Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரஸ் வழக்கு விவகாரம்: அமெரிக்க நீதிமன்ற அதிகார எல்லைக்குள் சீன அரசு வராது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் வழக்கு விவகாரம்: அமெரிக்க நீதிமன்ற அதிகார எல்லைக்குள் சீன அரசு வராது!

 

 

  by : Anojkiyan

3600-720x450.jpg

கொரோனா வைரஸ் நோய் பற்றிய உண்மைகளை மறைத்ததாக, சீனா மீது அமெரிக்கா வழக்கு தொடுத்துள்ள நிலையில், இந்த தொற்று நோய் விவகாரத்தில், அமெரிக்க நீதிமன்ற அதிகார எல்லைக்குள் சீன அரசு வராது என சீன செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் பற்றிய உண்மைத் தகவல்களை வெளியிடாமல் மறைத்தும், எச்சரிக்கை விடுத்தவர்களை கைது செய்தும், தொற்றுநோய் என்பதை முதலில் மறுத்தும், உலகளவில் ஈடு செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகளை சீனா ஏற்படுத்தி உள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சுமத்தியுள்ளது.

அத்துடன் அமெரிக்க நீதிமன்றத்தில் மிசவுரி மாகாணத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கினை சட்டத்தரணி ஜெனரல் எரிக் சுமிட் தாக்கல் செய்துள்ளார்.

இந்தநிலையில் இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது என சீனா கூறியுள்ளது. இதுகுறித்து சீன செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் கூறுகையில்,

“இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. இது சட்டத்தின் அடிப்படையில் இல்லாத வழக்கு. அபத்தமானது. சீன அரசு இதில் வெளிப்படையாக, பொறுப்புணர்வுடன் செயல்படுகிறது. அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும், உலக சுகாதார நிறுவனத்துக்கும் பொதுவான தகவல்களை தெரிவித்தது’ என கூறினார்.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-வழக்கு-விவக/

  • கருத்துக்கள உறவுகள்

கிறோசிமா, நாகசாகி மீது குண்டு போட்டது, ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாக மக்களைக் கொண்(ன்)டு வந்தது, சுதேசிகளை வகை தொகையின்றிக் கொன்றதுக்கெல்லாம் நாங்களும் வழக்குப் போடலாமோ என்று கேட்பது நானல்ல , இணைய வாசிகள்.

😜

5 minutes ago, Kapithan said:

கிறோசிமா, நாகசாகி மீது குண்டு போட்டது, ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாக மக்களைக் கொண்(ன்)டு வந்தது, சுதேசிகளை வகை தொகையின்றிக் கொன்றதுக்கெல்லாம் நாங்களும் வழக்குப் போடலாமோ என்று கேட்பது நானல்ல , இணைய வாசிகள்.

😜

ஆனால், சவேந்திர சில்வா மற்றும் கொத்தபாய மீது வழக்குகள் சம்பந்தப்பட்டவர்கள் போடலாம்.👍

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ampanai said:

ஆனால், சவேந்திர சில்வா மற்றும் கொத்தபாய மீது வழக்குகள் சம்பந்தப்பட்டவர்கள் போடலாம்.👍

நிச்சயமாகப் போடலாம். அதற்கான காரணங்கள் ஏராளமுண்டு. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

சீன அரசு இதில் வெளிப்படையாக, பொறுப்புணர்வுடன் செயல்படுகிறது. அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும், உலக சுகாதார நிறுவனத்துக்கும் பொதுவான தகவல்களை தெரிவித்தது’ என கூறினார்.

ஊகானில் கொரானா பரவுவதை அம்பலப்படுத்திய பின் மாயமான சீன பத்திரிகையாளர்.

vukhan.jpg

வூகானில் கொரானா பரவுவதை அம்பலப்படுத்திய பின் மாயமான சீன பத்திரிகையாளர் லி ஜிஹுவா (Li Zehua) மீண்டும் வெளியுலகத்திற்கு வந்துள்ளார்.

கொரோனா தொற்று பரவுவதை வீடியோ வாயிலாக உலகிற்கு தெரிவித்த அவர் இரண்டு மாதங்களாக காணாமல் போய்விட்டார். அவரையும் சேர்த்து மொத்தம் 3 சீன பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றை உலகிற்கு பகிரங்கப்படுத்தினர்.

இந்த நிலையில் மீண்டும் தோன்றிய லி ஜிஹுவா, தம்மை போலீசார் பிடித்துக் கொண்டு போய் தடுப்புக் காவலில் வைத்திருந்ததாக கூறியுள்ளார். பிப்ரவரி மாதம் அவர் வெளியிட்ட வீடியோவில், வெள்ளை காரில் போலீசார் துரத்தும் காட்சிகளும், வீட்டில் போலீசார் நுழையும் காட்சிகளும் ஒளிபரப்பானது.

http://www.vanakkamlondon.com/ஊகானில்-கொரானா-பரவுவதை-அ/

டிஸ்கி :

roflphotos-dot-com-photo-comments-201808

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.