Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டு.களவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய கிணறு திடீரென்று நிரம்பி வழிகிறது.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கினை இதைப் பாருங்க..

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

இங்கினை இதைப் பாருங்க..

 

சின்னிலிருந்து எந்த விலங்கினத்தையும் பழக்கி எடுக்காலம், மக்கள்தான் ஏமாறுகின்றார்கள் 

22 hours ago, தமிழ் சிறி said:

வாஸ்து சாத்திரப் படி.... ஒரு கோயிலுக்கு மேல்,  இன்னொரு கோயில் கட்ட முடியாது. :grin:

மன்னிக்கவும்। கோவிலுக்கு மேல் இல்லை। கிணத்துக்கு மேல।

22 hours ago, Kapithan said:

அது அகலமான குழாக்கிணறு என்று நினைவில் உள்ளது.

மெல்லிய உவர்ப்பு நீர் கடற்கரைக்கு அருகில்,  குழாய்க் கிணற்றையும் மேவிப் பாய்ந்து கடலுடன் கலக்கிறது. 😀

நீங்கள் சொன்னது சரி। அது கிடடதடட ஊர் நடுவில் இருக்கிறது। இப்போது அதை ஒரு அமைப்பாக கட்டி அந்த நீரை வீடுகளுக்கு பயன்படுத்துகிறார்கள்। கோடை காலங்களில் உவர்தன்மை காணப்படும்। இருந்தாலும் அதை பயன்படுத்தும் நிலையில்தான் காணப்படுகின்றது।

இன்னும் மன்னர் மாவடடம் பெரும்பகுதிக்கு முரண்கணில் இருந்துதான் தண்ணீர் விநியோகிக்கப்படுகின்றது। இங்கு மூன்று குழாய் கிணறு மூலமாக தண்ணீர் எடுக்கிறார்கள்। இந்த கிணறுகளில் இருந்து 24 மணித்தியாலங்கள் தண்ணீர் எடுத்தாலும் அதில் தண்ணீர் நாலு அங்குலத்துக்கு கீழே குறையாத (Draw down ) வற்றாத கிணறு। இந்தக்கிணறுகள் சரியான இடத்தை பரிசோதித்து (Stream line ) அமைக்கப்பட்ட்தால் இப்படியான நிகழ்வுகளை காணலாம்।

Kapithan வங்காலை பக்கம் போன மாதிரி தெரியுது।

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Vankalayan said:

நீங்கள் சொன்னது சரி। அது கிடடதடட ஊர் நடுவில் இருக்கிறது। இப்போது அதை ஒரு அமைப்பாக கட்டி அந்த நீரை வீடுகளுக்கு பயன்படுத்துகிறார்கள்। கோடை காலங்களில் உவர்தன்மை காணப்படும்। இருந்தாலும் அதை பயன்படுத்தும் நிலையில்தான் காணப்படுகின்றது।

இன்னும் மன்னர் மாவடடம் பெரும்பகுதிக்கு முரண்கணில் இருந்துதான் தண்ணீர் விநியோகிக்கப்படுகின்றது। இங்கு மூன்று குழாய் கிணறு மூலமாக தண்ணீர் எடுக்கிறார்கள்। இந்த கிணறுகளில் இருந்து 24 மணித்தியாலங்கள் தண்ணீர் எடுத்தாலும் அதில் தண்ணீர் நாலு அங்குலத்துக்கு கீழே குறையாத (Draw down ) வற்றாத கிணறு। இந்தக்கிணறுகள் சரியான இடத்தை பரிசோதித்து (Stream line ) அமைக்கப்பட்ட்தால் இப்படியான நிகழ்வுகளை காணலாம்।

Kapithan வங்காலை பக்கம் போன மாதிரி தெரியுது।

ஆம்.

நான் வடக்கு கிழக்கு முழுவதும் வாழ்ந்திருக்கிறேன். சிங்களப் பகுதிகளிலும் கூடவே. 🙂

ஆனால் நீங்கள் வங்காலையைச் சேர்ந்தவர் இல்லை என்பது எனக்கு நன்கு தெரியும். 😀

41 minutes ago, Kapithan said:

ஆம்.

நான் வடக்கு கிழக்கு முழுவதும் வாழ்ந்திருக்கிறேன். சிங்களப் பகுதிகளிலும் கூடவே. 🙂

ஆனால் நீங்கள் வங்காலையைச் சேர்ந்தவர் இல்லை என்பது எனக்கு நன்கு தெரியும். 😀

அது எப்படி?  நிச்சயமாக சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

திடீரென வற்றிய கிணறுகள்! மட்டக்களப்பில் இரவிரவாக பதற்றம்; வீதிக்கு வந்த மக்கள்

  • கனகராசா சரவணன்

மட்டக்களப்பில் சுனாமி வருவதற்கான எந்த விதமான விஞ்ஞான ரீதியான அறிகுறியும் இல்லை எனவே மக்கள் அச்சமடைய தேவையில்லை வாந்திகளை நம்பவேண்டாம் என அனர்த்த இடர் முகாமைத்துவ மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் தெரிவித்தார்.

கல்லாறு, குருமன்வெளி பிரதேசத்தில் சிலரது கிணற்று நீர் மட்டம் நேற்றிரவு வற்றிபோயுள்ளது. இதனையடுத்து மக்கள் சுனாமி போன்ற அனர்த்தம் இடம்பெறப் போகின்றது என அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறியதையடுத்து இந்த சய்தி காட்டுதீபோல பரவியதையடுத்து மட்டக்களப்பு கல்லடி அம்பாறை மாவட்ட கரையோரத்திலுள்ள பல பகுதிகளில் இருந்து மக்கள் அச்சத்தினால் வீடுகளை விட்டு வெளியேறினர்

“தற்போது காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீர் மட்டம் குறையும்போது கரையிலுள்ள நீர் மட்டங்களை கடல் உள்வாங்கும். அதனால் இது ஒரு சாதாரண நிலை. கிணற்றில் நீர் மட்டம் குறைவது கூடுவது நாங்கள் முதலில்; இதனை கவனித்திருக்க மாட்டோம். இது இரவில் இடம்பெறும் ஒன்று. இப்போது நாங்கள் எதே ஒரு பிரச்சனை என்றதும் கிணற்றை பாத்து தண்ணீர் குறையுது கூடுது என்று எனவே பயப்படதேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

 

http://thinakkural.lk/article/41915

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

வாந்திகளை நம்பவேண்டாம் என அனர்த்த இடர் முகாமைத்துவ மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் தெரிவித்தார்.

????

மட்டக்களப்பில் நடந்த அதிசயம்! திடீரென வற்றிப்போன கிணறுகள்

மட்டக்களப்பில் நாவலடி தொடக்கம் அக்கறைப்பற்று வரை கரையோரத்தில் உள்ள கிணறுகள் யாவும் நேற்று திடீரென வற்றிப்போயுள்ளன.

சுமார் 3 அடிக்கும் மேல் நீர் வற்றிப்போய் உள்ளது. சில கிணறுகளில் அடி மண் தெரிந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நாவலடி, கல்குடா, நாவற்குடா, காத்தான்குடி, கிரான்குளம், ஆரையம்பதி,தாளங்குடா, புதுக்கடியிருப்பு, குருக்கள்மடம், செட்டிப்பாளையம், மாங்காடு, -------த்தீவு, களுதாவளை, களுவாஞ்சிக்குடி, ஒந்தாச்சிமடம் போன்ற இடங்களிலேயே இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் கிழக்குப் பக்கமாக அமைந்துள்ள கிணறுஅண்மையில் பொங்கி வழிந்த அற்புதம் நடந்தது.

ஒரு பக்கம் கிணறு நிரம்பி வழிவதும், மறு பக்கம் அனைத்து கிணறுகளும் வற்றிப்போவதும் அப்பகுதி மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/143323

  • கருத்துக்கள உறவுகள்

கிணறுகள் வற்றுவதாக வரும் செய்தி தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை

May 16, 2020

பாறுக் ஷிஹான்

 

IMG_20200516_101246.jpg

கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும்   இது சாதாரணமாக நிகழ்கின்ற ஒரு விடயம் எனவும்  அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.

தற்பொழுது கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் சனிக்கிழமை(16) இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

இது போன்ற நிலைமைகள் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்டதாகவும் அதனால் அபாய நிலைமைகள் அனர்த்தங்கள் எதுவும் ஏற்படவில்லை இருந்த போதிலும்  இது தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை.இது அனர்த்த நிலைமைகள் ஏற்படுவதற்கான நிகழ்வுகள் அல்ல என  அவர் அறிவித்துள்ளார்.

எனவே மக்கள் வதந்திகளை பரப்பி அல்லது நம்பி இந்த செய்திகளை பரப்பாமல் இவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.மேலும் இது அபாய நிலைமை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமல்ல. தற்பொழுது இலங்கையில் தாழமுக்க நிலை காணப்படுவதனால் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் கடலில் அதிகமான, உயரமான கடல் அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். #கிணறுகள்  #அச்சமடைய  #சுனாமி

 

http://globaltamilnews.net/2020/142966/

கிழக்கில் சுனாமி அபாயம் எதுவும் இல்லை: கிணறுகள் திடீரென வற்றுவது குறித்து அச்சம் வேண்டாம்!

கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் பீதியடையத் தேவையில்லை என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் இந்நிகழ்வு சாதாரணமானது எனக் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் பீதியடையத் தேவையில்லை. இது சாதாரணமாக நிகழ்கின்ற ஒரு விடயமாகும்.

இதுபோன்ற நிலைமைகள் கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்டது. அதனால் அபாய நிலைமைகள் அனர்த்தங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனவே இதுதொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை. இது அனர்த்த நிலைமைகள் ஏற்படுவதற்கான நிகழ்வுகள் அல்ல.

இதேவேளை, தற்பொழுது இலங்கையில் தாழமுக்க நிலை காணப்படுவதனால் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் கடலில் அதிகமான உயரமான கடல் அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன” என்று குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டம் கிராங்குளம், குருக்கள்மடம், களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், கேட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு உள்ளிட்ட பல பகுதிகளிலும் இயற்கையாகவே திடீரென கிணறுகள் வற்றியுள்ளதை படங்களில் காணலாம்.

Wells-dried-up-in-Ampara-1.jpg

Wells-dried-up-in-Ampara.jpg

Wells-dried-up-in-Ampara-3.jpg

http://athavannews.com/கிழக்கில்-சுனாமி-அபாயம்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.