Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய வெசாக் வாரம் அறிவிப்பு

Featured Replies

தேசிய வெசாக் வாரம், மே மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை, புத்தசாசன அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/தேசிய-வெசாக்-வாரம்-அறிவிப்பு/175-249559

 

வெசாக் பண்டிகையின் போது இவ்வாறு செயற்படவும்

வெசாக் பண்டிகையின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாப்பதற்காக இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி விகாரைகளுக்கு சென்று வழிபடும்போது தனிமனித இடைவெளிகளை கடைப்பிடிப்பது கடினம் என்பதால் வீடுகளிலேயே வழிபாட்டு நிகழ்வுகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெசாக் கொண்டாட்டங்கள், அலங்காரங்களை தமது வீடுகளுக்குள் மட்டுப்படுத்திக்ககொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொருத்தமான சுகாதார பரிந்துரைக்கு ஏற்ப வெசாக்குடன் தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவேண்டும் என்றும்,  காதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வசக-பணடகயன-பத-இவவற-சயறபடவம/175-249586

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்த தடவை சிறிலங்கா மாதாவுக்கு புத்தரின் ஒளி கிடைக்கவில்லை.....கோத்தாவின் ஆட்சி புத்தருக்கு பிடிக்கவில்லைபோல இருக்கு...

  • தொடங்கியவர்
12 hours ago, ampanai said:

தேசிய வெசாக் வாரம், மே மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை, புத்தசாசன அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதான் இதுவரை இவர்கள் வெளியிட்ட அறிக்கைகளுக்குள், இந்த தொற்று காலத்தில், என்னை கவர்ந்தது 👍

இவர்களின் மத வெறி அது சார்ந்த  மாறாத கொள்கையை மட்டுமல்ல, இவரகளின் அழிவிற்கும் வழிகோலலாம் !

  • தொடங்கியவர்

தேசிய வெசாக் வாரம்

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு வீடுகள், நிறுவனங்களில் நாளை (04) முதல் பௌத்த கொடியை ஏற்றுமாறு புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. 

அத்துடன், இம்முறை வெசாக் நிகழ்வை முன்னிட்டு 4 முத்திரைகளை வெளியிட அமைச்சு தீர்மானித்துள்ளது.  

மேலும் வெசாக் அலங்காரங்களை வீடுகளிலேயே மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். 

மே 4 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை வெசாக் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/தேசிய-வெசாக்-வாரம்/175-249630

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காலத்தில் 4ம் திகதியில் இருந்து 8ம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் இல்லையா :unsure:
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இந்த காலத்தில் 4ம் திகதியில் இருந்து 8ம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் இல்லையா :unsure:

4ம் திகதி 5ம் திகதியும் இல்லை 6ம் திகதி தொடக்கம் 11ம் திகதிவரை மீண்டும் ஊரடங்கு சட்டம் ஆனால் சனம் ஊரெல்லம் திரியுது ஆனால்  வாகனங்கள் மட்டும் இல்ல 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

4ம் திகதி 5ம் திகதியும் இல்லை 6ம் திகதி தொடக்கம் 11ம் திகதிவரை மீண்டும் ஊரடங்கு சட்டம் ஆனால் சனம் ஊரெல்லம் திரியுது ஆனால்  வாகனங்கள் மட்டும் இல்ல 

தனி இங்கேயும் லொக்டவுன் தான் ஆனால் சனம் முழுக்க தெருவில்.
ஆங்காங்கே பல்வேறு மாநிலங்களிலும் திறந்துவிடு என்று ஆர்ப்பாட்டமும் நடக்குது.

இப்படி போனால் இன்னும் கொஞ்சநாளில் பூட்டு என்று கேட்டு ஆர்ப்பாட்டம் நடக்குதோ தெரியலை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

தனி இங்கேயும் லொக்டவுன் தான் ஆனால் சனம் முழுக்க தெருவில்.
ஆங்காங்கே பல்வேறு மாநிலங்களிலும் திறந்துவிடு என்று ஆர்ப்பாட்டமும் நடக்குது.

இப்படி போனால் இன்னும் கொஞ்சநாளில் பூட்டு என்று கேட்டு ஆர்ப்பாட்டம் நடக்குதோ தெரியலை.

ராணுவம் , பொலிஸ் , கடற்படை கட்டுப்படுத்துகிறது மக்களை ஆனால் எல்லோரும் உணவுகளை சேமித்து வைத்து வீட்டிலிருந்து சமைத்து உண்ணும் அளவுக்கு பணக்காரர்கள் இல்லை

ஏழைகள் வாழ்வில் திண்டாட்டம்  நான் கூட அடிக்கடி வெளியில் தான் போய்வர வேண்டிய நிலை ராணுவம் பொலிஸ் பிடிக்கும் காரணத்தை சொல்லிவிட்டு வருவேன் விடுவார்கள் 

  • தொடங்கியவர்

இந்த கடுமையான தொற்று நோய் பரவிக்கொண்டு இருக்கும் காலத்திலும் புத்த பண்டிகையை முழுவதும் முடக்க கடுமையான போக்கை கொண்ட மகிந்தா அண்ட் கோவால் நிற்பாட்ட முடியாது. 

காரணம் அறிவியல் இல்லை, மதவாதம் அது சார்ந்த அரசியல். 

இவர்களிடம் இருந்து மக்கள் முடிநதளவு தனிமைப்படுத்தி இருக்கவேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப...தேங்காய்பூ...ரமழானுக்கு...லாக்டவுன் ரிலாக்ஸ்  கேட்பினம்..குடுப்பினமோ..அல்லது ..ஸ்பெசல்  லாக்டவுன் போடுவின்மோ...ரிலாக்ஸ்குடுத்தால் சிங்கள வோட் குறையும்....குடுக்காவிட்டால் புல்லாவும்.ரிசாத்தும்,அக்கீமும் யு.என் வரை போவினம்...அல்லது எண்ணெயை நிப்பாடுவினம்....பாப்பம்

  • தொடங்கியவர்

வெசாக் காலத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் வேண்டுகோள்!

வெசாக் காலத்தில், தன்சல் மற்றும் தோரணப் பந்தல்களை அமைப்பதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் நிலவும் நிலைமைகளை கருத்திற் கொண்டு இக் காலப் பகுதியில் வீடுகளை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என்பதுடன், வீடுகளிலிருந்தே வெசாக் நிகழ்வுகளை கொண்டாடுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறும் அவர் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/81397

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.