லது மொழி வெறியரோ அல்ல.

இதோ பெரியாரின் மொழித்துவேசத்தின் ஒரு பகுதி அவரின் வார்த்தைகளில் இருந்தே

சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று பெரியார் ஆற்றிய சொற்பொழிவு

இந்தியில் மெச்சத் தகுந்த கலைகளே கிடையாது. அதிலுள்ள கலைகள்யாவும் துளசிதாஸ் ராமாயணமும், கபீர்தாஸ் சரித்திரமுந்தாம்; மநுதர்மமும், பாகவதமும்தான். இவற்றின் தன்மைதான் தெரியுமே உங்களுக்கு. இந்தி மொழி தலைசிறந்த அறிஞர்களைப் பெற்றெடுக்கவில்லை என்று திரு.வி.க. அவர்கள் குறிப்பிட்டார். இந்தி உற்பத்தி செய்த அறிவாளிகள் யார் என்றால், நோகாமல் பதவிக்கு வந்த நேருவையும், அவருடைய அய்யாவையுந்தான் குறிப்பிட வேண்டும். அவர்களது தியாகம் இன்று அந்தக் கூட்டம் குடும்பத்தோடு கொள்ளையடிப்பது (உங்களுக்குத் தெரிந்ததுதான்); வேறு ஆட்களைக் குறிப்பிட முடியாது. தமிழ் மொழியோ எண்ணற்ற கலைகளையும், கலைஞர்களையும், அறிஞர்களையும், சித்தர்களையும், முத்தர்களையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தியில் கலை இல்லை; காவியம் இல்லை; நீதி நூல் இல்லை. அம்மொழி மூலம் அறியக் கிடக்கும் விஞ்ஞானத் தத்துவங்களும் இல்லை. ஆகவே, 100க்கு 97 போர் விரும்பாத அம்மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும்? இங்குள்ள பார்ப்பன கோஷ்டியார், இத்திராவிட நாட்டின் கலைகளையும் கலாச்சாரத்தையும் அடியோடு அழித்து, இந்நாட்டை வடநாட்டுக்கு வால் நாடாக்கப் பார்க்கிறார்கள். இதுதான் மர்மமே ஒழிய ‘இந்தி தேசிய மொழி; ஆகவே, எல்லோரும் படிக்க வேண்டும்' என்று கூறுவதெல்லாம் பித்தலாட்ட வார்த்தைகள். இந்தி தேசிய மொழியாயின், எல்லோரும் கட்டாயமாக இந்தியைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்று வெளிப்படையாகக் கண்டிப்பாகக் கூறிவிடட்டுமே! இந்தி அல்லது சமஸ்கிருதம் படியுங்கள் என்கிறார்களே, அது ஏன்? இந்தி தேசிய மொழியா? அல்லது சமஸ்கிருதம் தேசிய மொழியா? நீங்கள் சற்று அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

எமக்கு பிடிக்கிறதோ இல்லையோ இப்படி ஒரேயடியாக ஒரு மொழி பேசுபவர்களிடம் கலை இல்லை, கலாச்சாரம் இல்லை, அவர்களிடம் அறிஞர்களே இல்லை என்று பேசி ஒரு மக்கள் கூட்டத்தின் மேல் துவேசம் வளர்ப்பது தான் இன்றைய் உலக ஒழுங்கில் பாசிசம் எனப்படுகிறது

Link to comment
Share on other sites

இந்தியில் கலை இல்லை; காவியம் இல்லை; நீதி நூல் இல்லை. அம்மொழி மூலம் அறியக் கிடக்கும் விஞ்ஞானத் தத்துவங்களும் இல்லை. ஆகவே, 100க்கு 97 போர் விரும்பாத அம்மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும்? இங்குள்ள பார்ப்பன கோஷ்டியார், இத்திராவிட நாட்டின் கலைகளையும் கலாச்சாரத்தையும் அடியோடு அழித்து, இந்நாட்டை வடநாட்டுக்கு வால் நாடாக்கப் பார்க்கிறார்கள். இதுதான் மர்மமே ஒழிய ‘இந்தி தேசிய மொழி; ஆகவே, எல்லோரும் படிக்க வேண்டும்' என்று கூறுவதெல்லாம் பித்தலாட்ட வார்த்தைகள். இந்தி தேசிய மொழியாயின், எல்லோரும் கட்டாயமாக இந்தியைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்று வெளிப்படையாகக் கண்டிப்பாகக் கூறிவிடட்டுமே! இந்தி அல்லது சமஸ்கிருதம் படியுங்கள் என்கிறார்களே, அது ஏன்? இந்தி தேசிய மொழியா? அல்லது சமஸ்கிருதம் தேசிய மொழியா? நீங்கள் சற்று அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

பெரியார் ஏன் இந்தி திணிக்கப்படக் கூடாது என்பதற்காக் கூறியது எப்படிப் பாசிசம் ஆகும்.இந்தி புகுத்தப்படுவதற்கான காரணமாக அதில் தமிழில் இல்லாத புதிய விடயங்கள் இருக்கின்றன என்கிற கூற்றிற்க்கு எதிர்மறையாக அதில் ஒன்றுமே இல்லை என்று கூறுவது எப்படிப் பாசிசம் ஆகும்.தமிழ் மொழையை விட கிந்தி சிறந்தது என்று கூறி இந்தியைத் திணிப்பது தான் பாசிசம்.அதனைச் செய்ய முயற்ச்சித்தவர்கள் தான் பாசிஸ்ட்டுக்கள்.தமிழ் மொழி தான் சிறந்தது ஆகவே கிந்தி மொழிக்காரர் எல்லாம் தமிழைப் படியுங்கள் என்று சொல்வது தான் பாசிசம்.தமிழ் மொழி முன்னேற வேண்டும் தமிழ் மொழி சீர்திருத்தப்பட வேண்டும் என்று சொல்வது மொழி வெறியில்லை மொழிப் பற்று.பெரியார் தமிழைத் தூற்றி விட்டார் என்று பொய்மையாக ஓலமிடுவது தான் வெறி.

ஒருதடவை சொல்வீர்கள் பெரியார் தமிழ் மொழியை இகழுகிறார் அவர் கன்னட வெறியர் என்று இன்னொரு தடவை சொல்வீர்கள் அவர் தமிழ்மொழி வெறியர் என்று.மொத்ததில் பெரியாரை எங்கனம் தூற்ற முடியுமோ அத்தனை முறைகளையும் முயர்ச்சிக்கிறீர்கள் இவற்றை எல்லாம் ஒதுக்கி விட்டு நிதானமாக அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள்,அதில் அவர் கூறியதன் உண்மையான அர்த்தம் விளங்கும்.

Link to comment
Share on other sites

பெரியார் ஏன் இந்தி திணிக்கப்படக் கூடாது என்பதற்காக் கூறியது எப்படிப் பாசிசம் ஆகும்.இந்தி புகுத்தப்படுவதற்கான காரணமாக அதில் தமிழில் இல்லாத புதிய விடயங்கள் இருக்கின்றன என்கிற கூற்றிற்க்கு எதிர்மறையாக அதில் ஒன்றுமே இல்லை என்று கூறுவது எப்படிப் பாசிசம் ஆகும்.தமிழ் மொழையை விட கிந்தி சிறந்தது என்று கூறி இந்தியைத் திணிப்பது தான் பாசிசம்.அதனைச் செய்ய முயற்ச்சித்தவர்கள் தான் பாசிஸ்ட்டுக்கள்.தமிழ் மொழி தான் சிறந்தது ஆகவே கிந்தி மொழிக்காரர் எல்லாம் தமிழைப் படியுங்கள் என்று சொல்வது தான் பாசிசம்.தமிழ் மொழி முன்னேற வேண்டும் தமிழ் மொழி சீர்திருத்தப்பட வேண்டும் என்று சொல்வது மொழி வெறியில்லை மொழிப் பற்று.பெரியார் தமிழைத் தூற்றி விட்டார் என்று பொய்மையாக ஓலமிடுவது தான் வெறி.

ஒருதடவை சொல்வீர்கள் பெரியார் தமிழ் மொழியை இகழுகிறார் அவர் கன்னட வெறியர் என்று இன்னொரு தடவை சொல்வீர்கள் அவர் தமிழ்மொழி வெறியர் என்று.மொத்ததில் பெரியாரை எங்கனம் தூற்ற முடியுமோ அத்தனை முறைகளையும் முயர்ச்சிக்கிறீர்கள் இவற்றை எல்லாம் ஒதுக்கி விட்டு நிதானமாக அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள்,அதில் அவர் கூறியதன் உண்மையான அர்த்தம் விளங்கும்.

இந்தி மீது பெரியாருக்கு எந்த வெறுப்பும் இல்லை என்ற பொய்களுக்கு பதில் தான் எனது இணைப்பே ஒழிய வேறொன்றுமில்லை. பெரியாரின் முன்னுக்கு பின்னான கருத்துக்களும் குட்டிக் கரணங்களும் இன்னும் நிறைய உள்ளன. தேவை ஏற்படும் போது இணைக்கிறேன்

எமக்கு பிடிக்கிறதோ இல்லையோ இப்படி ஒரேயடியாக ஒரு மொழி பேசுபவர்களிடம் கலை இல்லை, கலாச்சாரம் இல்லை, அவர்களிடம் அறிஞர்களே இல்லை என்று பேசி ஒரு மக்கள் கூட்டத்தின் மேல் துவேசம் வளர்ப்பது தான் இன்றைய் உலக ஒழுங்கில் பாசிசம் எனப்படுகிறது

Fascism means aiming for extreme purity on the basis of mono-race.

Link to comment
Share on other sites

இந்தி மீது பெரியாருக்கு எந்த வெறுப்பும் இல்லை என்ற பொய்களுக்கு பதில் தான் எனது இணைப்பே ஒழிய வேறொன்றுமில்லை. பெரியாரின் முன்னுக்கு பின்னான கருத்துக்களும் குட்டிக் கரணங்களும் இன்னும் நிறைய உள்ளன. தேவை ஏற்படும் போது இணைக்கிறேன்

எமக்கு பிடிக்கிறதோ இல்லையோ இப்படி ஒரேயடியாக ஒரு மொழி பேசுபவர்களிடம் கலை இல்லை, கலாச்சாரம் இல்லை, அவர்களிடம் அறிஞர்களே இல்லை என்று பேசி ஒரு மக்கள் கூட்டத்தின் மேல் துவேசம் வளர்ப்பது தான் இன்றைய் உலக ஒழுங்கில் பாசிசம் எனப்படுகிறது

Fascism means aiming for extreme purity on the basis of mono-race.

இந்தி புகுத்தப்படுவதற்கான காரணமாக அதில் தமிழில் இல்லாத புதிய விடயங்கள் இருக்கின்றன என்கிற கூற்றிற்க்கு எதிர்மறையாக அதில் ஒன்றுமே இல்லை என்று கூறுவது எப்படிப் பாசிசம் ஆகும்?

மேலே சொனத்தைத் தான் திருப்பிக் கூற வேண்டி உள்ளது.கிந்தி தமிழை விட உயர்ந்தது அதனால் கிந்தியைப் படியுங்கள் என்று கூறப்படும் போது.கிந்தியில் அப்படி ஒன்றும் மேலான விடயங்கள் இல்லை என்று கூறுவது எவ்வாறு பாசிசம் ஆகும்? எந்த மொழையைப் படிக்கவும் எவருக்கும் உரிமை உண்டு.ஆனால் ஒரு மொழி இன்னொரு மொழியை விடச் சிறந்தது அதனால் நீங்கள் எல்லோரும் கட்டயமாக பாடசலையில் கிந்தி படிக்க வேண்டும் என்று கூறுவது தான் பாசிசம்.பெரியார் தமிழ் மொழி வெறியர் என்றால் ஏன் அவர் காட்டு மிரண்டிகளின் மொழி தமிழ் என்று கூற வேண்டும்?

Fascism means aiming for extreme purity on the basis of mono-race.

பச்சைத் தமிழர் என்று கதைப்பவர்களுக்கு மிக நேர்த்தியாகப் பொருந்தும் வரைவிலக்கணம், பாசிசம் என்றால் என்ன என்று ஆங்கிலத்தில் கூறியதற்கு நன்றி.இதைத் தமிழில் மொழி பெயர்த்தால், பாசிசம் என்பது தூய இனம் என்னும் நோக்கிலான ஒற்றை இனத்தை நிறுவுவதற்கான செயற்பாடு.பெரியாரைக் கன்னடர் என்று சொல்பவர்களுக்கு மிகச் சரியாகப் பொருந்தும் வரைவிலக்கணம்.

Link to comment
Share on other sites

Fascism means aiming for extreme purity on the basis of mono-race.

பச்சைத் தமிழர் என்று கதைப்பவர்களுக்கு மிக நேர்த்தியாகப் பொருந்தும் வரைவிலக்கணம், பாசிசம் என்றால் என்ன என்று ஆங்கிலத்தில் கூறியதற்கு நன்றி.இதைத் தமிழில் மொழி பெயர்த்தால், பாசிசம் என்பது தூய இனம் என்னும் நோக்கிலான ஒற்றை இனத்தை நிறுவுவதற்கான செயற்பாடு.பெரியாரைக் கன்னடர் என்று சொல்பவர்களுக்கு மிகச் சரியாகப் பொருந்தும் வரைவிலக்கணம்.

நான் ஒருநாளும் பெரியாரை கன்னடர் என்று விளித்ததில்லை. கொள்கை முரண்பாடுகளுக்காக எவரையும் மரியாதை குறைவாக நான் அழைப்பதில்லை. கருத்துப்பரிமாற்றங்கள் அறிவை வளர்க்க பயன்பட வேண்டுமே ஒழிய இரத்த அழுத்தத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அல்ல. :icon_idea: Theory of pure dravidianism sometimes considered as Fascism by some analysts

Link to comment
Share on other sites

நான் ஒருநாளும் பெரியாரை கன்னடர் என்று விளித்ததில்லை. கொள்கை முரண்பாடுகளுக்காக எவரையும் மரியாதை குறைவாக நான் அழைப்பதில்லை. கருத்துப்பரிமாற்றங்கள் அறிவை வளர்க்க பயன்பட வேண்டுமே ஒழிய இரத்த அழுத்தத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அல்ல. :lol: Theory of pure dravidianism sometimes considered as Fascism by some analysts

வெற்றி வேல் உங்கள் விளக்கத்திற்க்கு நன்றி.தூய இனம் என்பது அறிவியலுக்குப் பொருந்தாத ஒன்று.இங்கு திராவிடர் என்னும் கருத்தாக்கம் எழுந்த அரசியற் சூழ் நிலையை நீங்கள் கருத்தில் எடுக்க வேண்டும்.இந்திய உப கண்டத்தில் பல சுய அடையாளம் உடைய தேசிய இனங்கள் உண்டென்பது வரலாறு.

கைபர் கணவாயினூடாக வந்த வெளியார் ,தமது மேலான்மையை இந்த இனக் குழுக்களின் மேல் நிறுவினர் என்பதுவும் வரலாறு.அந்த மேலாண்மைக்கு எதிராக எழுந்ததே திராவிட அரசியற் கோட்பாடு.பெரியார் இதனை ஒரு தூய இனத்தை உருவாக்குவதற்கான ஒரு அரசியற் செயற்பாடாக முன் எடுக்கவில்லை.அன்றைய சமூக பொருளாதாரச் சூழ் நிலைகளை மையமாக வைத்தே அரசியல் இயக்கத்தைக் கட்டினார்.எந்த அரசியற் கோட்பாடும் இருக்கும் யதார்த்தை வைத்தே அரசியற் சக்தியாக பரிணமிக்கிறது.ஆரியர் என்பதுவும் பார்ப்பனரின் மேலாண்மை என்பதுவும் இல்லாவிடின் அவ்வாறான ஒரு இயக்கம் கட்டப்படிருக்க முடியாது.எவ்வாறு சிங்களப் பேரினவாதம் இல்லாமல் தமிழீழதில் தமிழ்த் தேசியம் என்னும் அரசியற் சக்தி தோன்றியிருக்காதோ அவ்வாறே.

நான் பலமுறை சொல்லி இருப்பதைப் போல பார்ப்பனீயம் என்னும் சாதிய அடுக்கு மானத்திற்க்கும் அதனைத் தக்கவைக்க போராடும் இந்திய இந்துத்துவ தேசிய வாததிற்க்கும் எதிராகவே திராவிடம் என்னும் அரசியல் இயக்கம் செயற்படுகிறதே ஒழிய தூய திராவிட இனத்தை உருவாக்கும் நேக்கத்தில் அல்ல. அவ்வாறான தேசிய வெறியர்கள் தமிழ் நாட்டில் இல்லாமலும் இல்லை.பெரியாரை நான் படித்த அளவில் அவரின் நோக்கம் தேசிய இன வெறி அல்ல.பார்ப்பனீயம் என்னும் அடக்குமுறைக்கு எதிரான தேசிய இன விடுதலை.

Link to comment
Share on other sites

பெரியாருடைய கருத்துக்களில் சில பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு பார்ப்பனர்கள் செய்கின்ற திரிபு வேலைகளில் ஏமாந்து போய்விடாதீர்கள்.

பெரியார் ஹிந்தி மொழி மீது சொன்ன குற்றச்சாட்டுக்கள் எப்பொழுது, எதற்காக சொன்னார் என்பதை நாரதர் தெளிவு படுத்தி உள்ளார்.

தமிழை விட ஹிந்தி உயர்ந்தது என்று சொல்லி தமிழர்களிடம் ஹிந்தியை திணிக்கின்ற போது, ஹிந்தி அப்படி ஒன்று உயர்ந்த மொழி அல்ல என்று வாதிடுவது இனவாதம் அல்ல.

பெரியார் இதே குற்றச்சாட்டுகளை தமிழ் மொழி மீது தெரிவித்திருக்கிறார். தமிழில் அறிவியல் நூல்கள் இல்லை என்றும் மூட நம்பிக்கைகளை வளர்க்கின்ற குப்பைகளையே எழுதி வைத்திருக்கிறார்கள் என்றும் பெரியார் கண்டித்திருக்கிறார்.

அவர் எந்த மொழி மீதும் வெறியோ, வெறுப்போ கொண்டிருந்தவர் அல்ல.

மனிதனாக பிறந்தவர்கள் ஒருவரை ஒருவர் அடக்காது சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்பதே அவருடைய போராட்டமாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் இதே குற்றச்சாட்டுகளை தமிழ் மொழி மீது தெரிவித்திருக்கிறார். தமிழில் அறிவியல் நூல்கள் இல்லை என்றும் மூட நம்பிக்கைகளை வளர்க்கின்ற குப்பைகளையே எழுதி வைத்திருக்கிறார்கள் என்றும் பெரியார் கண்டித்திருக்கிறார்.

உலக மகா சமூகவியலாளர்களே வியக்கத்தக்க சமூகவியல் நூலாக திருக்குறள் விளங்குகிறதே..??! அது தமிழ் மொழியில் இல்லையா..??!

உலகம் வியக்கத்தக்க மொழி இலக்கணத்தை வரையறுத்த நூல்கள் தமிழில் உள்ளன.. அவை மொழியாக்கத்தின் அறிவியல் வடிவம் இல்லையா..??!

மனித இனத்தின் அறிவியல் என்பதே மொழியின் பிறப்பு வளர்ப்பு செழிப்பில் தான் தங்கி இருக்கிறதே தவிர.. அதைத் தவிர்த்தல்ல.

தமிழ் மொழி எப்போதும் காட்டுமிராண்டி மொழியென்றில்லை.

எல்லா மொழிகளிலும் சில பிற்போக்கான விடயங்கள் உண்டு. சேக்ஸ்பியரின் ஆங்கில இலக்கியத்தில் எத்தனை கட்டுக்கதைகள் உண்டு..! அதனால் ஆங்கில மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றிடலாமா...!

இன்றும் கூட ஆங்கில மொழியில் கரிபோட்டர் தொடங்கி பல கற்பனை பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்ட கதைகள் உருவாக்கப்படுகின்றன.. அதற்காக ஆங்கிலம் அறிவியல் சாராத மொழி என்றால் ஆகிடுமா..??!

மொழியின் பயன்பாட்டு வடிவங்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறுபடும். அடிப்படை மொழியறிவற்றவர்கள் தான் மொழியை மக்களைப் பழிப்பார்கள். அறிவியலாளர்கள் மக்கள் உணரக்கூடிய அளவுக்கு மொழியை எளிமையாக்கி அறிவியலை எளிமையாக்கி வழங்குவார்களே தவிர மொழியை மக்களை திட்டித் தீர்த்து எதையும் சாதிக்க முடியும் என்று கனவு காண மாட்டார்கள்..!

இனத்தூய்மை என்பது ஒரு இனத்தின் தேசிய அடையாளத்துக்கு அவசியம் என்றாகும் போது எப்படி இனத்தூய்மை என்பது பாசிசம் ஆகும்..!

அப்படிப் பார்த்தால் திராவிடம் என்பது கூட திராவிடப் பாசிசம்.. ஆரியம் என்பது ஆரியப்பாசிசம்.. தமிழ் தேசியம் என்பது தமிழ் தேசியப் பாசிசம் என்றல்லா வரையறுக்கப்பட வேண்டும்.

அப்படியே நோக்கினால் மக்களின் மத உரிமைகளை மறுப்பது கூட பாசிசமே ஆகும். நாம் மதங்களை மதிக்கிறோமோ இல்லையோ மனிதருக்குரிய உரிமைகளைப் பறிக்க முடியாது. அறிவியல் என்பதை பாகுபாடுகளுக்கு அப்பால் மக்களுக்கு வழங்க வேண்டுமே தவிர பாகுபாட்டை வளர்த்து புறக்கணிப்புக்களை விதைத்து ஊட்டுவதல்ல அறிவியல் என்பது. அந்த வகையில் பெரியார் படத்தில் காண்பிக்கப்பட்ட சில மத ரீதியான கீழ்நிலைச் சித்தரிப்புக்கள் அறிவார்த்தமான நடவடிக்கைகளோ அல்லது அடிப்படை மனித உரிமைகளை மதித்து எடுக்கப்பட்டதோ இல்லை..!

இந்தியாவைப் பொறுத்தவரை திராவிடம் என்பது அரசியல் மொழி என்பதைத் தவிர அது ஹிந்திய தேசிய வல்லாதிக்கத்துக்கு எதிரானதாக வளர்க்கப்படவில்லை என்பதை திராவிட இயக்கம் வளர்த்த ஈவே ராமசாமி என்பவரே காங்கிரஸிடம் அரசியல் தஞ்சம் கோரியதைக் காட்டலாம்..! :P :lol:

Link to comment
Share on other sites

அப்படி எண்றால் , இந்தியை நல்ல மொழி எண்ற பெரியார், அதே மொழியில் சொல்லாடல்கலையும் செய்து கொண்டே தமிழர் நாடு தமிழருக்கே எண்றார்.... 28 நாள் களித்து அதே கொள்கையை திராவிட நாடு திராவிடர்கே எண்றார்... தெலுங்கர்களையும், கன்னடர்களையும், மலையாளிகளியும் திருப்தி படுத்துவதற்காக..... தூரநோக்கே இல்லாத தலைவர் என்பதை ஹிந்தியை ஆதரித்து அதன் திணிப்பின் சாத்தியம் அறியாமல் இருந்த அரசியல் ஞானம் புலப்படுத்தியது...! இவர் எப்படி தமிழர் தேசிய தலைவராக முடியும்....????

பெரியார் பெரிய சமத்துவ வாதி எண்று இங்கு சொல்லப்பட்டது... பெரியார் சமத்துவம் கொள்கையை பார்ப்பணரை எதிர்க்க சாதியத்தில் மட்டும் தான் கொண்டிந்தார்( அதுவும் உருப்படியாக இல்லை)) . பொருளாதாரத்தில் இல்லை. மக்களை மேதினம் கொண்ண்டாட சொன்னதுதான் அவரின் சமத்துவம் ( பொதுவுடமை) எண்ண்று ஆகமாட்டாது... முதலாளித்துவ நாடுகள்ள் கூட மேதின ஊர்வலம் போகிறார்கள்.. எண்றுமே பெரியார் தன்னிப்படையாக ஏழை மக்கள் பொருளாதாரத்தில் உயர்வதை, சமனாவதை ஆதரிக்க வில்லை.... !

Link to comment
Share on other sites

பெரியாருடைய கருத்துக்களில் சில பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு பார்ப்பனர்கள் செய்கின்ற திரிபு வேலைகளில் ஏமாந்து போய்விடாதீர்கள்.

பெரியார் ஹிந்தி மொழி மீது சொன்ன குற்றச்சாட்டுக்கள் எப்பொழுது, எதற்காக சொன்னார் என்பதை நாரதர் தெளிவு படுத்தி உள்ளார்.

ஒரு மொழி வேண்டாம் என்பதானால் அந்த மொழி உள் நுழைவதால் தமிழருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆணித்தரமாக தெளிவுபடுத்த வேண்டுமே ஒழிய, ஒரு கலாச்சாரத்தின் மீதே காழ்ப்புணர்வை கக்கி துவேசத்தை வளர்த்து ஒரு பல்லின நாட்டு கட்டமைப்பில் மக்கள் ஒருவரை ஒருவர் கடித்து குதறச்செய்து துவேசத்தை தூண்டுவது புரட்சி அல்ல. சுயனலத்தால் வந்த புரட்டு.

ஏற்கனவே காதலிக்கும் ஒருவனை, வேறு ஒரு பெண்ணை பார்க்க பெற்றோர் வற்புறுத்தி அழைத்து சென்று விட்டால், எனக்கு ஒரு காதலி இருக்கிறாள், அவளோடு தான் என் வாழ்வு சிறக்கும் என்று பெற்றோரிடம் சொல்ல வேண்டுமே ஒழிய, பெற்றோர் காட்டிய பெண்ணை, அவள் ஒரு பரத்தை, பல பேருடன் தொடர்பு கொண்டவள், அவள் குடும்பமே அப்படித்தான் என்று அவதூறு சொல்லக் கூடாது.

பசுவின் கன்றிற்காக தன் மகனையே தேர்க்காலில் சிதைத்தான் சோழன் என்று அவ்வளவு உயர்வாகத் தான் தமிழர் பண்பை பற்றி வரலாறு சொல்கிறது. எதிரிகளை கூட நாம் தரக் குறைவாக நடத்துவதில்லை.

தமிழருக்கு தமிழறிவையும் தமிழ் பற்றையும் வளர்த்து விட்டால், எந்த மொழி புகுந்து என்ன செய்து விட முடியும். தமிழருக்கு தமிழ் மொழிக் கல்வியை கட்டாயப் படுத்தும் வேலைத்திட்டங்களை திட்டமிடாது வெறும் அரசியல் லாபத்திற்காக மொழி எதிர்ப்பு என்னும் ஆயுதத்தை பாவித்ததால் தான், இன்று தமிழ் ஆங்கிலத்துடன் கலந்து தமிழ்நாட்டில் அல்லோலகல்லோலப் படுகிறது. தமிழகத்தின் ஆங்கிலக்கல்வி மோகத்தால் இன்று அரைவாசி தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் வாசிக்கவே தெரிவதில்லை. தமிழ் சினிமாவையும், சன் தொ(ல்)லை காட்சியையும் பார்த்தாலே தெரியுமே தமிழகத்தில் தமிழின் நிலை என்னவென்று.

பகுத்தறிவு பாசறை சிங்கங்கள் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பான இந்திக் கல்வி வழங்கினார்கள் என்று பட்டியல் இட்டால் மிக நீண்டு விடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote name='nedukkalapoovan' date='May 25 2007, 10:09 AM' post='306959']

அண்மையில் வெளியான...பெரியார்.. படம்.. பெரியார் போலவே...முரண்பாடுகளுடன்....

1. ராமசாமியாகி நாயக்கர் ஆகிய பெரியாரின் பூர்வீகம் மறைக்கப்பட்டு ஈரோட்டுக்கே சொந்தமாக்கிக் காட்டி உள்ளார்கள்.

2. நாயக்கர் என்ற சாதியக் கூறை தூக்கி எறிவதாகச் சொல்லும் பெரியார்.. ராமர் + சாமி என்பதை தூக்கி எறியாமலே கட்டிக்காத்திட்டத்தை சுயமரியாதைக்க அடக்கிட்டாங்க.

3. நாகம்மையின் தாலியைக் கழற்றியவர்.. தான் மட்டும் புலிப்பல்லுப் போட்ட சங்கிலி சகிதம்..நாகம்மைக்கு இடஞ்சல் இல்லாம இருக்க விரும்பாம.. சுயநலத்தோட இருக்கிறார்.

4.பெண்களை சுயசிந்தனையின் வழி அறிவுபூர்வமா வழிநடத்தாம.. அவங்களை ஏமாளியாக் காட்டி ஏமாற்றுக் கதை சொல்லி.. ஏமாற்றி அவர்களில் மாற்றங்களை காட்டிறது பெண்களை ராமசாமி எந்தளவுக்கு அளவிட்டுள்ளார் என்பதை தெளிவாகக் காட்டியுள்ளனர். அவர் பெண்களை ஏமாளிக்கூட்டமாக கருதி கருத்துக்களை விளங்க முடியாத முட்டாள்களாக எண்ணி நடந்துள்ளதை படம் முழுவதும் அவதானிக்க முடிகிறது. பெண்களின் உணர்வுகளுக்கு பெண்கள் தேட வேண்டிய தீர்வை ராமசாமி பெண்களின் உணர்வுகளை தான் உணர்ந்து அவர்களுக்கு தீர்வு தேடித் தரும் தொண்டனாக தன்னைக் காட்டிக்க முயல்கிறார். இதில் எங்கு சுயசிந்தனைக்கும் சுயமுடிவெடுத்தலுக்கு சுய அறிவூட்டலுக்கும் பெண்கள் ஆண்களை ஒத்து இடம் பெற வழிகாட்டப்படுகிறது..??!

5.ரஷ்சியா போன இடத்தில கண்டதை தமிழகத்துக்குள்ளும் புகுத்த முனைந்தமை..முற்போக்கல்ல.. கொப்பி அடித்தல் என்பதை தெளிவாகக் காட்டி இருக்கிறது.

6.காங்கிரஸில் தனது கருத்தியல் ஆதிக்கத்துக்கு படித்த பிராமணர்கள் எதிர்ப்பு என்ற காரணத்திற்காக பிராமணர்களின் கல்வி மற்றும் இதர தொழில்துறைகளில் அவர்களின் சுயமுயற்சியை பாராட்டாமல்.. அவற்றை உதாரணமாக்கி மற்றைய சமூகங்களை விழிப்புணர்வு படுத்தாமல்... பிராமண சமூகத்தை குற்றவாளியாக்கி இட ஒதுக்கீடு என்று முயற்சிகள் இல்லாமலே ஏனைய சமூகத்தவர்களுக்கு சமத்துவமும்.. சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்க முடியும் என்று ஒரு தவறான கருத்தைக் காட்டுகிறார்கள்..இதில் எப்படி பகுத்தறிவும் கல்வி அறிவும் பெருகும்.. இட ஒதுக்கீடு மட்டும் தானே பெருகும். இது தரப்படுத்தலுக்கு நிகரானது. பிராமணன், தாழ்த்தப்பட்டவன் என்பதை தொடர்ந்து கட்டிக்காக்கத்தான் உதவுமே தவிர.. அனைவருக்கும்.. அனைத்தும் என்ற நிலையை ஏற்படுத்த ஏதுவாகுமா..??!

7. இந்துமத அடையாளங்களை எதிர்க்கும் பெரியார்.. மலேசியா போன இடத்தில் முஸ்லீம்களின் உடையலங்காரம் வசதி என்று சொல்லி அதை நாகம்மையிடம் திணிக்க முற்படுவதுடன்.. கூந்தலைக் கத்தரிப்பதுவும்.. குறுகிய ஆடை போடுவதும்.. பெண்களுக்கு இலகுவானது என்று சொல்ல முனைகின்றார். அப்ப ஏனாம் அவர் மட்டும் வேட்டையை சுத்திட்டு திரியுறார்..! கதரில.. சிறிய துணியை சுத்திட்டு திரிஞ்சிருக்கலாமே..??!

8. சுயமரியாதை பகுத்தறிவு வேண்டும் என்ற பெரியார்.. தாலியைக் கழற்றவும் சேலையைக் கழற்றவும் வழி சொல்பவர்..பொன்னாடைக்கும் பூமாலைக்கும் கழுத்தை நீட்டுவது ஏன். அதில் அவர் என்ன சுயமரியாதைப்.. பகுத்தறிவைப் பெற்றார். பொன்னாடையும் பூமாலையும் வெட்டிதானே...வேஸ்டுதானே. அதை ஏழைகளுக்கு உடை தைக்கவும்.. பூக்களைக் கொண்டு நறுமண திரவியங்களை தயாரித்து விற்கவும் வழிகாட்டி இருக்கலாமே..??! இதில பகுத்தறிவு..??!

9. இந்துமதக் கடவுள்களை சிலையாகக் காண்பவர்.. புத்தனின் சிலையைக் காண மட்டும்.. மாநாட்டைச் சாட்டு வைச்சு பர்மா வரைக்கும் ஏன் போக வேண்டும். புத்தனின் கொள்கைகளை இந்தியாவில் வைச்சே பரப்பிக்கலாம் தானே.

10. இந்துமதம் மிகவும் நெகிழ்வானது என்பதை பெரியார் தன் வாயாலேயே ஒத்துக் கொண்டார். புத்தத்துக்கு மாற விரும்பம் இருந்தும்.. இந்துமதத்துக்குள் இருந்தால் தான் அதற்குள் இருந்தே அதை ஏய்கலாம்.. மற்றைய மதங்களைத் தழுவி விட்டால் தன் ஏய்தலுக்கு அவை இடமளிக்காது என்பதை அறிந்து நசூக்காக புத்தத்துக்கு மாற மறுக்கும் பெரியார்.. பகுத்தறிவில் புத்த மதத்துக்கு தாவுதலை முன்னிறுத்துகிறார். சோக்கிரட்டிசை கடவுளாக வரிந்து ஒரு மதத்தைப் படைச்சிருக்கலாமே.. புத்தனை வைச்சு உருவாக்கிய மதத்தை ஆதரித்த பெரியார்..??! அவரை ஒருவர் ஏன் நீங்கள் புதிய மதத்தை ஸ்தாபிக்கக் கூடாது என்று கேட்க.. அதற்கு அசிங்கத்தை காரணம் காட்டுபவர்.. பெளத்த மத அசிங்கத்தை தழுவச் சொன்னதில் என்னையா நியாயம்..??!

11.பெண்களின் பாலுணர்வுகளுக்கு மதிப்பளிச்சு மறுமணம் செய்து வைத்தவர்.. நாகம்மையை கைவிட்டு காசிக்குப் போகும் போதும்.. மணியம்மையை மணம் முடிச்சு.. தனக்கு சேவகம் செய்ய அடிமையாக வைச்சிருக்கும் போதும்.. அந்த உணர்வுகளை ஏன் மதிக்கல்ல..??! அவர்களை தன் மனைவியாக்கிய பின் அவங்க பாலுணர்வுகளைக் கருத்தில் கொண்டு ஏன் வேறு ஆண்களோட அவங்க உடலுணர்வுகளை தீர்க்க அனுமதிக்கல்ல.. குழந்தைக்கு ஏங்கும் நாகம்மையை ஏன்.. இன்னொரு ஆண் கூட சேர்ந்து குழந்தை பெற்றுக்கச் சொல்லேல்ல.. சா.. ஏன் மறுமணம் முடிச்சு வைக்கேல்ல..! கண்றாவியா இருக்கப்பா.. உதுகளில எழுதிற.. என்ன பெரியார் சமாச்சாரமாச்சே எழுதித்தானே ஆக வேண்டி இருக்குது..!

12.உடலுறவுக்கு கல்யாணம் ஏன் விலங்குகள் போல அதைக் கண்டபடி செய்யலாம் என்பவர்.. தேவதாசிகள் விடயத்தில்... ஒருவனுக்கு ஒருத்தி என்பதை வலியுறுத்தி கருத்துச் சொல்வது முன்னுக்குப் பின் முரணா இருக்கே..!

13. கொள்கை அளவில் காங்கிரஸ் தனது கொள்கைகளை ஏற்காது என்று தெரிந்தும் இவரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகச் சொன்ன திமுகவை எதிர்க்கவும்..காங்கிரசோடு தொடர்புகளைப் பேணவும்.. தனது திராவிடக் கட்சியை முழுமூச்சோடு முன்னெடுக்கவும் முடியாமல்.. திணறியது ஏன்..??! காங்கிரஸின் மத சாதி எதிர்ப்பற்ற ஒருவரை தனது நண்பனாகவே கடைசிவரைக் காத்தவர்.. ஏன் அண்ணா போன்ற தன் கொள்கைவாதிகளை அந்தளவுக்கு முதன்மைப்படுத்தல்ல..??!

14.நாகம்மையிடம் மலே உடையைத் திணித்தவர்.. மணியம்மையிடம் ஏன் கூந்தலைக் கத்தரிக்கவும்.. மலே உடை போடவும் பரிந்துரைக்கல்ல.

15. பெண்களின் கல்வி அறிவில அக்கறைகாட்டுபவராகச் சொல்பவர்.. ஏன் நாகம்மையையும் மணியம்மையையும் அரசியலுக்க கொண்டு வரல்ல. ஏன் அவங்களுக்கு அரசியல் கல்வி ஊட்டல்ல..! அவங்களை ஏன் அரசியலில ஆண்களுக்கு நிகரா நிறுத்தல்ல..??! அவங்களை தன் ஏவலுக்கு பணி செய்பவங்களாகத்தானே பாவிச்சிருக்கிறார்...!

16.பெண்கள் மீது அதிகாரம் கூடாது என்பவர்.. அவர்களின் உணர்வுகளுக்கு கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பவர்.. ஏன் மாட்டுத் தொழுவத்தில் அந்த துர்நாற்றம் மத்தியில் தன்னால் உணவருந்த முடியல்ல என்ற மணியம்மையை சாப்பாட்டுக்கையால் முகத்தில் தாக்கி.. அவரை உணவுன்ன வலியுறுத்த வேண்டும். பதிலாக.. உனக்கு உண்ணப் பிடிக்கல்லை என்றால் பறுவாயில்லை.. அவர்களின் விருப்பத்துக்காக நான் உண்கிறேன் மணியம்மை என்று அவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை அவரை சிந்திக்க தூண்டவும்.. சுயமுடிவெடுக்கவும் விட்டிருக்கலாமே. அங்கு ஆணாதிக்கத்தை பெரியார் பிரயோகிச்சத்தை அப்பட்டமா காணக் கூடியதா இருக்கிறது..!

17.சிலைகளின் கடவுளைக் காண்பவங்களை மதிக்க மறுப்பவர்.. கதர் நெய்த்தறிக்குரிய கருவியை மட்டும் சுமந்து கொண்டு காந்தி போல தன்னைப் பாவனை செய்வது மட்டும் ஏன்..??! இதில எங்க சுயமரியாதையும் பகுத்தறிவும் வெளிப்படுகிறது..???! காந்தி மரியாதையும் கதர் பற்றும் தானே வெளிப்படுகிறது..??!

18.தாலி இல்லாத பொண்ணை காலிப்பசங்க.. தாசின்னு நினைச்சு நாகம்மையை தப்பாப் பார்கேக்க.. கடவுளைக் குற்றம் சொல்பவர்.. தான் தாலியைக் கழற்றி எறிஞ்சதாலதான் அது நிகழ்ந்ததென்ற உண்மையை உணராமல் போனாரே..இதில எங்க பகுத்தறிவு இருக்குது. சமூகத்தில் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை அவங்களா தங்களுக்கு என்று உருவாக்காத வரைக்கும்... இப்படிச் சின்னங்கள் பாதுகாக்க உதவும்.. என்ற நிலையை ஏன் அவரால புரிஞ்சுக்க முடியல்ல..??! தாலிக்கு மதிப்பளிக்கும் வழமை.. சமூகத்தில் தாலி அணியும் பெண்களுக்கு ஒரு தற்காப்பு அவங்க தங்க பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் வரை வழங்கும் என்றதை ஏன் உணரல்ல..!

19.பிராமண அடையாளங்களை பிராமண சாதியை அழிக்கப் பாடுபடுபவர்.. ஏன் தாழ்ந்த சாதி மக்களை தன்னைப் போல உடை உடுத்தவும்.. வசதியோட வாழவும்.. வழிகாட்டல்ல..! அவங்க தொழிலை நிறுத்த முயல்பவர்... அதற்கு ஈடா எதை செய்யச் சொன்னார்..??!

20. பெரியார் கேரளா போய் வாங்கிக் கட்டிய பின் அங்காலப் பக்கமே போனதில்ல. கர்நாடகா.. ஆந்திரா பக்கம் போனதும் இல்ல..! திராவிடம் என்பதை தமிழ்நாட்டுக்க மட்டும் ஏன் வரையறுத்த வேண்டும்.... தன் காங்கிரஸ் விசுவாச அரசியலில் தன் எதிர்பார்ப்பு நிறைவேறாத ஏமாற்றத்தில்..தமிழகளின் பலவீனங்கள அரசியலாக்கி செல்வாக்குத் தேடினார் பெரியார். இதுதான் பகுத்தறிவா..??! சுயமரியாதையா.. திராவிட விசுவசமா...?! இல்ல தமிழர்களைக் காட்டுமிராண்டிகளாகக் காட்டும் செயலா..??!

21. கோயிலை வெறுத்தவர்.. கோயில் தர்மகர்த்தாவா மட்டும் இருக்க சம்மதித்தது மட்டுமன்றி.. கோயில் ஒரு பொதுஸ்தாபனம் என்றும் பிரகடனம் செய்கிறார். அதைத்தானே மதங்களும் சொல்கின்றன. கடவுள் எல்லோருக்கும் உரித்தானவர்.. கோயில் எல்லோருக்கும் பொதுவானது..எவரும் வரலாம் வணங்கலாம் என்று. நந்தனார் விடயம் வந்த போது அதை நக்கலடித்தவர்..காந்திஜி ஒரு நல்ல பிராமணரை அடையாளம் காட்டிய போது அதை ஏற்றுக் கொள்கிறார்..! அப்புறம் காந்திஜியையே அரசியலுக்காக தனது கருத்தை காங்கிரஸ் ஏற்கல்ல என்றதுக்காக எதிர்கிறார்..! எல்லாம் முன்னுக்குப் பின் சுத்த சாக்கடை அரசியலாவே நடந்து முடிஞ்சிருக்கு. அப்படி இருக்க அந்த போலி மனிதர் எப்படிப் பெரியாரா இருக்க முடியும்..??! ஒருவேளை தமிழக சாக்கடை திராவிட (திமுக, அதிமுக) அரசியலுக்கு அவர் பெரியாரோ இருக்கலாம்...! ஆனால் அவர் மனித சமூகத்துக்கு பெரியாரா இருக்க தகுதியுடையவரா என்பதை நீங்களே தீர்மானியுங்க...!

22. பெண்களின் சுதந்திரத்தை திருமணம் பறிக்கிறது என்றவர் தானே முன்வந்து சுயமரியாதைத் திருமணமும் செய்து வைக்கிறார்.

23. உதவி செய்ய வந்த மணியம்மையை தள்ளாடும் வயதில் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துத் தானே திருமணமும் செய்கிறார்..!

24. பெண்களுக்கு குழந்தைகள் அவர்களின் வளர்ச்சிக்குத் தடை என்றவர்.. குழந்தைகளோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்..!

25. நாகம்மைக்கு சாமி சிலையிடம் பாதுகாப்பை எதிர்பார்த்து நக்கலடித்தவர்.. சோக்கிரட்டிஸின் சிலைக்கு முன்னால் தானே புலம்பி.. தானே தனக்கு தனது நிலைப்பாட்டுக்கு அங்கீகாரம் தேடுவது..இதைத்தான்.. சாமி சிலையின் முன் மற்றவர்களூம் செய்கின்றனர் என்பதை உணராத நிலையில் பெரியார்.. என்பவர்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24. பெண்களுக்கு குழந்தைகள் அவர்களின் வளர்ச்சிக்குத் தடை என்றவர்.. குழந்தைகளோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்..!

கிழக்காசியா நாடு ஒன்றில் முன்பு கொமுரூன்(சரியா தெரியவில்லை) என்ற பெயரில் நாட்டில் பரியோசமில்லாதவர்களை அழிப்போம் என்று முதியோர்களையும், ஊனமுற்றவர்களையும் இலட்சக்கணக்கில் கொன்று புதைத்தார்கள்.

ஏனென்றால் நாட்டின் வளர்ச்சிக்கு முதியவர்களும், பயன்படாதவர்களும் தடையாக இருந்தார்கள் என்பதே அவர்களின் கருதுகோள். இக்கருத்தையும் பார்க்க அப்படித் தோன்றுகின்றே. அல்லது அதன் பாதிப்பா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.