Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்தடி நீள பெண் சிறுத்தை புலியொன்று உயிருடன் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தடி நீள பெண் சிறுத்தை புலியொன்று உயிருடன் மீட்பு

April 18, 2020

(க.கிஷாந்தன்)

DSC04774.jpg

மஸ்கெலியா காட்மோர் தம்பேதன்ன தோட்டத்தில், ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தை புலியொன்று (ஸ்ரீலங்கன் டைகர்) 15 அடி உயரமான மரமொன்றில் ஏறி கிளைகளுக்கிடையில் சிக்கி, இறங்க முடியாமல் சுமார் 8 மணிநேரம் தவித்தது. இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தப்பட்டு அது  உயிருடன் மீட்கப்பட்டது.

மேற்படி தோட்டத்தில் சிறுத்தை சிக்கியிருப்பதை அறிந்த தோட்ட முகாமையாளர் அது தொடர்பில் இன்று (18.04.2020) காலை மஸ்கெலியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார். அதன்பின்னர் பொலிஸார் ஊடாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இராணுவம், காவல்துறையினர், வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தோட்ட மக்களும் குவிந்தனர்.

மரக்கறி தோட்டமொன்றில், மிருகங்களிடமிருந்து விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில் போடப்பட்டிருந்த கம்பி வலையிலேயே 4 வயதான இச்சிறுத்தை புலி சிக்கியுள்ளது என்றும், மக்கள் நடமாட்டத்தை கண்டதும் வலையை பிய்த்துக்கொண்டு மரத்தின் மீது ஏறியுள்ளது.

மரத்தின் உச்சிக்கே சென்ற பிறகு, வலையில் இருந்த பலகைதுண்டு, மரத்தின் கிளைகளுக்கிடையில் இறுக, கீழ் இறங்க முடியாமல் சிறுத்தைப் புலி சிக்கிக்கொண்டது.

பின்னர், ரந்தெனிகல மிருகவைத்தியசாலையிலிருந்து, மிருக வைத்திய அதிகாரியொருவரும் வரழைக்கப்பட்டு, கீழிருந்து துப்பாக்கி மூலம் மயக்க மருந்த செலுத்தப்பட்டு, சிறுத்தைப்புலி கீழிறக்கப்பட்டது.

சிகிச்சைகளுக்காக மினிப்பே மிருக வைத்தியசாலைக்கு சிறுத்தைப்புலி கொண்டு செல்லப்பட்டது. குணமடைந்த பின்னர் சரணாலயத்தில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #சிறுத்தை #மீட்பு

03.jpg06.jpg DSC04800.jpgDSC04808.jpg
 

http://globaltamilnews.net/2020/141087/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுத்தை சிகிச்சை பலனின்றி பலி

image_069c5b7157.jpgவி.முத்துகிருஸ்ணன்  

மரத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ரந்தெனிகல மிருக வைத்தியசாலை வைத்தியர் தெரிவித்தார்.

மஸ்கெலியா, காட்மோர் தம்பத்தேன தோட்டத் தேயிலை மலையில், 20அடி உயரமுடைய மரத்தின் உச்சியில் சிறுத்தையொன்று மாட்டிக்கொண்டது.

மிருக வேட்டைக்காக விரிக்கப்பட்ட வலையில் சிக்குண்ட சிறுத்தை, இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையிலேயே வலையிலிருந்து மீண்டு, மரத்தில் ஏறியுள்ளது.  

சுமார் எட்டு மணித்தியாலம் கடும் பிரயத்தணத்தின் பின்னர் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள், மஸ்கெலியா பொலிஸார், இராணுவத்தின் இணைந்து சிறுத்தையை மீட்டு, ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

சிறுத்தையின் சிறுநீரகம் பாதிப்டைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, ரந்தெனிகல வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

image_e8f780ee2e.jpg 
 

http://www.tamilmirror.lk/மலையகம்/மரததலரநத-மடகபபடட-சறதத-சகசச-பலனனற-பல/76-248857

  • கருத்துக்கள உறவுகள்

அது இறந்து விட்டது... 😟

http://www.dailymirror.lk/breaking_news/Rescued-leopard-in-Maskeliya-dies/108-186833

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அது இறந்து விட்டது... 😟

http://www.dailymirror.lk/breaking_news/Rescued-leopard-in-Maskeliya-dies/108-186833

முதலே நோய்வாய்ப்பட்டிருக்கலாம், 😟

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, உடையார் said:

முதலே நோய்வாய்ப்பட்டிருக்கலாம், 

விழுந்ததால்... உள் காயமாம்😟

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, Nathamuni said:

விழுந்ததால்... உள் காயமாம்😟

ஊசியிலை என்ன மருந்தை ஏத்தி அடிச்சாங்களோ ஆருக்குத்தெரியும்?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

ஊசியிலை என்ன மருந்தை ஏத்தி அடிச்சாங்களோ ஆருக்குத்தெரியும்?

சுட்டது யார் ? 😄 இரண்டாவது படத்தில் குறி தவறி மரத்திலை  குத்திக்கொண்டு இருக்குது சிவப்பு குஞ்சத்துடன் .

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

சுட்டது யார் ? 😄 இரண்டாவது படத்தில் குறி தவறி மரத்திலை  குத்திக்கொண்டு இருக்குது சிவப்பு குஞ்சத்துடன் .

புலி எண்டால் இன்னும் பயம் போகவில்லை பாருங்கோ..

அதுதான் சுட்டு பிடிச்சிருக்கிறான்கள்.... சூடு பிளைச்சு போட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றைய பிராணிகளை கொன்றும் வாழும் மிருகம் என்றாலும் செய்தியை வாசிக்கும்போது துயரமாகவே உள்ளது.

அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன். ஆபிரிக்கா காட்டில் வாழும் புலி  ஒருவர் மானை வேட்டையாடிவிட்டு அதை கவ்விக்கொண்டு உயரமான மரத்தில் ஏறி, பின் ஆறுதலாக தனிமையில் உணவை ருசித்து அடிப்பதற்கு மானை பாட்டமாக கிளைகளிடையே கிடத்துகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.